Showing posts with label ஹொக்கி. Show all posts
Showing posts with label ஹொக்கி. Show all posts

Tuesday, September 1, 2026

நெதர்லாந்தின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த‌து ஆர்ஜென்ரீனா

மகளிர் ஹொக்கிவரலாற்றில்  நெதர்லாந்தின் 10 வருட ஆதிக்கத்துக்கு  ஆர்ஜென்ரீனா முற்றுப்புள்ளி வைத்தது.

 மகளிர்  ஹொக்கி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி ஆர்ஜென்ரீனா ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இறுதிப் போட்டி நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் உள்ள வேகனர் மைதானத்தில் நடைபெற்றது. வழக்கமான ஆட்ட நேர முடிவில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்ததால், பெனால்டி ஷூட்அவுட்டில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா, தனது வரலாற்றில் மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது.

இந்த முடிவு, மகளிர் ஹாக்கி உலகக் கோப்பையில் நெதர்லாந்தின் நீண்டகாலப் பயணத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது. 2010-ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குப் பிறகு, உலகக் கிண்ணப்  போட்டிகளில் நெதர்லாந்து அணி தோற்றதில்லை; அந்தப் போட்டியும் ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராகவே நடைபெற்றது. இதற்கு முன்னர் 2014, 2018 ,2022-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கடந்த மூன்று உலகக் கிண்ணப் போட்டிகளிலும்  நெதர்லாந்து சம்பியனானது.

இந்த உலகக் கோப்பைக்கு வருவதற்கு முன்பு, அது இரண்டு ஒலிம்பிக், இரண்டு உலகக் கோப்பை மற்றும் ஐந்து யூரோஹாக்கி சம்பியன்ஷிப் என ஒன்பது முக்கியப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது.

நெதர்லாந்து கடைசியாக ஒரு பெரிய போட்டியில் நாக்-அவுட் சுற்றில் தோற்றது 2016 ஒலிம்பிக் இறுதிப் போட்டியில்தான். ரியோவில் நடந்த அந்த இறுதிப் போட்டியில் விளையாடிய ஸான் டி வார்ட் மட்டுமே இந்த உலகக் கிண்ணஅணியில் இடம்பெற்றிருந்தார்.

ஆர்ஜென்ரீனா அணியில் விளையாடிய பல வீராங்கனைகள் 2021 ஒலிம்பிக் இறுதிப் போட்டி, 2022 உலகக்  கிண்ண  இறுதிப் போட்டி,2024 ஒலிம்பிக் அரையிறுதிப் போட்டி ஆகியவற்றில் நெதர்லாந்திடம் தோல்விகளையே சந்தித்துள்ளனர். எனவே, இறுதிப் போட்டியில் நடந்த இந்த மோதல், அவர்களின் பல வேதனையான நினைவுகளில் ஒன்றை அழிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது.

Saturday, August 22, 2026

பார்வை இழந்து ஏழு வருடங்களின் பின்னர் களம் கண்ட சாம் வார்ட்

 மலேசியாவுக்கு எதிரான ஒலிம்பிக் தகுதிப் போட்டியில், இங்கிலாந்து முன்கள வீரர் சாம் வார்ட் ஒரு பயங்கரமான காயத்திற்கு ஆளானார் ; இது ஹொக்கி மைதானத்தில் ஏற்படக்கூடிய மிக மோசமான காயங்களில் ஒன்றாகும். அவரது சக வீரர் கோலை நோக்கி பந்தை அடித்தபோது, அது கோலுக்குப் பதிலாக வார்டின் முகத்தில் நேராகத் தாக்கியதால், அவருக்கு முகத்தில் ஏழு எலும்பு முறிவுகளும் விழித்திரை கிழிவும் ஏற்பட்டன. இந்தக் காயம் அவரது இடது கண்ணில் கிட்டத்தட்ட பார்வையிழப்பை ஏற்படுத்தி, அவரது தொழில்முறை வாழ்க்கைக்கு முன்கூட்டியே முற்றுப்புள்ளி வைக்கும் அச்சுறுத்தலையும் விளைவித்தது.2019, நவம்பர் 3  ஆம் திகதி  சாம் வார்டின் வாழ்க்கை ஒரே இரவில் மாறியது.

ஆனால் அந்தத் தருணத்திலிருந்து ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில், வார்டு முன்பை விட இப்போது மிகவும் நன்றாக உணர்கிறார். பாதுகாப்பு முகக்கவசம் அணிந்தபடி, 35 வயதான அவர் உலகக்  கிண்ணப் போட்டியில்  வேல்ஸுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 8-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற வழிவகுத்த தனது தொடக்க கோலுக்குப் பிறகு, மும்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற அவர்   “இப்போது என்னால் இன்னும் தைரியமாக இருக்க முடியும் என்று உணர்கிறேன். நான் முகக்கவசம் அணிய முடிகிறது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன், அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்தப் பயம்தான் என்னை தொடர்ந்து விளையாட வைக்கிறது,” என்று கூறினார்.

 அவரது கண்ணில் '20-25%' பார்வை மட்டுமே உள்ளது. மேலும் அவர், “நான் எனது முழுமையான மையப் பார்வையையும், அதைக் கொண்டு பார்க்கும் திறனையும் முழுவதுமாக இழந்துவிட்டேன். எனக்கு ஓரப்பார்வை சிறிதளவு மட்டுமே உள்ளது,” என்று கூறினார். 

முகத்தைச் சீரமைக்க வேண்டிய அறுவை சிகிச்சையிலிருந்து, அவர் மீண்டும் ஹொக்கி மைதானத்தில் பயிற்சிக்குத் திரும்ப இரண்டு மாதங்களே ஆனது. ஒரு மாதம் கழித்து, அவர் தனது கிளப்பான ஓல்ட் ஜார்ஜியன்ஸுக்காக விளையாடி, உள்நாட்டுப் போட்டிகளுக்குத் திரும்பினார்.

மீண்டும் அணிக்குத் திரும்பியதிலிருந்து, அவர் 82 சர்வதேச கோல்களை அடித்துள்ளார். இது, காயத்திற்கு முந்தைய தனது வாழ்நாள் கோல் எண்ணிக்கையை விட சற்றே சிறந்த விகிதத்தில், ஏறக்குறைய சமன் செய்துள்ளது. மேலும், கடந்த 10 மாதங்களாக முழு வீச்சில் செயல்பட்டு வரும் தற்போதைய இங்கிலாந்து வீரர்களும் அவருக்கு ஊக்கமளிக்கின்றனர். 

Saturday, November 23, 2024

சீனாவை தோற்கடித்த இந்தியா மகளிர் ஆசிய சம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. .

 பீகார் மாநிலம் ராஜிகிரில் நடைபெற்ற மகளிர் ஆசிய சம்பியன்ஸ் டிராபி ஹொக்கி இறுதிப் போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தித் தக்க வைத்தது.

  இந்திய ஸ்ட்ரைக்கர் தீபிகா மீண்டும் இந்தியாவுக்காக விளையாடினார், ஒரு அற்புதமான ரிவர்ஸ் ஹிட் கோலை அடித்தார், பரபரப்பான இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவை வென்றதன் மூலம்  இந்தியா பட்டத்தைத் தக்கவைக்க உதவியது.

31வது நிமிடத்தில் பெனால்டி கார்னரில் இருந்து தீபிகாவின் தீர்க்கமான கோல் 11 கோல்களுடன் போட்டியின் அதிக கோல் அடித்த வீராங்கனை என்ற இடத்தைப் பிடித்தது. இது இந்தியாவின் மூன்றாவது ACT பட்டத்தை குறிக்கிறது, இதற்கு முன்பு 2016 மற்றும் 2023 இல் வென்றது, போட்டியின் வரலாற்றில் தென் கொரியாவுடன் தலா மூன்று பட்டங்களுடன் சமன் செய்யப்பட்ட அணியாக  இந்தியா உள்ளது.   

  சீனா தனது மூன்றாவது ரன்னர்-அப் போட்டியுடன் திருப்தி அடைய வேண்டியிருந்தது. முன்னதாக நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மலேசியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ராஜ்கிர் ஹொக்கி ஸ்டேடியத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் ரூ.10 லட்சம் வழங்கப்படும்" என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் மற்றும் அவரது துணைப் பணியாளர்கள் கூட முதல்வர் நிதிஷ் குமாரின் அரசாங்கத்தால் வெகுமதியாகப் பெறுவார்கள்.

மேலும், தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங்குக்கு ரூ.10 லட்சமும், மற்ற துணைப் பணியாளர்கள் தலா ரூ.5 லட்சமும் பரிசாகப் பெற்றனர். உயர்மட்ட ஹொக்கி பல ஆண்டுகளுக்குப் பிறகு பீகாருக்குத் திரும்பியது

Wednesday, March 15, 2023

கின்னஸ் சாதனை படைத்த ஹொக்கி மைதானம்


 பிர்சா முண்டா சர்வதேச ஹொக்கி ஸ்டேடியம், உலகின் மிகப்பெரிய மைதானமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அதிகாரிகள்  ஒடிசா அரசாங்கத்திடம் இதற்கான சான்றிதழை வழங்கினர்.

புதிதாக மகுடம் சூடிய உலக சம்பியனான ஜேர்மனிக்கு எதிரான இந்தியாவின் ஆட்டத்திற்கு முன்னதாக, முதல்வர் நவீன் பட்நாயக் அங்கீகார சான்றிதழை ஆரவாரத்துடன் கூடிய மக்கள் முன்னிலையில் ஏற்றுக்கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிக்காக  15 மாதங்களில் புதிதாகக் கட்டப்பட்ட இந்த மைதானத்தில் 20,011 பேர் அமரலாம், தடையற்ற பார்வை அனுபவத்துடன், வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஹொக்கி உள்கட்டமைப்பில் ஒரு அளவுகோல், இது கின்னஸ் சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்திற்குப் பிறகு இரண்டாவது சர்வதேச அளவிலான மைதானமாகும்.

“நமது மாநிலம் ஒடிசா நீண்ட தூரம் வந்து சர்வதேச விளையாட்டு வரைபடத்தில் முத்திரை பதித்துள்ளது என்பதற்கு இந்த அங்கீகாரம் ஒரு சான்றாகும். இது நம் அனைவருக்கும் மிகவும் பெருமையான விஷயம், மேலும் இந்த திட்டத்தில் அங்கம் வகித்த அனைவருக்கும், சுந்தர்கர் மக்களுக்கும், விளையாட்டிற்கு நிபந்தனையற்ற ஆதரவளித்த ஹாக்கி ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த கடினமான பணியை நிறைவேற்ற இது எங்களுக்கு உத்வேகம் அளித்தது. இந்த அங்கீகாரத்தை ஒடிசா மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று விருதை பெறும் போது முதல்வர் பட்நாயக் கூறினார்.

Saturday, May 28, 2022

அசாத்தியத்தை சாத்தியமாக்கிய இந்திய ஹொக்கி அணி


 ஆசியக்கிண்ண ஹொக்கி போட்டியில் இந்தோனேஷியாவுகு எதிராக 16 கோல்கள் அடித்தால் 4 அணிகள்  பங்கேற்கு அடுத்த சுற்றுக்கும் முன்னேற முடியும் என்ற அசாத்தியமான போட்டியில் வெற்றி பெற்றது இந்திய ஹொக்கி அணி

 இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்களை திணித்து 16-0 என்று அபார வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியதோடு பாகிஸ்தானை வெளியேற்றியது.

இந்தோனேசியாவுக்கு எதிராக  நடைபெற்ற அசாத்தியத்தை சாத்தியமாக்கிய இந்திய ஹொக்கி அணி..

ஆசியக்கிண்ண ஹொக்கி போட்டியில் இந்தோனேஷியாவுகு எதிராக 16 கோல்கள் அடிட்தால் 4 அணிகள்  பங்கேற்கு அடுத்த சுற்றுக்கும் முன்னேற முடியும் என்ற அசாத்தியமான போட்டியில் வெற்றி பெற்றது இந்திய ஹொக்கி அணி

 இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்களை திணித்து 16-0 என்று அபார வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியதோடு பாகிஸ்தானை வெளியேற்றியது.

இந்தோனேசியாவுக்கு எதிராக  நடைபெற்ற ஆசியக் கிண்ண ஹொக்கி கடைசி லீக் போட்டியில் பெரிய வெற்றியைப் பெற்றால்தான் கடைசி 4 அணிகள் பங்கேற்கும் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இந்திய அணிக்கு இருந்தது, ஆனால் சமயத்துக்கு எழுச்சி பெற்று இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்களை திணித்து 16-0 என்று அபார வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியதோடு பாகிஸ்தானை வெளியேற்றியது.

ஜப்பானிடம் பாகிஸ்தான் 3-2 என்று தோற்க பாகிஸ்தான் மொத்தம் 16 கோல்கள் போட்டு 4 கோல்களை வாங்கியதால் 12 கோல்கள் வித்தியாசத்தில் இருந்தது. இந்திய அணி   16 கோல்கள் ஜப்பானுக்கு எதிராக 2 கோல்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 1 கோல் என்று மொத்தம் 19 கோல்கள் போட்டிருந்தது, அதிலிருந்து வாங்கிய கோல்களான 5+1 கோல்களை கழித்தால் இந்தியா 13 கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானைக் கடந்ததால் இருவரும் 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும் இந்தியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தானின் 2023 உலகக் கிண்ண‌ வாய்ப்பும் சிக்கலாகியுள்ளது. கடைசி லீக் போட்டியில் பெரிய வெற்றியைப் பெற்றால்தான் கடைசி 4 அணிகள் பங்கேற்கும் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இந்திய அணிக்கு இருந்தது, ஆனால் சமயத்துக்கு எழுச்சி பெற்று இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்களை திணித்து 16-0 என்று அபார வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியதோடு பாகிஸ்தானை வெளியேற்றியது.

ஜப்பானிடம் பாகிஸ்தான் 3-2 என்று தோற்க பாகிஸ்தான் மொத்தம் 16 கோல்கள் போட்டு 4 கோல்களை வாங்கியதால் 12 கோல்கள் வித்தியாசத்தில் இருந்தது. இந்திய அணி   16 கோல்கள் ஜப்பானுக்கு எதிராக 2 கோல்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 1 கோல் என்று மொத்தம் 19 கோல்கள் போட்டிருந்தது, அதிலிருந்து வாங்கிய கோல்களான 5+1 கோல்களை கழித்தால் இந்தியா 13 கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானைக் கடந்ததால் இருவரும் 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும் இந்தியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தானின் 2023 உலகக் கிண்ண‌ வாய்ப்பும் சிக்கலாகியுள்ளது.

Tuesday, August 3, 2021

ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய மகளிர் அணி


  டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹொக்கி காலிறுதி ஆட்டத்தில் வலுவான அவுஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் ஹொக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதில் ‘சுவர் என்ற வார்த்தைக்கே புதிய விளக்கமாகத் திகழ்ந்தவர் இந்திய கோல் கீப்பிங் வீராங்கனை சவிதா பூனியா என்றால் மிகையாகாது. 

ஒலிம்பிக் ஹொக்கி இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜித் கவுர் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார், இதுவே வெற்றி கோலாக அமையும் என்று அவர் அப்போது கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

 ஒலிம்பிக் ஹொக்கி இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜித் கவுர் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார், இதுவே வெற்றி கோலாக அமையும் என்று அவர் அப்போது கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

ஆனால் ஆட்டத்தின் நாயகி, ஹீரோயினி, கதாநாயகி யார் என்றால் இந்திய கோல் கீப்பர் சவிதா பூனியாதான். இவர் இல்லையெனில் 3 முறை சாம்பியன்களான அவுஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்க முடியாது, வரலாறும் படைத்திருக்க முடியாது.