Wednesday, July 27, 2011

அரசின் அதிரடியால் கலங்குகிறது தி.மு.க.

கருணாநிதியிடமிருந்து தமிழக அரசைக் கைப்பற்றிய ஜெயலலிதா அதிரடியாகப் பலமாற்றங்களை ஏற்படுத்தினார். அவருடைய விருப்பப்படியே பல காரியங்கள் நடைபெற்றன. தமிழக மக்களுக்கும் பிடித்தமான சிலவற்றை அதிரடியாக நிறுத்தினார். தமிழக மக்கள் பயனடைந்த சிலவற்றை முடக்கினார். அவருடைய கட்சியினரும் கூட்டணிக் கட்சிகளும் எதுவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. கருணாநிதி ஆரம்பித்த திட்டங்களை இல்லாமல் செய்வது தான் முதல் வேலை என்ற ரீதியில் தமிழக அரசு நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது.
கருணாநிதி அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஜெயலலிதா கை வைத்ததும் தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் கொதித்துப் போயுள்ளனர். ஆனால் வழமைபோல் ஆளும் கட்சியின் கூட்டணித் தலைவர்கள் சிலர் தமிழக அரசு செய்வது சரிதான் என்று ஒத்துப்பாடுகின்றனர். கருணாநிதியின் கவிதைகளும் அவரைப் பற்றிய குறி ப்புகளும் மாணவர்களின் கல்விப் புத்தகத்தில் இருக்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். அவற்றை நீக்கி விட்டு புத்தகத்தை வெளியிடலாம் என்ற கருத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழக அரசின் பிடிவாதத்தினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை உணர்ந்த ஆசிரியர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தை நாடினார்கள். உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. சமச்சீர் கல்வியை ஆரம்பிப்பதற்கான திகதியையும் குறிப்பிட்டது. நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்
ளாது தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் பகையால் தமிழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கருணாநிதி செய்தவற்றில் பிரயோசனமான ஒரே ஒரு காரியம் சமச்சீர் கல்விதான் என்று அவருடைய அரசியல் எதிரியான வைகோ நற்சான்றிதழ் கொடுத்துள்ளார்.
சமச்சீர் கல்வித் திட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதை உயர் நீதிமன்றம் ஏற்றுள்ளது. அவற்றை நீக்குவதற்கும் புதியவற்றை இணைப்பதற்கும் தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது அரை ஆண்டுக்கு இதே பாடப் புத்தகம் தொடரலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனை ஏற்றுக் கொள்வதற்கு தமிழக அரசு தயாராக இல்லை. சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக முடக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பமாகும். தமிழக அரசின் இந்த முடிவால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களின் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணரத் தவறிவிட்டது.
ஆட்சி பீடம் ஏறினால் போதும் சமச்சீர்
கல்வி பற்றியும் மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்பது போல் தமிழக அரசின் கூட்டணிக் கட்சிகள் செயற்படுகின்றன. சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா இடை நிறுத்தியதை உயர் நீதிமன்றம் எதிர்த்துள்ளது. ஆனால் கூட்டணித் தலைவர்கள் சிலர் மௌனமாக உள்ளனர். தமிழக அரசுக்கு எதிராகச் செயற்படமாட்டேன். தமிழக அரசை விமர்சிக்கமாட்டேன் என்று சரத் குமார் சத்தியப் பிரமாணம் செய்துள்ளõர். அரசாங்கம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது தான் கூட்டணி தர்மமே தவிர அரசாங்கம் செய்யும் தவறுகள் அனைத்துக்கும் துணை போவது கூட்டணித் தர்மம் அல்ல.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மதுரையை ஆக்கிரமித்தவர்கள் இப்போது தலைமறைவாகத் தொடங்கி விட்டனர். அழகிரியின் கண் அசைவில் கட்டுப்பட்டிருந்த மதுரைக்கு சோதனை வந்துள்ளது. அழகிரியின் ஆதரவாளர்கள் தலைமறைவாகத் தொடங்கி விட்டனர். அழகிரியின் வலது கரமான அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், எஸ்ஸா கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அழகிரியின் அனுமதி இல்லாமல் மதுரையில் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. அழகிரியை எதிர்த்தால் திராவிட முன்னேற்றக் கழகமே மதுரையில் தலை எடுக்க முடியாத நிலை இருந்தது. மதுரையை ஆக்கிரமித்த தலைவர் எல்லாம் இன்று தலைமறைவாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு குறைந்த விலையில் சொத்துக்கள் கைமாறியது போன்ற குற்றச்சாட்டுக்களினால் அழகிரியின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் முதலாவது அரசியல்
எதிரி அழகிரிதான். 2011 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே இருக்காது என்று சூளுரைத்த அழகிரிக்கு பிரச்சினை ஆரம்பித்துள்ளது. அழகிரியின் மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்கள் கைமாறியது பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அவை பூரணமானதும் மனைவியின் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
டில்லியில் சி.பி.ஐ. குற்றப் பத்திரங்களைத் தாக்கல் செய்து திராவிட முன்னேற்றக் கழகப் பிரபலங்களை கைது செய்கிறது. சென்னையில் சன் தொலைக்காட்சியின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலாநிதி மாறனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மதுரையில் அழகிரி குடும்பத்துக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் எங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு எதிராகச் செயற்படுவதா வழக்குகளை எதிர்த்து வாதாடுவதா என்று தெரியாது குழம்பி நிற்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். உரிமைகளுக்காகப் போராடிச் சிறை சென்ற திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் ஊழல் வழக்குகளிலும் நில ஆக்கிரமிப்பினாலும் சிறை செல்வது விந்தையாக உள்ளது.





வர்மா



சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு24/07/11

Wednesday, July 20, 2011

காத்திருக்கிறது காங்கிரஸ்ஒதுங்குகிறது தி.மு.க.

இந்திய மத்திய அமைச்சரவை மாற்றப்படப் போகிறது என்ற செய்தி வெளியானதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
திராவிட முன்னேற்றக்கழகம் அமைச்சரவை யில் இருந்து வெளியேற்றப்பட்டு விடும் என்ற கருத்து மேலோங்கியது. சிறிய மாற்றங்களு டன் அமைச்சரவை பொறுப்பேற்றதனால் எதிர் பார்ப்பு ஏமாற்றமாகியது.
முக்கியமான அமைச்சைப் பெறுவதில் சகல கட்சிகளும் முட்டி மோதுவது. எமது கட்சியில் இத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்று கணக்குக் காட்டுவதற்காக முக்கியம் இல்லாத அமைச்சர் பொறுப்பை தலையில் வைத்துக் கொண்டாடுவதும் வழமையே.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் தனக்குத் தேவையான அமைச்சுகளைப் போராடிப் பெற்றது. 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்த்த அமைச்சுகள் கிடைக்கவில்லை. கிடைத்ததைப் பெற்றுக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.
தயாநிதிமாறன், அழகிரி, ஆர். ராசா ஆகிய மூவரும் கபினெட் அமைச்சுகளாகப் பொறுப்பேற்றனர். தயாநிதிமாறனும் அழகிரியும் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ராசா கருணாநிதி குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர், பழனிமாணிக்கம், காந்தி செல்வன் ஜெகரட்சன் நெப்போலியன் ஆகிய நால்வரும் இணை அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
ஸ்பெக்ரம் விஸ்வரூபம் எடுத்ததனால் கடந்த ஆண்டு அமைச்சுப் பதவியிலிருந்து ராசா ராஜினாமாச் செய்தார். சி.பி. ஐ.யால் கைது செய்யப்பட்ட ராசா திஹார் சிறையில் உள்ளார். சிபி.ஐ. யின் குற்றப் பட்டியலில் தயாநிதி மாறனின் பெயரும் இருப்பதõல் அமைச்சுப் பதவியில் இருந்து அவர் இராஜினாமாச் செய்துவிட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டு அமைச்சுப் பதவிகள் காலியாக உள் ளன. அமைச்சரவை மாற்றத்தின் போது காலியாக உள்ள இரண்டு கபினெட் அமைச்சராக இருவரின் பெயரை திராவிட முன்னேற்றக் கழகம் சிபாரிசு செய்யுமா? திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைச்சரவையில் காங்கிரஸ் சேர்த்துக் கொள்ளுமா? என்ற சந்தேகம் நிலவியது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அமைச்சுப் பதவியைக் கொடுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால் அமைச்சுப் பதவியைப் பெறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. காலியாக உள்ள இரண்டு அமைச்சுகளைப் பொறுப்பேற்பதற்குப் பலரின் பெயர்கள் அடிபட்டன. அழகிரியின் ஆதரவõளர் ஸ்டாலினுக்கு வேண்டப்பட்டவர், தயாளு அம்மையார் சிபாரிசு செய்து விட்டார் என செய்திகள் கசிந்தன. 2001 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்த போதே ரி. ஆர். பாலுவுக்கு அமைச்சுப் பதவி தரமுடியாது என்ற காங்கிரஸ் கட்சி திட்ட வட்டமாக மறுத்துவிட்டது. ஆகையால் ரி.ஆர். பாலுவின் பெயர் கவனத்தில் எடுக்கப்படவில்லை.
மூன்றாவது முறை எம்.பி.யாக உள்ள திருச்சி சிவா இரண்டாவது முறை எம்.பி.யாக இருக்கும் ஆதிசங்கரர் விஜயன் வேணு கோபால், இளங்கோவன் ஆகியேõர் அமைச்சராவதற்குத் தகுதியானவர்கள். தயாநிதி மாறனும் அழகிரியும் முதன் முதல் எம்.பி. யானதும் கெபினெட் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அமைச்சரவை மாற்றத்தின் போது காலியாக உள்ள இரண்டு அமைச்சுகளையும் பெறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகளையும் மத்திய அரசு யாரிடமும் கொடுக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முடிவுக்காக காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது.
மத்திய அமைச்சரவைக்கு இரண்டு பேரின் பெயரைப் பிரேரிப்பதா இல்லையா என்பதை பொதுக் குழு கூடி முடிவெடுக்கும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். கனிமொழி கைது செய்யப்பட்டபோதே அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்தார். தமிழகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த இந்த வேளையில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினால் பாதுகாப்பு இல்லை என்ற கருத்து முன் வைக்கப்பட்டதால் அந்த முடிவு கைவிடப்பட்டது. ராசா, கனிமொழி, அடுத்த இலக்கு அழகிரி என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதேவேளை, சி.பி.ஐ. யின் விசாரணை வட்டம் சன் ரீ.வி., கலைஞர் ரீ.வி. என விரிவடைந்து செல்கிறது.
கருணாநிதி குடும்பத்துக்கு எதிராக ஜெயலலிதா செய்ய வேண்டிய சிலவேலைகளை சி.பி.ஐ. கன கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது. சி.பி.ஐ. யின் கழுகுப் பார்வையில் அடுத்து சிக்கப் போவது யார் என்பது பற்றி பல வாதப்பிரதி வாதங்களை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான ஊடகங்கள் நடத்தி வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சி.பி.ஐ. நெருக்கடி கொடுத்து வரும் அதேவேளை, தமிழக அரசும் தன் பங்குக்கு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சன் தொலைக்காட்சிக்காக திரைப்படங்களை வாங்குவதற்குப் பொறுப்பாக இருந்த சக்ஷேனா கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவரின் மீது மேலும் பழ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பிணையில் வெளிவர முடியாத நிலையில் உள்ளார்.
சன் தொலைக்காட்சிக்கு எதிராக சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கப் போவதாகச் செய்திகள் கசிந்து வரும் வேளையில் சன் தொலைக்காட்சிக்கு எதிரான நடவடிக்கையை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. சன் தொலைக்காட்சியின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மீது தமிழக அரசின் பார்வை விழுந்துள்ளது. சன் தொலைக்காட்சியின் பிரதம அதிகாரிகளான சக்ஷேனா, அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கலாநிதி மாறனும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் தனியõருக்கும் விவசாயிகளுக்கும் சொந்தமான நிலங்கள் ஒரு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டன. அன்றைய அரசாங்கத்துக்குச் சார்பானவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது குறைந்த விலையில் மிரட்டிப் பெறப்பட்டவற்றைப் பற்றி விசாரிப்பதற்கு தனியான பொலிஸ் பிரிவை அமைத்துள்ளார் ஜெலலிதா. இம்மாதம் முதலாம் திகதிவரை நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக 1449 புகார்கள் கிடைத்துள்ளன. இதனை பொலிஸ் நிலையங்களில் விசாரிக்க முடியாது அதன் காரணமாகத் தனியான பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் கூறியுள்ளõர். இக் குற்றச்சாட்டு தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தலைமறைவாகிவிட்டனர். 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் அபகரிக்கப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார்.
2006 ஆண்டுக்கு முன் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நில ஆக்கிரமிப்புத் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார். ஜெயலலிதாவால் அபகரிக்கப்பட்ட சிறுதாவூர் நிலம் பற்றியும் விசõரிக்க வேண்டும் என்று கருணாநிதி சுட்டிக் காட்டியுள்ளார். யார் ஆட்சி பீடம் ஏறினாலும் நில ஆக்கிரமிப்பு மறைமுகமாக நடைபெறும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
வர்மா


சூரன்.ஏ.ரவிவர்மா



வீரகேசரிவாவாரவெளியீடு17/07/11

Tuesday, July 19, 2011

வரலாறு படைத்தது ஜப்பான்

ஜேர்மனியில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் பலம் வாய்ந்த அமெரிக்க மகளிர் அணியை வீழ்த்தி ஜப்பான் சம்பியனானது. ஐரோப்பா, அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் உதைப்பந்தாட்டத்தில் சம்பியனாகும் என்ற விதியை முதன் முதலாக முறியடித்த ஜப்பான் உதைப்பந்தாட்டத்தில் ஆசியாவும் சளைத்ததல்ல என்று நிரூபித்துள்ளது.
குழு சீயில் இடம்பிடித்த ஜப்பான் 2 -1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும் 4- 0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிக்கோவையும் வீழ்த்தியது. 2 -0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.
கால் இறுதியில் ஜேர்மனியை 1- 0 என்ற கோல் கணக்கில் வென்றது. அரையிறுதியில் 3 -1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வென்றது.
குழு சீ யில் இடம்பிடித்த அமெரிக்கா, 2 -0 என்ற கோல் கணக்கில் வட கொரியாவையும் 3- 0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவையும் தோற்கடித்தது. சுவீடனுடனான போட்டியில் 2 -1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
பிரேசிலுடன் கால் இறுதியில் மோதிய அமெரிக்கா 5- 3 என்ற கோல் கணக்கில் பெனால்டி முறையில் வெற்றி பெற்றது.
அரையிறுதியில் 3 -1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை தோற்கடித்தது.
மகளிர் உலகக் கிண்ண வரலாற்றில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகமானது. 1991, 1999 ஆண்டுகளில் அமெரிக்கா சம்பியனானது. 1995, 2003, 2007 ஆம் ஆண்டுகளில் மூன்றாமிடத்தைப் பெற்றது.
போட்டி ஆரம்பமானது முதல் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை வெளிக்õகட்டியது. 17 நிமிடங்கள்வரை ஜப்பானின் கோல் பகுதியை அமெரிக்கா ஆக்கிரமித்தது.
ஆட்டத்தின் முதல் பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 69 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான மோர்கன் கோல் அடித்தார். 81 ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனையான மியாமா கோல் அடித்து சமப்படுத்தினார்.
சமநிலையில் போட்டி முடிவடைந்ததனால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. 104ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனை வம்பச் கோல் அடித்தார். 117 ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனை சவா கோல் அடித்து சமப்படுத்தினார். இரண்டாவது பாதி ஆட்டமும் சமநிலையில் முடிவடைந்ததனால் பெனால்டி மூலம் சம்பியன் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அமெரிக்க வீராங்கனைகள் அடித்த முதல் இரண்டு பெனால்டிகளும் கோல் கம்பத்துக்கு வெளியே போயின. மூன்றாவது பெனால்டியை கோல் கீப்பர் தடுத்து விட்டார். நான்காவது பெனால்டி கோலாகியது. அமெரிக்கா அடித்த முதலாவது பெனாட்டி கோலாக்கியது. இரண்டாவது கோல் கீப்பர் தடுத்து விட்டார். மூன்றாவது, நான்காவது பெனால்டி கோலானகின.
2- 0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் முன்னிலைவகித்து. ஜப்பான் மூன்றாவது கோலை அடித்தது. அமெரிக்கா அடித்த ஒரு பெனால்டி கோலானது 3- 1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் சம்பியனானது.

ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

Sunday, July 17, 2011

மூன்றாவது இடத்தில் சுவீடன்

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் 2,1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
அரையிறுதியில் தோல்வியடைந்த பிரான்ஸ் சுவீடன் ஆகியன மூன்றாம் இடத்தைப் பிடிப்பதற்காக மோதின.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதல் இறுதிவரை பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் சுவீடனின் சாதுரியமான விளையாட்டினால் பிரான்ஸ் தோல்வியடைந்தது.
29 ஆவது நிமிடத்தில் சுவீடனின் வீராங்கனையானசெலினி ஒரு கோல் அடித்தார். 56 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனை தோமிஸ் கோல் அடித்து சமப்படுத்தினார். 68 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனை கியூவிஸ் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
82 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனையான ஹம்மரிஸ் ரொம் கோல் அடித்தார்.
பிரான்ஸ் 19 முறையும் சுவீடன் 10 முறையும் எதிரணியின் கோல் கம்பத்தை நோக்கி அடித்தன. பிரான்ஸ் கோல் அடிப்பதற்கு எட்டு முறை சந்தர்ப்பம் கிட்டியது. சுவீடன் வீராங்கனைகள் அதனைத் தடுத்துவிட்டனர்.
சுவீடன் நான்கு தடவை கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகளை பிரான்ஸ் தடுத்தது. சிறந்த வீராங்கனையாக சுவீடனைச் சேர்ந்த சாரா லார் சச‌ன் செய்யப்பட்டார்.
2003 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஜேர்மனியிடம் தோல்வியடைந்தது சுவீடன். 1991 ஆம் ஆண்டு ஜேர்மனியைத் தோற்கடித்து மூன்றாவது இடத்தைப் பெற்றது.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

Thursday, July 14, 2011

சரித்திரம் படைத்தது ஜப்பான்

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ஜப்பான் தகுதி பெற்றது. சுவீடனுக்கு எதிரான போட்டியில் 3 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜப்பான் முதன் முதலாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. உதைபந்தாட்ட அரங்கில் ஜப்பானை விட பலம் வாய்ந்த சுவீடன் நம்பிக்கையுடன் களமிறங்கியது. உதைபந்தாட்ட ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜப்பான், சுவீடனை இலகுவாக வீழ்த்தியது. 45435 ரசிகர்கள் முன்னிலையில் பரபரப்பாக இப்போட்டி நடைபெற்றது. 10 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனை குவிஸ்ட் கோல் அடித்து தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார். 19 ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனையான குவாசமி கோல் அடித்து சமப்படுத்தினார். ஜப்பானின் ஆதிக்கத்துக்கு பதிலளிக்க முடியாத சுவீடன் வீராங்கனைகள் தடுமாறினார்கள்.
60 ஆவது நிமிடத்தில் சாவாவும் 64 ஆவது நிமிடத்தில் சுவாசுமியும் கோல் அடித்ததால் 3 1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் முன்னிலை வகித்தது. ஜப்பான் கோல் கம்பத்தை நோக்கி சுவீடன் நான்கு முறை மட்டும்தான் பந்தை அடித்தது. ஜப்பான் 14 தடவை சுவீடனின் கோல் பகுதியை ஆக்கிரமித்தது. ஜப்பான் வீராங்கனைகளின் தடுப்பு அரணாக உடைத்துக் கொண்டு உட்செல்ல முடியாத சவீடன் பரிதாபகரமாகத் தோல்வியடைந்தது. அயா பியாமா சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
பிரான்ஸுக்கு எதிரான அரையிறுதியில் 3 1 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா இறுதிப் போட்டியில் விளையாடத் தகதி பெற்றது. கடைசி 10 நிமிடங்களில் அடிக்கப்பட்ட இரண்டு கோல்களினால் அமெரிக்கா வெற்றி பெற்றது. 1996 ஆம் ஆண்டின் பின்னர் இறுதிப் போட்டியில் விளையாட அமெரிக்கா தகுதி பெற்றது.
ஒன்பதாவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான சென்னி கோல் அடித்து நம்பிக்கையூட்டினார். 55 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனையான பொம்பஸ்ரர் கோல் அடித்து சமப்படுத்தினார். அமெரிக்காவின் விளையாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாத பிரான்ஸ் தடுமாறியது. 79 ஆவது நிமிடத்தில் வம்பச்சும் 82 ஆவது நிமிடத்தில் மோர்கனும் கோல் அடித்து அமெரிக்காவின் வெற்றியை ஊர்ஜிதப்படுத்தினர். அமெரிக்க வீராங்கனையான அபிவம்பச் சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார். 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜப்பான், அமெரிக்கா ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. நாளை சனிக்கிழமை சுவீடனுக்கும் பிரான்ஸுக்கும் மூன்றாவது இடத்தைப் பெற விளையாடுகின்றன.

ரமணி


சூரன்.ஏ.ரவிவர்மா



மெட்ரோநியூஸ்

Wednesday, July 13, 2011

நெருங்குகிறது சி.பி.ஐ.கலங்குகிறது தி.மு.க.

2ஜி ஸ்பெக்ரம் என்ற ட்ரகனின் பார்வை தயாநிதி மாறன் மீது விழுந்துள்ளது சி.பி.ஐ. விசாரணைவட்டத்தில் தயாநிதிமாறனின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ரம் என்ற சுரங்கத்தைத் தோண்டத் தோண்ட புதிய புதிய பெயர்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆர்.ராசா, கனிமொழி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட பின்னர் திராவிடமுன்னேற்றக் கழகத்தின் இன்னொரு முக்கிய பிரமுகரும் கைது செய்யப்படுவார் என்ற தகவல்கள் கசியத்தொடங்கின. சகலரின் பார்வையும் தயாநிதி மாறனை நோக்கியே இருந்தது. இப்போது அது ஓரளவு ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது குற்றப் பத்திரிகை சமர்ப்பிக்கப்படும் போது தயாநிதிமாறனின் பெயரும் சேர்க்கப்படலாம் என்ற எதிர் பார்ப்பு உள்ளது.
ஸ்பெக்ரம் விவகார நெருக்குதல் காரணமாக ஜவுளித்துறை அமைச்சரான தயாநிதிமாறன் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். 2ஜி ஸ்பெக்ரம் ஒதுக்கியதில் முறைகேடு குறித்தும், அதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாகவும் புலனாய்வு செய்துவரும் சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தயாநிதிமாறனின் பெயரும் உள்ளடக்கப் பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு எயார் செல்நிறுவனம் முயற்சிசெய்தது. அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் உரிமத்தைக் கொடுக்காது இழுத்தடித்தார். தயாநிதிமாறனின் அழுத்தம் காரணமாக எயார்செல் நிறுவனத்தை மலேஷியாவில் உள்ள மாக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கவேண்டியநிலை ஏற்பட்டது. எயார்செல் நிறுவனம் கைமாறியதும் மாக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதிவழங்கப்பட்டது குறித்தும் புலனாய்வு செய்து வருவதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ.யின் அடுத்த இலக்கு தயாநிதி மாறன் தான் என்பது தெரிந்ததும் தயாநிதி மாறன் கைது செய்யப்படுவார் என்று ஊடகங்கள் விலாவாரியாக எழுத ஆரம் பித்துவிட்டன. தயாநிதிமாறன் கைது செய்யப்படவேண்டும் என்பதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். தயாநிதிமாறனும், சிதம்பரமும் அமைச்சர வையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று ஜெயலலிதா அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.
ஸ்பெக்ரம் விவகாரம் சூடுபிடித்துள்ளதால் அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறனை வெளியேற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. காங்கிரஸ் கட்சியால் வெளியேற்றப்பட முன்பு வெளியேறுவது நல்லதென்று திராவிட முன்னேற்றக் கழகம் முடிவெடுத்துள்ளது. கருணாநிதியின் ஒப்புதல் இன்றி தயாநிதிமாறன் இராஜினாமாக் கடிதம் கொடுத்திருக்க மாட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நகர்வை இந்திய அரசியல் எதிர் பார்த்துள்ளது. ஸ்பெக்ரம் ஊழல் காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்த ஆர்.ராசா, தயாநிதிமாறன் ஆகியோருக்குப் பதிலாக இரண்டுபேரை அமைச்சரவையில் இடம் பிடிக்க திராவிடமுன்னேற்றக் கழகம் சிபார்சு செய்யுமா? அல்லது அமைச்சுப்பதவி பெறாது வெளியே இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்குமா? என்ற கேள்விகளுக்கு விடைகாண அரசியல் அரங்கம் ஆவலாக உள்ளது.
காங்கிரஸில் இருந்து வெளியேறுவதற்கு திராவிடமுன் னேற்றக் கழகம் தயாராக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட காங்கிரஸ் ஆயத்தமாக உள்ளது. விருப்பம் இல்லாமலும், வேறுவழி இல்லாமலும் இரண்டு கட்சிகளும் கூட்டணியைத் தொடரு கின்றன. காங்கிரஸும், திராவிட முன்னேற்றக் கழகமும் பிரிந்தால் அவற்றுடன் சேர்வதற்கு வேறு கட்சிகள் எவைகளும் இப்போதைக்குத் தயாராக இல்லை.
திராவிடமுன்னேற்றக் கழகத்தை முடக்கும் திட்டத்தைச் சத்தமில்லாமல் தமிழக அரசு செய்து வருகின்றது. மாவட்டச் செயலாளர்களின் பதவி யைப்பறிக்கும் திட்டத்தின் மூலம் திராவிடமுன்னேற்றக்கழம் முன் னெடுக்க உள்ளது. இத்திட்டம் திராவிட முன்னேற்றக் கழகச் செயற்பாட்டை ஸ்தம்பிக்கக் செய்யலாம் என்று கருதப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்படுதோல்வி அடைந்ததற்கு மாவட்டச் செயலாளர்கள் சரியான முறையில் செயற்படவில்லை என்று குற்றஞ் சாட்டுகிறார் ஸ்டாலின் .
அரசியல் கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவி மிகவும் பலம் வாய்ந்தது. மாவட்டத்தில் உள்ள குறைபாடுகளைப் பட்டியலிட்டு அவற்றைச் சரிப்படுத்தவேண்டிய பெறுப்பு மாவட்டச் செயலாளருக்குரியது. மாவட்டத்தை அபிவிருத்தி செய்வது, மாவட்டசெயலாளரின் பிரதான பணியாகும். திராவிட முன்னேற்றக்கழகத்தின் தோல்விக்குப் பல காரணங்கள் உள்ளன. திராவிடமுன்னேற்றக் கழகத்தின் திட்டங்களை மக்கள் மனதில் சரியான முறையில் பதிவதற்கு மாவட்டச் செயலாளர்கள் தவறிவிட்டனர் என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
மாவட்டச் செயலாளர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பினால் மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு , ஐ. பெரிய சாமி, சுரேஷ் ராஜன், பழனி மாணிக்கம் போன்ற சக்தி மிக்க மாவட்டச் செயலாளர்கள் தமது அதிகாரங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்சியின் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள் மாவட்டச் செயலாளர்கள். மாவட்டச் செயலாளர்களின் வழிகாட்டலில் தொண்டர்கள் செயற்படுவார்கள். மாநகர சபைகளின் ஆயுட்காலம் நெருங்குகையில் மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டால் திராவிடமுன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவது சிக்கலாகிவிடும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி ஒதுங்கியுள்ளது. திராவிடமுன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்குரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது காங்கிரஸ்கட்சி.
சட்டமன்றத் தேர்தலில் திராவிடமுன்னேற்றக் கழகத்தைத் தோற்கடித்தது போன்றே அடுத்துவரும் தேர்தல்களிளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
சோதனைகளையும், தோல்விகளையும் சந்தித்துத் துவண்டுவிடாது வெற்றிக் கம்பத்தை எட்டிப்பிடித்த திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஸ்பெக்ரம் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெக்ரம் விவகாரத்தினால் சிறையில் இருப்பவர்கள் பிணையில் வெளியே வந்தால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அடுத்து சிறைக்குச் செல்பவர்களின் பெயரை வெளியிட்டு பீதியை ஏற்படுத்துகின்றன ஊடகங்கள். இந்த நெருக்கடியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கிறது திராவிடமுன்னேற்றக்கழகம்.
வர்மா

சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு10/07/11

தேர்தல் தோல்வியால்தனிமரமான தி.மு.க.

திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருப்பதாக பகிரங்கமாக அறிவித்தாலும் கொள்கையில் இரண்டு கட்சிகளும் வேறு வேறு பாதையில் செல்கின்றன. ""காங்கிரஸ் கட்சி செய்வதெல்லாம் சரி அதில் தவறு எதுவும் இல்லை'' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி வந்த திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளது.
ஊழலுக்கு எதிரான போராட்டம் முனைப்புப் பெற்று வருகிறது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து ஓரம் கட்டுவதற்கு அன்னா ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார். அவரின் உத்தரவு கிடைத்ததும் களத்தில் குதிக்க இலட்சக்கணக்கான மக்கள் தயாராக இருக்கிறார்கள். காந்தீயத்தில் பற்றுக் கொண்டவர்களும் இளைஞர்களும் அன்னா ஹசாரே பின்னால் அணி திரளத் தயாராக உள்ளனர்.
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை விசாரிப்பதற்குரிய லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர் பதவியையும் கொண்டு வர வேண்டும் என்று ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள் வலியுறுத்துகிறார்கள். லோக்பால் சட்ட வரம்புக்குட்பட்ட பதவியில் உள்ளவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். பிரதமர் யாருக்கும் பதிலளிப்பதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. ஆகையால் லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வரக் கூடாது என்று காங்கிரஸ் கருதுகிறது.
லோக்பால் வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. காங்கிரஸும் அதன் தோழமைக் கட்சிகளும் அதனைக் கடுமையாக எதிர்க்கின்றன. காங்கிரஸில் முறுகிக் கொண்டிருக்கும் திரõவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை சரியானது என்று கூறுகிறது. இப்பிரச்சினை ஆரம்பித்த போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த திராவிட முன்னேற்றக் கழகம் ஸ்பெக்ரம் பிரச்சினை இறுகியதும் காங்கிரஸின் கருத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் கட்சிகளின் பக்கம் சாய்ந்துள்ளது.
லோக்பால் வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வர வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தினால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ஸ்பெக்ரம் கறை படிந்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்கின்றன எதிர்க்கட்சிகள்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. கூட்டணியில் இருக்கும் கருணாநிதி காங்கிரஸைக் கைவிட எதிர்க்கட்சியில் உள்ள ஜெயலலிதா ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். ஜெயலலிதாவின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகளால் எச்சரிக்கையாக உள்ள காங்கிரஸ் ஜெயலலிதாவின் ஆதரவான குரலை எச்சரிக்கையுடன் அவதானிக்கிறது.
காங்கிரஸின் ஆதரவாளரான கருணாநிதி எதிராகவும் காங்கிரஸுக்கு எதிரான ஜெயலலிதா ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் லோக்பால் வரம்புக்குக் கட்டுப்பட்டு கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயார் என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். ஸ்பெக்ரம் ஊழலுக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை பிரதமர் மன்மோகன்சிங்குக்கு உள்ளது. அவருடைய நேர்மையின் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுகின்றன. அந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டியது அவரது தலையாயப் பணி. தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்கு அவர் தயாராக இருக்கிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைய வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் உறுதியாக உள்ளனர். மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் ஆதரவு கொடுக்கத் தயார் என்று முன்னர் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று இப்போது அறிவித்துள்ளõர்.
தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற பின் டில்லிக்கு ஜெயலலிதா விஜயம் செய்த பின்னர் அவருக்கு அங்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்து. தேசியக் கட்சிகளின் பிரமுகர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்தனர். ஜெயலலிதõவின் டெல்லி விஜயத்துக்கு அவர்கள் முன்னுரிமை கொடுத்தனர்.
சோனியா காந்தியிடமிருந்து சாதகமான சமிக்ஞை கிடைக்காததால் வருத்தத்தில் உள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுடன் நெருங்குவதற்கு சோனியா காந்தி தயாராக இல்லை. ஆகையினால் காங்கிரஸ் கட்சியை சற்றுத் தூரத்தில் வைத்திருக்க விரும்புகிறார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் தோல்விக்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்று காங்கிரஸும் பாட்டாளி மக்கள் கட்சியும் வெளிப்படையாகப் புலம்ப ஆரம்பித்துள்ளன. சட்டமன்றத் தேர்தலின் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவு முறிந்துள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேற பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. அதனை வரவேற்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சியும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினாலும் ஜெயலலிதாவுடனோ விஜயகாந்துடனோ உடனடியாகச் சேர வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கிடையேயான குழப்பத்தினால் ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களிலும் வெற்றி பெறத் தயாராக உள்ளது.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு03/07/11

Tuesday, July 12, 2011

அரை இறுதியில் சுவீடன்

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்த சுவீடன் அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றது.
11 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனையான ஸ்யோகர்ன், 16 ஆவது நிமிடத்தில் டக்விஸ்ன் ஆகியோர் கோல் அடித்ததும் சுவீடன் முன்னிலை பெற்றது. அவுஸ்திரேலிய இளம் வீராங்கனைகள் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகளை சுவீடன் வீராங்கனைகள் முறியடித்தனர். 40 ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஈபரி கோல் அடித்து ஆறுதல்படுத்தினார்.
முதல் பாதி 2-1 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது. இடைவேளையின் பின்னர் 52 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனையான செலின் கோல் அடித்தார். அவுஸ்திரேலிய வீராங்கனைகள் பந்தை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். அவர்களின் கோல் அடிக்கும் முயற்சிக்கு சுவீடன் வீராங்கனைகள் முட்டுக்கட்டை போட்டனர்.
சிறந்த வீராங்கனையான சுவீடன் சொஸ்ஸின் தேர்வு செய்யப்பட்டார். அரையிறுதியில் ஜப்பானை எதிர்த்து சுவீடன் நாளை விளையாடுகிறது.
பிரேஸில் அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் பெனால்டி மூலம் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றது.
போட்டியின் ஆரம்ப நிமிடமும் கடைசி நிமிடமும் பிரேஸிலுக்கு அதிர்ச்சியான கணங்களாக அமைந்து விட்டன. இரண்டாவது நிமிடத்தில் பிரேஸில் வீராங்கனையான டைனர் ஒன் கோல் அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 10 என்ற கோல் கணக்கில் அமெரிக்க வீராங்கனைகள் மிக உற்சாகமாக விளையாடினார்கள். இடைவேளை வரை 10 என்ற முன்னிலையில் அமெரிக்கா இருந்தது.
68 ஆவது நிமிடத்தில் பிரேஸில் வீராங்கனை ?? ஒரு கோல் அடித்து சமப்படுத்தினார். 65 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான பௌச்லர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். 1-1 என்ற சமநிலையில் போட்டி முடிவுற்றதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. 90 ஆவது நிமிடங்களில் ஆட்டம் முடிவடைந்தது. 92 ஆவது நிமிடத்தில்மாதா கோல் அடித்து நம்பிக்கையூட்டினார். 2-1 என்ற முன்னிலையுடன் பிரேஸில் விளையாடியது. ஆட்டம் முடிவடையும் வேளையில் 120+2 நிமிடங்களில் அமெரிக்கா வீராங்கனை வம்பச் கோல் அடித்து சமப்படுத்தினார். கடைசி வினாடியில் பிரேஸிலின் வெற்றியை அமெரிக்கா பறித்தது. 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி முடிவடைந்தது. அமெரிக்கா ஐந்து பெனால்டிகளை கோலாக்கியது. பிரேஸில் வீராங்கனைகள் அடித்த நான்காவது பெனால்டியை அமெரிக்கா கோல் கீப்பர் தடுத்து விட்டார்.
அமெரிக்காவின் சோலோ சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார். பிரான்ஸை எதிர்த்து அமெரிக்கா அரையிறுதி போட்டியில் இன்று விளையாடுகிறது.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

சரித்திரம்படைத்ததுஜப்பான்

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜப்பான், பிரான்ஸ் ஆகியன அரை இறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. ஜேர்மனி, ஜப்பான் ஆகியவற்றிற்கிடையேயான போட்டியில் மேலதிக நேரத்தில் ஒரு கோல் அடித்த ஜப்பான் அரை இறுதியில் விளையாடத் தகுதி பெற்றது. இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்ததனால் 43 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
நடப்புச் சம்பியனான ஜேர்மனியைத் தோற்கடித்த ஜப்பான் வரலாற்றில் முதன் முறையான அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது. அரை இறுதியில் விளையாடும் முதலாவது ஆசிய அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ஜப்பானுக்கு எதிரான போட்டியில் ஜேர்மனி இலகுவாக வெற்றி பெற்று விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஜப்பான் வீராங்கனைகளின் சாதுர்யமõன விளையாட்டுக்கு ஈடுகொடுக்க முடியõத ஜேர்மனி உலகக்கிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் வெற்றி பெற்ற ஜேர்மனியின் உலகக் கிண்ண கனவு பறிபோனது.
போட்டி ஆரம்பமாகி எட்டாவது நிமிடத்தில் முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமான ஜேர்மனிய வீராங்கனை குலிங் வெளியேறினார். இது ஜேர்மனிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஜேர்மனியும் ஜப்பானும் ஆட்ட நேரத்தினுள் கோல் அடிக்காததினால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
மேலதிக நேரத்தின் இடைவேளையின் பின்னர் 108 ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனை மருயாமா கோல் அடித்தார். கோல் அடிப்பற்கு ஜேர்மனி மேற்கொண்ட முயற்சிகள் எவையும் பயனளிக்கவில்லை. ஜேர்மனி வீராங்கனைகள் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
ஜேர்மன் அணிக்கு கோல் அடிக்க 23 சந்தர்ப்பங்களும் ஜப்பானுக்கு ஒன்பது சந்தர்ப்பங்களும் கிடைத்தன. ஜேர்மனி கோல் அடிப்பதற்கு கிடைத்த நான்கு சந்தர்ப்பங்களும் தவறிப் போயின. அதே போல் ஜப்பானுக்கு கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களை ஜேர்மனி முறியடித்தது. சிறந்த வீராங்கனையாக ஜப்பானை சேர்ந்த ஷாபா தெரிவு செய்யப்பட்டார்.
ஜப்பானுக்கு எதிராக நான்கு மஞ்சள் அட்டைகளும் ஜேர்மனிக்கு எதிராக ஒரு மஞ்சள் அட்டையும் காண்பிக்கப்பட்டது. போட்டியின் அதிக நேரம் ஜப்பான் வீராங்கனைகள் தமது கட்டுப்பாட்டில் பந்தை வைத்திருந்தனர்.
பிரான்ஸ் இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற பரபரப்பான போட்டி 11 என்ற சமநிலையில் முடிவடைந்ததால் பெனால்டி மூலம் 43 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
59 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் அடித்து முன்னிலை பெற்றது. 88 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் அடித்து சமப்படுத்தியது. மேலதிக நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடித்தமையினால் பெனல்õடி மூலம் வெற்றி தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரான்ஸ் வீராங்கனை முதலில் அடித்தார். இங்கிலாந்து கோல் கீப்பர் அதனை தடுத்து விட்டார். இங்கிலாந்து முதலாவது பெனால்டிய கோலாக்கியது. இரண்டாவது பெனால்டியையும் மூன்றாவது பெனால்டியையும் பிரான்ஜூம் இங்கிலாந்தும் தலாமூன்றுகோல்கள் அடித்துசமநிலையில் இருந்தபோதுநான்காவது பெனால்டியை பிரான்ஸ் கோலாக்கியது. இங்கிலாந்து வீராங்கøன நான்காவது பெனால்டியை கோல் கம்பத்துக்கு வெளியே அடித்தார். பிரான்ஸ் ஐந்தாவது பெனால்டியை கோலாக்கியது. 43 என்ற நிலையில் ஐந்தாவது பெனால்டியை அடித்தது இங்கிலாந்து. ஐந்தாவது பெனால்டி கோல் கம்பத்திற்கு வெளியேறியது. கோல் அடிப்பதற்கு பிரான்ஸூக்கு அதிக சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கிலாந்து வீராங்கனைகள் அதனை முறியடித்து விட்டனர். பிரான்ஸ் வீராங்கனைஅபினி சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டõர்.

ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

Wednesday, July 6, 2011

காலிறுதியில் மோதும் நாடுகள்

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் ஆகியன கால் இறுதியில் விளையாடத் தகுதி பெற்றன.
பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் 4 -2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஜேர்மனி அரை இறுதியில் விளையõடத் தகுதி பெற்றது.

25 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீராங்கனையான கார்கார்பிரீஸும், 32 ஆவது நிமிடத்தில் கிரிங்ஸிவ் கோல் அடித்து பிரான்ஸுக்கு அதிர்ச்சியளித்தõர். இடைவேளை வரை பிரான்ஸ் கோல் அடிக்க முடியாது தவித்தது. 56 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனையான டெலி கோல் அடித்தார். 65 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனையான சபோவிச் சிவப்புடை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஜேர்மனிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கிரிவ் கோலாக்கினார்.
72 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனை ஜோரிச் கோல் அடித்தார். இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். 89 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீராங்கனையான மபாவி கோல் அடித்தார். 90 நிமிடத்தின் பின்னர் பிரான்ஸ் வீராங்கனை அணி அடித்த இரண்டு கோல்களை ஜேர்மனிய கோல் காப்பாளர் தடுத்துவிட்டார்.
நைஜீரியா, கனடா ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியா வெற்றி பெற்றது. 73 ஆவது நிமிடத்தில் நைஜீரிய வீராங்கனையான வொகா கோல் அடித்தார்.
குழு ஏ யில் விளையாடிய கனடா மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தது. நைஜீரியா ஒரே போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியன கால் இறுதியில் விளையாட தகுதி பெற்றன.
ஜப்பான், இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையோன போட்டியில் 2- 0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஜப்பான் வீராங்கனைகள் பந்தை தமது கட்டுப்பாட்டினில் அதிக நேரம் வைத்திருந்தபோதிலும் இங்கிலாந்து வீராங்கனைகளின் பலமான தடுப்புகளை மீறி கோல் அடிக்க முடியவில்லை.
ஜப்பான் கோல் காப்பாளர் திறமையினால் பல கோல் தடுக்கப்பட்டன.
நியூசிலாந்து மெக்ஸிக்கோ ஆகியவற்றுக்கிடையேயõன போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
மிகவும் பரபரப்பான இப்போட்டி கடைசி நிமிடம் வரை ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. போட்டி ஆரம்பமாகி இரண்டாவது நிமிடத்தில் மெக்ஸிக்கோ வீராங்கனையான மயோர் கோல் அடித்து அதிர்ச்சியளித்தார். 29 ஆவது நிமிடத்தில் மெக்ஸிக்கோ வீராங்கனையான டொமிங்யூனி கோல் அடித்தார். இரு அணிகளுக்கும் கோல் அடிக்கக் கிடைத்த சந்தர்ப்பங்களை எதிரணிகள் முறியடித்தன. 90 ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து வீராங்கனையான ஸ்மித் கோல் அடித்தார். 2 -1 என்ற தோல் கணக்கில் மெக்ஸிக்கோ வெற்றி பெற்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் 90+ 4 ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து வீராங்கனையான விதின் சன் கோல் அடித்து சமப்படுத்தினார். 90 நிமிடம் வரை வெற்றி வீரராக வலம் வந்த மெக்ஸிக்கேõ ஏமாற்றமடைந்தது.
25 ஆம் திகதி ஜேர்மனியை எதிர்த்து ஜப்பானும் 26 ஆம் திகதி இங்கிலாந்தை எதிர்த்து பிரான்ஸும் கால் இறுதியில் விளையாடுகின்றன

ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

Monday, July 4, 2011

பிரேஸில், அவுஸ்திரேலியா வெற்றி

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பிரேஸில் அவுஸ்திரேலியõ ஆகியன வெற்றி பெற்றன.
நோர்வேக்கு எதிரான போட்டியில் 3 0 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வெற்றி பெற்றது. பிரேஸில் அணித் தலைவி மாதா இரண்டு கோல்கள் அடித்தார். 22 ஆவது நிமிடத்தில் பிரேஸில் தலைவி மாதா கோல் அடித்தார். பிரேஸில் வீராங்கனைகளின் தாக்குதல் விளையாட்டுக்கு பதிலளிக்க முடியாது நோர்வே தடுமாறியது. 46 ஆவது நிமிடத்தில் ரொஸானாவும் 48 ஆவது நிமிடத்தில் மாதாவும் ÷கால் அடித்து நோர்வேக்கு அதிர்ச்சி கொடுத்தனர். கோல் அடிப்பதற்கு இரண்டு அணிகளுக்கும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் எதிரணி வீரர்களாலும் கோல் காப்பாளர்களாலும் அவை தடுக்கப்பட்டன.
பிரேஸில் அணித் தலைவி மாதா சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியா, கினியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 3 -1என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பித்து எட்டாவது நிமிடத்தில் அவுஸ்திரேலிய வீராங்கனை காமிஸ் கோல் அடித்து அதிர்ச்சியளித்தார். 21 ஆவது நிமிடத்தில் கினிய வீராங்கனைஅனோன்மன்கோல் அடித்து சமப்படுத்தினார். இடைவேளை முடிந்து ஆட்டம் ஆரம்பித்ததும் 48 ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலிய வீராங்கனை வன்எக்மன்ட்டும் 51 ஆவது நிமிடத்தில் டிவன்னாவும் கோல் அடித்து கினிய வீராங்கனைகளுக்கு அதிர்ச்சியளித்தனர். ஆட்ட நேரம் முடியும்வரை இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்க பெரிதும் முயற்சி செய்தனர். அவுஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார விளையாட்டுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத கினியா தோல்வியடைந்தது.அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த லிசா டி வன்னா சிறந்தவீராங்கனையாகத்தெரிவுசெய்யப்பட்டார்.

ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

அமெரிக்கா ,சுவீடன் வெற்றி

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் அமெரிக்கா சுவீடன் வெற்றி பெற்றன.
கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்க கால் இறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.
12 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான ரெய்லி கோல் அடித்து உற்சாகம் மூட்டினார். அமெரிக்கா ஒரு கோல் அடித்ததும் கொலம்பியா கோல் அடிக்க பலமுறை முயற்சி செய்தது. 50 ஆவது நிமிடத்தில் அமெரிக்கா வீரங்கனையான ரபினோ கோல் அடித்தார். 57 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான லொயிட் கோல் அடித்தார்.
84 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான வம்பாச்சிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
அமெரிக்காவின் விளையாட்டுக்கு ஈடு கொடுக்க முடியாத கொலம்பியா தோல்வியுடன் வெளியேறியது. அமெரிக்க வீராங்கனையான லொயிட் சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
சுவீடன் வடகொரியா ஆகியற்வற்றுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் கால் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
வடகொரியா மிகச் சிறந்த முறையில் விளையாடிய போதும் கோல் அடிப்பதற்குரிய சந்தர்ப்பங்களை சுவீடன் வீராங்கனைகள் முறியடித்தன‌ர். பந்தை தமது கட்டுப்பாட்டினுள் அதிக நேரம் வடகொரிய வீராங்கனைகள் வைத்திருந்தனர்.
64 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனையானஉக்வின்ஸ்கோல் அடித்தார். சிறந்த வீராங்கனையாக சுவீடனைச் சேர்ந்த செகார்தெரிவுசெய்யப்பட்டார்.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

Sunday, July 3, 2011

ஜப்பான், இங்கிலாந்து வெற்றி

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜப்பான், இங்கிலாந்து ஆகியன வெற்றி பெற்றன.
ஜப்பான், மெக்ஸிக்கோ ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 4- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜப்பான் அணித்தலைவி சவா மூன்று கோல்களையும் ஹேனோ ஒரு கோலையும் அடித்தனர். 13 ஆவது நிமிடத்தில் அணித் தலைவி சவா கோல் அடித்தார். 15 ஆவது நிமிடத்தில் ஹேனோ கோல் அடித்தார். ஜப்பான் இரண்டு கோல்கள் அடித்ததனால் சுதாகரித்த மெக்ஸிக்கோ 19 ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க முயற்சி செய்தது. ஜப்பான் கோல் காப்பாளர் அதனைத் தடுத்துவிட்டார். 25 ஆவது நிமிடத்தில் மெக்ஸிக்கோ கோல் அடித்தது. ஆனால் அது ஓப்சைட் கோல் என்பதால் சோர்ந்து போனது. 39 ஆவது நிமிடத்தில் ஜப்பானுக்கு கிடைத்த கோணர் கிக்கை தலைவி சவா கோலாக்கினார். 50 ஆவது நிமிடத்தில் மெக்ஸிக்கோவும் 55 ஆவது நிமிடத்தில் ஜப்பானும் கோல் அடிக்க முயற்சி செய்தன. இரண்டும் ஓப் சைட் என்பதனால் 80 ஆவது நிமிடத்தில் தலைவி சவா கோல் அடித்தார்.
ஜப்பான் மெக்ஸிக்கோ ஆகிய இரண்டு அணி வீராங்கனைகளும் கோல் அடிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எதிரணியால் தடுக்கப்பட்டன. ஐந்தாவது மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் ஜப்பான் முதன் முதலாக காலிறுதிக்கு விளையாடத் தகுதி பெற்றது. சவா சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 2- 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
18 ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து கோல் அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது. இடைவேளை வரை இங்கிலாந்து கோல் அடிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை நியூசிலாந்து வீராங்கனைகள் முறியடித்தனர்.
63 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஸ்கொட் கோல் அடித்தார். அதன் பின்னர் போட்டியில் பரபரப்புக் கூடியது. 81 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை கிளாச் கோல் அடிக்க இங்கிலாந்து முன்னிலை பெற்றது. 88 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை அடித்த கோல் நியூசிலாந்து கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.
சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ் ஸ்கொட் தேர்வு செய்யப்பட்டார்.

ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

Saturday, July 2, 2011

ஜேர்மனி ,பிரான்ஸ் வெற்றி

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியன வெற்றி பெற்றன. நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பத்தில் இருந்து முடிவடையும் வரை ஜேர்மனிய வீராங்கனைகள் நைஜீரியாவுக்கு நெருக்குதல் கொடுத்தனர்.
ஆட்டம் ஆரம்பித்த மூன்றாவது பதின்மூன்றாவது நிமிடங்களில் ஜேர்மனி வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். நைஜீரிய கோல் கீப்பர் அவற்றைத் தடுத்துவிட்டார். நைஜீரியர் கைகளும் கோல் அடிக்க முயன்றபோது ஜேர்மனிய கோல் கீப்பர் அவற்றை தடுத்துவிட்டார்.
51 ஆவது நிமிடத்தில் நைஜீரிய வீராங்கனையான ஓலேக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 54 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீராங்கனையான சைமன் லவுடர் கோல் அடித்தார். நைஜீரியாவை ஜேர்மனி இலகுவாக வீழ்த்திவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. நைஜீரிய வீராங்கனைகள் திறமையாக விளையாடி ஜேர்மனிக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்தனர். 74 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீராங்கனையான குலிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஜேர்மனியைச் சேர்ந்த அன்னிக் கிரான் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஜேர்மனி கால் இறுதிக்குத் தகுதி பெற்றது.
பிரான்ஸ் கனடா ஆகியவற்றுக்கிடையேயான இன்னொரு போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
போட்டி ஆரம்பித்தது முதலே பிரான்ஸ் வீராங்கனைகள் போட்டியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். ஏழாவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனை அடித்த பந்தை கடைசி கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார். 24ஆவது நிமிடத்தில்தினெலிiகோல் அடித்தார். 37 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனைமபெரம்மஸுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 57ஆவது நிமிடத்தில் கனடா வீராங்கனை மதன்சனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 60 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனை தினெலி இரண்டாவது கோலை அடித்தார். 66 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனை கோல் அடித்தார். 30 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி முகத்துடன் விளையாட்டைத் தொடர்ந்தது. 83 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனையான தோமில் கோல் அடித்தார். 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் முதன் முதலாககாலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது. சிறந்த வீராங்கனையாக ஜேர்மனிய வீராங்கனையான திலினி தேர்வு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

Friday, July 1, 2011

உலகக்கிண்ணதகுதிகாண்போட்டி

பிரேஸிலில் 2014ஆம் ஆண்டு நடைபெறும் உலக கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் விளையாட உள்ள நாடுகளைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்று முன்தினம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
மலேஷியா, வியட்நாம், மொங்கோலியா, பங்களாதேஷ், பலஸ்தீனம், நேபாளம், கம்போடியா ஆகிய நாடுகள் வெற்றி பெற்றன. இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுக்கிடையேயான போட்டிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
சைனீஸ் தாய்பேக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மலேஷியா மக்காவுக்கு எதிரான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமும் மியான்மாருக்கு எதிரான போட்டியில் 1- 0 என்ற கோல் கணக்கில் மொங்கோலியாவும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷûம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீனமும், திமோருக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நேபாளமும்,
லாவேசுக்கு எதிரான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் கம்போடியாவும் பெற்றி பெற்றன.

ரமணி
மெட்ரோநியூஸ்