Saturday, September 17, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள்4

கவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்பெற்றுள்ளன. இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் திரையில் வரும் இதுபோன்ற முகம் சுழிக்கும் காட்சியமைப்பாலர் விரும்புவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட காட்சிகளைப் புகுத்துவதில் ஒரு சில தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அதிக அக்கறைக் காட்டுகிறார்கள். படத்துக்குத் தேவையில்லாத நேரத்தில் கதாநாயகி நீச்சலுடையில் தோன்றுவதும், மழையில் நனைந்து பாடுவதும், பாடிக்கொண்டே குளிப்பதும் ரசிகர்களுக்கு பழகிவிட்டது. சாமி இயக்கிய சிந்து சமவெளி என்ற திரைப்படம் மிக மோசமான தமிழப்படம் என்ற விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
மாமனுக்கும் மருமகளுக்கும் இடையேயான கள்ளக் காதல் என்ற ஒருவரி கதையுடன் களம் புகுந்த இயக்குனர் சாமி அப்படத்தில் உள்ள பாத்திரங்கள் அனைத்தையும் பாலியல் வக்கிரம் உடையவர்களாகப் படைத்துள்ளார். பல பெண்களுடன் தொடர்புகொள்ளும் கிராமத்து முரடனுக்கு எய்ட்ஸால் பாதிக்கப்படுவதை மிருகம் என்ற படமாகவும் கணவனின் தம்பி மீது காதல் கொள்ளும் பெண்ணின் வக்கிரத்தை உயிர் என்ற படமாகவும் தந்தவர்தான் இயக்குநர் சாமி. மிருகம் என்ற படம் அவருக்கு ஓரளவு நல்ல பெயரைப் பெற்றக் கொடுத்தது. உயிர் என்ற படம் சாமி மீது மிக மோசமான விமர்சனத்தை சுமத்தியது. சிந்து சமவெளி அவரை ஒதுக்கியது.
சிந்து வெளி என்றால் புதிய நாகரிகம் வளர்ந்ததை சரித்திர மாணவர்களின் மனம் அசைப்போடும். சிந்து சமவெளி என்றால் பாலியல் வக்கிரம் நிறைந்த படம் என்று சாமி நிரூபித்துள்ளார். போரில் காயமடைந்து தொடர்ந்து சேவையாற்ற முடியாது வீட்டுக்கு திரும்பிவரும் இராணுவ வீரன் கஜினி அவரது மகன் ஹரிஸ்கல்யாண் மகனின் மனைவி அனகா இம் மூவரைப் பற்றிய கதையே சிந்து சமவெளி. ஆசிரியர் பயிற்சிக்காக ஹரிஸ்கல்யாண் விடுதியில் தங்கியுள்ளார். வீட்டிலே தனித்திருக்கும் தகப்பனின் மனதில் கொழுத்து விட்டெரியும் காமத்தீ மருமகளின் மேல் விழுகிறது. சந்தர்ப்பவசத்தால் இருவரும் தவறிழைத்துவிடுகின்றனர். மருமகளாக வாழ வந்த பெண்ணை மனைவியாக்கிய கொடுமை அந்த சந்தர்ப்பத்துடன் முடிந்துவிடாது படம் முழுக்க தொடர்கிறது. கணவன் மீதான ஈடுபாடு குறைந்து மாமன் மீது அதிக அன்பு வைக்கிறாள் மருமகள்.

மாமன் மருமகள் உறவு மறைந்து இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்கிறார்கள். நவநாகரிக உடைகளை வயது முதிர்ந்த மாமன் மருமகளுக்கு அணிந்து பார்ப்பது, பியர் குடிக்கும்படி மருமகளை வற்புறுத்துவது எல்லாம் ஆபாசத்தின் உச்சக்கட்டம் இப்படத்தின் காட்சிகள் மட்டுமல்லாது வசனங்களும் கொச்சையாகவும் தாயையும் தாரத்தையும் இழிவுபடுத்துபவையாகவும் உள்ளன.
இப்படத்தின் இன்னொரு பாத்திரம் வயதான முதியவர் அவருக்கு குழந்தை இல்லை. உறவினரின் மகனை தத்தெடுத்து வளர்க்கிறார். அன்பாக வளர்த்த மகன் முதியவரின் மனைவியை இழுத்துக் கொண்டு ஓடிவிடுகிறான். நகைச்சுவையில் கலக்கும் கஞ்சாகருப்பா பாரியாராக வந்து தனது காம இச்சையை பூர்த்தி செய்கிறார். சாமியின் கற்பனையில் உதித்த பாத்திரங்கள் அனைத்துமே பாலியல் சுகம் தேடி அலைபவையாகவே சித்திரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் சினிமா உலகம் இப்படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. விரச காட்சிகள் நிறைந்த மலையாள சினிமாவை பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்கள் சிந்து சமவெளியை புறக்கணித்தவிட்டார்கள். கதாநாயகனாகும் கனவுடன் அறிமுகமான ஹரிஸ்கல்யாண் இப்படத்தின் பின் காணாமல் போய்விட்டார். அறிமுக நடிகையான அனகா சிந்து சமவெளி படத்தில் நடித்ததற்காக மனம் வருந்திய அனகா தனது பெயரை அமலாபால் என மாற்றியுள்ளார். சிந்து சமவெளி தனது முதல்படம் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வெட்கப்பட்டார். மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அமலாபால் தனது முதல்படம் இந்து சமவெளி என்பதை கூறுவதற்கு வெட்கப்படுகிறார்.

மித்திரன்18/09/11



No comments: