Sunday, October 29, 2023

இங்கிலாந்தை தெறிக்க விட்ட இலங்கை


 பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில்  இங்கைலாந்துக்கு எதிராக விளையாடிய  இலங்கை எட்டு விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  இங்கைலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 33.2  ஒவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது. பென் ஸ்டொக்ஸ் அதிக பட்சமாக  43  ஓட்டங்கள் அடித்தார்.

இலங்கை அணி இரண்டு விக்கெற்களை இழந்து 25.4  ஓவர்களில் 160 ஓட்டங்கள் எடுத்தது. பதும் நிஸங்க ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களும், சமர விக்கிரம ஆட்டமிழக்காமல்  65  ஓட்டங்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து    அசத்தலாக விளையாடிக்கொண்டிருந்த வேளையில் டேவிட் மலானை மத்யூஸ் வீழ்த்தினார்.   பத்தாவது ஓவரில் ஜோ ரூட்டை ரன் அவுட் செய்தார்.  மொயின் அலி,ஸ்டோக்ஸ் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். அந்த நேரத்தில் மொயின் அலியை மத்யூஸ் வீழ்த்தி அந்த அணியின் அச்சாணியையே முறித்து விட்டார். இந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 5 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் உட்பட 1 ரன் அவுட்டையும் செய்து இங்கிலாந்து அணியின் சரிவிற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

உலகக் கிண்ணப்  போட்டியில்  இலங்கைக்கு எதிராக தங்களுடைய குறைந்தபட்ச ஓட்டங்களைப் திவு செய்து இங்கிலாந்து மோசமான சாதனை படைத்தது. அத்துடன் பெங்களூரு மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இந்தியாவின் மோசமான சாதனையை இங்கிலாந்து வாங்கிக் கொண்டது. இதற்கு முன் 1999இல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 168 ஓட்டங்கள் எடுத்ததே முன்னைய சாதனையாகும்.

1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில்  தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தது.   அதன்பிறகு 27 ஆண்டுகள் கழித்து உலக கோப்பை வரலாற்றில் தற்போது ஹட்ரிக் தோல்வியை இங்கிலாந்து அணி முதல்முறையாக சந்தித்திருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வலுவான இங்கிலாந்தை தோற்கடித்துள்ள இலங்கை உலகக் கோப்பையில் தொடர்ந்து 5வது முறையாக வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஆம் கடைசியாக கடந்த 1999 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இலங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

ஐந்து போட்டிகளில் 4வது தோல்வியை பதிவு செய்து 9வது இடத்துக்கு சரிந்த இங்கிலாந்தின் செமி ஃபைனல் வாய்ப்பு 90% முடிந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக அடுத்ததாக வலுவான இந்தியாவை எதிர்கொள்ளும் நிலையில் அடுத்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றாலும் மோசமான ரன்ரேட்டை கொண்டுள்ள அந்த அணி அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற இதர அணிகளின் தோல்வியை பார்க்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழன்,உலகக்கிண்ணம்23,இந்தியா,இலங்கை,இங்கிலாந்து

 

அரசியலாக்கப்பட்ட பெற்ரோல் குண்டு வீச்சு

தமிழக ஆளுநரின்  மாளிகை முன்பு   வீசப்பட பெட்ரோல் குண்டு  அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதமிழக ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான முறுகல் நிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மளிகை முன்பு வியாழகிழமை  பிற்பகல்  2:40 மணியளவில், இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது, பெட்ரோல் குண்டு வீசிய நபரை அந்த இடத்திலேயே பொலி ஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் விசாரணையில், அந்த நபர் கருக்கா வினோத் என்றும், அவர் மீது E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் வழக்கமான குற்றவாளி என்றும் தெரியவந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து, கருக்கா வினோத் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிகையில்,

`ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவுசெய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து தன்னிலையாகப் பதிவுசெய்யப்பட்ட புகார், ஆளுநர் மாளிகை முன்பு நடந்த தாக்குதலை சாதாரணமான நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. இந்த வழக்கில், அவசரகதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நள்ளிரவில் மாஜிஸ்திரேட்டை எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த விசாரணை கொல்லப்படுகிறது" என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது.

அண்ணாமலை, வானதி போன்றதமிழக பாரதீய ஜனதாத் தலைவர்கள் வழமைபோல் தமிழகத்தில்  சட்டம்  ஒழுங்கு இல்லை என ஆளுநருக்கு சார்பாக பக்கப்பாட்டு பாடத்தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில், இதில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், ஆளுநருக்கு தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் தமிழக காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``இச்சம்பவத்தால், பொருட்களுக்கோ அல்லது எந்த நபருக்கோ எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை. கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், மேற்படி அந்த நபர் தேனாம்பேட்டையிலிருந்து, சம்பவ இடம் வரை தனியாகவே வந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, 25.10.2023 அன்று J-3 கிண்டி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினோத் ஏற்கனவே பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். வினோத் மற்றும் அவரின் கூட்டாளிகள் சௌத் போக் சாலையில் உள்ள மதுபானக்  கடையில் 12.08.2015 அன்று பெட்ரோல் நிரம்பிய போத்தல்களை வீசியுள்ளனர். அதேபோல் 13.07.2017 அன்று வினோத் மற்றும் அவரின் கூட்டாளிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரம்பிய போத்தல்களை வீச முற்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு செய்யப்பட்டுள்ளது. வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆளுநருக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறுப் பேச்சு மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை தொடர்பாக காவல்துறையினர் நியாயமான முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை எனவும், மேலும் அச்சம்பவங்கள் தொடர்பாக எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு, 25.10.2023 அன்று T.செங்கோட்டையன் (ஆளுநரின் துணைச் செயலாளர்) புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார் படேல் சாலையில் செய்யப்பட்ட செயலாகும். இந்த நிகழ்வில் புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், அவர்கள் அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் (Sentry) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. அதேபோல் ஏப்ரல் ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்ற போது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்குப் புறம்பானது என காவல்துறை அறிவித்துள்ளது.

ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியைக் கடந்து சென்றபின்னர் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கறுப்புக் கொடிகளைச் சாலையில் வீசினர். கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாகச் சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. சம்பவங்கள் அனைத்துக்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளன.

மேலும், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். மேலே குறிப்பிட்டுள்ளது போன்று எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பிற்காக சர்தார் படேல் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தினாலும், பலத்த காவல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும், உடனடியாகக் குற்றவாளி கைதுசெய்யப்பட்டார்.

மேற்படி வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, கண்காணிப்பு கமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. அதோடு, ஆளுநருக்கும், அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை காலமும் தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுத்த ஆளுநர் ரவி இப்போது தமிழக காவல் துறைக்கு எதிராக  கடுமையான  குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின்  தலைமையகத்தின் மீது பெற்றொல் குண்டு வீசிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சுருக்கா விநோத்தை பாரதீய ஜனதாக் கட்சியில்  வழக்கறிஞர் பிணையில் எடுத்ததாக  திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநருக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான்  மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கைகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த தேர்தலில் ஆளுநரின் செயற்பாடுகள்  பேசு பொருளாக  இருக்கு  என்பதில் மாற்றுக் கருத்து  இல்லை.

Friday, October 27, 2023

குறி வைக்கப்பட்ட காஸா மருத்துவமனை

காசா நகர மருத்துவமனை ஒன்றில் குண்டு வீசப்பட்டதால்  சுமார் 500 பேர் பலியானதாக அரிவிக்கப்பட்டுள்லது. அந்த மருத்துவமனையில் காயமடைந்தவர்களும்  பலஸ்தீனியர்களும் தஞ்சமடைந்ததாக  ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலைக் குற்றம் சாட்டியது, அதே நேரத்தில் இஸ்ரேலிய இராணுவம் மற்ற பாலஸ்தீனிய போராளிகளால் தவறாக வீசப்பட்ட ராக்கெட்டைக் குற்றம் சாட்டியது.

 மருத்துவமனி மீதான  தாக்குதலுக்கு இஸ்ரேலை நோக்கி பாலஸ்தீனிய அதிகாரிகள் விரலை சுட்டிக்காட்டியுள்ளனர், ஆனால் அல் அஹ்லி அல் அரபி மருத்துவமனையில் குண்டுவெடிப்புக்கு பாலஸ்தீனிய  இஸ்லாமிய ஜிஹாத் (PஈJ) குழுவே காரணம் என்று ஜெருசலேம் கூறுகிறது - இஸ்லாமிய போராளி குழு மறுத்த குற்றச்சாட்டை. இஸ்ரேலை குறிவைத்து தாக்கப்பட்ட பாலஸ்தீன ராக்கெட் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஈDF) தெரிவித்துள்ளது.

மருத்துவமனை படுகொலையின் காரணமாக அப்பகுதி முழுவதும் ஆத்திரம் பரவியது, மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், போரைப் பரவுவதைத் தடுக்கும் நம்பிக்கையில் மத்திய கிழக்கு நோக்கிச் சென்றதால், ஜோர்டானின் வெளியுறவு மந்திரி, பிடன் இருந்த அம்மானில் புதன்கிழமை திட்டமிடப்பட்ட ஒரு பிராந்திய உச்சிமாநாட்டை தனது நாடு ரத்து செய்ததாகக் கூறினார். ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி ஆகியோரை சந்திக்க வேண்டும்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் "பிராந்தியத்தை விளிம்பிற்குத் தள்ளுகிறது" என்று வெளியுறவு மந்திரி அய்மன் சஃபாடி அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். "போரை நிறுத்துவது, பாலஸ்தீனியர்களின் மனிதாபிமானத்தை மதிப்பது மற்றும் அவர்களுக்குத் தகுதியான உதவிகளை வழங்குவது" என்று அனைவரும் ஒப்புக்கொண்டால் மட்டுமே ஜோர்டான் உச்சிமாநாட்டை நடத்தும் என்றார்.

பிடென் இப்போது இஸ்ரேலுக்கு மட்டுமே செல்வார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அல்-அஹ்லி மருத்துவமனையில் ஏற்பட்ட வெடிப்பு பயங்கரமான காட்சிகளை விட்டுச்சென்றது. அசோசியேட்டட் பிரஸ் உறுதிப்படுத்திய வீடியோ, மருத்துவமனையிலிருந்து வந்ததைக் காட்டிய வீடியோ, கட்டிடம் மற்றும் மருத்துவமனை வளாகம் கிழிந்த உடல்களால் சூழப்பட்டதைக் காட்டியது, அவர்களில் பலர் சிறு குழந்தைகள். அவர்களைச் சுற்றி புல் போர்வைகள், பள்ளி முதுகுப்பைகள் மற்றும் பிற பொருட்களால் சிதறிக்கிடந்தன.

கடந்த வாரம் தெற்கு இஸ்ரேலில் ஹமாஸின் கொடிய தாக்குதலுக்குப் பின்னர் முழு முற்றுகையின் கீழ் உள்ள சிறிய காசா பகுதியில் உள்ள அவநம்பிக்கையான குடிமக்கள், உதவிக் குழுக்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பொருட்களை வழங்குவதற்கு இஸ்ரேலை அமெரிக்கா சம்மதிக்க வைக்க முயன்றபோது இரத்தக்களரி வெளிப்பட்டது. நூறாயிரக்கணக்கான பெருகிய முறையில் அவநம்பிக்கையான மக்கள் ரொட்டி மற்றும் தண்ணீரைத் தேடிக்கொண்டிருந்தனர்.

செவ்வாயன்று நடந்த மருத்துவமனை குண்டுவெடிப்பை "பயங்கரமான படுகொலை" என்று ஹமாஸ் கூறியது, இது இஸ்ரேலிய வேலைநிறுத்தத்தால் ஏற்பட்டது. 

இராணுவ ஆளில்லா விமானம் மூலம் சேகரிக்கப்பட்ட வான்வழி காட்சிகளையும் ஹகாரி பகிர்ந்துள்ளார், இது இஸ்ரேலிய ஆயுதங்களுக்கு முரணானது என்று அவர் கூறினார். கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

போர் தொடங்கியதிலிருந்து, இராணுவம் ஒரு அறிக்கையில், போராளிக் குழுக்களால் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட சுமார் 450 ராக்கெட்டுகள் காஸாவில் தரையிறங்கியுள்ளன, "கசான் குடியிருப்பாளர்களின் உயிருக்கு ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும்".

இஸ்லாமிய ஜிஹாத் அந்த கூற்றுக்களை நிராகரித்தது, "இஸ்ரேல் செய்த கொடூரமான படுகொலைக்கான பொறுப்பிலிருந்து தப்பிக்க கடுமையாக முயற்சிக்கிறது" என்று குற்றம் சாட்டியது.

அல்-அஹ்லியை வெளியேற்ற வேண்டும் என்ற இஸ்ரேலின் உத்தரவையும், மருத்துவமனை வளாகத்தின் மீது முந்தைய குண்டுவெடிப்பும் மருத்துவமனை இஸ்ரேலிய இலக்கு என்பதற்கு ஆதாரமாக குழு சுட்டிக்காட்டியது. வெடிப்பின் அளவு, வெடிகுண்டு விழுந்த கோணம் மற்றும் அழிவின் அளவு ஆகியவை இஸ்ரேலை சுட்டிக்காட்டுவதாகவும் அது கூறியது.

நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கடந்த நாட்களில் அல்-அஹ்லி மற்றும் காசா நகரத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்தனர், இஸ்ரேல் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் அனைவரையும் தெற்கு காசா பகுதிக்கு காலி செய்ய உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் குண்டுவீச்சிலிருந்து விடுபடுவார்கள் என்று நம்பினர்.

ஆம்புலன்ஸ்கள் மற்றும் தனியார் கார்கள் அல்-அஹ்லி குண்டுவெடிப்பில் இருந்து சுமார் 350 பேரை காசா நகரின் பிரதான மருத்துவமனைக்கு கொண்டு சென்றன, இது ஏற்கனவே மற்ற வேலைநிறுத்தங்களால் காயமடைந்தவர்களால் மூழ்கியிருந்த அல்-ஷிஃபா என்று அதன் இயக்குனர் முகமது அபு செல்மியா கூறினார். காயமடைந்தவர்கள் இரத்தம் தோய்ந்த தரையில் கிடந்தனர், வலியால் அலறினர்.

"எங்களுக்கு உபகரணங்கள் வேண்டும், மருந்து வேண்டும், படுக்கைகள் வேண்டும், மயக்க மருந்து வேண்டும், எல்லாம் வேண்டும்," என்று அபு செல்மியா கூறினார். மருத்துவமனையின் ஜெனரேட்டர்களுக்கான எரிபொருள் சில மணிநேரங்களில் தீர்ந்துவிடும் என்று அவர் எச்சரித்தார்.

அல்-அல்ஹி மருத்துவமனை இறப்பதற்கு முன், காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 2,778 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9,700 பேர் காயமடைந்தனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் என்று அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காசா முழுவதும் மேலும் 1,200 பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டு, உயிருடன் அல்லது இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் எல்லையில் குவிந்துள்ள நிலையில், இஸ்ரேல் காசா மீது தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அதன் திட்டங்கள் நிச்சயமற்றதாகவே இருந்தது.

"போரின் அடுத்த கட்டத்திற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்" என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் ஹெக்ட் கூறினார். "அவை என்னவாக இருக்கும் என்று நாங்கள் கூறவில்லை. எல்லோரும் தரைவழி தாக்குதல் பற்றி பேசுகிறார்கள். இது வேறு ஏதாவது இருக்கலாம்."

4,000 பாலஸ்தீனியர்கள் தஞ்சம் புகுந்திருந்த மத்திய காசாவில் உள்ள ஐ.நா பள்ளி ஒன்றில் இஸ்ரேலிய டாங்கிகளின் ஷெல் தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாக ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் குறைந்தது 24 ஐ.நா. நிறுவல்கள் தாக்கப்பட்டு, ஏஜென்சியின் ஊழியர்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.

 இருப்பினும், செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில், எந்த ஒப்பந்தமும் இல்லை. ஹமாஸ் போராளிகள் எந்தவொரு உதவிப் பொருட்களையும் கைப்பற்ற மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை தனது நாடு கோரி வருவதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவரான Tழகி Hஅனெக்பி, ஹமாஸ் பிடியில் வைத்திருக்கும் பணயக்கைதிகள் திரும்பப் பெறுவதைப் பொறுத்தே உதவிகள் நுழைய வேண்டும் என்று பரிந்துரைத்தார்..

1 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் - காசாவின் மக்கள்தொகையில் பாதி பேர் - மற்றும் 60% இப்போது வெளியேற்ற மண்டலத்திற்கு தெற்கே தோராயமாக 14-கிலோமீற்றர் (8-மைல்) நீளமான பகுதியில் உள்ளனர் என்று ஐ.நா.

எகிப்துடனான காசாவின் ஒரே இணைப்பான ரஃபா கிராசிங்கில், ஒரு நாளுக்கும் மேலாக ட்ரக் நிறைய உதவிகள் உள்ளே வரக் காத்திருந்தன. காசாவைக் கடக்க 300 டன்களுக்கும் அதிகமான உணவு காத்திருப்பதாக உலக உணவுத் திட்டம் கூறியது.

 

 

தீம்புனல்,இஸ்ரேல்,கமாஸ்,போர்,யுத்தம்,பாலஸ்தீனம்,காஸா

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 84

வசீகரிக்கும் முகம், கவர்ந்திழுக்கும் கண், அழகான சிரிப்பு  என்பன  ஈ.வி.சரோஜாவை  நினைவு படுத்துபவை. கதாநாயகி, இரண்டாவது கதாநாயகி, தோழி, நகைச்சுவை,  குணசித்திரம் எதுவாக  இருந்தாலும்  ஜமாய்ப்பவர் ஈ.வி.சரோஜா. கலை அரசி என ரசிகர்களால் போற்றப்பட்ட  ஈ.வி.சரோஜா நடனத்தில் தேர்ச்சி பெற்றவர். நடனம் தான் அவரை திரை உலகுக்கு அழைத்து வந்தது.

வழுவூர் ராமய்யா பிள்ளையிடம் நடனக் கலைகளை கற்றுக் கொண்டு நன்கு தேர்ச்சி பெற்ற சரோஜாவின் நாட்டிய அரங்கேற்றம் 1951ஆம் ஆண்டில் சென்னை ரசிக ரஞ்சினி சபாவில் நீதிபதி ஏ.எஸ்.பி.அய்யர் முன்னிலையில் நடந்தேறியபோது, அனைத்து தரப்பினரின் பாராட்டு மாலைகள் ஒருசேர சரோஜாவுக்கு குவிந்தன.இந்த வேளையில் சிவாஜி கணேசன் நடித்து வந்த ‘என் தங்கை’ என்ற நாடகத்தை அதே பெயரில் அசோகா பிக்சர்ஸ் பட நிறுவனத்தார், எம்ஜிஆரை நாயகனாக்கி திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருந்தனர்.

இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு தங்கையாக மீனா என்ற பாத்திரத்தில் நடிப்பதற்கு இளம்பெண் ஒருவரை தேடிக் கொண்டிருந்தனர்.நடன நிகழ்ச்சியில் சரோஜாவை பார்த்த இவர்கள், தங்கள் படத்தில் அவரை நடிக்க வைப்பதற்கு முடிவெடுத்து அவரை ஒப்பந்தம் செய்தனர்.பார்வையற்றப் பெண்ணான மீனாவின் நடிப்பு இந்தப் படத்தில் மிக முக்கியமான வேடமாகும்.தங்கைக்காக தனது வாழ்வையே அர்ப்பணிக்கும் ஏழை அண்ணன் ராஜேந்திரனாக, எம்ஜிஆரின் உணர்ச்சிப்பூர்வ நடிப்பும், அதற்கு ஈடாக சரோஜாவின் உருக வைக்கும் பாத்திரமும், படத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கின.இதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை எடுத்த எடுப்பிலேயே சரோஜா கவர்ந்தார்.

1935ல் திருவாரூர் மாவட்டம் என்கண் கிராமத்தில் வேணுபிள்ளை, ஜானகி தம்பதியருக்கு 2வது மகளாகப் பிறந்தார். பிறந்த ஊரின் முதல் எழுத்துடன், தந்தையின் பெயரையும் சேர்த்து ஈ.வி.சரோஜா என்று பெயர் வைத்தார். இவருடன் மூத்த அண்ணன், 2 தம்பிகள் உள்ளனர்.வீட்டில் ஒரே மகள் என்பதால் பெற்றோர் இவரை சீரும் சிறப்புமாக மகாலெட்சுமி போல் வளர்த்தனர். சிறுவயது முதலே நடனமாடுவது, பாடுவது என தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். இவரது 8 ஆவது  வயதில் தந்தை காலமானார்.

வழுவூர் ராமையாபிள்ளையிடம் ஈ.வி.சரோஜா நடனம் கற்றார். 1952ல் என் தங்கை என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப்படத்தில் எம்ஜிஆரின் தங்கையாக நடித்து இருந்தார்.

பணமின்றி வறுமையில் வாழ முடியாது என்ற நிலையில் இறந்து போகிறார் ஈ.வி.சரோஜா. சோகம் தாங்காமல் தானும் கடலில் இறங்கித் தற்கொலை செய்து கொள்கிறார் எம்ஜிஆர். படம் கதை எதிர்மறையாக வெளியானதால் வெற்றி பெறவில்லை. இதன்பிறகு எம்ஜிஆர் இதுபோன்ற கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதே இல்லை.955ல் ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் கே.ஏ.ராமசாமி, ராஜசுலோச்சனா நடித்த நீதிபதி என்ற படத்தில் இடம்பெற்ற நடனத்தில் ஈ.வி.சரோஜாவும், அவரது தோழி விஜயலெட்சுமியும் இணைந்து அற்புதமாக நடனமாடினர்.

குலேபகாவலியில் குல்சார் என்ற கதாபாத்திரத்தில் சரோஜா தோன்றி நடித்து அசத்தினார். ஜிக்கியின் பின்னணி குரலில் சொக்கா போட்ட நவாபு செல்லாது உங்க ஜவாபுன்னு அசத்தலாக பாடி, ஆட்டம் போடுவார்.

பெண்ணரசி என்ற படத்தில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துத் தாய்மார்களின் பேராதரவைப் பெற்றார். பலே ராமுடு என்ற தெலுங்கு படத்தில் நடனமங்கையாக அறிமுகமானார்.

1956ல் வெளியான அமரதீபம், பாசவலை படங்களில் நடித்து நடிப்பில் தனக்கென தனிமுத்திரை பதித்தார். 1956ல் லேனா செட்டியார் இயக்கத்தில் எம்ஜிஆருடன் இணைந்து பானுமதி மதுரை வீரன் படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் கிள்ளி என்ற கதாபாத்திரத்தில் ஈ.வி.சரோஜா நடித்தார்.

வாங்க மச்சான் வாங்க என்ற பாடலுக்கு ஆடிப்பாடி எம்ஜிஆரை கலாய்த்திருப்பார். அடுத்து கே.ஏ.தங்கவேலு, பானுமதி இணைந்து நடித்த ரம்பையின் காதலி படத்தில் ஊர்வசி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

1957ல் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த புதுமைப்பித்தன் படத்தில் அபராஜிதா என்ற கதாபாத்திரத்தில் ஈ.வி.சரோஜா நடித்தார். சந்திரபாபுவுடன் இணைந்து தில்லானா பாட்டுப்பாடி என்ற பாடலுக்கு செம ஆட்டம் போடுவார். ஜெமினிகணேசன், சாவித்ரியின் நடிப்பில் வெளியான கற்புக்கரசியில் சசிகலாவாகத் தோன்றினார்.

எங்கள் வீட்டு மகாலெட்சுமியில் பட்டணம் தான் போகலாமடி பொம்பள என்ற பாடலுக்கு ஆடிப்பாடி ஜமாய்த்திருப்பார். வீரக்கனல், காத்தவராயன், பிள்ளைக்கனியமுது படங்களில் நடித்து முத்திரை பதித்தார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். 1960ல் பீம்சிங் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் படிக்காத மேதை படத்தில் நடித்தார்.


 டி.ஆர்.மகாலிங்கம் நடிப்பில் ஆடவந்த தெய்வம் படத்தில் பைரவியாக தோன்றி அசத்தினார். 1961ல் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பாக்ய லட்சுமி படத்தில் ஜெமினியின் 2வது மனைவி ராதாவாகத் தோன்றி அசத்தினார். மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற பாடலில் சௌகார் ஜானகி உடன் வீணை வாசித்தபடி அசத்தலாக நடித்தார்.

நல்லவன் வாழ்வான் படத்தில் இடம்பெற்ற ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான், குத்தால அருவியிலே குளித்தது போல் இருக்குதா? பாடலில் ஈ.வி.சரோஜா பின்னி எடுத்திருப்பார்.

அடுத்து 1954இல் டி.ஆர்.மகாலிங்கத்தின் சொந்தப் படைப்பான சுகுமார் புரொடக்க்ஷன்ஸ் ‘விளையாட்டு பொம்மை’ படத்தில்

குமாரி கமலாவுடன் இணைந்து சரோஜா நடித்தார்.தொடர்ந்து 1955இல் ஏ.பி.நாகராஜனின் ‘பெண்ணரசி’ படத்திலும் எம்ஜிஆருடன் ‘குலேபகாவலி’ படத்திலும், ஆர்.எஸ்.மனோகர் நடித்த ‘நல்ல தங்காள்’ படத்திலும், ஜெமினி கணேசன் நடித்த ‘நீதிபதி’ படத்திலும் அடுத்தடுத்து சரோஜா நடித்தார்.1956இல் தங்கவேலுவுடன் ‘அமரதீபம்’ படத்தில் தோன்றிய சரோஜா, இந்த ஆண்டில் ‘நன்நம்பிக்கை’, ‘பாசவலை’, ‘மறுமலர்ச்சி’, ‘மதுரைவீரன்’, ‘ரம்பையின் காதல்’, ஆகியப் படங்களிலும் திறம்பட நடித்தார்.

‘எங்க வீட்டு மகாலஷ்மி’, ‘கற்புக்கரசி’, ‘நீலமலைத் திருடன்’, ‘புதுமைப்பித்தன்’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ ஆகியப்

படங்கள் 1957ஆம் ஆண்டில் சரோஜாவின் அபார நடிப்புடன் திரைக்கு வந்தன.தொடர்ந்து ‘கடன் வாங்கிக் கல்யாணம்’, ‘காத்தவராயன்’, ‘குடும்ப கௌரவம்’, ‘பிள்ளைக்கனியமுது’, ‘பூலோக ரம்பை’ ஆகியப் படங்கள் 1958இல் சரோஜாவின் நடிப்பு நடனம் இரண்டையும் புலப்படுத்தி வெளியீடு கண்டன.1959இல் ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’, ‘சுமங்கலி’, ‘தங்கப்பதுமை’, ‘மனைவியே மனிதனின் மாணிக்கம்’ ஆகியப் படங்களிலும் சரோஜா இடம் பெற்றார்.

சரோஜாவின் அற்புத நடிப்பை புலப்படுத்தும் விதமாக 1960இல் ‘

ஆட வந்த தெய்வம்’, ‘மணப்பந்தல்’, ‘பங்காளிகள்’, மற்றும்

‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ ஆகியப் படங்கள் திரைக்கு வந்தன.தொடர்ந்து ‘கைதி கண்ணாயிரம்’, ‘படிக்காத மேதை’, ‘பாட்டாளியின் வெற்றி’, ‘இரத்தினபுரி இளவரசி’, ‘ராஜபக்தி’ ஆகியப் படங்கள் இவரின் நடிப்பை பாராட்டும் விதமாக ரசிகர்களை மகிழ்வித்தன.1961இல் ‘பாக்கியலஷ்மி’ படத்திலும், 1962இல் ‘வீரத்திருமகன்’ படத்திலும் சரோஜாவின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் நடனமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.

இவர் தனது சகோதரர் ஈ.வி.ராஜனுடன் இணைந்து, ஈ.வி.ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி 1963ஆம் ஆண்டில் ‘கொடுத்து வைத்தவள்’ என்ற படத்தையும் 1969இல் ‘தங்கச் சுரங்கம்’ என்ற படத்தையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொடுத்து வைத்தவள் படத்தில் எம்ஜிஆருக்கு இணையாக சரோஜாவின் நடிப்பு தரமாக அமைந்திருந்தது.இப்படத்தில் பித்தனாக விடும் எம்ஜிஆரை சந்தர்ப்பவசத்தில் மணந்து கொள்ளும் துர்ப்பாக்கியப் பெண்ணாக சரோஜா திறம்பட நடித்திருந்தார். எம்ஜிஆருடன் இவர் பாடும் ‘என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு’ என்ற பாடல், இவரை ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வரும் இனிமையானப் பாடலாகும்.

தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏறத்தாழ 70 படங்களில் நடித்திருக்கும் சரோஜா, எம்ஜிஆருடன் நடித்திருந்த ‘கொடுத்து வைத்தவள்’ படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இல்லத்தரசியாகவே தனது வாழ்நாளைக் கழித்தார்.பிரபல இயக்குநர் டி.ஆர். ராமண்ணாவுக்கு இரண்டாவது மனைவியான இவருக்கு நளினி என்ற பெயரில் ஒரே ஒரு மகள் உண்டு.சரோஜா 1974ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்து கலைமாமணி விருது பெற்றார்.2002ஆம் ஆண்டில் முத்தமிழ் பேரவை சார்பில் ‘நாட்டிய செல்வி’ என்ற விருதையும், 2004ஆம் ஆண்டில் தமிழக அரசின் எம்ஜிஆர் விருதையும் சரோஜா பெற்றுள்ளார்.