Showing posts with label தமிழகம் அழகிரி. Show all posts
Showing posts with label தமிழகம் அழகிரி. Show all posts

Thursday, August 4, 2011

அதிகாரம் கோரும் அழகிரிஅடங்கிப்போன ஸ்டாலின்

தி.மு.க. காங்கிரஸ் உறவில் பாரிய விரிசல் எழுந்துள்ளது. கூட்டணியில் இருந்து வெளி யேற இரு கட்சிகளும் விரும்புகின்றன. முத லில் யார் வெளியேறுவது என்று தெரியாமல் இரு கட்சிகளும் தவிக்கின்றன
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடுத்த தலைவர் யார்? சட்டசபைத் தேர்தல் தோல் விக்கு காரணம் என்ன? வெற்றிடமாக இருக் கும் இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களை திரா விட முன்னேற்றக் கழகம் மீண்டும் பொறுப் பேற்குமா? காங்கிரஸுடனான கூட்டணி தொடருமா? என்பவை போன்ற மிக முக்கிய மான எதிர்பார்புகளுடன் கோவையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு பொதுக்குழு கூட்டங்கள் பரபரப் பின்றி புஸ் வாணமாக முடிவடைந்தது.
தமிழக சட்ட மன்றத் தேர்தலின் தோல்விக்கு குடும்ப ஆதிக்கம் தான் காரணம் என்பதை கோவையில் நடைபெற்ற கூட்டம் தலைவர் கருணாநிதிக்கு உணர்த்தியது. அதேவேளை ஸ்டாலின், அழகிரி என்ற இரண்டு கோஷ்டி களின் பிடியில் திராவிட முன்னேற்றக் கழகம் சிக்கியுள்ளதையும் கோவைக் கூட்டம் வெளிச் சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
திராவிட முன்னேற்றக்கழக அரசு கடந்த காலத்தில் அறிமுகப்படுத்திய திட்டங்களும் இலவசங்களும் சலுகைகளும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. ஆகையி னால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெறும் என்று இன்றைய உளவுத்துறை கருணாநிதி யிடம் அறிக்கை சமர்ப்பித் தது. அந்த அறிக்கையை அவர் மலைபோல் நம்பி னார். அதேவேளை, குடும்ப ஆதிக்கத்தினால் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படுமா? என்பதை அறிவதற்கு கரு ணாநிதியும் உளவுத்துறை யும் முயற்சிக்கவில்லை.
கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் என்பதை திரா விட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் ஏற்றுள்ளனர். அழகிரி, கனிமொழி என்று அவரது குடும்பத்தில் இருக் கும் மேலும் பல வாரிசுகள் அரசியலில் ஆதிக்கம் செய் வதைத் திராவிட முன்னேற் றக் கழகத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
தனக்குப்பின் அழகிரியா? ஸடாலினா? என்பதை கரு ணாநிதிதான் முடிவு செய்ய வேண்டும். கோவைக் கூட் டத்தில் ஸ்டாலினிடம் கூடு தல் பொறுப்பு ஒப்படைக்கப் படும். அதற்குப் பின் அழகிரியின் செல்வாக்கு குறைந்து விடும் என்றும் அழகிரியும் அவரது ஆதர வாளர்களும் கேவைக் கூட்டத்தைப் பகிஷ்கரிக்கப் போகின்றார்கள் என ஊடகங் கள் கட்டியும் கூறின. அரசியலில் ஸ்டாலி னுக்கு அடுத்த இடத்தில்தான் அழகிரியை வைத்திருக்கிறார் கருணாநிதி. ஸ்டாலினின் கையில் கடினமான பணியை ஒப்படைப் பதற்கு கருணாநிதி தற்போதைக்கு விரும்ப வில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தல்களின் தோல்வி யில் மதிப்பிழந்துக் கிடக்கும் கட்சியை ஸ்டா லின் கையில் ஒப்படைப்பதற்கு கருணாநிதி விரும்பவில்லை. தனது தலைமைக்கு அது இழுக்கு என நினைக்கிறார். ஆகையினால் அடுத்த தலைவர் பிரச்சினையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் கருணாநிதி.
கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அதிகமானோர் ஸ்டாலின் தலைவராக வேண்டும் என்று தமது விருப்பத் தினை வெளிப்படுத்தினர். திராவிட முன்னேற் றக் கழகத்தில் அழகிரியை விட அதிக செல் வாக்கு ஸ்டாலினுக்கு உண்டு. தமிழக சட்ட மன்றத் தேர்தல் தோல்வியினால் திராவிட முன் னேற்றக் கழகத் தொண்டர்கள் துவண்டிருக் கும் வேளையில் நன்றி அறிவிக்கும் கூட்டம் என்ற பெயரில் தொண்டர்களின் மத்தியில் வெளிப்பட்டார் ஸ்டாலின். தோல்வியிலி ருந்து மீளவேண்டும் என்ற அவரின் எதிர்ப் பார்ப்பை தொண்டர்கள் பெரிதும் வரவேற்றுள் ளனர்.
காங்கிரஸுடனான கூட்டணி தற்போதைக்கு பட்டும் படாமலும் தொடரும். எதிர்காலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்பதை கோவையில் நடைபெற்ற கூட்டம் சூசகமாகத் தெரிவித்துள்ளது. மத்திய அரசில் வெற்றிட மாக இருக்கும் இரண்டு மந்திரிப் பதவியை பெறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சிக்கவில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத் தில் காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட்டு விட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு திராவிட முன்னேற்க்கழகம் தான் முழுப்பொறுப்பு என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். தமிழக அரசின் கெடுபிடியி லிருந்து தப்புவதற்கு மத்தியரசின் துணை திராவிட முன்னேற்றக்கழகத் திற்கு தேவைப் படுகின்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப் பட்ட இரண்டு அமைச்சரவையைப் பெற்று அதன் மூலம் தனது கூட்டணி உறுதிசெய் யப்படும் என்றே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பார்த் தது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தினால் தயாநிதி மாறன் தனது அமைச்சுப் பதவியை இராஜி னாமா செய்தார். அவரது பெயர் குற்றப் பத்திரி கையில் இணைக்கப்படலாம். அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை யில் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்று பதவிக்கு ஆசைப்படும் கட்சி என்ற பெயரைப் பெறுவதற்கு அவர் தயாராக இல்லை என்று திராவிட முன்னேற்றக்கழகம் பட்டவர்த்தன மாகத் தெரிவித்துவிட்டது.
கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம் என்று காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற் றக்கழகமும் வெளிப்படையாக அறிவிக்கப் போவதில்லை. முன்னாள் அமைச்சர்கள் செய் தவைகளை நான் செய்தேன். அமைச்சரவை யின் ஒப்புதலின் பெயரிலேயே ஸ்பெக்ட்ரம் பங்கிடப்பட்டது என்று ராசா வாதாடியுள்ளார். பிரதமர் மன்மோகனும், அமைச்சர் பா.சிதம்பர மும் ராசாவின் வாதத்தினால் நொந்து போயுள்ளனர். அவர்கள் இருவர் மீதும் ராசா நீதிமன்றத்தில் நேரடியாக குற்றம் சுமத்தியுள் ளார். ராசாவின் குற்றச்சாட்டினால் கூட்டணிக் குள் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வட இந்தியாவில் வலுவிழந்து வருகிறதா காங்கிரஸ் கட்சி. மத்திய அரசின் எதிர் காலத்தை கடத்துவதற்கு திராவிட முன்னேற் றக் கழகத்தின் துணை தேவைப்படுகிறது. ஆகையினால் அவமானங்களையும் குற்றச் சாட்டுக்களையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அடுத்த நாடாளு மன்றத் தேர்தல் வரை காங்கிரஸும், திராவிட முன்னேற்றக் கழகமும் பிரிவதற் குரிய நிலை இல்லை. இதேவேளை தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இக்கட்சிகளின் உண் மையான இணக்கப்பாடு வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாவாரவெளியீடு31/07/11