Showing posts with label பரகுவே. Show all posts
Showing posts with label பரகுவே. Show all posts

Wednesday, November 16, 2022

கட்டாரில் உலகக்கிண்ண கண்காட்சி

உலகக்கிண்ணப் போட்டிகள் தொடர்பான கண்காட்சியை கட்டாரில் நடைபெற உள்ளது. பராகுவே கலைஞரான லில்லி கேன்டெரோவின்  எண்ணத்தில் உருவான கலைப்படைப்புகள்  உலகெங்கும்  பிரசித்தமானவை.

, “8 மைதானங்கள் , 8 சாம்பியன்கள், 1 கனவு: கத்தார் 2022.” எனும் கருப்பொருளிலான கண்காட்சியில் காலணி,பந்து , கேன்வாஸ்கள் மற்றும் 3டி கட்டமைப்புகள் என மொத்தம் 25 படைப்புகளை நாங்கள் காட்சிப்படுத்தப் போகிறோம்" என்று 29 வயதான கேன்டெரோ கூறினார்.

எண் 8 என்ற கருத்தை மையமாகக் கொண்டு, எட்டு நாடுகள் மட்டுமே வென்ற உலகக் கிண்ண‌ வரலாற்றை முன்னிலைப்படுத்தும் பணியை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிறேஸில் ஐந்து  முறையும், இத்தாலி ,ஜேர்மனி  ஆகியன நான்மு முறையும், உருகுவே, ஆர்ஜென்ரீனா , பிரான்ஸ்  ஆகியன இரணு முறையும் , இங்கிலாந்து,ஸ்பெயின் ஆகியன  தலா ஒருமுறையும் சம்பியனாகியுள்ளன.

கட்டாரில் உள்ள பராகுவே தூதரகத்தின் ஆதரவுடன், கட்டார் தலைநகரில் உள்ள கட்டாரா கலாச்சார கிராமத்துடன் இணைந்து, "உதைபந்தாட்டம், உலகக்  கிண்ணம், வெவ்வேறு கலாசாரங்களால் ஈர்க்கப்பட்ட" கண்காட்சி நவம்பர் 18 அன்று டோஹாவில், போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்படும்.

கையால் வர்ணம் பூசப்பட்ட பந்துகள் நிகழ்ச்சியின் மையத்தில் இருக்கும் போது, அலங்கரிக்கப்பட்ட  காலணிகள் கட்டாரில் உள்ள உலகக்  கிண்ண  மைதானங்களின் பிரதிநிதித்துவங்களில் 3D காட்சியில் காண்பிக்கப்படும்.

 கட்டார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, குதிரை , பருந்து ,மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்க ,பராகுவேய கலாசாரம் தொடர்பான பிற சின்னங்களின் படங்களும் வைக்கபப்ட  உள்ளனர்.

கேன்டெரோவின் திறமை 2018 ஆம் ஆண்டு மீண்டும் பிரபலமடைந்தது. ஒரு ஜோடி கால்பந்து ஷூக்கள் அவரது கலையால் அலங்கரிக்கப்பட்டு, லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது குடும்பத்தினரின் கறுப்பு  வெள்ளை படங்கள்  பிரபலமாகின.

ஆர்ஜென்ரீனா கப்டன் காலணிகளுடன் போஸ் கொடுக்கும் படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட பிறகு, முன்னாள் பிறேஸில் நட்சத்திரம் ரொனால்டினோ உட்பட அவரது சொந்த பராகுவேக்கு வெளியே உள்ள தொழில்முறை வீரர்களின் வடிவமைப்புகளுக்கான கோரிக்கைகளுடன் கேன்டெரோவின் வாழ்க்கை உயர்ந்தது.

 2005 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி'ஓர் விருதை வென்ற பிறகு, ரொனால்டினோவின் தாயார் கொடுத்த முத்தத்தை விளக்குவதற்காக அவர் தனிப்பட்ட முறையில் ரொனால்டினோவுக்கு காலணிகளை பரிசாக வழங்கினார்.

"அடுத்த உலகக் கிண்ணப் போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறவுள்ளதால், அமெரிக்காவை மையமாகக் கொண்ட திட்டங்களில் பணிபுரிய, மற்ற பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுடன் பணிபுரிய விரிவடைந்து, தொடர்ந்து வளர விரும்புகிறேன்," என்று கேனெட்ரோ கூறினார்.