Wednesday, August 31, 2022

பேயர்ன் மூனிச் FC அணியில் மது கோப்பையை ஏந்தாத வீரர்கள்

ஜேர்மன் நாட்டு உதைபந்தாட்ட  கிளப் அணிகளில் ஒன்றான பேயர்ன் மூனிச் அணி பாரம்பரிய போட்டோஷூட்டை நடத்தியுள்ளது. அதில் பங்கேற்ற வீரர்களில் இருவர் தங்கள் மதத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாக மது கோப்பையை கையில் ஏந்தாமல் போஸ் கொடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

தற்போது அந்த அணி  ஜேர்மன் நாட்டில் நடைபெற்று வரும் Bஉன்டெச்லிக தொடரில் விளையாடி வருகிறது. ஓக்டொபெர்fஎச்ட் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாரம்பரிய வழக்கப்படி பேயர்ன் அணி வீரர்கள் மது கோப்பையை கையில் ஏந்தியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அந்த அணியில் இடம் பெற்று விளையாடி வரும் சாடியோ மானே, நௌசைர் மஸ்ரௌய் ஆகிய  இரண்டு  வீரர்களும் மது கோப்பையை கையில் ஏந்தாமல் போட்டோ எடுத்துள்ளனர்.

அவர்கள் இருவரும் இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருபவர்கள். அதன் காரணமாக தங்க மத நம்பிக்கையின் அடிப்படையில் அதனை தவிர்த்துள்ளனர். அவர்களது நம்பிக்கையை பேயர்ன் அணி பின்பற்ற அனுமதித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் நடப்பு சீசனில் தான் அந்த அணியுடன் இணைந்துள்ளனர்.

 விளையாட்டு உலகில் வீரர்கள் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கை காரணமாக கடந்த காலங்களில் இது போல செய்துள்ளனர். கொக்க கோலா பாட்டிலை தள்ளிவைத்து ரொனால்டோ, உஸ்மான் கவாஜாவுக்காக ஆஷஸ் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஷாம்பெயின் கொண்டாட்டத்தை தவிர்த்த அவுஸ்திரேலிய வீரர்கள் என பலரை உதாரணமாக சொல்லலாம். சில வீரர்கள் தங்கள் ஜெர்சியில் மது வஸ்துவின் பெயரை இடம் பெற செய்யாமல் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, August 30, 2022

பாகிஸ்தானை வென்றது இந்தியா

ஆசிய கோப்பை ரி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ஓட்டங்கள் எடுத்தது  தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். . கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாநவாஸ் தஹானி 6 பந்தில் 16 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்களையும்,, ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெகளையும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 49 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து விராட் கோலி 35 ஓட்டங்களில்  ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடினார். சூர்யகுமார் யாதவ் 18 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 41 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் 9 ஓட்டங்கள் கிடைத்தன. 18வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 10 ரன்னும், 19வது ஓவரில் 3 பவுண்டரி உள்பட 14 ரன்னும் கிடைத்தது. ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஜோடி 50 ஓட்டங்களை கடந்து அசத்தியது. ஜடேஜா 35 ஓட்டங்களில்.   இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங் களை எடுத்து   வெற்றி பெற்றது. பாண்ட்யா 33 ஓட்டங்களுடன்  ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆட்டநாயகனாக ஹர்த்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளனர்.  இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்சில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன் ஆகஸ்ட் 7-ந் திகதி நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ரி௨0 போட்டியில் அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தனர். அந்த ஆட்டத்தில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், அக்சர் படேல், குல்தீப் யாதவ், தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். இதன் மூலம், சர்வதேச ரி20 வரலாற்றில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்துவது அதுவே முதல்முறை என்ற சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 இந்தியா கப்டன்   ரோகித் சர்மா 12 ஓட்டங்களில்   ஆட்டமிழந்தார். முன்னதாக ரோகித் சர்மா 12 ஓட்டங்கள் எடுத்திருந்த போது சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கப்திலை பின்னுக்குத் தள்ளினார். ரோகித் சர்மா இதுவரை 133 ரி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,499 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 2-வது, 3-வது இடங்களில் முறையே கப்தில் (3,497), விராட் கோலி (3,343) ஆகியோர் உள்ளனர்.

  ஒரு போட்டியில் 30-க்கு அதிகமான ஓட்டங்கள் , 3 விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா தகர்த்துள்ளார். ஹர்திக் பாண்டியா மூன்று முறையும், யுவராஜ் 2 முறையும் 30-க்கு அதிகமான ஓட்டங்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்துள்ளனர். மேலும் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் (16 - 20) அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரர் என்ற டோனியின் சாதனையையும் இவர் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா (34*) இந்திய அணியின் முன்னாள் கப்டன் எம்எஸ் டோனி (34) இவர்களுக்கு அடுத்தபடியாக யுவராஜ் சிங் (31) உள்ளார்.

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் 1000க்கும் அதிகமானோர் மரனமானதால்  பாகிஸ்தான் வீரர்கள் கறுப்புப்பட்டி அணிந்து விளையாடினர்.

 

 

 

Monday, August 29, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 32


  தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், காமெடியன் ஆகிய பாத்திரங்களில்  நடிப்பவர்கள் தொடர்ந்தும் அதே பாத்திரங்களில் நடிப்பார்கள். விதி விலக்காக சிலர் மாரி நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்கள். சிவாஜி கணேசன் கதாநாயகனானக் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தபோதுவில்லனாக நடித்து அசத்தினார்.இளம் வாலிப வயதில்  62 வயது  முதியவராக வி.கே.ராமசாமி நடித்தார். நகைச்சுவை நடிகரான நாகேஷ் குணசித்திர பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை  கலங்க வைத்தார்.வில்லனாக அறிமுகமான ரஜினி,சத்தியராஜ்,சரத்குமார் ஆகியோர் கதாநாயகனாகி  விட்டனர். விஜய் சேதுபதி வில்லன் பாத்திரத்தை விரும்பி ஏற்கிறார். இவற்றை தமிழ் சினிமாவின்  மாற்றங்கள் எனலாம்.

சிவாஜி,எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழகத்தின் ஜேம்ஸ் பொண்ட்  என்ற பட்டத்துடன் ஜொலித்த ஜெய்சங்கர் வில்லனாக நடிக்கப்போகிறார் என்ற தகவல்  வெளியானதும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், ஜெய்சங்கர் மறுப்பெதுவும் தெரிவிக்காமல் உடனடியாக ஒப்புக்கொண்டது அவரது ரசிகர்களுக்குத்  தெரியாது. ஜெய்சங்கரை மட்டுமல்லாது முத்துராமனையும் வில்லனாக்கினார்கள். கராத்தே மணியை வில்லனக நடிக்கக் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். பினர் ரஜினியின் பிரதான வில்லனாக கராத்தே மணி விளங்கினார்.

சினிமாவில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் ஒதுங்க் இருந்த ஏவிஎம் நிறுவனம் மீண்டும் படம் தயாரிக்கத் திட்டமிட்டது. கதாநாயகனாக  கமல்  நடிக்க அதை கே.பாலசந்தர் இயக்கப்போவதாகவும்,  இன்னொரு படத்தி கே. பாக்கியராஜ இயக்குவதாகவும்  அறிவிப்பு வெளியானது.  அதற்கான ஒப்பந்தங்களும்  முடிக்கப்பட்டன. திட்டமிட்டபடி  தொடங்க முடியாததால் இரண்டு படங்கலும் கைவிடப்பட்டனர்.   பஞ்சு அருணாச்சலத்துக்கு ரஜினிகாந்த்   கொடுத்திருந்த கால்ஷீட்டை ஏவி.எம். நிறுவனத்துக்காக  விட்டுக் கொடுக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார் ஏவி.எம்.சரவணன். சரவணன் கேட்டதால் மறுப்புச் சொல்லாத பஞ்சு அருணாச்சலம் விட்டுக்கொடுத்தார்.

ரஜினி கதாநாயகனாக நடிக்கும் அந்தப் படத்தில் வில்லனாக நடிக்க யாரைத் தெரிவு செய்வதென்பதில்  குழம்பினார்கள். அந்தப் படத்தில் ஜெய்சங்கரை வில்லனாக நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என  பஞ்சு அருணாச்சலம் தெரிவித்தார். அந்த யோசனை அனைவருக்கும் புதியதாக  இருந்தது. ஜெய்சங்கர் இதற்குச் சம்மதிப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கேட்க யாருக்கும் துணிவு இல்லை. ஜெய்சங்கரின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதால் பஞ்சு அருணாசலம்  தயங்கினார்.என்னை கதாநாயகனாகப் பார்த்த நீயா வில்லனாக்குகிறாய் எனக் கேட்பார் என தயங்கினார்.அந்தப் பிரச்சினைக்கு ஏவிஎம் சர்வணன்  முற்றுப்புள்ளி வைத்தர். ஜெய்சங்கருடன் தான் கதிப்பதாகத் தெரிவித்தார்.

ஜெய்சங்கரைச் சந்தித்த சரவணன் தயங்கித் தயங்கி,  நாங்கள் ரஜினிகாந்தை வைத்து அடுத்து எடுக்கவிருக்கும் ‘முரட்டுக் காளை’படத்தில் வித்தியாசமான ஒரு வில்லன் பாத்திரம் இருக்கிறது. அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நான், பஞ்சு, முத்துராமன் ஆகிய அனைவரும் நினைக்கிறோம்…”என்று சரவணன்  சொன்ன அடுத்த நிமிடமே, “நான் நடிக்கிறேன்…” என்று கூறிவிட்டார் ஜெய்சங்கர்.

“நீங்கள் நன்கு யோசித்து உங்கள் முடிவை சொன்னால் போதும்” என்று சரவணன் சொன்னபோது, “இதில் யோசிக்க என்ன இருக்கிறது. இங்கு இருக்கும் நீங்கள், பஞ்சு, முத்துராமன் ஆகிய மூவருமே என்னுடைய நலனில் அக்கறை கொண்டவர்கள். எனக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய விஷயத்தை செய்யச் சொல்லி நீங்கள் யாராவது சொல்வீர்களா..? அதனால்தான் யோசிக்காமல் நான் சரி என்று ஒப்புக் கொண்டேன்…” என்று ஜெய்சங்கர் சொன்னபோது நண்பர்கள் மேல் ஜெய்சங்கர் வைத்திருக்கும் நம்பிக்கையை பார்த்து அந்த மூவருமே அசந்து போனார்கள்.

முரட்டுக்காளை பெரு வெற்ரி பெற்று ஜெய்சங்கருக்கும் புதியதொரு திருப்பத்தைட்க் கொடுத்தது. கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கரை ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக் காளை’யில்  வில்லனாக அறிமுகப்படுத்தியது போல ஏவி.எம். நிறுவனத்துக்காக ரஜினி நடித்த இன்னொரு படமான ‘போக்கிரி ராஜா’ படத்தில் வில்லனாக முத்துராமனை அறிமுகப்படுத்தலாம்  என்ற யோசனையையும்   எம்.சரவணனுக்கு  சொன்னவர்  பஞ்சு அருணாச்சலம்தான்.“நல்ல யோசனை” என்று அவர் சொன்னதை அப்படியே ஒப்புக் கொண்ட சரவணன் அவர்கள்   “முத்துராமனைப்  பார்த்து பேசி அவரை   ஒப்புக் கொள்ள வைக்கும் பொறுப்பு உங்களுடையது” என்று அந்தப் பொறுப்பை பஞ்சு அருணாச்சலத்திடமே ஒப்படைத்தார்

முத்துராமனுக்கு வாய்ப்புகள்  குறைந்த நேரம் குணசித்திர பாத்திரங்க்கலில் நடித்தார். தொடர்ந்தும் அப்படியான பாத்திரத்தில் நடிக்காது ஒதுங்கி இருந்தார்.அந்த நேரம் அவரை சந்தித்த பஞ்சு அருணாச்சலம் ‘போக்கிரி ராஜா’ என்ற பெயரில் ரஜினிகாந்த இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ஒன்றை ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கின்ற விவரத்தை அவருக்கு எடுத்துக் கூறி அதில் வில்லன் வேடத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனைக் கேட்ட முத்துராமன் திகைத்து விட்டார். ஏவிஎம்மில் இருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்த்தபோது வில்லனாக நடிப்பதா என யோசித்தார்.சாதுரியமாக் மறுத்தார். நிறைய உழைத்துவிட்டேன். வீட்டில் ஓய்வாக இருக்க விரும்புகிறேன் என  முத்துராமன் சொன்னார்.

நெகட்டிவாக  இருந்தாலும் அது ஒரு நல்ல  பாத்திரம்  அதனால்  யோசனை செய்யாமல் இந்தப் படத்தில நடிங்க. இது காமெடி கலந்த வில்லன் பாத்திரம். நீங்க நடித்தால் நிச்சயம் அந்த கேரக்டர் வெற்றி பெறுவது மட்டுமில்லை. உங்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.இன்னொன்றையும் சொல்றேன் கேட்டுக்கங்க. இந்தப் படம் நிச்சயமாக மிகப் பெரிய வெற்றியை அடையும். அதுக்கு அப்புறம் பத்து சினிமா கம்பெனி கார்கள் தினமும் உங்க வீட்டு வாசல்ல கியூவில் நிற்கும். அதனால், எனக்காக நீங்கள் இந்தப் படத்தில் நடியுங்கள்.எல்லாம் சரியாக  வரும்…” என்றார் பஞ்சு அருணாச்சலம்.

முத்துராமன் அந்தப் பாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டவுடன்  அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையிலும் பல மாற்றங்களை செய்தார்  பஞ்சு. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தப்படத்தின் படப்படிப்பு முடிவடையும் முன்னரே ஒரு படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்றிருந்த  முத்துராமன் இறந்துவிட்டதால் அவருடைய பாத்திரம் அந்தப் படத்திலே சிறப்பாக அமையவில்லை.         


‘போக்கிரி ராஜா’வைத் தொடர்ந்து  ஏவி.எம். நிறுவனத்துக்காக பஞ்சு அருணாச்சலம்  பணியாற்றிய ரஜினிகாந்த் படமாக ‘பாயும் புலி’ அமைந்தது.  தனது தங்கையைக் கொன்றவனை கதாநாயகன்  பழி வாங்குகின்ற அந்தக் கதையில் கராட்டி கலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம்.

ஜெய்சங்கர், முத்துராமனைத் தொடர்ந்து புதிய வில்லனைத் தேடினார்கள். அப்போது இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரின் பெயர் கூறப்பட்டது. அவர் நடிக்க  மறுத்துவிட்டார். கராட்டி படம் என்பதால் கராட்டிமணி வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிலநாட்களின்  பின்னர் கதாநாயகனிடம் அடிவாங்கினால் மானவர்கள் மதிக்க மாட்டார்கள் என்று மறுத்துவிட்டர். ஜெய்சங்கருக்கு அழைப்புச் சென்றது.

 நடந்தது எல்லாவற்றையும் அவருக்கு விளக்கமாகக் கூறி “வில்லன் பாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டவுடன் தனது சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து சரவணன் அவர்களிடம் நீட்டினார் அவர்.அந்தக் காகிதத்தில் “கராத்தே மணியால் ஏவி.எம். நிறுவனத்துக்கு ஏதோ சிக்கல். அதனால் அந்த பாத்திரத்தில் நடிக்கத்தான் என்னை அழைத்திருக்கிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்ளப் போகிறேன்…” என்று எழுதி வைத்திருந்தார் அவர்.

“அன்று காலைவரை அந்தப் பாத்திரத்துக்காக அவரை அழைக்கப்  போகிறோம் என்று எங்களுக்கே தெரியாது. ஆனால், அவர் எப்படி எல்லாவற்றையும் சரியாக கணித்து எழுதியிருந்தார் என்று எங்கள் எல்லோருக்குமே ஆச்சர்யம்” என்று அந்த நிகழ்ச்சி பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் பஞ்சு அருணாச்சலம்.

வில்லனாக நடிக்க மறுத்த கராட்டி மணி, ரஜினியின்  சில படங்களுக்கு வில்லனாக நடித்தார்.  அவர் அன்புக்கு நான் அடிமை, ரங்கா, அஞ்சாத நெஞ்சங்கள், விடியும் வரை காத்திரு தங்ககோப்பை, கோழி கூவுது போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார்.

 

உக்ரைனை உலுக்கிய ஆறு மாத போர்

உலக வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யாவின் படையெடுப்பால உக்ரைன் சின்னாபின்னமாகி உள்ளது. சுண்டைக்காய் நாடான உக்ரைனை நசுக்கி விடலாம் என்ற ரஷ்யாவின் நோக்கம் நிறைவேறவில்லை. வல்லரசின் கோர யுத்தத்துக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமன  யுத்தம் ஆறுமாதங்களை எட்டியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைனில் மட்டும் இதுவரை 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. உக்ரைன் மீது பல பகுதிகளிலும் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்தன. உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா முதலில் கூறியது.

ஆனால், இதற்கு மாறாக குடியிருப்பு கட்டிடங்களையும்,மக்கள் கூடும் ரயில் நிலையங்களையும், வைத்தியசாலைகளையும்  ரஷ்ய படைகளின் குண்டுகள் பதம் பார்த்தன. உக்ரைனின் கெர்சன் நகரைத்தான் முதன் முதலாக கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் தொடர்ந்து பல இடங்களை அடுத்தடுத்து கைப்பற்றிவிடலாம் என்று எண்ணியது.  உக்ரைனின் பதில் தாக்குதல்  ரஷ்யாவுக்கு கடும் சவால் அளித்து வருகிறது. அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உதவிகள் அளித்து வருகின்றன. இதனால் ரஷ்யா எதிர்பார்த்ததைவிட உக்ரைன் அதிக பலம் கொண்டு சண்டையிட்டு வருகிறது.

ரஷ்யா கைப்பற்றிய நகரங்களை உக்ரைன் படைகள்  மீட்டு வருகின்றனர். இது ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. போரில் கைப்பற்றிய நகரங்களைப் பாதுகாக்க முடியாத ரஷ்யப் படைகள்  டாங்கிகளையும் கைவிட்டுச்ச் என்றுள்ளன. ஆறு மாதங்களை கடந்தும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கொஞ்சம் கூட உக்கிரம் குறையாமல் நீடித்துக்கொண்டே செல்கிறது.   குடியிருப்பு கட்டிடங்கள் மீதான தாக்குதல் போன்றவற்றால் உயிருக்கு அஞ்சி உக்ரைன் மக்கள் பலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக ஓடியுள்ளனர். சில இடங்களில் பொதுமக்கள் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டனர்.

 உக்ரைன் ரஷ்யா இடயேயான போரில் இதுவரை அப்பாவி பொதுமக்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரத்தை ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டு வெளியிட்டுள்ளது. ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை 5,514 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் 7,698 பேர் காயம் அடைந்து இருக்கலாம் என்று ஐநா மதிப்பிட்டுள்ளது. மேலும், போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் மூன்றில் ஒருவர் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர் எனவும், உக்ரைனை விட்டு வெளியேறியதில் 50 சதவீதத்தினர் குழந்தைகள் என்றும் எஸ்டோனியா நாட்டுக்கு மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   67 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர் மேலும், ஏவுகணை,வான்வழி தாக்குதல், ராக்கெட் தாக்குதல் ஆகியவை மூலமே பெரும்பாலான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 67 லட்சம் பேர் அகதிகளாக உக்ரைனில் இருந்து வெளியேறி உள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் அகதிகள் நெருக்கடியாக இது மாறக்கூடும் என்று ஐநா ஆணையர் எச்சரித்துள்ளார். இருந்தாலும் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் முதலில் உக்ரைனில் இருந்து அகதிகளாக சென்றனர். இவர்களில் சுமார் 40 லட்சம் பேர் மீண்டும் நாடு திரும்பிவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்பால் , உக்ரைனின் பொருளாதாரம்கழுத்தை நெரித்தது. உக்ரைன் மக்கள் பனயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர் மதிப்பான செதத்தை உக்ரைன் சந்தித்தது.  ரஷ்ய வீரர்கள்   போர்க்குற்றங்களை இழைத்துள்ளன. ஆயிரக்கணக்கான உக்ரேனிய குழந்தைகள் ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.  

ரஷ்ய இராணுவம் மிருகத்தனமான வன்முறையின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, ஆனால் ரஷ்ய ஆட்சி அதிகாரப்பூர்வமாக தங்கள் ஸ்லாவிக் சகோதரர்களாகக் கருதும் பொதுமக்களை   கற்பழிப்பு, சித்திரவதை , கொலை செய்வதில் வீரர்கள் ஈடுபடுவார்கள் என்று நினைத்துப் பார்க்க முடியாது. இன்னும், கியேவின் புறநகரில் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் இதைத்தான் செய்தார்கள். பெண்களுக்கும்  குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக அறியப்பட்ட மரியுபோலில் உள்ள தியேட்டர் மீது ரஷ்யா வேண்டுமென்றே குண்டு வீசியது.

உக்ரைன்  ஜனாதிபதி ஜெலென்ஸ்கி  நம் காலத்தின் சர்ச்சில் ஆகிவிட்டார். அவர் கியேவை விட்டு வெளியேறி மேற்கு உக்ரைன் அல்லது போலந்தில் இருந்து ஆட்சி செய்ய முன்வந்ததை நிராகரிப்பதன் மூலம் போரைத் தொடங்கினார். அவர் தனது தனிப்பட்ட வீரம் மற்றும் தைரியத்தால் உலகை ஊக்கப்படுத்தினார், அதே நேரத்தில் மேற்கத்திய அரசாங்கங்களை மேலும் செய்ய வென்று சுதந்திரத்தின் விலையை உலகிற்கு விளக்கினார்

ஒரு போர்த் தலைவராக, ஜெலென்ஸ்கி தனது தளபதிகளை மதித்து, பெரிய மூலோபாய முடிவுகளை அவர்களிடமே விட்டுவிடுவதில் நற்பெயரைக் கொண்டுள்ளார். அவர் உக்ரைனின் தீவிர பாதுகாவலராகவும் மாறினார். அவரது 2019 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பலர் ஜெலென்ஸ்கியின் தேசபக்தி மற்றும் உக்ரைனுக்கான அர்ப்பணிப்பு குறித்து கேள்வி எழுப்பினர். பெப்ரவரி 24 வரை, போரை முடிவுக்கு கொண்டுவர சமரசம் செய்து பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் காட்டினார். ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை.

உக்ரைன் ஒரு தோல்வியடைந்த நாடு அல்ல. ரஷ்ய படையெடுப்பு தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு, உக்ரைனின் வங்கி அமைப்பு தொடர்ந்து செயல்படுகிறது. உக்ரைன் பொதுத்துறை ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குகிறது. மருத்துவமனைகள் ,பாடசாலைகள்  ஆகியன  இன்னும் இயங்குகின்றன. மாநில இரயில்வே மில்லியன் கணக்கான உக்ரைனியர்களை பாதிப்பிலிருந்து வெளியேற்றியது. ரஷ்ய ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க மத்திய தேர்தல் தரவு மூடப்பட்டு வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டது. நாடு முழுவதும் மனிதாபிமான பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக அரசாங்க அமைச்சகங்கள் தன்னார்வலர்களுடன் கூட்டு சேர்ந்தன. உக்ரேனின் பலவீனமான அரசு நிறுவனங்கள் போரின் போது வியக்கத்தக்க வகையில் நீடித்து நிலைத்துள்ளன.

ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பில் சுமார் 50,000 கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த வீரர்களை இழந்துள்ளது மற்றும் கிட்டத்தட்ட 1,700 டாங்கிகள் அழிக்கப்பட்டதாக பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தலைவர் கூறுகிறார்.

உலக  நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைனை ஆக்கிரமித்த  புட்டின் அடுத்து என்ன செய்வதெனத் தெரியாது திகைத்து நிற்கிறார்.

Friday, August 26, 2022

முட்டைவிலையும் அரசியல் அதிரடியும்

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு விலை ஏற்றம் என்பனவற்றைத் தடுக்க அரசங்கம் எடுத்த முயற்சிகள் எவையும் கைகொடுக்கவில்லை. அரிசி,சீனி,பருப்பு,பால்மா,எரிவாயும்,எரிபொருள், மருந்து என்பனவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும், அதே விலையில் அவற்றைப் பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. சில பொருட்கள் கள்ளச் சந்தையில் தாராளமாகக் கிடைக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் வரிசையில் நின்று  டீசல், பெற்றோல் வாங்குவதை விட கூடுதல் விலையில் அவற்றை வாங்க பலர் விரும்புகிறார்கள்.

முட்டைவிலை கிடு கிடு என  உயர்ந்து விட்டது. அதனைக் கட்டுப்படுத்த  அரசாங்கம் எடுத்த  கடும் முயற்சி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.  முட்டையின் விலையை   வர்த்தமானியில்  வெளியிட்டதால் பண்ணையாளர்கள் கடுப்படைந்துள்ளனர். இலங்கையின் வரலாற்ரில் முதன் முதலாக முட்டைக்குக் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. புரதம், விற்றமின் அடங்கிய விலை குறைவான போஷாக்கு உணவான  முட்டையை வைத்து அரசியல் செய்யப்படுகிறது. சிறுவர்,நோயாளிகள், முதியவர் என அனைவருக்கு தேவையான உணவு முட்டை. அதே வேளை, மிக இலகுவாகவும், முறைந்த விலையிலும் வாங்கக்கூடிய பொருள்.

ஒரு வெள்ளை முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை (MRP)ரூ. 43 மற்றும் பழுப்பு முட்டைக்கு ரூ. 45 விதித்தது. இதனால், சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 நுகர்வோர் விவகார ஆணையத்துடன் (CAA), முட்டை உற்பத்தியாளர்கள் நடத்திய கூட்டத்தில், இரண்டு வகையான முட்டைகளையும் ஒரு முட்டையின் திருத்தப்பட்ட விலையான 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய அனுமதிக்க ஒப்புக்கொண்டனர்,   வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

திருத்தப்பட்ட புதிய விலையில் முட்டையை  உடனடியா விற்க முடியாத நிலை உள்ளது.  விலை முறைப்பு பற்ரிய அறிவித்தலை வர்த்த  மானியில் வெளியிட வேண்டும். உடனடியாக வெளியிடுவதால் அரசாங்கத்தின் அவசரம் பகிரங்கமாகிவிடும் என்ற நிலை உருவாகி உள்ளது. அடிக்கடி வெர்தமானிவெளியிட்டவர் கோட்டாபய ராஜபக்ஷ,  அதற்கக    'வர்த்தமானி ஜனாதிபதி' என்று அழைக்கப்பட்டார், சில நாட்களுக்குப் பிறகு மக்கள் எதிர்ப்பு காரணமாக அதை ரத்து செய்தார். எனவே, முட்டை விலை தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்து, புதியவர்த்தமானி வெளியிடப்பட்டால் தமக்குக் அப்பெயர் சூட்டப்படுமோ என அச்ச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்லது போலும்

 தங்களின் ஈகோவை முதன்மைப் படுத்தும் இதுபோன்ற புசிஃபூட் அதிகாரிகளுக்கு எதிராக அவர்களின் அந்தஸ்து பாராமல் நடவடிக்கை எடுக்க சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்.

இலங்கைக்குத் தேவையான முட்டை, கோழி  என்பன  சுதந்திரத்துக்கு முன்னர்  இந்தியாவில் இருந்து  ?றக்குமதி செய்யபட்டது.

 1953 இல் இலங்கையின் முதல் அந்நியச் செலாவணி (Fக்ஷ்) நெருக்கடியுடன் இணைந்து, அத்தகைய இறக்குமதிகள் கைவிடப்பட்டு உள்ளூர் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது. தற்போது, முட்டை மீதான இறக்குமதி வரிகள் ஒரு கிலோவுக்கு ரூ.110 என்ற பொது வரியாகவும், 12 சதவீத வாட் கட்டணமாகவும், 10 சதவீத 'பிஏஎல்' வரியாகவும் இருப்பதால், முட்டை இறக்குமதியை 'திறம்பட' தடுக்கிறது.

மோசமான பொருளாதார நெருக்கடி இருப்பதால முட்டைக்கான  இறக்குமதி வரி குறைக்கபடுவதற்கான சாத்தியப்பாடு  இல்லை. இந்த நிலையில் தொலைபேசி,கணினி,பிரெய்லி தட்டச்சுப்பொறிகள்,  மின்சார உபகரணங்கள் போன்ற பல பொருட்களின்  இறக்குமதிக்கு  அரசாங்கம் தடை விதித்குள்ளது. இந்தத் தடையால் கையிருப்பில் உள்ள  பொருட்கள்  மாயமாக மறைந்து விடும். கண்ணுக்குத் தெரியாத வகையில் அவற்றின் விலை கிடு கிடு என  உயர்ந்து விடும்.

கால்நடை தீவன தட்டுப்பாடு காரணமாக கோழி, முட்டை என்பனவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.டொலர் தட்டுப்பாடு காரணமாக கடன் கடிதம் வழங்க முடியாமல் கோழி தீவனம் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.நாட்டில் உள்ள பல கோழி மற்றும் முட்டை பண்ணைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல மூடப்படும் என கால்நடை தீவன உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் சுசில் குமார ஹீன்கெந்த தெரிவித்தார்.

மக்காச்சோள தட்டுப்பாடு ,மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் இந்த நிலைக்கு காரணம் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.விலங்கு தீனிக்காக வருடந்தாந்தம் 300 மில்லியன் டொலர் தேவைப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மாதாந்தம் 30 மில்லியன் டொலராவது விலங்கு உணவிற்காக வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கால்நடை உணவுப் பொருட்கள்  கிடைக்காமையால் பண்ணையாளர்கள் சிரமப்ப்டுகின்றனர். போதிய  உணவு இல்லாமையால் பால் சேகரிப்பு குறைந்துள்ளது. பெற்றோல் டீசல் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசங்கம்  இவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.