Showing posts with label ஸ்கொட்லாந்து. Show all posts
Showing posts with label ஸ்கொட்லாந்து. Show all posts

Monday, October 17, 2022

மேற்கு இந்தியாவை வீழ்த்திய ஸ்கொட்லாந்து

டி20 உலகக் கிண்ண தகுதிகாண்  போட்டியில்  ஸ்கொட்லாந்தை எதிர்த்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள்   42 ஓட்டங்களால் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. நேற்றைய  முதலாவது போட்டியில் ஆசிய சம்பிய்னான  இலங்கை நமிபியாவிடம் தோல்வியடைந்த அதிர்சி நீங்க முதல் இன்னொரு அதிர்ச்சி உண்டானது

 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள நான்கு  அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.  முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முன்சே 66 ஓட்டங்ளும், கிறிஸ்  ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்கள் எடுத்தனர்..

    161 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நம்பிக்கையுடன் மேற்கு இந்தியத் தீவுகள் களம்  இறங்கியது.  தொடக்க ஆட்டக்காரகளாக கைல் மேயர்ஸ், இவின் லீஸ் ஆகியோர் களம் இறங்கினர்.   மேயர்ஸ் 20 ஓட்டங்களுடனும், , இவின் லீவிஸ் 14 ஓட்டங்களுடனும், அடுத்து வந்த பிரண்டன் கிங் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து கேப்டன் பூரன், ஷார்மா புருக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்காட்லாந்து அணியினர் மிகச்சிறப்பாக பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு சிக்கல் கொடுத்தனர்.

 பூரன் 4  , புரூக்ஸ் 4  , பவல் 5  , அகைல் ஹோசன் 1 ஓட்டங்களுடனும், அல்ஜாரி ஜோசப்  ஓட்டம் எடுகாமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதனால் 79 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 9வது விக்கெட்டுக்கு ஹோல்டருடன் ஒடெய்ன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இறுதியில்   18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118  ஓட்டங்கள் எடுத்தது. ஸ்கொட்லாந்து  அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது ஸ்கொலாந்து அணி தரப்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், பிரெட் வீல், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜோஷ் டாவே, சப்யான் ஷரிப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். மே

ற்கு இந்தியா சார்பில்  அதிகபட்சமாக் ஹோல்டர் 38 எடுத்தார்.கள் எடுத்தார். இரண்டு முறை டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணியிடம் வீழந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இலங்கை அணி நமிபியாவிடம் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

Saturday, June 4, 2022

உலகக்கிண்ண கனவை தக்க வைத்தது உக்ரைன்




கிளாஸ்கோ ஹேம்ப்டன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற உணர்ச்சிப்பூர்வமான தகுதிச் சுற்று ப்ளே-ஆஃப் அரையிறுதி ஆட்டத்தில் உக்ரைன் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை   வீழ்த்தி உலகக் கிண்ன கனவை உயிரோடு வைத்திருக்கிறது.

உக்ரைனில் நடக்கும்  போரின் பின்னணியில் விளையாடப்பட்ட இந்த விளையாட்டு, ஸ்காட்டிஷ் ரசிகர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. உக்ரைன் மீது   படை எடுத்ததால் உலகக்கிண்ண போட்டியில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டது.

 டிசம்பரில் குளிர்கால இடைவேளைக்காக உள்நாட்டு லீக் நிறுத்தப்பட்ட பின்னர் இந்த ஆண்டு ஒரு போட்டியிலும்  உக்ரைன் விளையாடவில்லை.   ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு  உக்ரைன் மக்கள் அகதியாக அலைவதால் விளையாட்டை நினைத்தும்  பார்க்கவில்லை.

ஸ்காட்லாந்தின் 39 வயதான கோல்கீப்பர் கிரெய்க் கார்டன் தனது சொந்த அணியை ஆட்டத்தில் தக்கவைக்க பல   கோல்களை தடுத்தார்.   வெஸ்ட் ஹாம் முன்கள வீரர் அன்றி யர்லொலென்கொ முதல் பாதியில் கோல் அடித்து அணிக்கு முன்னிலை அளித்தார், மேலும் அவர்கள் இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் டையில் தங்கள் பிடியை வலுப்படுத்தினர், பென்ஃபிகாவின் ரோமன் யாரெம்சுக் அதை 2-0 என செய்தார்.

ஸ்காட்லாந்து விளையாடுவதற்கு சுமார் 10 நிமிடங்களில் கோல் அடித்தது, ஆனால் கூடுதல் நேரத்தில் ஆர்டெம் டோவ்பிக்கின் கோலை உக்ரைன் முடித்து 3 என வெற்றி பெற்றது.

உலகக் கிண்ணப் போட்டியில்  இடம்பிடிப்பதற்காக  ஜூன் 5 ஆம் திகதி கார்டிஃப் சிட்டி ஸ்டேடியத்தில் வேல்ஸை எதிர்கொள்கிறது  உக்ரைன். வெற்றியாளர்கள் இங்கிலாந்து, ஈரான் மற்றும் அமெரிக்காவுடன் குரூப் B இல் இணைகின்றனர்

உக்ரைனின் உலகக் கோப்பை சவால் அதன் குடிமக்களை சுருக்கமாக வசீகரித்தது - ஆனால் போர் முக்கியமானது.

உக்ரேனியர்களுக்கு, தொண்ணூறு நிமிட கால்பந்தானது அவர்கள் அறிந்த வாழ்க்கையைப் பற்றிய ஒரு சுருக்கமான சாளரத்தையும், அவர்களின் போராட்டத்தை தலைப்புச் செய்திகளில் வைத்திருக்க ஒரு வாய்ப்பையும் வழங்கியது.

முந்தைய நாள், மஞ்சள் மற்றும் நீல பயண ஆதரவு ஸ்காட்லாந்தின் தேசிய மைதானத்திற்குச் சென்றதால், போரைப் பற்றிய எண்ணங்கள் வெகு தொலைவில் இல்லை.

இது வழக்கமான கால்பந்து ஆதரவாளர்கள் பஸ் அல்ல, ஆனால், இது ஒரு பொதுவான கால்பந்து கூட்டம் அல்ல.

நடால்யா, தான் ஒரு கால்பந்து ரசிகன் இல்லை என்றும், இது தான் கலந்து கொண்ட இரண்டாவது போட்டி என்றும், ஆனால் "இது எனக்கு என் நாட்டின் ஒரு பகுதி" என்றும் கூறினார். உக்ரேனியர்கள் ஒன்று கூடி ஒரு நாட்டின் கவனத்தையும் பெருமையையும் பகிர்ந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாகும். 

ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், அவுஸ்திரேலியா,அமெரிக்கா ஆகிய அந் நாடுகளில் இருந்தும்  உக்ரேனிய ரசிகர்கள்  போட்டியைப் பார்க்கச் சென்றார்கள்.

Wednesday, October 20, 2021

12 வயது சிறுமி வடிவமைத்த சீருடை


 ஸ்கொட்லாந்து கிறிக்கெற் அணியின்  சீருடையை ஹேடிங்டனைச் சேர்ந்த ரெபேக்கா டவுனி என்ற 12 வயது சிறுமியால் வடிவமைக்கப்பட்டதென  ஸ்கொட்லாந்து கிறிக்கெற் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயிற்சி போட்டிகளில் விளையாடிய ஸ்கொட்லாந்து அணியின் சீருடை  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  அந்த சீருடையில் ஊதா ,கறுப்பு நிற பட்டைகளைக் கொண்ட வடிவமைப்புடன், ஸ்காட்லாந்து நாட்டின் பெயர் முன்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.


  சீருடை வடிவமைப்பு பற்றிய‌ ருசிகர தகவலை ஸ்கொட்லாந்து கிறிக்கெற் நிர்வாகம்   டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

  சீருடை வடிமைப்பு தொடர்பாக ஸ்கொட்லாந்து கிறிக்கெற் நிர்வாகம் போட்டி ஒன்றை நடத்தியது. சுமார் 200 பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில், ரெபேக்கா டவுனி வடிவமைத்த சீருடை, அணி நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டது. ஸ்கொட்லாந்தின் தேசிய சின்னத்தில் உள்ள ‘திஸ்சில் எனப்படும் செடியின் நிறங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சீருடையை அவர் வடிவமைத்துள்ளார். அவரது வடிவமைப்பில் தயாரான முதல் சீருடை, அவருக்கே பரிசாகவும் வழங்கப்பட்டிருக்கிறது.