34
வயதான நெய்மர் 130 போட்டிகளில் 80 கோல்கள்
அடித்து பிறேஸிலின் வரலாற்றில் அதிக கோல் அடித்த
வீரராக உள்ளார். தனது 16 ஆண்டுகால சர்வதேச விளையாட்டு வாழ்க்கை குறித்து தனக்கு எந்த
வருத்தமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
நோர்வேயிடம்
உலகக் கோப்பையில் பிரேசில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இனி பிரேசில் தேசிய அணிக்காக
விளையாடப் போவதில்லை என கண்ணீருடன் அறிவித்து, நெய்மர் தனது சர்வதேச ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளார்
.
“தேசிய அணியுடனான எனது காலம் முடிந்துவிட்டது.
நான் வரலாறு படைத்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், என் இரத்தத்தையும் உயிரையும்
கொடுத்தேன்... ஆனால் இப்போது எனக்கு அது இனி வேண்டாம்,” என்று செவ்வாயன்று கோபா சுடாமெரிக்கானா
போட்டியில் வெனிசுலாவின் யுசிவி அணியை தனது கிளப்பான சாண்டோஸ் 4-2 என்ற கோல் கணக்கில்
தோற்கடித்த பிறகு நெய்மர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பிறேஸிலின்
அதிக கோல் அடித்த வீரரான அவர், தேசிய அணிக்காக கடைசியாக விளையாடி கிட்டத்தட்ட மூன்று
ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டு, இரண்டு போட்டிகளில் மொத்தம்
37 நிமிடங்கள் மட்டுமே விளையாடினார்.
தரமிறக்கத்தைத் தவிர்க்கப் போராடிவரும் சாண்டோஸ்
அணியுடன் இந்த ஆண்டு இறுதி வரை நெய்மர் ஒப்பந்தத்தில்
உள்ளார்.
மீண்டும்
களமிறங்கிய அவர், தனது முதல் போட்டியிலேயே இரண்டு கோல்களை அடித்ததோடு, தன்னை விமர்சித்தவர்களுக்கு
கிண்டலான முறையில் கோல் கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தினார்.
வெனிசுலாவில்
தனது சக வீரர்கள் கோபா சுடாமெரிக்கானா போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, போக்கர்
போட்டியில் பங்கேற்றதற்காக விமர்சனங்களை எதிர்கொண்ட நெய்மர், பின்னர் சீட்டுக்களைக்
கொடுப்பது போன்ற சைகை மூலம் தனது வெற்றியைக் கொண்டாடினார்.
செவ்வாயன்று
அதே அணிக்கு எதிரான மறு ஆட்டத்தில் அவர் மாற்று வீரராக அமர்ந்திருந்தார், அந்த ஆட்டத்தில்
சாண்டோஸ் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தனது இடத்தை எளிதாக உறுதி செய்தது.








.jpg)
.jpg)
0.jpg)





