Showing posts with label சிவகுமார். Show all posts
Showing posts with label சிவகுமார். Show all posts

Friday, June 1, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 34



கர்நாடக இசை உலகில் கொடி கட்டிப் பறக்கும் ஜே.கே.பி. என்ற இசை விற்பன்னரிடம் சங்கீதம், பயில வந்த இளம் பெண் அவரின் சாரீரத்தில் மயங்கி தன் சரீரத்தைக் கொடுத்து ஒரு குழந்தைக்குத்தாயாகும்ஒருவரிக்கதையுடன்வெளியானபடம்1985ஆம்ஆண்டுவெளியானசிந்துபைரவி.இசையுடன்சம்பந்தப்பட்டவலுவானகதைஅமைப்பும்இசைஞானியின்இசைவேள்வியும்திருமணமாகாதபெண்ணுக்குப்பிறந்தவள்திருமணமாகமலேஒருகுழந்தைக்குத்தாயானவிபரீதத்தைமறைத்துவிட்டன
    கண்டிப்பு,ஒழுக்கம்,நேர்மைஎன்பனவற்றுக்குமுதலிடமகொடுப்பவர் பிரபல கர்நாடக இசை ஜாம்பவான் சிவகுமார்.மதுஅருந்திவிட்டுமேடையில்இருக்கும்மிருதங்கவித்துவான்டெல்லிகணேஷைமேடையிலிருந்துஇறக்கிவிட்டுஅதற்கானகாரணத்தைசபையிடம்கூறிமன்னிப்புக்கேட்டுவிட்டுமகாகபதியுடன்கச்சேரியைஆரம்பிக்கிறார்சிவகுமார்.மிருதங்கம்இல்லாதஇசைக்கச்சேரிகளைகட்டுகிறது.இயக்குநரின்காட்சிஅமைப்புசிவகுமாரின்நடிப்பு,டாக்டர்கே.ஜே.ஜேசுதாஸின்குரல்அத்தனையும்காட்சியைமெருகூட்டுகின்றன.இளையராஜாவின்இசைஒருபடிமேலேபோய்காதில்ரீங்காரமிடுகிறது.இசைமேதைசிவகுமாரின்இசைக்குஉலகெங்கும்பெருமதிப்பு.அவரதுஇசைக்குமயங்கிரசிகர்களானவர்கள்ப‌லர்.சிவகுமாரின்இசைக்கச்சேரிநடக்கும்மண்டபங்கள்கட்டுக்கடங்காதகூட்டத்தால்நிரம்பிவழியும்.தனதுஇசைஅனுபவங்களைபலருடன்பகிர்ந்துமகிழும்சிவகுமார்வீட்டிலேஇசையைப்பறறி கதைக்க முடியாத நிலை அவரின்மனைவிசுலக்க்ஷனாவுக்குஇசைஞானம்சிறிதளவுகூடஇல்லை.இசைஎன்றால்கிலோஎன்னவிலைஎனக்கேட்கும்அப்பாவிசுலக்க்ஷனாவுக்குகுழந்தைஇல்லை என்ற கவலை உள்ளது. தனது மனைவிக்கு இசைஅறிவுஇல்லைஎன்றகவலையில்தினமும்கூனிக்குறுகுகிறார்சிவகுமார்.
            சிவகுமாரின்கர்நாடகஇசையில்ரசிகர்கள்மயங்கிஇருக்கும்வேளையில்தமிழ்இசைக்குநீங்கள்ஏன்முக்கியத்துவம்கொடுப்பதில்லைஎன்றகுரல்ஒன்றுஆக்ரோஷமாகஎழுகிறது.சிவகுமாரின்இசைக்குஅடிமையானவர்கள் தமிழ் இசை ஏன் பாடுவதில்லை என்று குற்றஞ்சாட்டிய சுஹாஷினியைஅடக்கமுனைகிறார்.சகலரையும்அமைதிப்படுத்தியசிவகுமார்சுஹாசினியைமேடைக்குஅழைத்து தமிழிசையைப்பற்றிகேள்விகேட்டுவிட்டுஅவமானப்படுத்துகிறார்.தமிழிசையின்பெருமையைவிபரிக்கிறார்.சுஹாசினிஅப்போதுதமிழ்பாடல்ஒன்றைப்பாடிரசிகர்களின்ஆதரவைப்பெறும்படிசவாலவிடுக்கிறார்சிவகுமார்.பாடறியேன்படிப்பறியேன்பள்ளிக்கூடம்தான்அறியேன்ஏடறியேன்எழுத்தறியேன்எழுத்துவகைநான்அறியேன்என்றுபாடியவாறுகைவிரலைசுண்டிதாளம்போடுகிறார்சுஹாசினி.சுஹாசினியின்இசையில்இலயித்தசிவகுமாரின்மிருதங்கவித்துவான்டெல்லிகணேஷ்மிருதங்கம்வாசிக்கதயாராகுகிறார்.தன்னைசுதாகரித்தடில்லிகணேஷ்கையைகட்டிககொண்டு இருக்கிறார். சிவகுமாரின்கண்அசைவின்பின்மிருதங்கம்இசைக்கிறார்டெல்லிகணேஷ்.சிவகுமாரின்கையசைவின்பின்னர்வயலின்கலைஞரும்சுஹாசினியின்பாடலுக்குபின்னணிஇசை வழங்குகிறார். தமிழ் பாடலை பாடி விட்டு சிவகுமார் பாடிய கர்நாடக இசைப் பாடலைபாடிமுடிக்கிறார்சுஹாசினி.சுஹாசினியின்தமிழ்இசைபாடலில்மயங்கியரசிகர்கள்கைதட்டிஆரவாரம்செய்கிறார்கள்.சிவகுமார் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி வேண்டா வெறுப்பாகக் கை தட்டுகிறார்.
       சிவகுமாரின்கர்நாடகஇசையில்சுஹாசினியும்சுஹாசினியின்தமிழ்இசையில்சிவகுமாரும்மயங்குகிறார்.சிவகுமாரின்நண்பர்நீதிபதியின்வீட்டில்சுஹாசினியைபாடும்படிகேட்கிறார்கள்.அப்போது நான் ஒரு சிந்து என்ற பாடலை பாடுகின்றார். அப்பாடலின் வரிகள் அனைத்தும் சுஹாசினியின் வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன. தாயும் மகளும்ஒருவரைஒருவர்உறவுகூறமுடியாத நிலையில் வாழ்வதை வைரமுத்து உணர்ச்சிகரமான வரிகளில் வடித்துள்ளார்.
இசையைப்பற்றி ஆய்வு செய்வதற்காக முனைந்த சிவகுமாரும் சுஹாசினியும் இசை பற்றியே நாள் முழுவதும் கதைக்கிறார்கள். சிவகுமாரின் மனைவி சுஹாசினிக்கு கணவன் மீதும் சுஹாசினி மீதும் சந்தேகம் ஏற்படுகிறது. இருவரும் மறுக்கின்றனர். விதி இருவரையும் சேர்க்கிறது. எதுவெல்லாம் செய்யக் கூடாது என்று சிவகுமார் கூறினாரோ அவையெல்லாவற்றையும் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். சிவகுமாரின் இசையைப் பணத்தால் வாங்க ஒருவர் முயற்சித்த போது இசை மீது கொண்ட விசுவாசத்தால் அவனை விரட்டியடிக்கிறார். மதுவுக்கு அடிமையான சிவகுமார் மது போத்தலுக்கா தன்னால் விரட்டப்பட்டவனிடம் சரணடைந்து தண்ணித்தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான் என்று பாடுகின்றார்.

சிவகுமார் மீது மதிப்பு வைத்திருந்தவர்கள் அவரின் கெட்ட நடத்தையால் அவரை விட்டு விலகுகின்றனர். இசை உலகில் அவருக்கிருந்த மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போகிறது. இசை உலகில் அவரது கெõடி மீண்டும் பறக்க வேண்டும் என்று சுஹாசினியும் சுலக்சனாவும் விரும்புகின்றனர். சிவகுமாருடன் ஏற்பட்ட உறவால் தாயாகிய சுஹாசினியும் குழந்தையைப் பெற்று சுலக்சனாவிடம் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார். தன் தவறுகளை உணர்ந்த சிவகுமார் மீண்டும் இசை உலகில் கொடி கட்டிப் பறக்கிறார்.

அன்பு, அடக்கம், பொறுமை நிறைந்த மனைவி வீட்டில் இருக்க இசையைப் பற்றிப் படிக்க வந்த ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கதாநாயகனை தமிழ் ரசிகர்கள் வெறுக்கவில்லை. வெள்ளி விழாக் கொண்டாடிய இப்படம் பின்னாளில் பாடகி சித்ராவுக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. சிவகுமார் இசைக் கலைஞராக வாழ்ந்தார். இப்படியும் அப்பாவிப் பெண்ணா என்று ஆச்சரியப்பட வைக்கிறார் சுலக்சனா. சுஹாசினியின் சுறுசுறுப்பும் உருக்கமும் மனதில் பதிந்துவிட்டது. டெல்லி கணேஷ், கனகராஜ் ஆகியோரின் நகைச்சுவை படத்துக்கு கலகலப்பூட்டியது. மணிமாலா சிவச்சந்திரன் மீரா ஆகியோர் பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர்.

சுஹாசினியின் பெயர் சிந்து, சுலக்சனாவின் பெயர் பைரவி. இரண்டு கதாநõயகிகளின் பெயரை இணைத்து சிந்து பைரவி என்று பெயரிட்டார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் பத்து வருடங்களுக்கு முன்னர் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் பெண் பாத்திரங்களுக்கு ராகங்களின் பெயரைச் சூட்டியது போலவே சிந்துபைரவி படத்தின் இரண்டு கதாநாயகிகளுக்கும் ராகங்களின் பெயரைச் சூட்டினார். படத்தின் பெயரும் ராகத்தின் பெயரில் அமைந்துள்ளது.

சிந்துபைரவி படத்தில் சுலக்சனாவைத் தவிர அனைத்துப் பாத்திரங்களும் இசை ஞானம் உள்ளவர்கள் நீதிபதியின் கார்ச்சாரதியே இசையைப் பற்றி விளக்கமளிக்கிறார். வைரமுத்துவின் வரிகள் அனைத்தும் படத்தின் கதைக்கு வலுச் சேர்க்கின்றன. இசைஞானி இளையராஜா இசை வேள்வியை நடத்தியுள்ளார். டாக்டர் கே.@ஜ. ஜேசுதாஸ் சின்னக்குயில் சித்ரா ஆகியோரின் குரல்களின் பாடல்கள் மனதைவிட்டு வெளியேற மறுக்கின்றன.

ரமணி
மித்திரன்03/06/12

Wednesday, February 22, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள்22

அழகான கிராமத்துப் பெண் அழகில்லாத கிராமத்தவனை மணப்பதனால் ஏற்பட்ட உணர்வுப் போராட்டமே ரோஜாப்பூ ரவிக்கைக்காரி.
வண்டிச்சோலை என்ற அழகான கிராமத்தில்செம்பட்ட என்ற இளைஞன். அந்த ஊரில் உள்ள அனைவரும் அவனை செம்பட்ட என்றே அழைப்பார்கள். அழுக்கான உடையும் அவலட்ச‌ணமாக உள்ள அவனை முதன் முதலில் பார்ப்பவர்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். அந்த கிராமத்திலுள்ள ச‌கலரின்தேவைகளையும் நிறைவேவற்றுபவன். அக்கிராமமக்கள் அவனிடத்தில் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு செம்பட்டபோபாகும்போது தமக்குதேதவையானவைகளை ச‌கலரும் சொல்லி விடுவார்கள். அவர்கள் சொல்லிவிட்ட பொருட்களை மறக்காமல் வாங்கி வந்து அவர்களிடம் கொடுப்பான் செம்பட்ட.
செம்பட்டயாக சிவகுமார் மிக இயல்பாக நடித்தார். சிவகுமாரின் மனைவி தீபா மிகவும் அழகானவள். தன் அழகு பற்றி மிகப் பெருமைக் கொள்வாள். தன் கணவன் அழகற்றவன் என்ற எண்ணம் தீபாவின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. வெறுப்புடனேயே கணவனுடன் வாழ்ந்து வந்தாள் தீபா. அந்த கிராமத்துக்கு வன இலாகா அதிகாரியாக வருகிறார் சிவச்ச‌ந்திரன். சிவச்ச‌ந்திரனின் அழகும் நாகரிக நடை உடை பாவனையும் தீபாவைக் கவர்ந்துவிட்டது.
தீபாவும் சிவச்ச‌ந்திரனும் நெருங்கி பழகுகின்றார்கள். சிவச்ச‌ந்திரனின் அழகில் மயங்கிய தீபா கால போக்கில் சிவச்ச‌ந்திரனிடம் தன்னை@ய இழக்கிறாள். தீபாவுக்கும் சிவச்ச‌ந்திரனுக்கும் இடையேயான உறவு பற்றி ஊர் மக்களுக்கு தெரிய வருகிறது. தீபாவைப் பற்றி சிவகுமாரிடம் ஊர் மக்கள் கூறுகின்றனர். தன் மனைவி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள சிவகுமார். அவற்றை நம்பவில்லை. சிவச்ச‌ந்திரனுடன் தீபா ஊரை விட்டு ஓடியதால் அதிர்ச்சியில் சிவகுமார்தற்கொலைசெய்கிறார் இறந்துவிடுகிறார்.
சிவகுமார், தீபா, சிவச்ச‌ந்திரன், வினு ச‌க்கரவர்த்தி, ஹெரான் ராமசாமி ஆகியோர் நடித்தனர். சிவகுமாரின் 100 வது படமான ரோஜாப்பூ ரவிக்கைக்காரி 100 நாட்கள் ஓடி வெற்றிவிழா கொண்டாடியது. வச‌னம் கிருஷ்ணா இயக்கம் இரட்டையர் தேவாஜ்மோகன்.
புலமைப் பித்தன், கங்கை அமரன் ஆகியோரின் பாடல்களுக்கு இமை அமைத்தவர் இளையராஜா. வெத்தல வெத்தல வெத்தலயோ, மாமன் ஒரு நாள் மல்லிகை பூ கொடுத்தான், என்னுள் எங்கோ ஏங்கும் கீதம், உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச‌ கிளி உச்சி மலைப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
ரமணி
மித்திரன் 04/02/12