Sunday, January 29, 2012

சசிகலாவின் ஆதரவாளர்களைகுறிவைக்கும் தமிழக அரசு

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து சசிகலாவின் குழு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ளும் தமிழக அரச நிர்வாகத்திலும் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. சசிகலாவின் குழுவைச் சேர்ந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை ஏதாவது எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எம்மைச் சேர்ந்த எவரையும் கைது செய்ய முடியாது. கைது செய்யவும் விட மாட்டோம் என்று முழங்கினார் சசிகலாவின் கணவர் நடராஜன் . சசிகலாவின் தம்பி திவாகரனைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் திவாகரன் தலைமறைவாகிவிட்டார்.
தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலில் வேட்பாளர் தெரிவு, தொகுதி உடன் பாடு, அமைச்சர் பட்டியல் தயாரித்தல், பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் போன்ற பலவற்றில் திவாகரன் தனது செல்வாக்கை வெளிப்படுத்தியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திவாகரனின் ஆட்டத்துக்கு தாளம் போட மறுத்த திருவாரூர் எஸ்.பி. யான சேவியர் தனராஜ் இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த மாதம் சேவியர் தனராஜ் மீண்டும் திருவாரூர் எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றார். திவாகரனுக்கு பிடிக்காத சேவியர் தனராஜ் பிடியாணையுடன் திவாகரனைத் தேடித் திரிகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பஞ்ஞாயத்துத் தலைவரான தமிழார்வன் தனது கார்ச் சாரதிக்கு வீடொன்றைக் கட்டிக் கொடுத்தார். பஞ்சாயத்து ஆட்சி மாறியதும் கார்ச் சாரதியின் வீடும் தகப்பனின் வீடும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இச்சம்பவம் பற்றியும் திவாகரனால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றியும் உடனடியாக பொலிஸில் புகார் செய்யப்பட்டது. அந்தப்புகார் அப்போது கிடப்பில் போடப்பட்டது. சசிகலா குழுவினர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதும் கிடப்பில் போடப்பட்ட திவாகரனுக்கு எதிரான புகார் தூசு தட்டுப்பட்டது. இந்தப் புகார்கள் அடிப்படையில் திவாகரனை கைது செய்ய பொலிஸ் குழு மன்னார் குடிக்கு விரைந்தது.
திவாகரனுக்கு நெருக்கமான பொலிஸ் அதிகாரிகள் மூலம் தான் கைது செய்யப்படப் போவதாகத் தெரிந்து கொண்ட திவாகரன் தலைமறைவாகிவிட்டார். சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் வீட்டுக்குச் சென்ற பொலிஸாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திவாகரனுக்குச் சொந்தமான சென்கமலத் தாயார் கல்லூரியிலும் தேடுதல் நடைபெற்றது. அங்கும் திவாகரன் இல்லை. திவாகரனைப் பொலிஸார் தேடித் திரிவதனால் சசிகலா அச்சத்திலும் கவலையிலும் உள்ளார். திவாகரனைத் தொடர்ந்து மேலும் சிலர் பட்டியலில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சசிகலாவின் குழுவுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராகி உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக பிரமுகர்களைக் குறிவைத்த தமிழக அரசின் பார்வை சசிகலாவின் குழுவின் பக்கம் விழுந்துள்ளது. திவாகரனைத் தொடர்ந்து அடுத்த குறி நானாக இருக்குமோ என்ற அச்சம் சசிகலாவில் குழுவில் உள்ளவர்களின் மனதில் எழுந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் சுமார் 90 பேர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அவர்களில் சுமார் 18 பேர் சசிகலாவின் தயவில் அமைச்சரானவர்கள் அமைச்சர்களின் பதவி பறிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். சட்டமன்ற உறுப்பினர்களை இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்த இளைஞர் அணிக்கு புது இரத்தம் பாய்ச்சும் வேளையில் மும்மூரமாக இறங்கி உள்ளார் ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி 60 வயதை நெருங்கும் ஸ்டாலினின் தலைமையிலேயே இயங்குகிறது. இளைஞர் அணியை சுறுசுறுப்பாக இயங்கச் செய்வதற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் நேர்முகம் நடைபெறுகிறது. இளைஞர் அணியின் மாநிலச் செயலர் பதவியிலிருந்து விலகுவதற்கு ஸ்டாலின் தீர்மானித்துள்ளார். மாவட்ட ரீதியாக இளைஞர் அணி நிர்வாகிகளிடம் நேர்முகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின்.
நீண்ட காலமாக ஸ்டாலினின் வழிகாட்டலில் இயங்கிய இளைஞர் அணி புதியவரின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியை அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறார். மகன் உதய நிதியை அரசியலில் தனது வாரிசாக களம் இறக்க ஸ்டாலின் விரும்புகிறார் என்ற கருத்தும் நிலவகிறது. திரா
விடி முன்னேற்றக் கழகம் நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம், இளைஞர் அணி அலுவலகத் திறப்பு விழா, திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தர்களின் திருமண விழா என்பவற்றில் உதயநிதி தலைகாட்டியுள்ளார். இளைஞர் அணிப் பொறுப்பை மகனிடம் கொடுத்து விட்டு கட்சித் தலைமைப் பொறுப்பெடுக்க ஸ்டாலின் தயாராகி வருகிறார்.
ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஆகிய மூவரும் தீவிர அரசியலில் இறங்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சியினால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர் ஸ்டாலின். கட்சியை வளர்ப்பதற்காக மதுரைக்குச் சென்ற அழகிரி அரசியல்வாதியாக மாறினார். இலக்கியப் பக்கம் சுறுசுறுப்பாக இருந்தவர் கனிமொழி. கருணாநிதிக்கும் குடும்பத்துக்கும் இடையிலான அரசியல் சூறாவளியால் அரசியலுக்கு வலிந்து அழைக்கப்பட்டவர் கனிமொழி.
தந்தைக்குப் பின் கட்சித் தலைமைக்கு கிடைக்கும் என்று காத்திருக்கும் ஸ்டாலினுக்குப் போட்டியாக அழகிரி உருவெடுத்தார். இப்போ கனிமொழியும் முழு நேர அரசியல்வாதியாகி விட்டார். மூவருக்கும் கட்சியில் பொறுப்பான பதவி கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது.
ஸ்டாலின் பின்னால் இலட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். அழகிரிக்குப் பின்னால் அடியாட்கள் உள்ளனர். ஆட்சி மாறிய பின்னர் அவர்கள் அடங்கிவிட்டனர். கனிமொழியின் பின்னால் யாருமில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக் குழுக் கூட்டத்துக்கு முன்னர் இளைஞர் அணி புத்துயிர் பெற்று விடும். இளைஞர் அணி எப்பொழுதும் ஸ்டாலினின் பின்னாலேயே உள்ளது. உயதிநிதி இளைஞர் அணிக்குத் தலைமை வகித்தால் ஸ்டாலினின் செல்வாக்கு இன்னும் ஒருபடி உயர்ந்து விடும். ஸ்டாலினுக்குப் போட்டியாக இருக்கும் அழகிரி உதயநிதிக்குப் போட்டியாகத்தான் மகனை இறக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வர்மா,
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு29/01/2



Sunday, January 22, 2012

இடைத் தேர்தலுக்கு தயாரான ஜெயலலிதாகுழம்பிப் போயுள்ள தமிழக எதிர்க்கட்சிகள்

சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தல் பற்றிய உத்தியோபூர்வ அறிவித்தல் எதனையும தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையில் எஸ். முத்துச்செல்வியை வேட்பாளராக அறிவித்துள்ளார் ஜெயலலிதா. சங்கரன்கோயில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கருப்பசாமி வெற்றி பெற்றார். அவரை அமைச்சராக்கி சங்கரன் கோவில் தொகுதிக்கு பெருமை சேர்த்தார் ஜெயலலிதா. புற்றுநோய் காரணமாக கருப்பசாமி மரணமானார். ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் சங்கரன் கோவில் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற வேண்டும். மார்ச் மாதம் தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எதிர்பார்க்காத வேளையில் அதிரடியில் முடிவெடுக்கும் ஜெயலலிதா சங்கரன் கோயில் இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்து தமிழக அரசியலைப் பரபரப்பாக்கியுள்ளார். சங்கரன் கோயில் நகராட்சித் தலைவராக இருக்கும் முத்துச் செல்வி பொறியியலாளர் படிப்பை முடித்தவர். இவரது தந்தை சங்கரலிங்கம் முன்னாள் தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் பலமான கூட்டணிக் கட்சிகள் எவையும் ஜெயலலிதாவுடன் இல்லை. இடைத் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் அவரது கட்சியின் வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். முன்னர் நடைபெற்ற தேர்தல்களின்போது வேட்பாளர்களை அறிவித்து விட்டு மாற்றியது போன்ற சம்பவம் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் வேட்பாளர் தெரிவிலும் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்ற முடிவை விஜயகாந்த் இன்னமும் அறிவிக்கவில்லை. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றீடாக அரசியல் களத்தில் நுழைந்த விஜயகாந்த் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிடம் சரணடைந்து தனது மதிப்பையும் செல்வாக்கையும் இழந்துள்ளார். கடவுளுடனும் மக்களுடனும் தான் கூட்டணி என்ற வீரவசனம் பேசியபோது கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் அச்சுறுத்திய விஜயகாந்த் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்õர். ஆகையால் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு விஜயகாந்தினால் எந்தவிதமான நெருக்கடியும் ஏற்படாது.
கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி ஜெயலலிதாவை முதல்வராக்க வேண்டும் என்ற சபதத்துடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த இடதுசாரிகளை ஜெயலலிதா ஒதுக்கியே வைத்துள்ளார். தனித்து போட்டியிடும் துணிவு இடதுசாரிகளுக்கு இல்லை போட்டியிட்டாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அச்சுறுத்தும் வகையிலான வாக்கு வங்கி இடதுசாரிகளிடம் இல்லை. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒருவராக விளங்கிய டாக்டர் ராமதாஸ் இன்று மிகவும் நொடிந்து போயுள்ளார். ராமதாசுடன் கூட்டணி சேர்வதற்காக காத்திருந்த கட்சிகள் இன்று அவரைப் புறந்தள்ளியுள்ளன. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் குழம்பிப் போயுள்ள ராமதாஸால் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு எந்தப் பாதிப்பம் ஏற்படப் போவதில்லை.
சங்கரன் கோயில் தொகுதியைத் தனது கட்சிக்கு கருணாநிதி ஒதுக்கவில்லை என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து வெளியேறி அன்புச் சகோதரி ஜெயலலிதாவுடன் கைகோர்த்தார் வைகோ. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட அவமானங்களையும் கசப்பான சம்பவங்களையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்த வைகோவை கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது புண்பட்ட மனதுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

ஜெயலலிதாவுடனும் கருணாநிதியுடனும் எந்தக் காலத்திலும் கூட்டணி சேரமாட்டேன் என்ற கொள்கையுடன் உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்த வைகோவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. கருணாநிதி ஜெயலலிதா விஜயகாந்த் என்ற பிரபலங்களும் தனி ஆளாக நின்று முட்டி மோதிய வைகோவின் கட்சிக்கு மக்களின் ஆதரவு உள்ளதென்பதை உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படுத்தியது. உள்ளாட்சி தேர்தல் முடிவு தந்த உற்சாகத்தால் சங்கரன் கோயில் இடைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளார் வைகோ. உள்ளாட்சித் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையேயான வேறுபாடு வைகோவுக்கு நன்கு தெரியும்.
சங்கரன் கோவில் இடைத் தேர்தலின் மூலம் இழந்ததனது அரசியல் பலத்தை மீண்டும் பெறுவதற்குக் கங்கணம் கட்டியுள்ளார் வைகோ. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான தமது ஒட்டுமொத்த வெறுப்பைக் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் வெளிக்காட்டியதே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணம். ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எதிரான மாற்று அரசியல் சக்தியா விஜயாகாந்தைத் தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஜெயலலிதாவும் கூட்டுச் சேர்ந்நதனால் அந்த இடத்தை விஜயகாந்த் இழந்துவிட்டார். ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் மாற்றீடான அரசியல் தலைவராக விளங்குவதற்கு வைகோ உறுதி பூண்டுள்ளார். திராவிட முன்னேறக் கழகம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றினால் வஞ்சிக்கப்பட்ட வைகோ தனி வழிபோக தீர்மானித்து விட்டார்.
சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் தமிழக அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம் என்று வைகோ எதிர்பார்க்கிறார். இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது எழுதப்படாத சட்டமாக உள்ளது. பிரதான இரண்டு திராவிடக் கட்சிகளுக்குச் சமமான வாக்குகளை பெற்று தனது இருப்பை வெளிப்படுத்த வைகோ முயற்சி செய்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருப்பதாக அடிக்கடி பத்திரிகைகளில் அறிக்கை வெளியாகின்றன. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புகைச்சல் இன்னமும் வெளியே கசியவில்லை. சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் இன்னமும் முடிவு செய்யவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி ஆதரவாகப் பிரசாரம் செய்யுமா என்பதும் சரியாகத் தெரியவில்லை.
சங்கரன் கோயில் இடைத் தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்போது தமிழக அரசியல் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.
வர்மா

சூரன்,ஏ,ரவிவர்மா

வீரகேசரிவாரவெளியீடு22/01/2


Friday, January 20, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 20

விலைமாதரின் வலையில் வீழ்ந்த தகப்பன் தாயை கொடுமைப்படுத்துவதை தினமும் பார்த்து துடித்த சிறுவன் வாலிபனானதும் விலை மாதரைத் தேடிக் கொலை செய்கிறான். தகப்பனின் நடத்தையால் மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞனை வைத்து எடுக்கப்பட்ட மூடுபனி என்ற படம் ரசிகர்களை அச்சத்தில் உறைய வைத்தது.
பிரதாப் போத்தன் சிறுவனாக இருக்கும்போது அவனது தகப்பன் குடித்து விட்டு வந்து தாøயத் துன்புறுத்துவான். பிரதõப்போத்தனின் தகப்பன் விலைமாதர் மீது அதில் மோகம் கொண்டவர். மனைவியை விட விலைமாதரையே அதிகம் நேசிப்பவர். விலை மாதருடன் அன்பாகப் பழகும் தகப்பன் தாயைக் கொடுமைப்படுத்துவதைத் தினமும் பார்த்துத் துடிப்பான். தாய் துன்பப்படுவதற்கும் அடி வாங்குவதற்கும் விலை மாதர் தான் காரணம் என்பதால் விலை மாதரை வெறுக்கத் தொடங்குகிறான்.
தன் சிறு வயதில் தாய் அனுபவித்த துன்பங்கள் பெரியவனானதும் பிரதாப்போத்தனின் மனதில் இருந்து மறையவில்லை. தாயின் துன்பத்துக்கு காரணமான விலை மாதர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி அவன் மனதில் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தது. விலை மாதரை தேடித் தெரிவு செய்ம் பிரதாப்போத்தன் அவர்களைத் தன் படுøக்கை அறைக்கு அழைத்து வந்து கொலை செய்கிறான்.
தான் செய்யும் கொடூரம் தவறானது என்பதை பிரதாப் பொத்தன் உணர்கிறான். என்றாலும் அந்தக் கொடுமையை நிறுத்த வேண்டும் என்ற மன நிலை அவருக்கு ஏற்படவில்லை. இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக மனோதத்துவ மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை கேட்கிறார் பிரதாப் போத்தன். மனோதத்துவ நிபுணர் பிரதாப் போத்தனின் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் கேட்டறிந்த பின்னர் ஒரு பெண்ணை உண்மையாகத் காதலித்தால் எல்லாப் பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிடும் என்றார்.
மனோதத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி @ஷாபாவைக் காதலிக்கிறார் பிரதாப் @பாத்தன் @ஷாபாவை உண்மையாக காதலிக்கும் @பாது விலை மாதøரப் பற்றிய எண்ணம் பிரதாப் போத்தனின் மனதிலிருந்து மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது. தான் உயிருக்குயிராகக் காதலிக்கும் ஷோபா பானுச்சந்தரின் காதலி என்பதை அறிந்ததும் பிரதாப் போத்தன் துடி துடிக்கிறார். அவருடைய பழிவாங்கல் எண்ணம் மீண்டும் உயிர் பெறுகிறது. ஷோபாவை கடத்துகிறார் பிரதாப் போத்தன். பிரதாப் போத்தனிடமிருந்து ஷோபாவைக் காப்பாற்றும் பொலிஸ் பிரதாப் போத்தனைக் கைது செய்கிறது.
1980 ஆம் ஆண்டு வெளிவந்த மூடுபனி என்ற இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஒளிப்பதிவு இயக்கம் பாலு மகேந்திரா கதை ராஜேந்திரகுமார் . இளையராஜாவின் இசையமைப்பில் பாடல்கள் இனிமையாக இருந்தன. பின்னணி இசை திகிலூட்டியது. மன நோயாளியான பிரதாப் போத்தனிடம் சிக்கித் தவிக்கும் பெண்ணாக ஷோபாவும் சிறப்பாக நடித்தனர். விலைமாதரை பிரதாப் போத்தன் துடிக்கத் துடிக்கக் கொலை செய்யும் காட்சியின் போது தியேட்டரே அச்சத்தில் நிசப்தமாகியது. தாராளமாக ஆபாசக் காட்சிகளைப் புகுத்தும் சந்தர்ப்பம் இருந்தும் முகம் சுழிக்கும் காட்சிகள் இன்றி இயல்பாகப் படமாக்கினார் பாலு மகேந்திரான. இப்படம் வெளியான போது என் இனிய வெண்ணிலாவே என்ற என்ற ஜேசுதாஸின் குரல் வானொலியில் தினமும் ஒலித்தது.
ரமணி
மித்திரன்22/01/12

Sunday, January 15, 2012

நக்கீரைக் குறி வைக்கும் அ.தி.மு.க

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக பிரதான எதிரி நக்கீரன் கோபால். திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைய முடியாத இரு துருவங்கள். கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள். ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுகிறார்கள். இருவருக்கும் விசுவாசமானவர்கள் அதனை நம்புகின்றனர். ஜெயலலிதாவின் பரம எதிரி கருணாநிதி. ஆனால் வெளியே தெரியாத இன்னொரு பரம எதிரி நக்கீரன் கோபால்.
தமிழகத்தின் அரசியல் அசிங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் சில சஞ்சிகைகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது நக்கீரன். நக்கீரனில் வெளிவரும் கட்டுரைகளில் அதிகமானவை மக்களிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தின.
ஜெயலலிதாவைப் பற்றி பல தகவல்களை நக்கீரன் வெளியிட்டதால் கடந்தகாலங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது பல நெருக்குதல்களைச் சந்தித்தது நக்கீரன்.
நக்கீரன் அலுவலகம் மீது பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டன. நக்கீரன் ஊழியர்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. நக்கீரன் ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த அச்சுறுத்தல்களினால் நக்கீரன் கோபால் கலங்கிப் போய்விடவில்லை. நக்கீரனின் மிக முக்கிய குறியாக ஜெயலலிதா இனங்காணப்பட்டார்.
மாட்டுக் கறி சாப்பிடும் மாமி நான் என்ற கட்டுரை அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்களை ஆத்திரமடையச் செய்தது. நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் தாக்குதல் நடைபெற்றபோது பொலிஸார் வழமைபோல் கையைக்கட்டி கொண்டு நின்றனர். வன்செயல்களைத் தடுக்க வேண்டிய பொலிஸõர் ஆளும் கட்சியின் நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருக்கும் நிலை தொடர்கிறது. ஆட்சி மாறினாலும் இப்படிப்பட்ட காட்சி மாறவில்லை.
நக்கீரன் அலுவலகம் மீது இரண்டாம் நாளும் தாக்குதல் நடத்தப்பட்டது. முதல் நாள் தாக்குதல் நடைபெற்றபோது இரண்டாம் நாள் பொலிஸார் தயாராக இருந்திருக்க வேண்டும். இரண்டாம் நாளும் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட பின்பே பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்ததால் அதனைச் சட்டப்படி சந்தித்திருக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்ட தொண்டர்கள் தாக்குதல் நடத்தியிருந்தால் வன்செயல்களை கைவிடுமாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவை பற்றிய அவதூறுக் கட்டுரை பிரசுரமானதால் சினமடைந்த அரச இயந்திரம் நக்கீரன் அலுவலகத்துக்கான நீர், மின் விநியோகங்களை இடை நிறுத்தியது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நீரும். மின்சாரமும் விநியோகிக்கபபடுகின்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மீது நக்கீரன் கோபாலும் நக்கீரன் கோபால் மீது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களும் பொலிஸில் புகார் செய்துள்ளனர். நக்கீரன் அலுவலகம்மீது தாக்குதல் நடத்திய போது கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்விக்கு தமிழக அரசுதான் பதில் கூற வேண்டும். மதுரை தினகரன் அலுவலகம் மீது அழகிரியின் விசுவாசிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூன்று உயிர்கள் பலியாகின. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது அந்த வழக்கு அமுங்கிப் போனது. நக்கீரன் மீதான தாக்குதல் வழக்கும் அதே நிலை தான் இன்று ஏற்படும்.
முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்புச் செயலாளராகவும் இருந்த தளவாய் சுந்தரம் திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த பி.ஜி. ராஜேந்திரம், முன்னாள் அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட செயலாளராகப் பணியாற்றிய நயினார் ராஜேந்திரன் ஆகியோர் கட்சிப் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். கட்சிப் பொறுப்பில் இருந்து இவர்கள் நீக்கப்பட்டதற்கான இந்த அறிக்கையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
சசிகலாவும் அவரது பரிவாரங்களும் அண்ணா திராவிட முன்னேற்றறக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவரது ஆதரவாளர்கள் என இனங்காணப்பட்டு ஒவ்வொருவராக வெளியேற்றப்படுகின்றனர். சசிகலாவும் அவரது கூட்டமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆடிய ஆட்டமும் அடாவடிகளும் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே தெரிந்தவவைதான். அவர்களைக் கட்டிப் போடும் துணிவு ஜெயலலிதாவுக்கு வரவில்லை. தனது தலைக்கு ஆபத்து இல்லாத நிலையில் அதனை மௌனமாக அங்கீகரித்ததார் ஜெயலலிதா.தனது தலைக்கு ஆபத்து வரப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து விழிப்படைந்துள்ளார். கழகத்துக்கு விசுவாசமற்றவர்கள் என்ற முத்திரையுடன் சசிகலா குழுவினர் வெளியேற்றப்பட்டனர்.
சசிகலா குழுவினர் அண்ணா திராவிட முன்னேற்றக கழகத்தில் இருந் வெளியேற்றப்பட்டதனால் முக்குலத்தோரின் வாக்குகளை ஜெயலலிதா இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவரது எதிரிகள் கருதுகிறார்கள். எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் மீது அதி தீவிரபற்றுக் கொண்ட முக்குலத்தோர் சசிகலாவின் வெளியேற்றத்தினால் மன முடைந்து போய்விடமாட்டார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் மீது மக்கள் மதிப்பும் விசுவாசமும் தொண்டர்கள். எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதாவின் பெயரே அவர்களின் மனதில் பதிந்துள்ளது. ஆகையினால் சசிகலா குழுவினர் வெளியேற்றத்தினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்கு வங்கியில் எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு15/01/2


Friday, January 13, 2012

தென்னாபிரிக்கா இமாலய வெற்றி

இலங்கை தென் ஆபிரிக்க ஆகியவற்றுக்கிடையே நேற்று முன்தினம் பார்லில் நடைபெற்ற முதலாவது ஒருநாள்போட்டியில் 285 ஓட்டங்களினால் மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. தென்னாபிரிக்கா. 43 ஓட்டங்களில் தென் ஆபிரிக்காவிடம் சரணடைந்த இலங்கை தனது கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தது. இந்த ஆண்டின் முதலாவது போட்டியை தென் ஆபிரிக்கா வெற்றியுடன் ஆரம்பித்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணித் தலைவர் டிவில்லியஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 301 ஓட்டங்கள் எடுத்தது.
ஸ்மித் ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டில் இணை ந்த அம்லா கலிஸ் ஜோடி மிக நிதானமாகத் துடுப்பெடுத்தாடியது. 25.5 ஓவர்கள் விளையாடிய இவர்கள் இருவரும் 144 ஓட்டங்கள் எடுத்தனர். 72 ஓட்டங்கள் எடுத்த கலிஸ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டில் இணைந்த அம்லா, டிவில்லியஸ் ஜோடி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியது. 12 ஓவர்கள் விளையாடிய இவர்கள் 91 ஓட்டங்கள் எடுத்தனர். முதல் முதல் அணித் தலைவராக விளையாடிய டிவில்லியர்ஸ் அரைச் சதம் கடந்தார். வில்லியஸ் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் மார்ஸல் களம் புகுந்தார். அம்லா, மார்சல் ஜோடியும் இலங்கையின் பந்து வீச்சைத் துவம்சம் செய்தது. 4.5 ஓவர்கள் விளையாடிய இவர்கள் 35 ஓட்டங்கள் எடுத்தனர். 17 பந்துகளுக்கு முகம் கொடுத்த மார்சல் 29 ஓட்டங்கள் எடுத்தார். அம்லா 112 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஆண்டின் முதல் சதமடித்த வீரராகத் திகழ்கிறார் அம்லா. அடுத்து வந்தவர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். மலிங்க ஐந்து விக்கெடடுகளை வீழ்த்தினார். இலங்கை அணியைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பந்து வீசியும் தென் ஆபிரிக்காவின் ஓட்ட எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஆண்டின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல்வனாக மலிங்க திகழ்கிறார்

302 என்ற இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய இலங்கை 20.1 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. 46 பந்துகளுக்கு முகம் கொடுத்த குலசேகர 19 ஓட்டங்கள் எடுத்தார். ஏனையயோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
மார்கல் நான்கு விக்கெட்டுகளையும் டிŒõட்Œ@ப மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலங்கை அணி சார்ஜாவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 1986 இல் 53 ஓட்டங்கள் எடுத்ததே குறைந்த ஓட்டமாக இருந்தது.
குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்த அணியாக முதலிடத்தில் சிம்பாப்பே உள்ளது. 2004 ஆம் ஆண்டு ஹராரேயில் இலங்கைக்கு எதிராக 35 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாவது இடத்தில் கனடா 36 ஓட்டங்களுடனும் (2003) சிம்பாப்வே 38 ஓட்டங்களுடனும் (2001) உள்ளன. மூன்று நாடுகளையும் குறைந்த ஓட்டத்தில் வீழ்த்திய இலங்கை இன்று தனது குறைந்த ஓட்ட எண்ணிக்கையுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
அதிகூடிய ஓட்டங்களுடன் வெற்றிபெற்ற மூன்றாவது அணியாக தென் ஆபிரிக்கா உள்ளது. முதலிடத்தில் நியூசிலாந்து அயர்லாந்துக்கு எதிராக 290 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. 272 ஓட்டங்களில் சிம்பாப்வேயை வீழ்த்திய தென் ஆபிரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா

மெட்ரோநியூஸ்13/01/12


Thursday, January 12, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 19

வயதான பெண்ணை ஒரு இளைஞன் காதலிக்கிறான். அந்த இளைஞனின் அப்பாவை அப்பெண்ணின் மகள் காதலிக்கிறாள் என்ற ஒற்றை வரி விபரீதக் காதல் கதை வெளியான திரைப்படம் அபூர்வ ராகங்கள். பிரச்சினைக்குரிய கதைகளைக் கையில் எடுத்து மிக இலாவகமாக முடிக்கும்
கே.பாலச்சந்தரின் மற்றுமொரு அற்புதப் படைப்புதான் அபூர்வ ராகங்கள்.
பிரபல பாடகி ஸ்ரீவித்யாவின் மகள் ஜெயசுதா. தாயுடன் ஏற்பட்ட கருத்துவேவறுபாட்டினால் வீட்டை விட்டு வெளியேயறுகிறார். தொழிலதிபர் சுந்தரராஜனின் மகன் கமல்ஹாசன். தகப்பனுக்கும் மகனுக்கும் இடையேயயான சிறு பிணக்கினால் கமல் வீட்டை விட்டு வெளியேயறுகிறார். ஜெயசுதாவின் வீட்டில் கமலும் சுந்தராஜனின் வீட்டில் ஜெயசுதாவும் தஞ்சமடைகின்றனர். காலப்போக்கில் ஸ்ரீவித்தியாவை கமலும் சுந்தராஜனை ஜெயசுதாவும் காதலிக்கின்றனர்.
கமல், ஜெயசுதா ஆகியோரின் விபரீதக் காதலைத் தெரிந்துகொண்ட ஸ்ரீவித்யாவும் சுந்தராஜனும் முறை தவறிய காதலைத் தொடரக்கூடாது என்று எடுத்துரைத்த@போதும் கமலும் ஜெயசுதாவும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். பொருந்தாத இக்காதலின் முடிவு எப்படி இருக்கும் என்று இரசிகர்கள் குழம்பிப்போபாயிருக்கையில் காணாமல்போன ஸ்ரீவித்யாவின் கணவன் திரும்பிவருகிறான். ஸ்ரீ வித்யாவின் கணவன் திரும்பி வந்ததும் கதையில் திருப்பம் ஏற்படுகின்றது. ஸ்ரீவித்யாவின் கணவன் இறந்ததும் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன. கமலும் ஜெயசுதாவும் தமது தவறான காதல் உணர்விலிருந்து விடுபடுகின்றனர். ஜெயசுதாவின் தாய் ஸ்ரீவித்தியாவுடனும் கமல் தகப்பன் சுந்தராஜனுடனும் இணைகின்றனர்.
1975 ஆம் ஆண்டுகளில் வெளியான இப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காட்சி அமைப்புகளும் , வசனங்களும் இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. கமல், ஸ்ரீவித்தியா, சுந்தர்ராஜன், ஜெயசுதா ஆகியோர் தமது பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர். டாக்டராக வரும் நாகேஷ் படத்துக்கு கலகலப்பூட்டுகிறார். குடிக்க விரும்பும் நாகேகஷ் தான் டாக்டரின் சகோதரன் என்று கூறி எல்லோரையும் ஏமாற்றுகிறார்.ஸ்ரீவித்யாவின் கணவனாக ரஜினிகாந்த் அறிமுகமான படம் அபூர்வ ராகங்கள். ஒரு சில காட்சிகளில் மின்னி மறைந்த ரஜினிகாந்த் இன்று "சூப்பர்ஸ்டாராகப் பரிணமிக்கின்றார்.எம்.எஸ். விஸ்வநாதனின் இசை அமைப்பில் கண்ணதாசனின் பாடல்கள் இன்றும் மனதை வருடுகின்றன. "ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.. வாணிஜெயராம், "அதிசய இராகம் ஆனந்த ராகம்..கே.ஜே.ஜேசுதாஸ் கைகொட்டிச் சிரிப்பார்கள்.கேள்வியின் நாயகனே.. பி.சுசிலா இப்பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஓங்கி ஒலித்தன. சிறந்த ஒளிப்பதிவுக்கானதேசிய விருதை பி.எஸ்.லோலாகநாதனும் சிறந்த பிண்ணனிப் பாடககிக்கான‌ விருதை வாணிஜெயராமும் பெற்றனர். சிறந்த சிறந்த பிராந்திய விருதை அபூர்வ இராகங்கள் பெற்றது.
பைரவி, ரஞ்சனி, கல்யாணி என்ற இராகங்களின் பெயரிலேயே பெண் பாத்திரங்களைப் படைத்த பாலச்சந்தர் பைரவி என்ற பாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்தார். தன்னிடம் படிக்கும் மாணவிகளில் ஒருவரை கமல் காதலிப்பதாக நினைத்த ஸ்ரீவித்தியா அதுபற்றி கமலிடம்கேட்கிறார். அதிசய ராகம் என்று பாடல் ஆரம்பித்து அவர் ஒரு பைரவி என்று கமல் முடிக்க பைரவியாக நடித்த ஸ்ரீவித்தியா அதிர்ச்சியடைகிறார்.தன் மனைவி ஸ்ரீவித்தியாவைச்சந்திக்க ரஜினி விரும்புகிறார். கமல் அதற்கு தடைபோடுகிறார். என் மனைவிக்கும் எனக்கும் இடையே நீ யார் தம்பி? என்று ரஜினி கேட்கிறார். நிச்சயமாக உன் தம்பி இல்லை என்று கமல் கூறுகிறார்.மதுக்கோப்பையை கையில் ஏந்தி சுவரிலே தெரியும் தான் நிழலைப் பார்த்து சியஸ் சொல்லுடா என்று நாகேஷ் கூறுகிறார். இக்காட்சிகளின்போது தியேட்டர் கரகோகேஷத்தில் அதிர்ந்தது.
இப்படத்தில் கூறப்பட்ட எனது தகப்பனார் யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகனின் அப்பா என் மகனுக்கு மாமனார் என்றால் அவருக்கும் எனக்கும் என்ன உறவு என்ற விடுகதைக்கும்விடைதெரியவில்லை.
ரமணி


சூரன்.ஏ.ரவிவர்மா



மித்திரன் 08/01/12

Tuesday, January 10, 2012

ஆண்டின் முதல் தொடரை வென்றது தென். ஆபிரிக்கா

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா தொடரைக் கைப்பற்றியது. முதல் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது. 2ஆவது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் தென் ஆபிரிக்கா 10 விக்கெட்களினால் வெற்றிபெற்றது. இலங்கை மயிரிழையில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது. ஸ்மித், பீற்றர்ச‌ன் @ஜாடி அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தது. இவர்களின் அதிரடி அதிகநேரம் நீடிக்கவில்லை. 16 ஓட்டங்கள் எடுத்த ஸ்மித் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்லாவும் 16 ஓட்டங்களில் வெளியேறினார். இரண்டு விக்கெட்களையும் பிரசாத் கைப்பற்றினார்.
இரண்டு விக்கெட் களை இழந்து 56 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை பீற்றர்சனுடன் கலிஸ் ஜோடி சேர்ந்தõர். இவர்கள் இருவரும் இணைந்து இலங் கையின் எதிர்பார்ப்பைத் தவிடு பொடியாக்கினர்.
பீற்றர்சன், கலிஸ் இருவரும் இணை ந்து 49.2 ஓவர்கள் விளையாடி 205 ஓட்டங்களை எடுத்தனர். 109 ஓட்டங்கள் எடுத்த பீட்டர்சன் வெலகெதரவின் பந்தை டில்ஷானிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். கலிசுடன் ஏ.பி.டி.வில்லியர்ஸ் இணைந்தார். இந்த ஜோடியும் இலங்கை பந்து வீச்சை சிதறடித்தது. கலிஸ் இரட்டைச் சதமடித்தார். ஹேரத்தின் பந்தை மத்தியுஸிடம் பிடி கொடுத்த கலிஸ் 224 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஏ.டி.பி.டி.வில்லியஸ். ரு@டால் ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தது. இவர்களின் அதிரடியைக் கட்டுப்படு த்த முடியாது இலங்கை வீரர்கள் தவித்தனர். 580 ஓட்டங்கள் எடுத்தபோது தென்னாபிரிக்கா ஆட்டத்தை நிறுத்தியது. இலங்கையை துடுப்பெடுத்தாடும் படி பணித்தது. வில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 160 ஓட்டங்களும் ரு@டா ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் எடுத்தனர். 139 ஓவர்கள் பந்து வீசிய இலங்கை வீரர்கள் நான்கு உதிரிகளை மட்டுமே விட்டுக் கொடுத்தனர். 580 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 239 ஓட்டங்கள் எடுத்தது. டில்ஷான், திரிமானே ஜோடி 70 ஓட்டங்கள் எடுத்தது. ஏனைய ஜோடிகள் அதனைவிடக் குறைந்த ஓட்டங்களையே எடுத்தன. டில்சான் 78, சங்கக்கார, மத்தியூஸ் தலா 35 ஓட்டங்கள் எடுத்தனர். ஏனையோர் அதனை விட குறைந்த ஓட்டங்களையே எடுத்தனர். இலங்கை அணியின் முதலாவது ஓட்ட எண்ணிக்கை குறைவாக இருந்ததனால் தொடர்ந்து 2ஆவது இனிங்ஸையும் தொடர்ந்து சமரவீர,மத்தியூஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்தினால் இலங்கை இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது. இலங்கை நான்கு விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஐந்தாவது விக்கெட்டில் இணைந்த சமரவீர, மத்தியூஸ் ஜோடி 142 ஓட்டங்கள் எடுத்தது. மத்தியூஸ் 63 ஓட்டங்கள் எடுத்தõர். சமரவீர ஆட்டமிழக்காது 115 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 322 ஓட்டங்கள் எடுத்தது. கலிஸ் ஆட்ட நாயகனõகவும் வில்லியம் தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
தென் ஆபிரிக்காவை விட இரண்டு ஓட்டங்கள் அதிகமாக இலங்கை எடுத்ததால் இன்னிங்ஸ் தோல்வி தவிர்க்கப்பட்டது. பிரசாத் வீசிய பந்தில் பீற்றர்ச‌ன் ஒரு ஓட்டம் எடுத்தார். இரண்டாவது பந்து @நா@பாலானது. ஒரு நிமிடத்தில் தென்ஆபிரிக்கா வெற்றி பெற்றது.
ரமணி


சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ் 03/01/12

Monday, January 9, 2012

உற்சாகத்தில் ஜெயாவின் விசுவாசிகள்கலக்கத்தில் ச‌சியின் ஆதரவாளர்கள்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்டிப் படைத்த சசிகலாவும் அவரது பரிவாரங்களும் வெளியேற்றப்பட்டதால் எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது அவருடன் தோளோடு தோள் நின்று கட்சியை வளர்த்த பலர் இன்று அரசியலை விட்டு ஒதுங்கி விட்டார்கள். ஒரு சிலர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்கள்.
சசிகலா செய்யும் தகிடு தத்தங்களை வெளிப்படையாகப் பேசிய பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விரட்டப்பட்டார்கள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட சிலர் மட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் முக்கிய பொறுப்பு எதுவும் இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்க்காத பலர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர் என்ற சலுகையுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
சசிகலாவின் ஆசீர்வாதத்துடன் அமைச்சரான சட்டமன்ற உறுப்பினரான @மயராக உள்ளவர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களாக சசிகலாவின் ஆசீர்வாதம் பெற்ற பலர் உள்ளனர். அரசியல் அனுபவம் இல்லாத அரசியல் போராட்டங்களில் கலந்து கொள்ளாத பலர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களை இனம் காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி. ஆரின் அமைச்சரவையில் மிக முக்கிய பதவி வகித்தவர் கே.ஏ. செங்கோட்டையன். எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் சசிகலாவின் அகோரப் பார்வை இவர் மீது பட்டதனால் முக்கியத்துவமல்லாத அமைச்சராக உள்ளõர். தமிழக அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்புள்ள பொதுப் பணித்துறை அமைச்சராக கே.வி.ராமலிங்கம் என்பவர் பதவி வகிக்கின்றார்.
சசிகலாவின் கோஷ்டியைச் சேர்ந்த ராவணனின் சிபார்சிலேயே கே.வி. ராமலிங்கம் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படும் அப்போது பொதுப்பணித் துறையிலிருந்து கே.வி. ராமலிங்கம் தூக்கி அடிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இவரைப் போன்றே சசிகலா கோஷ்டியில் உள்ள பலரின் ஆசீர்வாதத்துடன் அனுபவம் இல்லாத பலர் அமைச்சர்களாக உள்ளனர்.
சசிகலாவைப் பிரிந்து ஜெயலலிதா இருக்கமாட்டார். இந்தப் பிரிவு நிரந்தரமானதல்ல என்று ஒரு சிலர் கருதினார்கள். அதே போன்று ஜெயலலிதாவை நம்பி புருஷனை கைவிட்ட சசிகலாவும் நீண்ட நாட்களுக்கு ஜெயலலிதாவைப் பிரிந்து இருக்க மாட்டார் என்ற கருத்து நிலவியது. பொதுக் குழுவில் ஜெயலலிதா நிகழ்த்திய ஆவேசப் பேச்சு இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது விசுவாசமில்லாத துரோகிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று உணர்ச்சி வசப்பட ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் இந்த ஆவேசப் பேச்சினால் சசிகலாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சந்தோசமடைந்துள்ளனர்.

கட்சிக்குள் உருவாக இருந்த சூறாவளியை முளையிலேயே கிள்ளி எறிந்த ஜெயலலிதாவுக்கு தானே புயல் பலத்த அடியை உண்டாக்கியுள்ளது. தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட நிவாரணத்தில் குறைபாடு உள்ளதாகவும் குறைந்தளவு நிவாரணமே வழங்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. கருணாநிதியும் விஜயகாந்தும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். நிவாரணம் வழங்குவதற்காக மேலும் உதவ வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளõர் ஜெயலலிதா.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ‹றா வளியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்துள்னர். மத்திய அரசும் தமிழக அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முன் வந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம், விஜயகாந்தின் கட்சி ஆகியவை தம் பங்குக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினர்.
சங்கரன் கோவில் இடைத் தேர்தலுக்கான நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வைகோவின் மறுமலர் ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகி வருகிறது. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் மாறி மாறி நம்பி மோசம் போன வைகோ சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தன் கட்சியின் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க உள்ளன. ஜெயலலிதாவும் கருணாநிதியும் அசியலில் பாம்பும் கீரியும் போல் இருந்தாலும் வைகோவை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளார்கள்.
சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோற்கடிக்கப்பட வேண்டும். அதன் மூலம் வைகோவின் அரசியல் வாழ்வு இன்னும் கீழே போக வேண்டும் என்றே இருவரும் விரும்புகின்றனர்.
சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற வேண்டும் என்று ஜெயலலிதா கருணாநிதி, வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் முனைப்புக் காட்டுவர். சங்கரன் கோவில் வைகோவுக்குச் சாதகமான தொகுதி என்றாலும் வைகோவையே குப்புற விழுத்திய தொகுதி தமிழக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டாலும் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக களமிறங்குவது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் துக்குச் சாதகமாக அமையலாம். இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெறுவது வழமை. ஆகையினால் எதுவித பதற்றமும் இன்றி உள்ளார் ஜெயலலிதா.
வர்மா

சூரன்,ஏ,ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு08/01/2


தகர்ந்தது இந்திய அணி

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய அவுஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸில் 68 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே கவாஸ்கர் போடர் கிண்ண டெஸ்ட்போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நான்கு டெஸ்கள் கொண்ட இறுதி தொடரில் முதல் இர ண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவுஸ்திரேலியõ வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் டோனி, துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். சிட்னி ஆடுகளம் முதலில் வேகப் பந்து வீச்சுக்கும் பின்னர் துடுப்பாட்டத்துக்கும் சாதகமாக இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டு முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா 127 ஓட்டங்களிலும் 2011 ஆம் ஆண்டு 281 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தது. இம் மைதானத்தில் இரண்டாவதõக களமிறங்கிய பாகிஸ்தான் 333 ஓட்டங்களும் இங்கிலாந்து 664 ஓட்டங்களும் எடுத்தன. இந்த வியூகம் அனைத்தும் தெரிந்த டோனி களத்தடுப்பைத் தெரிவு செய்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
அவுஸ்திரேலிய @வகங்களுக்கு ஈடு கொடுக்க முடியாத இந்திய துடுப்பாட்ட வரிசை பொல பொலவென விழுந்தது. டோனி ஆட்டமிழக்காது 57, டெண்டுல்கர் 41, ஷேவாக் 30, @காஹ்லி 23, அஸ்வின் 20 ஓட்டங்களை எடுத்தனர். கம்பீர், ச‌ஹீர்கான், இஷாந்த் ச‌ர்மா, யாதவ் ஆகியோர் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தனர். ஏனையோகர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 191 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
அவுஸ்திரேலிய அணி 37 ஓட்டங்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால் இந்தியாவுக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்தது. முதல் நாள் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை எடுத்தது.
அணித்தலைவர் மைக்கல் கிளார்க்கும் முன்னாள் தலைவர் பொண்டிங்கும் விளையாட்டைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டனர். இவர்களின் அபார துடுப்பாட்டம் இந்திய பந்து வீச்சாளர்களை துவம்ச‌ம் செய்தது. டோனியின் கள வியூகங்கள் எவையும் இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை.
கிளார்க் பொண்டிங் ஜோடி 74.5 ஓவர்கள் விளையாடி 288 ஓட்டங்களை எடுத்தது. பொண்டிங் 134 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இரண்டு வருடங்களின் பின் சதம் அடித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்தார் பொண்டிங். இரண்டாம் நாள் நான்கு விக்கெட்டுகளை இழந்து 482 ஓட்டங்கள் எடுத்தது அவுஸ்திரேலியா. கிளார்க் 255 ஓட்டங்களையும் ஹசி 55 ஓட்டங்களையும் எடுத்தனர்.
கிளார்க் முதலாவது இரட்டைச் சதம் அடித்தார் என்று பத்திரிகைகளில் பிரசுரமானமை காய்வதற்கிடையில் மூன்றாம் நாள் முச்சதமடித்து பல புதிய சாதனைகளை நிலை நாட்டினார் கிளார்க். இந்த ஜோடியை பிரிக்க முடியாத இந்திய வீரர்கள் தவித்தபோது அவுஸ்திரேலியா ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. நான்கு விக்கெட்டு இழப்புக்கு 659 என்ற பிரமாண்ட ஓட்ட எண்ணிக்கையுடன் இந்தியாவைத் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
கிளார்க் ஆட்டமிழக்காது 329 ஓட்டங்களும், ஹஸி ஆட்டமிழக்காது 150 ஓட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலியா 468 ஓட்டங்கள் முன்நிலை பெற்றது. வெற்றியை மறந்து போட்டியைச் சமப்படுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா.
கம்பீர் 83 சச்சின் 80, லக்ஷ்மன் 66, அஸ்வின் 62 ஓட்டங்கள் எடுத்தனர். இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 460 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
ஹல் பொன்ஸீ ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு டெஸ்ட்போபாட்டிகளிலும் டெண்டுல்கர், அஸ்வின் மட்டும் தான் சிறப்பாக விளையாடினார்கள். ஏனையோர்போராடாது அவுஸ்திரேலியப் பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தனர். கம்பீரும்,ஷேவாக்கும் இன்னமும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. பொண்டிங்கும் ஹசியும் தமக்கெதிரான விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளனர். 99 ஆவது ஓட்டம் எடுத்த போது ரன் அவுட் வாய்ப்பில் இருந்த பொண்டிங் 40 ஆவது ச‌தமடித்தார்.
33 இனிங்ஸ்களில்ச‌தமடிக்காத பொண்டிங் சதமடித்தார். சச்சின் 51 களின் 41 ச‌தங்களுடன் முன்னிலையில் உள்ளõர். 182 ஓட்டங்கள் எடுத்திருந்த கிளார்க் அடித்த பந்தை இஷாந்த் ச‌ர்மா தவறவிட்டதால் புதியசாதனைகள் பல வற்றைச்செய்தார்

சிட்னி மைதானத்தில் முதல் நாளில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் அவுஸ்திரேலியாவின் மூன்று விக்கெட்டுகளை இழந்தனர். இரண்டாம் நாள் இந்திய வீரர்கள் அவுஸ்திரேலியாவின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் விழுத்தினர். மூன்றாம் நாள் இந்தியாவின் இரண்டு விக்கெட்டுக்களை விழுந்தன. நான்காம் நாள் இந்தியாவின் எஞ்சிய எட்டு விக்கெட்டுகளும் வீழ்ந்தன.
முச்சதம் அடித்து கிளார்க் சாதனை
சிட்னி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் மூன்று சதம் அடித்ததன் (329) மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அது பற்றிய விவரங்கள் வருமாறு,
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மொத்தம் 25 முறை முச்சதம் அடிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 4 பேர் தலா இரு முறை முச்சத சாதனையை செய்துள்ளனர்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து மட்டும் 10 டிரிபிள் செஞ்சரி எடுக்கப்பட்டுள்ளன.
முச்சதம் விளாசிய 6 ஆவது அவுஸ்திரேலிய வீரர் மற்றும் 7 ஆவது தலைவர் என்ற பெருமையும் கிளார்க்குக்கு கிடைத்துள்ளது. ஏற்öகனவே @மற்கிந்தியத் தீவுகளின் லாரா 400, இலங்கையின் மஹேல ஜயவர்த்தன 374, அவுஸ்திரேலியாவின் மார்க் டெய்லர் 334, இங்கிலாந்தின் கிரகாம் கூச் 333, பாகிஸ்தானின் யூனிஸ்கான் 313, அவுஸ்திரேலியாவின் பாப் சிம்ப்சன் 311 ஆகியோர் கேப்டனாக இருந்து 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்தவர்கள் ஆவர். மைக்கல் கிளார்க் 5 ஆவது வரிசையில் களமிறங்கி இந்த முச்சதத்தை ருசித்துள்ளார். டொப் 4 துடுப்பாட்ட வீரர்களை தவிர்த்து அதற்கு அடுத்த வரிசைகளில் முச்சதம் கண்ட 2 ஆவது வீரர் கிளார்க் ஆவார். இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (304 ஓட்டங்கள்) இங்கிலாந்துக்கு எதிராக, 1934) 5 ஆவது வரிசையில் மூன்று சதம் அடித்திருக்கிறார்.
129 ஆண்டு கால சிட்னி மைதான வரலாற்றில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சிறப்பும் கிளார்க் வசம் ஆகியுள்ளது. இதற்கு முன்பு 1903 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் டிப் போஸ்டர் 287 ஓட்டங்கள் எடுத்ததே இங்கு அதிகபட்சமாக இருந்தது. மூன்று சதம் அடிக்கப்பட்ட 19 ஆவது மைதானம் சிட்னியாகும். ஆண்டிகுவா, ஹெட்டிங்லே ஆகிய மைதானங்களில் தலா மூன்று முறை முச்சதங்கள் பதிவாகியுள்ளன.
இந்த டெஸ்ட்டில் மைக்கேல் கிளார்க் ரிக்கி பொண்டிங் ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்கு 288 ஓட்டங்களும் மைக்கல் கிளார்க், மைக் ஹஸி ஜோடி 5ஆவது விக்கட்டுக்கு 334 ஓட்டங்களும் சேகரித்தனர்.
டெஸ்ட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் இரண்டு முறை 250 ஓட்டங்களுக்கு மேல் பார்ட்னஷிப் அமைந்தது இதுவே முதல் முறையாகும்.
முச்சதம் அடிக்கப்பட்ட முந்தைய 24 ஆட்டங்களில் 8 மட்டுமே அந்த அணியின் வெற்றியில் முடிந்திருக்கின்றது. மற்ற ஆட்டங்கள் சமனாகின.
ரமணி

சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ் 09/01/12



Tuesday, January 3, 2012

திரைகடல் ஓடியும்…

பகல் வேலை முடிந்தவர்கள் சிறுவர்களைப் போல் துள்ளி ஓடி பஸ்ஸினுள் ஏறினார்கள்.இரவு வேலைக்காக பஸ்ஸில் வந்தவர்கள் இறங்க மனமில்லாது இறங்கினார்கள்.
‘என்ன இன்பம் இறங்க மனமில்லையோ?
‘இந்தச் சவப்பெட்டி எப்பபோகப் போகுதோ? அடியைப்பாத்தாலே வயித்தைக் கலக்குது. தான் வேலை செய்யப்போகும் அந்தப் பிரமாண்டமான உருவத்தைப் பார்த்து வெறுப்புடன் கூறினான் இன்பம்.
‘உப்பிடி எத்தினையை அனுப்பிப் போட்டம். இன்னும் எத்தினை வருமோ தெரியாது. கடிதம் வந்ததே?’ சிவா.
‘ஓம் மகன் நாப்பது கடிதம் வந்தது. என்ரை பேருக்கு ஒண்டு கூட வரவில்லை.’
‘யாழ்ப்பாணக் கடிதம் தான் சுணக்கம் எண்டால் மட்டக்களப்புக் கடிதமும் வரேல்லையே?’
‘மட்டக்களப்பு கிடக்கட்டும் மகன். கொழும்புக் கடிதம் கூட எனக்கு வரவில்லை.
‘நைற் வேலைகாரர் எல்லாரும் பஸ்ஸாலை இறங்குங்கோ’ இரவுவேலைக்குப் பொறுப்பான ஜோன்சன் பஸ்ஸ{க்குள் ஏறிக் கூறினான்.
‘மகேந்திரண்ணை காலமை வெள்ளன வந்திடுங்கோ இரவு வேலைக்குப் போகிறவர்கள் பஸ் சாரதி மகேந்திரனிடம் கூறினார்கள்.
பஸ் பிரதான வாசலைக் கடக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த இன்பம். தான் சவப்பெட்டி என வர்ணித்த அந்தப் பிரமாண்டமான கப்பலைப் பார்த்தான். சவ10தி அரேபியாவின் கிழக்கு நகரமான யுபேல் துறைமுகக் கடல் அமைதியாக இருந்தது. சீனாவில் இருந்து ய10ரியா ஏற்றுவதற்காக வந்த அந்தக் கப்பலை நோக்கிச் சென்றார்கள் பஸ்ஸில் வந்தவர்கள். அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து மூன்று வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு வந்தவர்கள் ஒருவருடம் கழிந்து விட்டது.
ய10ரியா ஏற்றும் வேலை மிகவும் சிரமமானது. பெல்ட்டின் மூலம் ய10ரியா பைகள் வேகமாக வந்து கொண்டிருக்கும் அந்த வேகத்துக்கு ஈடுகொடுத்து அவற்றை துரிதமாக அடுக்கவேண்டும். ஒரு மணித்தியாலத்துக்கு இரண்டுபேர் வேலை செய்வார்கள். ஏனையோர் ஓய்வெடுப்பார்கள். ஒரு குழுவில் பத்துப் பேர் இருப்பார்கள் ஒரே நேரத்தில் அது நான்கு குழுக்கள் கப்பலில் வேலை செய்யும்.
ஒவ்வொரு மாதமும் ய10ரியா ஏற்றுவதற்காக நான்கு அல்லது ஐந்து கப்பல்கள் அந்தத் துறைமுகத்துக்கு வரும். ஒவ்வொரு கப்பலும் ஐந்து நாட்கள் தரித்து நிற்கும். ஐந்து நாட்களும் ஓய்வு இல்லாது வேலை. ஏனைய நாட்களில் எண்ணெய் ஏற்றுவதற்காக வரும் கப்பல்களைக் கட்டுவதும் அவற்றை அவிழ்த்து விடுவதும் தான் அவர்களின் வேலை.
இரவு எட்டுமணியாகிவிட்டது. வேலை செய்பவர்களைத் தவிர ஏனையோர் ஓய்வெடுத்தனர். ஸ்ரீயும், சிவபாலனும் அணியத்தில் நின்று தூண்டி போட்டனர். அவர்கள் மீன்பிடிப்பதை வேடிக்கைபார்த்தான் நாதன். இவர்களுக்கு சற்று தூரத்திலே கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜலிங்கம். எப்பவும் கலகலப்பாக இருக்கும் ராஜலிங்கம் அமைதியாக இருப்பைத அவதானித்த நாதன் அவரை நோக்கிச் சென்றான்.
‘என்னலிங்கம் அமைதியாக இருக்கிறாய்? எனக் கேட்டபடி ராஜலிங்கத்தின் முதுகில் தட்டினான் நாதன்.
"ஒன்றுமில்லை" எனக் கூறி சிரிக்க முயன்றான் ராஜலிங்கம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
"உனக்கு எத்தினை மணிக்கு வேலை" நாகலிங்கம்
"எனது வேலை கிடக்கட்டும். ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்." நாதனின் கேள்விக்கு பதிலளிக்காது கடலை வெறித்தபடி பார்த்தான் ராஜலிங்கம்.
"இந்த இரவிலையும் என்ன புளுக்கம்" என வியர்வையைத் துடைத்தபடி மீன்பிடிப்பவர்களை நோக்கிச் சென்றான் சுந்தரம்.
"எடே சுந்தரம் இங்கைவா", இவன் ராசலிங்கன் உன்ரை ரூம் தானே. உசார் இல்லாமல் இருக்கிறான் என்ன நடந்தது?" நாதன்.
"சுகமில்லை எண்டு பகலும் சாப்பிடேல்லை. வேலைக்கு வரும்வரை படுத்திருந்தவர் வேலைக்கு வரவேண்டாம் என்டனான். சம்பளம் வெட்டிப் போடுவாங்கள் எண்டு தான் வேலைக்கு வந்தவர்" என்று கூறினான் சுந்தரம்.
"லிங்கம் என்ன பிரச்சினை எண்டு சொல்லு. நீ சொன்னால் தான் எங்களாலை எதும் செய்ய முடியும். பிரச்சினையை மனசுக்கை வைச்சிராதை" என்றான் நாதன். நாதனின் வற்புறுத்தலின் பின்னர் கடிதம் ஒன்றைக் கொடுத்தான் ராஜலிங்கம்.
கொடிகாமம்
12.05.1990
என்றும் அன்புள்ளவருக்கு
இத்தனை நாளும் உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும். எனது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நான் கண்ணை மூடமுன் உங்களைப் பார்க்க விரும்புகிறேன். எனது நோய்க்கு இங்கு வைத்தியம் பார்க்க முடியாது. கொழும்புக்குத் தான் போக வேண்டும். கொழும்புக்குப் போகவழி இல்லை.
இப்படிக்கு
என்றும் உங்கள் மனைவி
மீனாட்சி
கடிதத்தைப் பார்த்த நாதனின் கைகள் நடுங்கின. சிறிது நேரத்தினுள் கப்பல் முழுவதும் செய்தி பரவிவிட்டது. ராஜலிங்கத்தின் மனைவி எழுதிய கடிதம் சகலரையும் கலங்கவைத்தது. ராஜலிங்கத்தின் மனைவியின் நோய் சகலரையும் அதிர்ச்சியடை வைத்தது. ராஜலிங்கத்தை வேலை செய்யவிடவில்லை. ராஜலிங்கம் சாப்பிடவில்லை என்பதை அறிந்த நாதன் வற்புறுத்தி அழைத்துச் சென்று சாப்பிடவைத்தான்.
"என்னை நெஞ்சளுத்தமடாப்பா உனக்கு. கான்சர் கார மனுசியை தனிச்சுவிட்டிட்டு வந்திருக்கிறாய். நீ ஒண்டுக்கும் யோசிக்காத கொஞ்சம் நித்திரை கொள்ளு விடிய காம்புக்குப் போய் நல்ல முடிவு எடுப்பம்" என்று ஆறுதல் கூறினான் நாதன்.
இரவு வேலை முடிந்து முகாமுக்குச் சென்றதும் நாதன், ஸ்ரீ, சிவபாலன், சுந்தரம் ஆகியோர் முகாம் பொறுப்பதிகாரியுடன் ராஜலிங்கத்தின் பிரச்சினையை பற்றிக் கதைத்தனர். பத்துமணிக்கு தலைமை அலுவலகம் சென்று உரியவர்களுடன் கதைப்போம் என்று கூறினார் பொறுப்பதிகாரி.
தலைமை அலுவலகத்துக்குச் சென்ற வாகனம் வந்ததும் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு ஓடினர்.
"என்னவாம்? என்ன சொன்னாங்கள்?" ஏக காலத்தில் பலர் ஒரே மாதிரிக் கேட்டனர்.
"எல்லாம் எதிர்பார்த்ததுதான் மூன்று வருடம் நிக்க வேணுமாம். என்ன பிரச்சினை எண்டாலும் போக முடியாதாம். நாங்கள் வாதாடினதாலை ராசலிங்கம் போறதுக்கு அனுமதித்திருக்கிறார்கள். ரிக்கெட் நாங்கள் போடவேணும். ராசலிங்கம் திரும்பி வர முடியாது. நாங்கள் எல்லாரும் காசு போட்டு ராசலிங்கத்தை அனுப்பி வைப்பம். கையிலை காசில்லாட்டிலும் பரவாயில்லை. எவ்வளவு போடப் போறியள் எண்டு சொல்லுங்கோ. நான் வட்டிக்கு வேண்டுறன். சம்பளம் எடுத்துப் போட்டு காசைத் தாங்கோ" என்ற நீண்ட ஒரு பிரசாரம் செய்தான் நாதன்.
சுறுசுறுப்பாக அலுவல்களைப் பார்த்து மூன்று நாட்களில் ராஜலிங்கத்தை அனுப்பி வைத்தார்கள். கைச் செலவுக்கு இலங்கைப் பணத்தில் 50 ஆயிரம் கொடுத்தார்கள். மனைவிக்கு சத்துணவு, பிள்ளைகளுக்கு உடுப்பு, விளையாட்டுச் சாமான்கள் என்று ராஜலிங்கத்தைக் குறைவின்றி அனுப்பி வைத்தார்கள். விமான நிலையத்தில் கண்ணீர் மல்க நன்றி கூறி விடைபெற்றான் ராஜலிங்கம்.
ராஜலிங்கம் சவ10தியிலிருந்து இலக்கைக்குச் சென்று ஒரு வாரத்தின் பின்னர் ராஜலிங்கத்தின் பெயருக்கு இலங்கையிலிருந்து கடிதம் வந்தது. கடிதத்தைத் திரும்ப அனுப்ப வேண்டும் என்றனர் சிலர். உடைத்துப் பார்த்தால் மனைவியின் நிலைமையை அறியலாம் என்றனர் சிலர். நீண்ட வாதப் பிரதிவாதத்தின் பின்னர் கடிதத்தை உடைத்துப் பார்த்தவர்கள். திகைத்து விட்டனர். இப்படியும் நடக்குமா என்று நாதன் அதிர்ச்சியில் உறைந்தான். கடிதத்தைப் பார்த்த மற்றவர்களும் கதி கலங்கிவிட்டனர்.
"என்ன உலகமடா இது அடக் கடவுளே இப்படியும் நடக்குமா?" என வாய்விட்டு அரற்றினான் சுந்தரம். ராஜலிங்கத்தின் மனைவி எழுதிய அந்தக் கடிதத்தின் சாராம் சம் சுந்தரத்தின் மனதைக் குடைந்தது.
சண்டை இப்போதைக்கு முடியாது. இந்த மாதம் காணி ஈடுமீளவில்லையெண்டால் அறுதியாகிவிடும். காசுக்கு ஏற்பாடு செய்யுங்கோ என்று கடிதத்தின் வரி;கள் சுந்தரத்தின் மனதில் முள்ளாய்க் குத்தின.
சூரன் ஏ.ரவிவர்மா
யாதும் 2010

Monday, January 2, 2012

ஏமாற்றியது இந்தியா: சாதித்தது அவுஸ்திரேலியா


பெரும் எதிர்பார்ப்புடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது. கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்த நாளான பொக்ஸிங்டே என்றழைக்கப்படும் கொண்டாட்ட நாளில் மெல்பேர்னில் ஆரம்பமான டெஸ்ட் போட்டியில் நான்காம் வெற்றியைக் கையில் வைத்திருந்த இந்திய அணி அவுஸ்திரேலியப் பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்து வெற்றியைப் பறிகொடுத்தது. முதல் டெஸ்ட்போட்டியில் தோல்வி என்ற டோனியின்ராசி மெல்பேர்னிலும் தொடர்ந்தது.
சச்சின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. சச்சின் சதமடிக்கவில்லை என்றாலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடினார்.அவுஸ்திரேலிய வீரர்களான பொண் டிங், ஹசி ஆகியோர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. தமது துடுப்பாட்டத்தினால் விமர்சனங்களின் வாயை இருவரும் அடைத்தனர். இந்தியப் பந்து வீச்சாளர்களுக்கும் அவுஸ்திரேலியப் பந்து வீச்சாளர்களுக்கும் இடையேயான கடுமையான போட்டியில் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் வெற்றிபெற்றனர்.
இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றிய போதும் சச்சினும் அஸ்வினும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் போராடினார்கள். உமேஸ் யாதவ் தன்பங்குக்கு சிறிது நேரம் அச்சுறுத்தினார்.
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்ஸில் 333 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 240 ஓட்டங்கள் எடுத்தது. 292 என்ற வெற்றி இலக்குடன் உணவு இடைவேளைக்கு சிறிது முன் களமிறங்கியது. இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு 292 ஓட்டம் மிக இலகுவானது என்று ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால் அவுஸ்திரேலிய பந்து வீச்சுக்கு முகங்கொடுக்கமுடியாத இந்தியா நான்காம் நாள் 169 ஓட்டங்கள் எடுத்து படுதோல்வியடைந்தது.
இந்திய, அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஒரேநாளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹிபொன்ஸ், பற்றிசன், சஹீர்கான், உமேஸ் யாதவ், அஸ்வின், சிடில் ஆகியோர் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி விக்கெட் வேட்டை நடத்தினார்கள். 2003 ஆம் ஆண்டு அடிலெ# ட்டில் அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 230 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் விரட்டிய இந்திய அணி ஆறு விக்கெட்களை இழந்து 233 ஓட்டங்கள் எடுத்து ஒரேஒருமுறை மட் டும் வெற்றிபெற்றது.
இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான கம்பீரின் இடம் பறி@பாகும் அபாயம் உள்ளது. 2010ஆம் ஆண்டு ஜனவரியில் பங்களாதேஷûக்கு எதிரான போட்டியில் சதமடித்த கம்பீர் அதன் பின்னர் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி எட்டு அரைச்சதமடித்துள்ளார். 2008ஆம் ஆண்டு டெஸ்ட்போட்டிகளில் விளையாடி மூன்றுசதம் ஆறு அரைச்சதம் உட்பட 1134 ஓட்டங்கள் எடுத்தார். 2009ஆம் ஆண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்குசதம் ஒரு அரைச்சதம் உட்பட 727 ஓட்டங்கள் எடுத்தார். 2010ஆம் ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒருசதம் நான்கு அரைச்சதம் உட்பட 524 ஓட்டங்கள் எடுத்தார். கடந்த ஆண்டு எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு அரைச்சதம் உட்பட 470 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
அந்நிய மண்ணில் தடுமாறும் ட்ராவிட்டின் அண்மைய சோகம் அவுஸ்திரேலியாவிலும் தொடர்ந்தது கடைசியாக ட்ராவிட் விளையாடிய ஆறு இன்னிங்ஸ்களில் முறையே 4,30,2,2,24,2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மெல்பேர்னில் இதுவரை ஏழு இன்னிங்ஸ்களில் விளையாடிய ட்ராவிட் 113 ஓட்டங்கள் தான் எடுத்தார். 2007ஆம் ஆண்டு அதிகபட்சமாக 42 ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலியாவில் பயிற்சியாளர் பிளட்ச்சரின் தோல்வி இந்திய அணியையும் பீடித்துள்ளது. இவரது பயிற்சியின் கீழ் 2002 03ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இங்கிலாந்து 41 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 2005ஆம் ஆண்டு மீண்டும் அவுஸ்திரே லியாவுக்குச் சென்ற இங்கிலாந்து ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது. பிளட்ச்சரின் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து, இந்திய அணிகள் 11 டெஸ்ட்போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் தோல்வியடைந்தன. பிளட்சர் பயிற்சியாளரான பின்னர். கடந்த ஆறுமாதங்களில் வெளிநாட்டில் விளையாடிய இந்தியா மேற்கு இந்தியத் தீவுகளில் (10) வெற்றிபெற்றது. இங்கிலாந்து (40) தோல்வியடைந்தது. அவுஸ்திரேலியாவிலும். முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்தது.
இந்திய, அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட்போட்டி நாளை செவ்வாய்க்கிழமை சிட்னியில் ஆரம்பமாகிறது. சிட்னி மைதானத்தில் நடைபெறும் 100 ஆவது டெஸ்ட் போட்டி இது.
சிட்னி மைதானம் வேகப்பந்துக்கு சாதகம் என்பதால் அவுஸ்திரேலியாவுக்கு பிரகாசமாக உள்ளது. சிட்னியில் 1882ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளின் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
சிட்னி மைதானத்தில் கடந்த ஆண்டு விளையாடிய இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகியவை முதலில் துடுப்பெடுத்தாடி குறைந்த ஓட்டங்களையே பெற்றன.
வானதி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 02/01/12

வரலாறு படைத்ததுஇலங்கை

டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் தென்னாபிரிக்காவில் முதலாவது வெற்றியைப் பெற்று வரலாறு படைத்துள்ளது இலங்கை. தென்னாபிரிக்காவில் 1998 ஆம் ஆண்டு முதல் எட்டுப் போட்டிகளில் விளையாடியது இலங்கை. அதில் ஏழு போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முரளிதரன் ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை அணி பெற்ற முதலாவது வெற்றி இது. இலங்கை அணித்தலைவராக டில்ஷான் பொறுப்பேற்றபின் கிடை த்த முதல் வெற்றி.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 338 ஓட்டங்களை எடுத்தது. தென் ஆபிரிக்காவின் அறிமுக வீரர்களுக்கும் இலங்கை வீரர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் பரணவிதாரன டில்ஷான், சங்கக்கார, மத்தியூஸ், மஹேல ஆகியோர் ஆட்டமிழந்ததும் இலங்கை அணி தடுமாறியது. ஆறாவது விக்கட்டில் இணைந்த சமரவீர சண்டிமால் ஜோடி நம்பிக்கையூட்டியது. 37 ஓவர்களுக்கு முகம் கொடுத்த இவர்கள் 111 ஓட்டங்கள் எடுத்தனர். சமரவீர 102 ஓட்டங்களிலும் சன்டிமால் 58 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். டெஸ்ட் வாக்கையிலிருந்து ஓரங்கட்டப்படுவோமோ என்ற நிலையிலிருந்த சமரவீர சதமடித்து தனது திறமையை நிரூபித்தார்.
தென்னாபிரிக்க அணியின் அறிமுக வீரரான லாங்கே 81 ஓட்டங்கள் கொடுத்து ஏழு விக்கெட்களை வீழ்த்தி அறிமுகப் போட்டியில் அசத்திய வீரர்களில் முதலாமிடத்தில் உள்ளார்.
வெலகெதர, ஹேரத் ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத தென் ஆபிரிக்கா 168 ஓட்டங்களில் முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. வெலகெதர ஐந்து விக்கெட்களையும் ஹேரத் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
அம்லா 54 ஓட்டங்களையும் ஸ்ரெய் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் எடுத்தனர். ஏனையோர் குறைந்த ஓட் டங்களையே எடுத்தனர். நான்காவது இணைப்பாட்டத்தில் ஜோடி சேர்ந்த ஓடிய ஏ.டீ.வில்லியர்ஸ், அம்லா ஜோடி அதிகபட்Œமாக 76 ஓட்டங்களை எடுத் தது. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 279 ஓட்டங்கள் எடுத்தது. சங்ககார 108 ஓட்டங்களும் சண்டிமால் 54 ஓட்டங்களும் எடுத்தனர். 6ஆவது இணைப்பாட்டத்தில் ஜோடி சேர்ந்த சண்டிமால், சங்கக்கார ஜோடி 27 ஓவர்களுக்கு முகம் கொடுத்து 104 ஓட்டங்கள் எடுத்தது. டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சண்டிமால் தனது இருப்பை உறுதி செய்தார்.
450 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்கா ஹேரத்தின் பந்தைச் சமாளிக்க முடியாது 241 ஓட்டங்களில் வீழ்ந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 208 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் தென்னாபிரிக்காவும் இலங்கையும் தலா ஒரு வெற்றியைப் பெற் றன. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தென்ஆபிரிக்கா இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இலங்கை அணி வெற்றிபெற்று நம்பிக்கையுடன் உள்ளது.
இம்மைதானத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென் ஆபிரிக்கா வெற்றி பெறவில்லை. டேர்பன் மைதான ராசி தென்னபிரிக்காவுக்கு எதிராகச் சதி செய் தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகிறது.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 02/01/12

Sunday, January 1, 2012

களை எடுக்கிறார் ஜெயலலிதாகலக்கத்தில் அமைச்சர்கள்


உடன்பிறவா சகோதரி சசிகலாவின் திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார். தமிழக அரசியல் சூறாவளி ஜெயலலிதாவின் பக்கத்தில் அவரை நிறுத்தியது
தி.மு.க. வில் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் தான் முன்னணியில் உள்ளனர். அ.தி.மு.க. மன்னார்குடி

பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போ வெளிச்சத்துக்கு வந்துள்ளது

உடன்பிறவாச் சகோதரி சசிகலாவையும் அவரது பரிவாரங்களையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரட்டியடித்த பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் சசிகலாவின் விசுவாசிகளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் ரீதியாக ஜெயலலிதா படுதோல்வியடைந்த அவமானப்படுத்தப்பட்ட நேரங்களில் அவருக்கு உறுதுணையாக நின்று "நிமிர்ந்து நில் தொடர்ந்து செல்' என்று தைரியத்தை சசிகலாவும் அவரது கணவர் நடராஜனும் வழங்கினார்கள்.
சசிகலாவுக்கு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாது. அவரது கணவன் நடராஜனுக்கு அரசியல் அறிவும் மக்களுடன் நெருங்கிப் பழகும் சூட்சுமமும் தெரியும். திராவிட முன்னேற்றக் கழக மாணவர் இயக்கங்கங் போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டவர் நடராஜன். ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரி சசிகலாவின் திருமணம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின் தலைமையில் நடைபெற்றது. கருணாநிதி முதல்வரான போது மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் நடராஜன். அரசியல் சூறாவளி சசிகலாவை ஜெயலலிதாவின் பக்கத்தில் நிறுத்தியது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டபோது அவரது பிரசார நிகழ்ச்சிகளைப் படம் பிடிப்பதற்காக நடராஜனின் வீடியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தைக் கவனித்து வந்த நடராஜனின் மனைவி சசிகலா, வீடியோத் தொகுப்புக்கள் சம்பந்தமாக அடிக்கடி ஜெயலலிதாவைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பும் நெருக்கமும் ஜெயலலிதாவின் மனதில் நிரந்தர இடம்பிடிக்க உதவியது.
எம்.ஜி.ஆர். இறந்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா தலைமையிலும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையிலும் தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இரண்டு அணிகளும் படுதோல்வியடைந்தன. அப்போது அரசியலைவிட்டு ஒதுங்கலாம் என்று ஜெயலலிதா முடிவெடுத்தார். சசிகலாவும் நடராஜனும் அவருக்கு ஆறுதல் கூறி அரசியலில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சசிகலா தனது உறவினர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்தார்.
ஜெயலலிதா எப்போது என்ன செய்வார் என்று யாருக்குமே தெரியாது. அதிரடியாகச் சில முடிவுகளை எடுப்பார். அதன் பின் விளைவுகள் பற்றி சற்றும் சிந்திக்கமாட்டார். அவ்வப்போது முக்கிய பதவி வகித்த ஜெயலலிதாவின் உறவினர்களை பதவியை விட்டு தூக்கினார். அந்த நேரத்தில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் தனது இன்னொரு உறவினரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் ஜெயலலிதாவின் வீட்டிலும் அறிமுகப்படுத்தினார். தன் கணவர் நடராஜனை ஜெயலலிதா விரட்டியடித்தபோதே ஜெயலலிதாவை நம்பி????? கைவிட்டார் சசிகலா.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் தோல்விக்கு அரசியல் வõதிகளும் ஊழலும் முக்கிய காரணம். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் பிள்ளைகளில் அநேகர் அரசியலில் உள்ளனர். ஆனால் அழகிரியின் பெயர்தான் அதிகமாக அடிபடுகிறது. அழகிரி மதுரையில் மட்டும் தான் ஆட்சி செய்தார். சசிகலாவின் ஊரான மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் குறு நில மன்னர்கள் போல் ஆட்சி செய்கின்றனர். முக்கியமான பல ஒப்பந்தம் சசிகலாவின் கண் அசைவின் பின்னரே நிறைவேற்றப்பட்டன. சத்தம் இன்றி நடந்த இந்த ஊழல்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணித்து விட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட வேட்பாளரின் பட்டியலில் சசிகலாவின் கையே ஓங்கி இருந்தது. கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசாது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதால் கூட்டணியே உடைந்து போகும் நிலை ஏற்பட்டது. ஜெயலலிதாவை நம்பிய விஜயகாந்தையும் இடதுசாரிகளையும் சசிகலா ஏமாற்றினார். அந்தப் பழி ஜெயலலிதாவின் தலையிலேயே விழுந்தது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் புதிய வர்களின் அரசியல் அனுபவம், முதிர்ச்சி இல்லாத பலர் அமைச்சர்களாகியுள்ளனர். இவர்களின் வெற்றிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான மக்களின் வெறுப்புக்களே காரணம். சசிகலாவுக்கு வேண்டப்பட்ட அமைச்சர்கள் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என்று தெரியாது தவிக்கிறார்கள். தாம் சசிகலாவின் விசுவாசிகள் அல்ல என்பதை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
சசிகலாவை ஜெயலலிதா விரட்டியதால் எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். சசிகலாவின் வெளியேற்றத்தை அறிந்து இனிப்பு வழங்கி வெடி கொளுத்தி, மொட்டை அடித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு எந்தவித பங்களிப்பும் வழங்காது நிழல் முதல்வர் போல் செயற்பட்ட சசிகலாவின் போக்குப்பிடிக்காத எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறினார்கள். அவர்கள் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துள்ளனர்.
தமிழக அரசியல் மற்றும் முல்லைப்பெரியாறு பிரச்சினை கூடங்குளம் போராட்டம் என்பனவற்றுக்கு மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த வாரம் தமிழகத்துக்கு விஜயம் செய்தார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியினருமே விமான நிலையத்துக்குச் சென்றனர். பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்பது மாநில முதல்வரின் கடமை என்பதனால் ஜெயலலிதாவும் அமைச்சர்களும் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றனர்.
பிரதமர் வரவேற்க காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களும் திராவிட முன்னேற்றக கழக மத்திய அமைச்சர்களும் விமான நிலையத்தில் குழுமியிருந்தனர். ஜெயலலிதாவுக்கு வேண்டப்படாதவர்கள் அவருக்கு அருகிலேயே நின்று பிரதமரை வரவேற்றனர். பரம எதிரிகளான ஜெயலலிதாவும் அழகிரியும் மிக நெருக்கமாக நின்று பிரதமரை வரவேற்றனர்.
பிரதமரை வரவேற்பதற்காக அமைச்சர்களான தயாநிதி மாறன், பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்களான டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது முதல்வர் ஜெயலலிதா வந்தார். அப்போது மரியாதையின் நிமித்தம் அனைவரும் எழுந்தனர். இவர்கள் எழுந்திருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் பிரதமரை வரவேற்றபோது ஜெயலலிதாவின் முகம் இறுகி இருந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சி விமான நிலையத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு01/01/12