Showing posts with label கியூபா. Show all posts
Showing posts with label கியூபா. Show all posts

Wednesday, April 19, 2023

அகதிகள் அணிக்கு பயிற்சியாளராகிறார் பேட்ரிக் பெட்டம்பேர்க்


   ஈரான், பிரேசில், கியூபா, க‌மரூன், யேமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் 23 முதல் 32 வயது வரையிலான நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் கொண்ட அணிக்கு சுவீடனைச் சேர்ந்த பேட்ரிக் பெட்டம்பேர்க் பயிற்சியளித்து நிர்வகிப்பார்.  அவர்கள் இப்போது அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ,மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர்.

ஐ.டபிள்யூ.எஃப் வாரியக் கூட்டத்தில் இந்த யோசனை முதன்முதலில் எழுப்பப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த அணி நடைமுறைக்கு வந்துள்ளது, மேலும் இந்த ஆண்டு செப்டம்பரில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் ஐ.டபிள்யூ.எஃப் உலக சாம்பியன்ஷிப்பில்  இவர்கள்  போட்டியிடுவார்கள்

இது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஈஓC) அகதிகள் குழுவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.பெட்டம்பேர்க், 52, பல உலக சாதனை படைத்தவர் மற்றும் 1972 ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற ஹான்ஸ் பெட்டம்பேர்க்கின் மகன் ஆவார், அவர் ஜேர்மனியில் பிறந்து சுவீடனில் வாழ்கிறார். அவர் சுஸ்வீடனின் தேசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பயிற்சியாளர், இதற்கு முன்பு அகதிகளுடன் பணியாற்றியவர்.

ஈரானுக்கான டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கு பாரிஸ் ஜஹான்ஃபெட்க்ரியன் தகுதி பெற்றார், ஆனால் அவரது தேசிய கூட்டமைப்பை விமர்சித்த பின்னர் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை .

அவர்கள் வழக்கமாக தாங்கள் வசிக்கும் இடத்தில் பயிற்சி அளிப்பார்கள், ஆனால் ஸ்வீடனின் மூத்த தேசிய அணியின் தலைமையகமாக ஹால்ம்ஸ்டாடில் உள்ள உயரடுக்கு பயிற்சி மையமான எலிகோ உபகரண உற்பத்தியாளரால் நிதியுதவி அளிக்கப்பட்டு நடத்தப்படும் 10-நாள் பயிற்சி முகாமுக்கு கூடுவார்கள்.

Friday, March 11, 2022

சே குவேராவை சுட்டுக் கொன்ற பொலிவிய இராணுவ வீரர் காலமானார்

மரியோ டெரான் சலாசர்,   வியாழன் மார்ச் 10 ஆம் தேதி தனது 80வது வயதில் கிழக்கு பொலிவியாவில் உள்ள சாண்டா குரூஸ் டி லா சியர்ராவில் இறந்தார். தெரிவிக்கப்பட்டது.

புகழ்பெற்ற புரட்சியாளர் கெரில்லா எர்னஸ்டோ "சே" குவேராவை சுட்டுக் கொலை செய்த   பொலிவிய வீரர் மரியோ டெரான் சலாசர்,   வியாழன் மார்ச் 10 ஆம் திகதி தனது 80வது வயதில் கிழக்கு பொலிவியாவில் உள்ள சாண்டா குரூஸ் டி லா சியர்ராவில் காலமானார்.

மரியோ டெரான் "இராணுவத்தின் சார்ஜென்ட் என்ற முறையில் தனது கடமைக்கு இணங்கினார்," என்று ஓய்வுபெற்ற ஜெனரல் கேரி பிராடோ கூறினார்.   ஒரு மாத கால தேடலுக்குப் பிறகு 1967 இல் குவேராவைக் கைது செய்த குழுவிற்கு  அவர் தலைமை தாங்கினார்.

ரேடியோ கம்பேனேராவிடம் பேசிய அவர், டெரான் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக கூறினார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குவேரா, ஆர்னென்ரினாவில் பிறந்த  மருத்துவர். கியூபாவில்  சர்வாதிகாரி ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவை வீழ்த்தி 1959 இல் பிடல் காஸ்ட்ரோவின் கீழ் அதிகாரத்தை வென்ற கியூபா புரட்சியில் ஒரு முன்னணி நயகன்.

கியூபாவின் அரசாங்கத்தில் பல ஆண்டுகள் மூத்த அதிகாரியாகப் பணியாற்றிய பிறகு, ஆப்பிரிக்காவிலும் அதன்பிறகு தென் அமெரிக்காவிலும் - மிகக் குறைவான வெற்றியுடன் - பிற கிளர்ச்சிகளை வழிநடத்த முயற்சிக்கத் தொடங்கினார்.

 கைது செய்யப்பட்ட  குவேராவை தூக்கிலிட உத்தரவு வந்த பிறகு   அவரைக் கொல்வதற்கு டெரான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒக்டோபர் 8, 1967 இல், பொலிவியன் இராணுவம் இரண்டு கியூப-அமெரிக்க சிஐஏ ஏஜென்டுகளின் ஆதரவுடன் பனிப்போரின் போது ஆயுதமேந்திய புரட்சிகர நடவடிக்கையின் கதநாயகனான  சே  குவேராவைக் கைது செய்தது.போர், பசி மற்றும் நோயிலிருந்து தப்பிய ஒரு சில கெரில்லாக்களின் தலைவராக சே இருந்தார்.போரில் காயமடைந்த அவர், லா ஹிகுவேரா நகரில் கைவிடப்பட்ட பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் தனது கடைசி இரவை அங்கேயே கழித்தார். கடுமையான கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளரான ஜனாதிபதி ரெனே பேரியண்டோஸின் (1964௧969) ஒப்புதலுடன் டெரானால் அடுத்த நாள் சேவை சுட்டுக்கொலை செய்தார்.

"என் வாழ்க்கையின் மிக மோசமான தருணம் அது. அந்த நேரத்தில் நான் சே பெரிய, மிக பெரிய, பெரிய பார்த்தேன். அவரது கண்கள் பிரகாசமாக பிரகாசித்தன, ”என்று டெரான் பின்னர் விவரித்தார்.

அவர் என் மேல் இருப்பதைப் போல உணர்ந்தேன், அவர் என்னை முறைத்தபோது, எனக்கு மயக்கம் வந்தது. ஒரு வேகமான இயக்கத்தால் சே என்னிடமிருந்து ஆயுதத்தை எடுக்க முடியும் என்று நினைத்தேன். 'அமைதியாக இருங்கள் - அவர் என்னிடம் கூறினார் - நன்றாக இலக்கு பார்! ஒரு மனிதனைக் கொல்லப் போகிறாய்!'  என்றார் அதனால் நான் ஒரு படி பின்வாங்கி, கதவின் வாசலை நோக்கி, கண்களை மூடிக்கொண்டு துப்பாக்கியால் சுட்டேன்," என்று டெரான்  கூறினார்.

டெரான் 30 வருட சேவைக்குப் பிறகு, டெரான் ஓய்வு பெற்றார் மற்றும் பத்திரிகைகளைத் தவிர்த்து, அநாமதேயமாக இருந்தார் . குவேராவைக் கொலை செய்தவர் தாம் அல்ல, அதே பெயர் மற்றும் குடும்பப் பெயரைக் கொண்ட மற்றொரு சிப்பாய் என்பதை உறுதிப்படுத்தும் அளவுக்கு அவர் சென்றார்.

Wednesday, August 25, 2021

வல்லரசுகளை அச்சுறுத்தும் அமெரிக்கா குட்டி நாடுகளிடம் வீழ்ந்தது


 

ப்கானிஸ்தானில் இருந்து  அமெரிக்கப் படைகள்  பின் வாங்கியதைப் பார்த்து இன்றைய  தலைமுரையினர்  வியப்புடன்  நோக்குகின்றனர். உலகின் நாட்டாமையான  அமெரிக்காவுகு இது  தலை குனிவு என்ற  விமர்சனம் பரவலாக வைக்கப்பட்டுள்ளது. கியூபா, வியட்நாம் ஆகியவற்றை  ஆக்கிரமிக்க  முயன்ற   அமெரிக்கா அங்கிருந்து  தோல்வியுடன் தலை குனிந்து  வெளியேறியது  வரலாறு.

உலக வரைபடத்தில் புள்ளி அளவிற்கு கூட  கியூபா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் என்று அடுத்தடுத்து மூன்று குட்டி தேசங்களிடம் அமெரிக்கா தோல்வி அடைந்து சர்வதேச அளவில் தலைகுனிவை சந்தித்துள்ளது.  உலக  அரசியலில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட  தோல்விகளில் இவையும்  அடக்கம்.

அமெரிக்காவுக்கு அருகே ஒரு  புள்ளிபோல் இருப்பது கியூபா.  கியூபாவை ஸ்பெய்ன் கைப்பற்றி   தனது  கட்டுப்பாட்டில்  வைத்திருந்தது.  ஸ்பெயினிடம் இருந்து  விடுதலை பெறுவதற்காக  1800 களில் கியூபா மக்கள் போராடினார்கள். இரண்டு போர்கள் முடிந்தும் கியூபாவால் விடுதலை  பெறமுடியவில்லை. இரண்டாவது  போரின் போது  அண்டை நடாடான  அமெரிக்கா உதவும் என கியூபா எதிர்பார்த்தது.

மூன்றாவது  விடுதலைப் போர்  ஆரம்பமாகியது. ஸ்பெய்னுக்கு அடிமையாக இருக்கும் கியூபாவுக்கு விடுதலை வாங்கிக்கொடுக்க  வேண்டும் என்ற  கருத்து  அமெரிக்காவில் ஓங்கி ஒலித்தது.   அமெரிக்கா தனது  நாட்டுமக்களை  அடிமையாக  வைத்திருந்த  காலம் அது. கறுப்பின  மக்களும், அமெரிக்க  பூர்வ குடி  மக்களும்  போராட்டம் நடத்திய  காலம். கியூபா போரில் தலையிட வேண்டும் என்று அமெரிக்காவில் "அடிமை வாதத்தை" ஆதரிக்கும் கட்சிகள் கோரிக்கை வைத்தன.

கியூபா விடுதலை போரில் அமெரிக்கா களமிறங்கியது.  ஸ்பெயினுக்கு எதிரான கியூபாவின் சுதந்திர போரில் அமெரிக்கா நேரடியாகவும், மறைமுகமாகவும் போரிட்டு கியூபாவிற்கு உதவியது. 1895-1898 வரை நடந்த இந்த போரில் அமெரிக்காவின் உதவியுடன் கியூபா என்ற சுதந்திர தேசம் பிறந்தது.  பெயரள்வில்  சுதந்திர  நாடான கியூபாவில்  அமெரிக்காவின்   சொல்லைக்  கேட்கும்  பொம்மை  ஆட்சி  ஆரம்பமாகியது.

கியூபா  சுதந்திர  நாடாகியதும்  அங்கிருந்து  வெளியேறுவதாக  வாக்களித்த அமெரிக்கா தனது  வாக்குறுதிய  மீறி  அங்கு  நிலைகொண்டது. அமெரிக்காவின் தலையீட்டால் கியூபாவில் வறுமையும், ஊழலும் தலைவிரித்தாடியது. கியூபாவின் கரும்பு ஆலைகளை அமெரிக்கா மறைமுகமாக கட்டுப்படுத்தியது. கியூபாவின் ஜனாதிபதி படிஸ்டாவின் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது.

அமெரிகாவின்  ஆக்கிரமிப்புக்கு  எதிராக  கியூபா மக்கள் போராடினார்கள். கியூபாவின்  புரட்சிக்கு  பிடல்  கஸ்ரோ தலைமை  வகித்தார். பிடல் ஸ்ரோ தலைமையில் 1953ஆம்  ஆன்டு  கியூபாவில்  புரட்சி போராட்டம் வெடித்தது. ஐந்து வருடங்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் 1958  ஆம்  ஆண்டு அமெரிக்காவில்  ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பிடல்  கஸ்ரோ  கியூபாவில் செங்கொடி ஏற்றினார். அமெரிக்காவின் மூக்கிற்கு கீழேயே கம்யூனிச நாடு ஒன்று பிறந்தது. கம்யூனிச கொள்கை கொண்ட போராளிகளிடம் தோல்வி அடைந்ததை, அதிலும் கொரில்லா  போராளிகளிடம் தோல்வி அடைந்ததை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இரண்டாவது  உலகப்போர் முடிந்த பின்னர் உலக  அரசியலில் பல்  வேறு  மாற்றங்கள்  ஏற்பட்டன. கைப்பற்றிய  நாடுகளில்  இருந்து  படைகள் வெளியேறின. வியடநாமில்  நிலை கொண்டிருந்த  ஜப்பனிஒய  படைகள் தாய்  நாட்டுக்குச்  சென்றன. வியட்நாமில் தங்கி இருந்த  ஸ்பெய்னின்  ஆதிக்கம்  தொடர்ந்தது.

வியட்நாமின் வடக்கு பகுதியை கம்யூனிச சித்தாந்தம் கொண்ட ஹோ சி மின்,  பிரான்ஸ் ஆதிக்கத்திற்கு எதிராக போராடி கைப்பற்றினார். இதனால் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என்ற மோதல் தீவிரமாக நடந்து வந்தது. பிரான்ஸ் ஆதிக்கத்திற்கும், ஹோ சிமின்னின் கம்யூனிச போராளிகளுக்கும் இடையில் மோதல் நடந்து வந்தது. இந்த  நிலையில்  பெரியண்ணனான  அமெரிக்கா  பஞ்சாயம் செய்ய  களம்  இறங்கினார்.

முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தெற்கு வியட்நாமையும், பிரான்ஸ் ஆதிக்கத்தையும் ஆதரித்தன.   ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வடக்கு வியட்நாமை ஆதரித்தன.. பனிப்போர் சமயம் என்பதால் வியட்நாம் போர் ஒரு துணை போர் போல நடந்து வந்தது. இது மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் நிலவி வந்தது.  பல லட்சம் குண்டுகள், விமானங்கள், வீரர்கள் என்று நவீனமான போரை அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீது ஏவியது. ஆனால் வடக்கு வியட்நாம் போராளிகளோ காடுகளில்  மறைந்திருந்து  பதிலடி  கொடுத்தனர்.

காடுகளில்  கொரில்லா தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்கா 1973ல் வெளியேறியது.  1975ல் வடக்கு வியட்நாம் இந்த போரில் பிரான்ஸை வீழ்த்தி வென்றது.   அவதார்  படம் போன்று  அன்றையா வியட்நாம் போராளிகள் அமெரிக்காவுக்கும் பிரான்ஸுக்கும்  எதிராகப் போராடி  வெற்றி  பெற்றார்கள்.  மொத்தமாக போரில் கம்யூனிச நாடுகள் வென்றதாக அறிவிக்கப்பட்டதோடு வடக்கு தெற்கு வியட்நாம் இணைந்து   வியட்நாம் என்ற கம்யூனிச நாடு பிறந்தது. கியூபாவில் தோல்வி, வியட்நாமில் தோல்வி என்று அமெரிக்கா நிலைகுலைந்து போனது.  வியட்நாம் தோல்வி அமெரிக்க படை வீரர்களுக்கு மன ரீதியான பாதிப்புகளை, ஸ்கிட்ஸோபெர்னியா போன்ற அதீத மனநல பிரச்சனைகளை ஏற்படுத்தியது.ஈராக்கின் ஆக்கிரமிப்பில் இருந்து  குவைத்தை  விடுவித்தது, ஈரானின் போரில்   வெற்றி பெற்றது போன்று  ஆப்கானையும்  கைப்பற்ற நினைத்த  அமெரிக்கா  20  வருடங்களின் பின்னர்  அங்கிருந்து  தோல்வியுடன்  வெளியேறியது. 1980 களின் தொடக்கத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆப்கானில் முகாஜிதீன்கள் போராடினார்கள். அப்போது அவர்களுக்கு  அமெரிக்கா உதவியது.

அமெரிக்காவை நம்பி இனி களமிறங்க கூடாதுபோராட கூடாது என்ற நிலைமையை உலக நாடுகளுக்கு இந்த தோல்விகள் எடுத்துரைத்துள்ளன.  அமெரிக்காவை பெரிதும் நம்பிய ஆப்கான் அரசை அமெரிக்கா கைவிட்டதுஅமெரிக்க நட்பு நாடுகளுக்கும்நேட்டோ படைகளுக்கும் மிகப்பெரிய எச்சரிக்கையாக மாறியுள்ளது

Tuesday, August 24, 2021

அமெரிக்காவை எச்சரிக்கும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து  படைகளை வெளியேற்றும் நடவடிக்கையை அமெரிக்கா துரிதமாக  மேற்கொண்டு வருகிறது. இம்மாதம் 31 ஆம் திகதிக்குள்  படைகளை விலக்க  வேண்டும். அமெரிக்காஜேர்மனி,   இங்கிலாந்து  ஆகியா நாட்டு இராணுவ  வீரர்கள் தம் நாட்டுப் படைகளை வெளியேற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்த வெளிநாட்டுப் படைகளுக்கு உதவிய ஆப்கானியரும் அவர்களின் குடும்பங்களும் பாதுகாப்பு அச்சம் காரணமாக தாய் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.


அம்ரிக்கா எதிர்பார்த்தது போன்று  31  ஆம் திகதிக்குள் அனைத்து  படைகளும்  வெளியேற முடியாத  நிலை உள்ளது. அமெரிக்க  ஜனாதிபதி ஜோ  பைடனும் இதனை  ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், வெளிநாட்டுப் படைகள் 31  ஆம் திகதிக்குள்  வெளியேற  வேண்டும் என  தலிபான் பேச்சாளர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே கடுமையான வெயிலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்ஆப்கானிஸ்தானில் பணியாற்றியமேற்கத்திய நாட்டவரை பாதுகாப்பாக வெளியேற்ற கடைசி தேதியை மேலும் நீடிக்க வேண்டும் என்று பல நாடுகளும் கோரிவருகின்றன.

தங்கள் நாட்டவர்கள் ஆப்கானிஸ்தானிலேயே தங்கினால் அவர்கள் தாலிபான்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்று அந்த நாடுகள் கருதுகின்றன. இதனை தலிபான்கள்  ஏற்றுக்கொள்வார்களா அல்லது  தாக்குவார்களா என்பதை   உறுதியாகக்  கூறமுடியாது.

தலிபான்கள் வாகுறுதியளித்தது போல்   அமெரிக்கபப்டைகள் மீது  தாக்குதல் நடத்தவில்லை என பைடன் தெரிவித்துள்ளார். ஆனால், ஆப்கான் மக்களை பழிவாங்க மாட்டோம், துன்புறுத்த  மாட்டோம் என வாக்குறுதியளித்த  தலிபான்கள் அந்த  வாக்குறுதியக் கைவிட்டுள்ளனர்.

அமெரிக்க  ஜனாதிபதி இதுபற்றி பெரிதாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின்  கட்டுப்பாட்டில் உள்ளது.அங்கு பல ஆயுதக் குழுக்கள் இருப்பதாக  புலனாய்வுத் தகவல்கள் தெரிவிகின்றன. அந்தக் குழுக்களின் மூலம் ஆபத்து  வரலாம் என  அமெரிக்காவும் நேச  நாடுகளும் அஞ்சுகின்றனவிமான நிலயத்துக்கு மிக நெருக்கமாக மக்கள் குழுமியுள்ளதால் மீட்பு விமானங்கள் மீது  தாக்குதல் நடத்தப்படலாம் எனபதற்காக வெப்பத்தி வெளியேற்றி  மிகப் பாதுகாப்புடன்  விமானங்ககள் தரி இறங்குகின்றன.தலிபான்களின் எழுச்சியைத் தொடர்ந்து காபூலில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களையும், வெளிநாட்டவர்களையும் வெளியேற்ற உதவுவதற்காக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைடெட் உள்ளிட்ட அமெரிக்க வணிக விமான நிறுவனங்கள் உதவுகின்றன.ஆப்கானில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள் கட்டார், பஹ்ரைன் ,ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்கத் தளங்களங்களுக்கு கொண்டு செல்லபப்டுகிறார்கள். அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும்,   அமெரிக்காவிற்கும் வணிக விமானங்கள்  மூலம்  கொண்டு செல்லபப்டுவார்கள். பிடென் நிர்வாகத்தின்படி, 15,000 அமெரிக்கர்களும், 50,000 முதல் 60,000 ஆப்கானிய கூட்டாளிகள் வெளியேற்றப்பட வேண்டும்.

சிவில் ரிசர்வ் ஏர் ஃப்ளீட் இரண்டு முறை மட்டுமே செயல்படுத்தப்பட்டது-1990-1991 வளைகுடாப் போருக்கு ஒரு முறை துருப்புக்களை ஏற்றியஹு, பின்னர்  2002-2003 இல் ஈராக் படையெடுப்புக்காக துருப்புகளுடன் பறந்தது. இப்போது  மூன்றாவது  முறையாக  பறக்கிறது.

  ஆப்கானிஸ்தானிலிருந்து ஜேர்மனியில் உள்ள ராம்ஸ்டைன் விமானப்படை தளத்துக்கு  ஓகஸ்ட் 21  ஆம் திகதி சென்ற  விமானத்தில்   ஆப்கானிய பெண் குழந்தையைப் பிரசவித்தார் என்று அமெரிக்க விமானப் படையின் ஏர் மொபிலிட்டி கமாண்ட் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.அந்த விமானம் தரை இறங்கிய பின்பு அதற்குள் சென்ற மருத்துவ ஊழியர்கள் விமானத்தின் சரக்கு வைக்கும் பகுதிக்குள் வைத்து அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.அந்த விமானத் தளத்திற்கு அருகே இருக்கும் மருத்துவமனை ஒன்றில் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அப்பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டது. எனவே விமானத்தின் உள்பகுதியில் காற்றழுத்தத்தை அதிகரிப்பதற்காக, விமானி அந்த விமானம் பறந்து கொண்டிருந்த உயரத்தை குறைந்ததாகவும் அது காற்றழுத்தத்தைச் சீராக்கி, தாயின் உயிரைக் காப்பாற்ற உதவியது என்றும் ஏர் மொபிலிட்டி கமாண்ட் ட்விட்டரில்  தெரிவித்துள்ளார்.

அகதிகளை ஏற்பதில் ஒவ்வொரு நாடும் தனி கொள்கைகளை பின்பற்றி வருகின்றன. அந்த கொள்கைக்கு மாறாக, புதிய அகதிகளை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் உள்ளது என்பதால், இப்போது அகதிகளாக செல்லும் ஆப்கானியர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. இருப்பினும், அமெரிக்கா, இங்கிலாந்து,கனடா  உள்ளிட்ட சில நாடுகள் ஆப்கானிஸ்தான் அகதிகளை, சில நெறிமுறைகளுக்குட்பட்டு ஏற்றுக்கொள்கின்றன.  2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, 2.8 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளிநாடுகளில் உள்ளதாக யு.என்.ஹெச்.சி.ஆர் (UNHCR) தெரிவித்துள்ளது. இன்றைய  நிலயில் அத்தொகை மேலும் அதிகரிக்க  வாய்ப்பு  உள்ளது.

காபூல் விமான நிலையம் மீது .எஸ்..எஸ்.‍ -கே  இயக்கம், தற்கொலைப்படை தாக்குதலை நடத்தலாம் என அமெரிக்கா அச்சம் தெரிவித்திருக்கிறதுஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களைக் கொண்ட அமைப்பாகும். இதன் தலைவர்கள் ஏற்கனவே அமெரிக்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர். ஆனாலும் இந்த அமைப்பு இப்போது மீண்டும் உயிர்ப்புடன் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 காபூலில் தொடர்ந்து தமது நாட்டு இராணுவத்தை  அமெரிக்கா நிலை  நிறுத்தும் என்ற சந்தேகம் தலிபான்களுக்கு  உள்ளது. அதன் காரணமாகத்தான் ஓகஸ்ட்  31  ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்தா மோசமான  விளைவுகள் ஏற்படும் என  எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா படைகளுடன் மீண்டும் மோதுவதற்கு தாலிபான்கள் தயாராகிவருகின்றனர்.