Showing posts with label சம்பியன் கிண்ணம்25. Show all posts
Showing posts with label சம்பியன் கிண்ணம்25. Show all posts

Monday, February 24, 2025

கில் சதம் இந்தியா வெற்றி


  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பங்களாதேஷை எதிர்த்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தனது சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்தது

ஐசிசி 2025 சம்பியன்ஸ்  கிண்ணப் போட்டி  பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.   இந்தியாவின்  போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது. அந்தத் தொடரில் இந்தியா தங்களது முதல் போட்டியில் பங்களாதேஷை எதிர் கொண்டது.  நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடியது. 49.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த பங்களாதேஷ் 228 ஓட்டங்கள் எடுத்தது.  இந்தியா 43.6 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 231  ஓட்டங்கள் எடுத்தது.

 சௌமியா சர்க்கார் 0, கப்டன் நஜ்முல் சாண்டோ 0, தன்சித் ஹசன் 25, மெஹதி ஹசன் 5, ரஹீம் 0  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். 5 விக்கெற்களை இழந்து 35 ஓட்டங்கள் எடுத்துத் தடுமாறிய போது  மிடில் ஓடரில் தௌஹீத் ஹ்ரிடாய் – ஜாகிர் அலி ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினார்கள்.

  6வது விக்கெட்டுக்கு 154  ஓட்டங்கள்  அடித்து பங்களாதேஷைக் காப்பாற்றினார்கள்.   ஜாகிர் அலி அரை சதத்தை அடித்து 68 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.   சேர்ந்து விளையாடிய தௌஹீத் தனது முதல் சதத்தை அடித்து [100] ஆட்டமிழந்தார்.      49.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த பங்களாதேஷ் 226 ஓட்டங்கள் எடுத்தது. ஷமி 5, ஹர்ஷிட் ராணா 3, அக்சர் படேல் 2 விக்கெட்களி வீழ்த்தினார்கள்.

69 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக சேர்த்து   நல்ல துவக்கத்தைக் கொடுத்த கேடன் ரோஹித் சர்மா 41 (36)  ஓட்டங்கள் எட்டுத்து ஆட்டமிழந்தார். த விராட் கோலி 22, ஸ்ரேயாஸ் ஐயர் 15, அக்சர் படேல் 8  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் நிதானத்தைக் காட்டிய கில் அரை சதத்தை கடந்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைதோட்டங்களில்  இருந்த போது கொடுத்த கேட்ச்சை வங்கதேசம் தவற விட்டது. அதைப் பயன்படுத்திய ராகுல் 41* (47) ஓட்டங்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் சேர்ந்து தொடர்ந்து நிதானத்தை காட்டிய கில் சதத்தை அடித்து 101* (129)ஓட்டங்கள் அடித்தா. 46.3 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்த இந்தியா  231  ஓட்டங்கள் எடுத்து   6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 51 இன்னிங்ஸ்களில்  கில் தனது 8வது சதத்தை பதிவு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 8 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ஷிகர் தவான் 57 இன்னிங்ஸில் 8 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை.  ஆட்டநாயகன் விருது கில்லுக்கு வழங்கப்பட்டது.


இந்திய வீரர் அக்சர் படேல் வீசிய 9-வது ஓவரில் தன்சித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர். அடுத்த பந்தில் ஜாக்கர் அலி பேட்டில் பட்டு பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற க‌ப்டன் ரோஹித் வசம் சென்றது. அதை கேட்ச் பிடித்திருந்தால் அக்சர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருப்பார். அதை ரோஹித் மிஸ் செய்தார். கிட்டத்தட்ட ஆட்டத்தின் திருப்புமுனை என்றும் அதை சொல்லலாம்.

  5 விக்கெட்டுகளை முதல் 10 ஓவர்களுக்குள் இழந்த நிலையில் கடைசி ஓவர் வரை அந்த அணி விளையாடி அசத்தியது.க‌ப்டன் ரோஹித் மட்டுமல்லாது 20-வது ஓவரில் ஹ்ரிடோய் கொடுத்த கேட்ச்சை மிட்-ஆஃப் திசையில் நின்ற ஹர்திக் பாண்டியா நழுவவிட்டார். அப்போது ஹ்ரிடோய் 23  ஓட்டங்களில் இருந்தார். 

ரமணி

23/2/25