Showing posts with label ஹசீனா. Show all posts
Showing posts with label ஹசீனா. Show all posts

Wednesday, August 7, 2024

இடைக்கால அரசங்கத்துக்காகக் காத்திருக்கிறது பங்களாதேஷ்


   இடைக்கால அரசங்கத்துக்காகக் காத்திருக்கிறது பங்களாதேஷ் 

இராணுவத் தளபதியைச் சந்திக்கிறார்கள்  மாணவர்கள்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் இந்தியாவில் தஞ்சமடைந்ததைத்  தொடர்ந்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் பங்களாதேஷின்  மாணவர் போராட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் இராணுவத் தலைவர் ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமானைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சியைத்  தவிர - முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜமான் கூறினார்.

2018 ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஹசீனாவின் எதிரியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவரும், ஹசீனாவின் எதிரியுமான பேகம் கலீதா ஜியாவை உடனடியாக விடுவிக்க "ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது" என்றும்  ஜமான் கூறினார்.

பங்களாதேஷ்  இராணுவத்தின் செயற்பாட்டை  அமெரிக்கா பாராட்டியது. "பங்களாதேஷில் ஜனநாயக உரிமைகளை மதிக்க வேண்டும் என்று அமெரிக்கா நீண்ட காலமாக அழைப்பு விடுத்து வருகிறது, மேலும் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது ஜனநாயகமாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இன்று இராணுவம் காட்டிய நிதானத்திற்காக நாங்கள் பாராட்டுகிறோம், ”என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஜனவரி மாதம் எதிர்க்கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் ஹசீனா நான்காவது முறையாக வெற்றி பெற்றார் . தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை ஜனவரி மாதம் கூறியது, வாஷிங்டன் வாக்குப்பதிவு முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் பற்றிய அறிக்கைகளால் கவலையடைந்துள்ளது.

மாணவர் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், நோபல் அமைதிப் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமை ஆலோசகராக புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுத்துள்ளதாக பேஸ்புக்கில் வெளியிட்ட காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் இயக்கத்தின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவரான நஹிட் இஸ்லாம், மேலும் மூன்று அமைப்பாளர்களுடன் ஒரு வீடியோவில், “நாங்கள் பரிந்துரைத்த அரசைத் தவிர வேறு எந்த அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளப்படாது. "இராணுவ ஆதரவு அல்லது இராணுவம் தலைமையிலான எந்த அரசாங்கத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்."

"நாங்கள் முஹம்மது யூனுஸுடனும் கலந்துரையாடினோம், எங்கள் அழைப்பின் பேரில் அவர் இந்த பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டார்" என்று இஸ்லாம் மேலும் கூபிரதமர்  பதவியை இராஜினாமாச்  செய்த பங்களாதேஷ் பிரதமர் ஹெலிகொப்டர் மூலம்  இந்தியாவில் தஞ்சமடைந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஹசீனா   பங்கலாதேஷில் இருந்து ஹெலியில் புறப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்த அந்த பரபரப்பன திகில் பயணம் பற்றிய விபரங்கள் தற்போது  வெளியாகி உள்ளன.

 ஷேக் ஹசீனாவின் பாதுகாப்புக்காக இந்தியா பெரிய ரிஸ்க் எடுத்துள்ளதாகத் தகவல்  வெளியாகி உள்ளது.

பங்களாதேஷில்  மாணவர்களின் போராட்டம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. மாணவர்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நுழையலாம் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு உடனடியாக வேறு நாட்டுக்கு தஞ்சமடைய முடிவு செய்தார்.  நாடுகளாக உள்ள பாகிஸ்தான் அவரை எதிர்க்கிறது.  சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஷேக் ஹசீனா கொண்டுள்ளார்.   இலங்கையை  அவர் பாதுகாப்பாக நினைக்கவில்லை. இதனால் ஷேக் ஹசீனா நட்பு நாடான இந்தியாவுக்கு செல்லத்  தயாரானார். இதையடுத்து அவர் அந்த நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் இந்தியா நோக்கி புறப்பட்டார். பொதுவாக ஒரு நாட்டின் பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் இன்னொரு நாட்டின் வான்வெளி பரப்பில் அனுமதியின்றி நுழைய கூடாது. அப்படி பறந்தால் சம்பந்தப்பட்ட நாடு அந்த ஹெலிகாப்டர் அல்லது விமானத்தை சுட்டு வீழ்த்தலாம். இத்தகைய சூழலில் தான் எந்த முன்னறிவிப்பும் இன்றி நேற்று மதியம் 3 மணியளவில் இந்திய வான்வெளி பரப்பை நோக்கி மிகவும் தாழ்வாக  பங்களாதேஷில் இருந்து  ஹெலிகாப்டர் பறந்து செல்வதை இந்திய  விமானப்படையினர் கண்டனர்.  விமானப்படை ரேடார்கள் இதனை கண்டுபிடித்து சிக்னல் செய்தது. மேலும் அந்த ஹெலிகாப்டரில் ஷேக் ஹசீனா இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

பங்களாதேஷின் நிலைமை மோசமான நிலையில் ஷேக் ஹசீனா  இந்தியாநோக்கி வருவதை  விமானப்படை உணர்ந்தது. இதையடுத்து அவரை பாதுகாப்பாக   தரையிறங்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக இந்தியா செய்ய தொடங்கியது

ஹசீனா பயணம் செய்த ஹெலிகொப்டர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி வழங்கக்ப்பட்டது. ஷேக் ஹசீனாவின் பாதுகாப்புக்காக 2 ரஃபேல் போர் விமானங்களை உடனடியாக இந்திய விமானப்படை அனுப்பி வைத்தது.  மேற்கு வங்க மாநிலம் ஹஷிமாரா விமான தளத்தின் 101வது படைப்பிரிவில் இருந்து 2 ரஃபேல் போர் விமானங்கள் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டன. அந்த விமானங்கள் ஷேக் ஹசீனாவின் பாதுகாப்பை உறுதி செய்தன. தொடர்ச்சியாக விமானங்கள் வானில் பறந்தபடி தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பில் இருந்தது. இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்தின் தலைவர்களான ஏர் ஷிப் மார்ஷல் விஆர் சவுதாரி மற்றும் ஜெனரல் உபேந்திர திவேதி ஆகியோர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக மாலை 5.45 மணிக்கு தரையிறங்கியது இந்திய  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் வபங்களாதேஷில்  நிலவும் நிலைமை, ஷேக் ஹசீனாவின் அடுத்தக்கட்ட பிளான் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதன்பிறகு அஜித் தோவல் அதுபற்றிய விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொண்டார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த கேபினட் கூட்டத்தில் அஜித் தோவல் இதுபற்றி விளக்கினார். மேலும் ஷேக் ஹசீனாவுக்கு ஏன் இந்தியா அனுமதி வழங்கியது. மேலும் தற்காலிகமாக தங்க அனுமதி வழங்கி உள்ளது? என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அதன் பின்னணியில் ஷேக் ஹசீனா இந்தியாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தது தான் காரணம்.

பங்களாதேஷில்  கடந்த 2009ம் ஆண்டு முதல் பிரதமராக ஷேக் ஹசீனா தான் இருந்து வருகிறார். அன்று முதல் அவர் தொடர்ந்து   இந்தியாவுடன்  நல்லலுறவில் உள்ளார். 

பங்களாதேஷி இருந்து பயங்கரவாதிகள் மூலம் ந இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருந்தது. ஆனால் ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் அந்த அச்சுறுத்தல் இல்லாமல் போனது. இது பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. அதேபோல்  இந்தியாவுக்கு  எதிரான சதித்திட்டங்களை செய்து வரும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் அவர் இணக்காம செயல்படவில்லை.

பங்களாதேஷில் நடைபெற்ற‌ வன்முறையின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஐஎஸ்ஐ என்பது பாகிஸ்தான் நாட்டின் அதிகாரப்பூர்வ உளவு மற்றும் புலனாய்வு அமைப்பாக உள்ளது.இந்த அமைப்பு தான்  மாணவர்களை வைத்து பதற்றத்தை ஏற்படுத்தி

பாகிஸ்தானின் சொல்லைக் கேட்காத  ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் அரசை கலைப்பது தான் ஐஎஸ்ஐ அமைப்பின் முக்கிய நோக்கம்  ஷேக் ஹசீனா இந்தியாவை ஆதரிக்கிறார். . இதனை பாகிஸ்தான் விரும்பவில்லை. மாறாக ஷேக் ஹசீனாவுக்கு பதில் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் ப‌ங்களாதேஷ் தேசியவாதக் கட்சியை (பிஎன்பி) ஆட்சியை கொண்டு வருவது தான் ஐஎஸ்ஐ-யின் நோக்கமாக உள்ளது. இதனால் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை   கவிழ்த்து பிஎன்பி கட்சியின் ஆட்சியை கொண்டு வருவதன் மூலம் இந்தியாவுக்கும் குடைச்சலை தர முடியும் என பாகிஸ்தான் நம்புகிறது.

ஹசீனா நீண்டகாலம் இந்தியாவில் தங்கமாட்டார். இலண்டனில் தஞ்சமடைய  முடிவு செய்துள்ளார்.

பங்களதேஷ் பிரதமர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்


 

 பங்களதேஷ் பிரதமர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்

ஆட்சியைக் கைப்பற்றியது இராணுவம்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான  போராட்டம் வன்முறையாக வெடித்துக் கிளம்பியதால் அரசாங்கம் தடுமாறியது. மக்களின் எழுச்சி  வீரியமடைந்ததால் பிரதமர் ஹசீனா இராஜிநாமாச் செய்து விட்டு  நாடை விட்டு வெளியேறினார்.

ஆசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகியனவற்றில் நடந்ததுபோல்  நாட்டின் தலைவர்  வெளியேறிவிட்டார்.

இராணுவம் அங்கு இடைக்கால ஆட்சியமைக்கப் போவதாக  இராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். இதனால் வங்கதேசத்தில் ராணுவப் புரட்சி நடந்திருப்பது உறுதியாகியுள்ளது.

பங்களாதேஷில் சுமார் 14 வருடங்களாக க பதவியில் இருந்து வருகிறார் ஷேக் ஹசீனா. தேர்தல்களில் அவர் முறைகேடு செய்துதான் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாக புகார்கள் உள்ளன. மேலும் அவரது ஆட்சிக்கும்,  கொள்கைளுக்கு எதிராகவும் நீண்ட காலமாக மக்கள் மத்தியில் அதிருப்தி வெடித்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் கொண்டு வந்த இட ஒதுக்கீடு உத்தரவு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ஹசீனா அரசு கொண்டு வந்தது. ஆனால் இது தனக்கு ஆதரவாக இருப்போருக்கு சாதகமாக கொண்டு வரப்பட்ட சட்டம் என்று மக்கள் கொந்தளித்தனர். நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாற்றமடைந்தது.  போராட்டக் காரர்களுக்கும் பத்காப்புப் படைகளுக்கும் இடையே  மோதல் வெடித்தது.

  இது மிகப் பெரிய கொந்தளிப்பாக மாறியது. நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. பொதுச் சொத்துக்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இட ஒதுக்கீடு சட்டத்தை வங்கதேச உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் கலவரம் ஓயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கலவரம் சற்று தணிந்தது. ஆனால் தற்போது மீண்டும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன.

  தலைநகர் டாக்கா தவிர நாடு முழுவதும் கலவரம் பரவவே தற்போது ஷேக் ஹசீனா தனது பதவியை  ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு ஓடி விட்டார். டாக்காவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் வெளியேறினார்.  அங்கிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது அவர் திரிபுராவில் இருப்பதாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதை ராணுவத் தலைமைத் தளபதி வக்கார் உஸ் ஜமான் உறுதிப்படுத்தியுள்ளார்.  ராணுவம் இடைக்கால ஆட்சியமைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து கலவரமும் முடிவுக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் ஹசீனா வெளியேறியதை மக்கள் சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள்.

  2008 முதல் தொடர்ந்து நான்கு முறை தேர்தலில் வென்று பிரதமராக இருக்கும் ஹசீனாவுக்கு இந்த போராட்டம் அழுத்தத்தைக் கொடுத்தது.

ஹசீனா எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தது. அதேநேரம் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை அவர் ஒடுக்கினார். இதுவே அவர் மீது மக்கள் கொந்தளிக்கக் காரணமாக இருந்தது. பொறுத்துப் பொறுத்து பார்த்த அந்நாட்டு மக்கள் ஒரு கட்டத்தில் வீதிகளில் இறங்கி போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். அதுவே வன்முறையாக மாறியது.

ஏற்கனவே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து வங்கதேசம் முழுமையாக மீளவில்லை. இந்தச் சூழலில் ஹசீனாவும் அந்நாட்டை விட்டு வெளியேறி இருப்பது வங்கதேசத்திற்குப் பெரிய சிக்கலையே தரும் எனக் கூறப்படுகிறது.

 இந்தியாவும் இந்த பிராந்தியத்தில் தனது நம்பகமான கூட்டாளியை இழந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். கடந்த காலங்களில் ஹசீனா இந்தியாவுக்கு உற்ற நண்பராகவே இருந்துள்ளார். மேலும் வங்கதேசத்தில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வதில் அவர் இந்தியாவுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். இரு நாட்டு உறவு மேம்பட்ட நிலையில், இதனால் வங்கதேசத்தில் பல்வேறு திட்டங்களுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது.

ஹசீனாவின் எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான ஹசீனாவின் ஒடுக்குமுறை குறித்து மேற்குலக நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் பல முறை கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், ஹசீனா தனது சர்வாதிகார பாணியிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின. தேர்தல்களில் கூட முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் இருந்தன. இருப்பினும், இதை எல்லாம் தாண்டியும் கூட இந்தியா தொடர்ந்து ஹசீனாவுக்கு ஆதரவாகவே இருந்தது.

இப்போது ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், இராணுவம் ஆட்சியை அமைத்துள்ளது. இனி வங்கதேசம் இந்தியா உடன் என்ன மாதிரியான அணுகுமுறையை எடுக்கப் போகிறார்கள் என்பது முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் கடந்த காலங்களில், மற்ற கட்சிகள் அல்லது ராணுவம் ஆட்சி செய்த போதுஇந்தியா- வங்கதேச எல்லையில் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை இந்தியா சந்தித்தது.

தலைவலி: இப்போது மீண்டும் அங்கே ராணுவ ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்தியா மீண்டும் பல சிக்கல்களைச் சந்திக்கலாம்.. ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், வங்கதேசத்திலும் அதேபோன்ற சூழல் ஏற்பட்டால் அது இந்திய ராணுவத்திற்குச் சிக்கலாக மாறும். இதனால் அங்கே அமைதியின்மை ஏற்படலாம்.

கடந்த மாதம் நடந்த போராட்டங்களில் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டதால், அரசாங்கத்திற்கு எதிரான சீற்றத்தைத் தூண்டிய கொடிய அடக்குமுறைகள் குறித்து விசாரணையைத் தொடங்குவதாக ஜெனரல் ஜமான் உறுதியளித்தார்.

ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் நடந்த மோதல்களில் குறைந்தது 14 பொலிஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 95 பேர் இறந்தனர், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, 15 ஆண்டுகளாக அவர் ஆட்சி செய்த நாட்டை விட்டு அவர் தப்பிப்பது நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்திருக்கும்.

நிகழ்வுகளின் வியத்தகு திருப்பம் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் சக்தியை நிரூபிக்கிறது.

கடந்த மாதம் முதல் நடைபெற்ற போராட்டங்களின் அளவும் தீவிரமும் மூர்க்கத்தனமானவை.

ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம், மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

கோபத்தைத் தணிக்க உச்ச நீதிமன்றம் தலையிட்டு முன்மொழியப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்தது மற்றும் அரசு வேலைகளில் உள்ள அனைத்து இட ஒதுக்கீட்டையும் குறைத்தது.

நாட்டில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் மதிக்கப்படும் இராணுவம் கொண்டுவரப்பட்டது மற்றும் ஓரளவு இயல்புநிலை திரும்பியது, ஆனால் அது குறுகிய காலமாக இருந்தது.

அரசாங்கம் முன்னெடுத்துச் சென்று ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியை ஜூலை 30 அன்று தடை செய்தது, அது போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டதாகவும், வன்முறையைத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டியது.

அரசாங்கத்தின் நிலைமையை நிர்வகிப்பதில் மகிழ்ச்சியடையாத மக்கள், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வீதிகளில் இறங்கினர், இந்த முறை முந்தைய போராட்டங்களில் கொல்லப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் என்று கோரினர்.

பிரதம மந்திரி ராஜினாமா செய்வதற்கான அழைப்புகளை எதிர்கொண்ட நிலையில், திங்களன்று எதிர்ப்பாளர்கள் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்தனர் மற்றும் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் தலைநகரின் மையத்தில் குவிந்தனர்.பிரதமரின்   வசிப்பிடம் மக்களால் சூறையாடப்பட்டது.

1971ல் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற உதவிய தேசத்தின் தந்தையாக கருதப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.

சுதந்திரத் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளான திருமதி ஹசீனா, 170 மில்லியன் மக்கள் பெரும்பான்மையாக வாழும் முஸ்லீம் நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் ஆவார்.

2009 இல் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அவர் ஏற்கனவே 1996 மற்றும் 2001 க்கு இடையில் பிரதமராக இருந்தார்.

அவரது அரசியல் எதிரிகள் முன்னர் அவர் பெருகிய முறையில் எதேச்சதிகாரமாக வளர்வதாக குற்றம் சாட்டினர் மற்றும் நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று அழைத்தனர்.

அவரது தந்தை 1975 இல் இராணுவ சதிப்புரட்சியின் போது படுகொலை செய்யப்பட்டார். அவரது இரண்டு மகள்களான ஷேக் ஹசீனா மற்றும் ஷேக் ரெஹானாவைத் தவிர, அவரது குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்.

கடந்த ஐந்து வருடங்களில் சூடான்,ஆப்கானிஸ்தான்,துனுஷியா,வெனிசுவெலா,இலங்கை ஆகிய நாடுகளின் தலைவர்கள்  கிளர்ச்சிகள்  உசக்கட்டத்தை எட்டியதால் நாட்டை விட்டு வெளியேறினர்.