Showing posts with label பன்னீர்செல்வம். Show all posts
Showing posts with label பன்னீர்செல்வம். Show all posts

Wednesday, June 8, 2022

பாட்டாளி மக்கள் கட்சியின் மாற்றத்தை நோக்கிய பயணம்

 சத்தம் சந்தடி இல்லாமல்  தன் மகன் அன்புமணிக்கு முடிசூடியுள்ளார்.டாக்டர் ராமதாஸ்.  மாற்றம், முன்னேற்றம்,  அன்புமணி என்ற கோஷத்துடன் தமிழக ஆட்சியைப் பிடிக்க சபதம் செய்தவர் கட்சியின் தலவராகிவிட்டார்.

வன்னியர்களின் உரிமைக்காக இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் ராமதாஸ் காலப்போக்கில் அதனை அரசியல் கட்சியாக்கினார்.தனது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அரசியலுக்கு வரமாடார்கள் என அப்போது சபதம் செய்தார். மகன் அன்புமணி எம்.பியாகி,  பின்னர் அமைச்சரானார். இன்று மகனுக்கு முடிசூடி செங்கோலைக்  கையில் கொடுத்துள்ளார்.  

சென்னை திருவேற்காட்டில், பாட்டாளி மக்கள் கட்சியின்  மாநில சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஜி.கே. மணி, கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.


கட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்தே கால் நூற்றாண்டுகளாக கட்சித் தலைவராக இருந்த தீரன், ஜிகே மணிக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் 3வது தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் புகையிலை ஒழிப்பு, போலியோ ஒழிப்பு ஆகியவற்றுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக கீழ்க்கண்ட விருதுகளை வென்றுள்ளார்.

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் லூதர் எல்.டெர்ரி விருது, உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறப்பு விருது, உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறந்த தலைமைப் பண்புக்கான விருது, உலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம், சென்னை ரோட்டரி சங்கத்தின் கௌரவம் தரும் விருது, இந்தியாவில் இளம்பிள்ளைவாதம்   ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014ம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய போது, 108 அவசர ஊர்தித் திட்டம், உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கம், அண்மையில் உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதாரத் தலைவர்கள் விருது பெற்ற அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரப் பணியாளர்களை (ஆஷாக்கள்) நியமிக்கும் திட்டம், குட்காவுக்குத் தடை, பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை, திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம், போலியோ நோய் ஒழிப்பு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அமைத்தது, எய்ம்ஸுக்கு இணையான மருத்துவமனைகள் அமைத்தது, பாரம்பரிய அறிவுசார் மின்னணு நூலகம் அமைத்தது, தானாக செயலிழக்கும் சிரிஞ்ச்சை அறிமுகம் செய்தது உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி எண்ணற்ற சாதனைகளை படைத்தவர்.

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக பணியாற்றிய போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வளர்த்தவர். பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஏராளமான சிறு தடுப்பணைகளை கட்டியுள்ளார். ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரி இருக்கிறார்.

அன்புமணி சிறந்த அரசியல்வாதி என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால், அவரது கட்சி 2026 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் உள்ள வன்னியர்கள் அனைவரும் ஒருமித்து ஒரே கட்சிக்கு வாக்களித்தாலும் அந்த சமூகத்தால் ஆட்சியைப் பிடிக்கமுடியாது. ஒரு சில மாவட்டங்களில் வெற்ரி,தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு காலத்தில் இருந்தது.

காடுவெட்டி குரு வெளியேற்றப்பட்டபின்னர் கட்சியின் வளர்ச்சியில் வீழ்ச்


சி ஏற்பட்டது. ரஜினியுடனான மோதலை வன்னியர்கள் ரசிக்கவில்லை. புகை பிடிக்கும் காட்சியில்  நடிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு ரசிகர்களை கொதிப்படையச்  செய்துள்ளது. இவை எல்லாம் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரானவர்களின் வாக்கு மூலங்கள்.

அன்புமணியை வாழ்த்தி 2.0 என்ற விளம்பரங்கள் பளிச்சிட்டன. 'ஆளப்போகிறான் பாட்டாளி', '2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்' என்று கோஷம் எழுப்பினார்கள்.   

2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்து களம் கண்டபோது அன்புமணி முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

1968ஆம் ஆண்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் மகனாக அன்புமணி ராமதாஸ் பிறந்தார். எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு படித்துள்ள அன்புமணி ராமதாஸ், லண்டனில் பொருளாதார பட்டப்படிப்பு முடித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய, பசுமைத் தாயகம் அமைப்பிற்கு 1997 ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றார்.

இவர் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்த போது ஐநா சபையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்று 2013 மற்றும் 15 ஆண்டுகளில் ஜெனிவாவில் நடந்த ஐநா சபை கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு பேசியுள்ளார். பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்தபோதே பாமகவின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டுள்ளார்.

2004ஆம் ஆண்டு முதன்முதலாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2004ஆம் ஆண்டு அமைந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 35 வயதான அன்புமணி இளம் வயதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 2006 ஆம் ஆண்டு பாமக இளைஞரணித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டம், பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை சட்டம் உள்ளிட்ட மருத்துவத்துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டு வந்தார். 2014 ஆம் ஆண்டு தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக பாமக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்தோடு பாமக அன்புமணி தலைமையில் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது.

அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவிய பாமக, அந்த தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோல்வியைத் தழுவினர். 2019ஆம் ஆண்டு மீண்டும் தருமபுரி தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோல்வியடைந்தார்.


2019ஆம்ஆண்டு அதிமுக கூட்டணி மூலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு தற்போது வரை மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வருகிறார். 1997 ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் தொடங்கிய அன்புமணி ராமதாசின் அரசியல் பயணம் , ஏறக்குறைய 15 ஆண்டுகாலம் பாமக இளைஞரணி தலைவராக இருந்து, தற்போது பாமகவின் மாநில சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலினின் "திராவிட மொடல்" எனும்  சொர்பிரயோகாம் மத்திய அரசை கடுப்படைய வைத்துள்ளது. அதற்குப் போட்டியாக “2.0 மொடல் என அன்புமணி அரிவித்துள்ளார். ‘அனைவருக்கும் உரிமை. அனைவருக்கும் வளர்ச்சி’ என்பதை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் இந்தத் திட்டத்தில், வருங்கால தமிழகத்துக்கான தேவை   என்பானவற்றுக்கு  முக்கியத்துவம் கொடுத்துப் பயணிக்க வேண்டும் என்பதையெல்லாம் பிராதனப்படுத்தி அதற்கான வரைவைத் தயார் செய்துகொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி  மக்கள் கட்சி என்றால் சாதிக் கட்சி என்ற அடையாளம் இடப்பட்டிருக்கிறது. அதனை மாற்றிவிட முடியாது.

 

 

 


 

Thursday, August 5, 2021

எடப்பாடியையும் பன்னீரையும் ஒன்றிணைத்த சசிகலா

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமியும், .பன்னீர்ச்செல்வமும் எதிரும் புதிருமாகச்  செயற்படுகிறார்கள். தமிழக சட்டசபைத் தேர்தலின் பின்னர் இருவரும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டு தமது பிரிவினையை வெளிப்படுத்தினர்.கழகத்தினுள் எடப்பாடி கோஷ்டி,பன்னீர் கோஷ்டி என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவர்களைச் சமாதானப்படுத்தும் இன்னொரு குழுவும் அங்கு உள்ளது.

கட்சியை வழிநடத்த வேண்டிய  தலைவர்கள் இருவரும்  ஆளுக்கு ஒரு பக்கமாக செயற்படுவதால் தொண்டர்கள் நிலை தடுமாறுகின்றனர். எடப்பாடியாலும், பன்னீராலும்  ஒரம் கட்டப்பட்ட அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பரம எதிர் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைகிறார்கள்.

இரட்டைத் தலைமையால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளன. இரட்டைத் தலைமையை  நீக்கி ஒற்றைத் தலைமைக்கான பாதையை நோக்கி எடப்பாடி முன்னேறிக்கொண்டிருக்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எடப்பாடி தலைமை வகிப்பதை பன்னீர்ச்செல்வம் விரும்பவில்லை.

எடப்பாடி பழனிச்சாமிக்கும், .பன்னீர்ச்செல்வத்துக்கும் இடையேயான பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் சசிகலா, இடையில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தொண்டர்களுடனும், நிர்வாகிகளுடனும் சசிகலா பேசும் ஒலிப்பதிவுகள் பகிரங்கப்படுத்தப்படுவதால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சசிகலாவுடன் பேசியவர்கள் அணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி உரத்துக் குரல் கொடுத்தார். .பன்னீர்ச்செல்வம்  எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கைப்பற்றும் சசிகலாவின் திட்டத்துக்கு .பன்னீர்ச்செல்வம் ஆதரவு கொடுப்பாரோ என்ற  சந்தேகம் எடப்பாடிக்கு  ஏற்பட்டது. பன்னீர்ச்செல்வம் வழமை போன்று அமைதியாக இருந்தார்.

சசிகலாவின் செயற்பாடுகளால் எடப்பாடிக்கு தலைவலி அதிகமாகியது. சசிகலாவுடன் அடுத்து பேசுவது யார் என்ற பரபரப்பு அதிகமாகியது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்கள் எவரும் சசிகலாவுடன் தொடர்பில் இல்லை என்பது எடப்பாடிக்கு ஆறுதலைக் கொடுத்தது.

ஜெயலலிதாவின் மறவுக்குப்  பின்னர் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தின் தலைமையைக் கைப்பற்றுவற்கு சசிகலா முயற்சி செய்தார். சொத்துக்  குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட  சிறைத்தண்டனை அதற்கு முட்டுக் கட்டையாக இருந்தது. ஜெயலலிதாவின்  விசுவாசியான .பன்னீர்ச்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து  இறக்கி விட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சிறைக்குச் சென்றார் சசிகலா.

   சிறைவாசம் முடிந்து சசிகலா விடுதலையாகி வெளியே வந்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவரைக்  கண்டுகொள்ளவில்லை. சசிகலாவால் வளர்த்து விடப்பட்ட பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகாரம் மிக்க அமைச்சர்களாக வலம் வந்தனர்.  அவர்கள் அனைவரும் தன்னுடன்  இணைவார்கள் என சசிகலா எதிர் பார்த்தார். அதிகாரத்தில் இருந்தவர்கள் அதிகாரம் இல்லாத தன்னுடன் இணையத் தயாராக இல்லை எனபதை காலம் கடந்த பின்னர் சகிகலா புரிந்துகொண்டார்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் மிகத் திறமியாக ஆட்சி நடத்துகிறார். குறை சொல்வதர்கு எதுவும் இல்லை.  தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்டாலினை  விமர்சித்தவர்கள் அவரின் ஆட்சியைப்  புகழ்கிறார்கள். எடப்பாடியார் தமிழக அரசையும், ஸ்டாலினையும் கடுமையாக விமர்சிக்கிறார். பன்னீர்ச் செல்வமோ வழமை போன்று அமைதியாக இருக்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பத்து வருட ஆட்சியின் போது நடை பெற்றதாகக் கூறப்படும் ஊழல்களின் பட்டியலை தமிழக அரசு கையில் எடுதுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.தமிழகத்தின் முன்னாள்  போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின்  வீட்டிலும், அலுவலகங்களிலும், அவரது உறவினர், நண்பர்கள்  ஆகியோரின் வீடுகளிலும்  வருமான வரிச் சோதனை நடைபெற்றது. இதனால், அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய புள்ளிகள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதற்காக எடப்பாடிபழனிச்சாமியும், .பன்னீர்ச்செல்வமும் திடீரென டில்லிக்குச் சென்று பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தனர். தமிழக மக்களின் நலனுக்காகவே மோடியையும் அமித் ஷாவைவும் சந்தித்ததாக இருவரும் தெரிவித்தனர்.எதைப் பற்றிப் பேசினீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் இல்லை. பிரதமர் மோடியை இருவ்ரும் இன்ராகவும் தனித்தனியாகவும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழக மக்களின் நலனுக்கான சந்திப்பு என்றாரால் தனித்தனியான சந்திப்பு எதறகு என்ற  கேள்வி எழுவது நியாயம்தான். அதர்கும் அவர்களிடம் இருந்து தில் இல்லை.

தமிழக அரசின் பழி வாங்கல், சசிகலாவின் நெருக்குதல் என்பனபற்றியே இருவரும் டில்லியில் பேசி இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இஞ்ச ஒழிப்பு துறையினர் எடுக்கும் நடவடிக்கையில்  மத்திய அரசு அலவுக்கு மீறி அதிகாரம் செலுத்த முடியாது. சசிகலாவுடன் இணைந்து அரசியல் செய்யுமாறு  அமித் ஷா வேண்டுகோள் விடுத்தபோது எடப்பாடி அதனை தட்டிக் கழித்து விட்டார். ண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் போல் மத்திய அரசிடம் தஞ்சமடைந்துள்ளார்.

டில்லி விஜயத்தின் பினர் .பன்னீர்ச்செல்வத்தின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சசிகலாவுக்கு எதிராக வாயைத் திறக்காத .பன்னீர்ச்செல்வம், ஆவேசமாகப்  பேசியுள்ளார்.  'தனிப்பட்ட நபரோ, குடும்பமோ ஆதிக்கம் செலுத்த முடியாத ஜனநாயக முறையை, நான்கரை ஆண்டுகளாக  கழகத்தில் ஏற்படுத்தி இருக்கிறோம். 'எந்த நோக்கத்துக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்., துவங்கப்பட்டதோ, அது இப்போது நிரூபித்து காட்டப்பட்டு வருகிறது. அதனால், யாராலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்ற முடியாது' என, கூறியுள்ளார்.

சசிகலா உள்ளே வந்தால் அவரது மன்னார்குடி உறவுகளும் உள்ளே வந்து விடும் என எடப்பாடி அச்சப்படுகிறார். ஜெயலலிதாவுக்கு உதவியாக சசிகலா இருந்தார் எனபது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், சசிக்லாவின் குடும்ப உறவினர்கள் ஜெயலலிதாவின் போயஸ் காடன் இல்லத்தில் செய்த அட்டகாசங்கள் வெளியில் வராத இரகசியமாக  உள்ளன. இப்போது நாம் சுதந்திரமாக இருக்கிறோம். சசிகலாவை இணைத்தால்  எங்களுடைஒய சுதந்திரம் இல்லாமல் போய்விடும் என்பது எடப்பாடியின் வாதம்.

எடப்பாடியின் கருத்தில்  உண்மை இருக்கிறது.சசிகலா உள்ளே வந்தால் தினகரன் முன்னிலைப்படுத்தப்படுவார். எடப்பாடியும் பன்னீரும் ஓரம் கட்டப்படுவார்கள். ஜெயலலிதாவுக்கு  கீழ்ப்படிந்ததைப்  போன்று சசிகலாவின் உறவினர்களுக்குக் கட்டுபப்ட  வேண்டிய  நிலை ஏற்படும்.ஒட்டு மொத்தத்தில் மன்னார் குடி குடும்பத்திடம் கையேந்தும் நிலை  ஏற்படும். இதனை .பன்னீர்ச்செல்வம் தாமதமாகப் புரிந்துகொண்டார்.

அரசியலில் வெற்றி தோல்வி சகஜமானது. ஜெயலலிதா தோல்வியடைந்த சரித்திரமும் இருக்கிறது. கட்சியை ஒழுங்காக வழிநடத்தினால் தேர்தலில் வெற்றி பெறும் சந்தர்ப்பம் ஏற்படும். ஆட்சி செய்யும் கட்சியின் மீது வெறுப்பு ஏற்பட்டால் கல நிலைவரம் மாற்ற மடையும். கட்சி கட்டுக் கோப்பாக இருந்தால்  தேர்தலில் வெற்றி பெறுவது இலகுவானது.

எடப்பாடியும் பன்னீரும் ஒன்றாகிவிட்டார்கள். அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையில்தான் கழகத்தின் எதிர்காலம் தங்கி உள்ளது.

தமிழகம்,அரசியல்,சசிகலா,எடப்பாடி, பன்னீர்செல்வம் ,ஸ்டாலின்,தமிழன்

 

Friday, October 26, 2018

எடப்பாடியைக் காப்பாற்றிய நீதிமன்றம்



ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை ஆட்டம் காணத்தொடங்கியது. கட்சித் தலைமையைப் பிடிப்பதற்கும் தமிழக  முதல்வராவதற்கும் ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரியான சசிகலா முயற்சி செய்தார்.சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறைக்குச் சென்றதால் அது பலனளிக்கவில்லை. தர்ம,  அதர்ம யுத்தங்களினால் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானார். ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட டி.டி.தினகரன், கட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தனக்கு விசுவாசமான தமிழக சட்டசபை உறுப்பினர்களின் உதவியுடன் முதல்வர் கதிரையில் இருந்து எடப்பாடியை அகற்றுவதற்கு தினகரன் எடுத்த முயற்சியும் நீதிமன்றத் தீர்ப்பினால் தகர்ந்தது
.
முதல்வராகவும் துணை முதல்வராகவும் பதவி வகிக்கும் எடப்பாடியும் பன்னீரும் ஒன்றாக இருப்பது போல் நடித்தாலும் அவர்களுக்கு இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை  அடைந்துள்ளது. முதலமைச்சர் கதிரையில் இருந்து பன்னீரை இறக்கிவிட்டு தான் ஏறி அமர்வதற்கு நாள் பார்த்துக்கொண்டிருக்கிறார் பன்னீர்ச்செல்வம். சட்டப்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அகற்றுவதற்காக எடப்பாடிக்கும் அமைச்சர்களுக்கும் எதிரான ஊழல் புகார்களுடன் நீதிமன்றத்தின் துணையை நாடுகிறார் ஸ்டாலின். பன்னீருக்கும் ஸ்டாலினுக்கும் மத்தியில் எடப்பாடியை அகற்றியே தீருவேன் என அதிரடி காட்டுகிறார் தினகரன். எந்த நேரமும் புன் சிரிப்புடன் காட்சியளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி,   சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு  அரசியற் காய்களை அகற்றி தனது பதவியைக்  காப்பாற்றுகிறார்.

அரசியல் அரங்கில் இருந்து எடப்பாடியை அகற்றுவதற்காக தினகரனின் விசுவாசிகள் போர்க்கொடி உயர்த்தினர். அதன் உச்சக் கட்டமாக அன்றைய தமிழக பொறுப்பு ஆளுநரான வித்தியாசாகர் ராவைச்  சந்தித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இல்லை. அவருக்குப் பதிலாக வெறு ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  நாங்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் எனக்கூறிய  19 சட்டசபை உறுப்பிர்களின் செயலால் எடப்பாடி கடும் சீற்றமடைந்தார்.  விளக்கம் கோரி 19 உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அவரலில் கமபம் தொகுதி உறுப்பினர் ஜக்கையனின் விளக்கம் ஏற்றுக்கொண்ணப்பட்டது ஏனைய  18 உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழக சபாநாயகர் தனபாலின் உத்தரவால் 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 18  ஆம்  திகதி முதல்  18 தொகுதிகள் காலியாகின. அதை எதிர்த்து மறு நாள் தினகரன் தரப்பு  உயர் நீதிமன்றம் சென்றது. நீதிபதிகள் இந்திரா பார்னஜி, சிந்தர் ஆகிய இருவரும் 2018 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். அதிருப்தியடைந்த தினகரனின் ஆதரவாளர்கள் உச்ச நீதின்றத்தை நாடினர். 18 உறுப்பிஅர்களின் தகுதி நீக்கம் செல்லும்  என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் எடப்பாடியின் பதவி காப்பாற்றப்பட்டுவிட்டது.

எடப்பாடியை எதிர்த்ததனால் 18 உறுப்பினர்கள் பதவி இழந்தனர். கடந்த ஒரு வருடமாக 18 தொகுதிளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அந்தத் தொகுதிகளை எட்டியும் பார்க்கவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களும் தொகுதிப்பக்கம் செல்லவில்லை.  18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால் அந்தத் தொகுதி மக்களின் மனநிலை  தெரிந்துவிடும். கருணாநிதி, போஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்கள் மரணமானதால் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன. 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டிய நிலை உள்ளது.

இன்றைய எடப்பாடியின் அரசு ஒரே ஒரு மேலதிக உறுப்பினரின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. 20 தொகுதிகளிலும் தேர்தல்  நடந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அதேபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களும் வெற்றி பெறும் சாத்தியக்கூறு மிகவும் குறைவு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிகள் அனைத்துக்கும் ஜெயலலிதாவே பிரதான காரணி. ஜெயலலிதா இல்லாத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி சாத்தியமற்றது என்பதை ஆர்கே நகர் இடைத்தேர்தல்   நிரூபித்துள்ளது. ஆர்கே நகர் போன்றதொரு இன்னொரு வெற்றியை தினகரனால் செய்துகாட்ட முடியாது. எடப்பாடி, தினகரன் ஆகிய இருவருக்கும் 18 தொகுதிகள் மிகவும் முக்கியமானவை. அனைத்துத் தொகுதிகளும் இருவருக்கும் கெளரவப் பிரச்சினையானவை. ஜெயலலிதா என்ற நட்சத்திரம் இல்லாமல் இருவராலும்  வெற்றியைப் பெறமுடியாது.

உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது,  இடைத் தேர்தலைச் சந்திப்பது, வழக்கை எதிர்கொண்டு இடைத்தேதலைச் சந்திப்பது ஆகிய மூன்ரு தெரிவுகள் தினகரனின் முன்னால் உள்ளன. தினகரனின் முடிவைப் பொறுத்துத்தான் தமிழக அரசியலின் அடுத்த காய் நகர்த்தப்பட வேண்டிய நிலை உள்ளது. அதிரடி காட்டாமல் அமைதியாக அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கும் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் மிக முக்கியமானதாகும்.  20 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு எடப்பாடிக்குப் பாதகமாகத்தான் அமையும் ஆகையால் இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் காத்திருக்கிறார்.