Sunday, February 7, 2021

நூறாவது போட்டியில் இரட்டைச் சதம் ஜோ ரூட் சாதனை

இந்தியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் 218 ஓட்டங்களில் ஜோ ரூட் ஆட்டமிழந்தார்.   இரட்டைச் சதம் அடித்த இங்கிலாந்தின் கப்டன் ஜோ ரூட்  புதிய சாதனைகள் படைத்ததுடன் சச்சின் , இன்சமாம் உல் ஹக் ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்தார்.

நூறாவது போட்டியில்  இரட்டைச் சதம் அடித்த முதலாவது வீரர், அதேவேளை சிக்ஸருடன் இரட்டைச் சதம் அடித்த இங்கிலந்தின் வீரர் என்ற புதிய மைல் மைல் கல்லை எட்டினார்.

2005 ஆம் ஆண்டு நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இன்சமாம் உல் ஹக்   184 ஓட்டங்கள் எடுத்ததை  ஜோ ரூட் முறியடித்தார். இன்சமாம் உல் ஹக் இந்தியாவுக்கு எதிரான் போட்டியிலேயே 184  ஓட்டங்கள் எடுத்தார்.

நூறு டெஸ்ட் போட்டிகளில் 8.405 ஓட்டங்கள் எடுத்த சச்சினின் சாதனையை முறியடித்த ஜோரூட் 8,458 ஓட்டங்கள் எடுத்தார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்களான  டேவிட் கோவர் [8,235] , அலெக்ஸ் டீவேட் [8,476] ஆகியோரை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தார் ஜோ ரூட்.  12,472 ஓட்டங்களிடன் அலெக்ஸ் குக் முதலாம் இடத்திலும், 8,900 ஓட்டங்களுடன் கிரகம் கூச் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர்.  அடுத்தடுத்த  போட்டிகலில் இதே  போன்றுவிளையாடினால் கிரகம் கூச்சை  பின்னுக்குத் தள்ளி  இரண்டாம் இடத்துக்கு ஜோ ரூட் முன்னேறிவிடுவார்.

ஜோ ரூட்டுக்கு இது ஐந்தாவது இரட்டைச் சதம். 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 254 ஓட்டங்கள், 2014 ஆண்டு இலங்கைக்கு எதிராக 200 ஓட்டங்கள், 2021 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு எதிராக 224 ஓட்டங்கள், 2019 ஆம் ஆண்டு  நியூஸிலாந்துக்கு எதிராக 226 ஓட்டங்கள் அடித்தார்.

தற்போது டெஸ்ட் விளையாடும் வீரர்களில் 150 ஓட்டங்கலுக்கு மேல் எடுத்த வீரர்கள் பட்டியலில்  கோஹ்லியுடன் முதலாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டார். இருஅவ்ரும் தலா 10 முறை 150 ஓட்டங்கலுக்கு மேல் அடித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய வீரர் ஸ்மித், நியூஸிலாந்து இவ்வ்ர வில்லையம்சன் ஆகியோர் தல  8 முறை 150 ஓட்டங்கலுக்கு மேல் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளனர். இந்திய வீரர் புஜாரா 7 முறை 150 ஓட்டங்கலுக்கு மேல் அடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.

மூன்று டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 150  ஓட்டங்களுக்கு மேல் அடித்த நூறாவது வீரராக ஜூ ரூட்டின் பெயர் பதியப்பட்டுள்ளது.  இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 228 ஓட்டங்களும், 186 ஓட்டங்களும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 218 ஓட்டங்களும் அடித்தார். முன்னதாஅக் இங்கிலாந்து வீரர் ஹம் மண்ட் [ 1929], அவுஸ்திரேலிய வீரர் பிரட் மன்  [1937], பகிஸ்தான் வீரர் முடார் நாஸர் [1983], பாகிஸ்தான் வீரர் ஜகிர் அபாஸ் [ 1984] , இலங்கை வீரர் சங்ககார [2007]  ஆகியோர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் 150 ஓட்டங்களுக்கு மேல் அடித்தனர்.

 இங்கிலந்து கப்டன் ஒருவர் 45 ஆனுகளின் பின்னர் முதன்  முதலாக இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் இரட்டைச் சதம் அடித்துள்ளார். ஜோ ரூட்டின் அறிமுகப் போட்டியும், 50 ஆவது போட்டியும், 100 ஆவது  போட்டியும் இந்தியாவுக்கு  எதிராக  இந்தியாவில் நடைபெற்றன.

Wednesday, February 3, 2021

சசிகலாவுக்கு அச்சப்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் தலைவர்கள்

 ஜெயலலிதா உயிர்ப்புடன் இருக்கும் வரை அவரைப் பாதுகாக்கும்  அரணாக விளங்கியவர் சகிகலா.  சசிகலா கண் அசைத்தால்தான் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியும். ஜெயலலிதாவை ”அம்மா” என்றும் சசிகலாவை  “சின்னம்மா” என்றும் போற்றியவர்கள் பதவியை அனுபவிப்பதற்காக சசிகலாவைத் தூக்கி எறிந்தனர்.

அதிகாரத்துக்கு ஆசைப்பட்ட சசிகலா தமிழக முதல்வராக விரும்பினார். சிறைத்தண்டனை அதற்கு முட்டுக்கட்டை போட்டது.  ஜெயலலிதாவின் விசுவாசியான பன்னீர்ச்செல்வதை நீக்கிவிட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார் சசிகலா.

வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு, ஊழல் குற்றச்சாடுகளில்  சைலலா சிறைக்குச் சென்றபோது  ஆட்சியைத் தக்க வைப்பதற்காக சசிகலாவைத் தூக்கி எறிந்துவிட்டு பன்ன்னீருடன் கைகோர்த்தார் எடப்பாடி.

 நான்கு வருட சிறைவாசத்தின் பின்னர் சசிகலா வெளியே வரும் ஜனவரி  27 ஆம் திகதி அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.  ஊடக  வெளிச்சம் சசிகலாவின் மீது பட்டுவிடக்கூடாது  என்பதற்காக அதே நாள் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் திறக்க ஏற்பாடு செய்தார்கள்.


சிறைச்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த சசிகலா வைத்திய சாலையில் விடுதலையானார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் எதிர்பார்த்தது போன்று  சசிகலா தமிழகத்துக்கு வரவில்லை. ஜெயலலிதா பாவித்த காரில் அண்ணா திராவிட முன்னேறக் கழகக் கொடியை ஏற்றி  தனது அரசியல் எதிரிகளைக் கதிகலங்க வைத்தார். சசிகலாவின் இச்செயல்   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பதை தான் இருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.

சிறையில் இருந்து விடுதலையான சசிகலா நிறையப் பேசுவார் என்ற எதிர் பார்ப்பு இருந்தது. ஜெயலலிதாவின் காரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கொடியைக் கட்டி அமைதியாகத் தனது எதிர்ப்பை  வெளிக்காட்டியுள்ளார்.

சசிகலாவை கட்சியில் சேர்க்க மாட்டேன் என எடப்பாடியார் டில்லியில் முழக்கமிட்டார். ஆனால், அவரின் கட்சியின் முக்கைய பிரமுகர்கள் சசிகலாவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். சசிகலாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவு கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் இருக்கிறது.  கழகக்  கொடியைக் கட்டியதற்காக சசிகலாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாகக் கூறினார். ஆனால், இதுவரை அப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

சசிகலாவை மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சி முயற்சி செய்கிறது. எடப்பாடியும், பன்னீரும் தங்கள் பதவியைக் காப்பாற்ற முயற்சி  செய்கிறார்களே தவிர கட்சியின் முன்னேற்றத்துகுரிய வேலைத் திட்டங்களை முறையாக முன்னெடுக்கவில்லை. கட்சியை ஒழுங்கமைப்பதற்கு சசிகலாவின் தலைமைத்துவம் தேவை எனப்தை பாரதீய ஜனதா நம்புகிறது.

சசிகலாவின் வருகையால் தனது முதல்வர்  பறிக்கப்படும் என்பதை எடப்பாடி நன்கு அறிவார்.  தனக்குத்ட் ஹுரோகம் செய்த எடப்பாடியின் பதவியை பறிப்பதே சசிகலாவின் முதல் வேலையாக இருக்கும். அமைதியாக நீட்டம் பார்க்கும் பன்னீருக்கு சிலவேளை அதிர்ஷ்டம் அடிக்கக்கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதைத் தவிர்ப்பதே பாரதீய ஜனதா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின்  குறிக்கோள்.  இரண்டு கட்சிகளும் இரண்டு துருவங்களாக நிற்பதால் ஸ்டாலின் பதற்றமிலாமல் பிரசாரம் செய்கிறார்.   தொடர்ந்து பத்து வருடங்களாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருப்பதால்  தமிழக மக்கள் மிகுந்த கோபத்தைல் இருக்கிறார்கள். மக்களின்  கோபத்தைத் தணிப்பதற்காக கவர்ச்சிகரமான திட்டங்களை எடப்பாடி அறிவிகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் திட்டங்களை பாரதீய ஜனதாவும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து நடை முறைப் படுத்துகின்றன.அமைச்சர்களும், தொண்டர்களும் சசிகலாவுடன் தொரபில் இருக்கிறார்களா என்பதை உளவுத் தகவல் மூலம் எடப்பாடி தெரிந்து வைத்துள்ளார்.  இதை எல்லாம் மீறி சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் தொகை அதிகரித்துள்ளது.

ஒன்றிரண்டு சுவரொட்டிகள்  முளைத்தபோது முன் எச்சரிக்கையாக அவற்றை வெளியிட்டவர்களை கட்சியில் இருந்து எடப்பாடி நீக்கினார்.   சசிகலாவை வரவேற்று பன்னீரின் ம்கனும் ஒரு சுவரொட்டி வெளியிட்டார். அவர் மீது எடப்பாடி நடவடிக்கை எடுக்கவில்லை.  ஜெயலலிதாவின் படமும் சசிகலாவின் படமும் இணைந்த சுவரொட்டி, சசிகலா, ஜெயலலிதா, தினகரன் ஆகியோரின் படங்களுடனான சுவரொட்டி, தினகரனின் படம் இல்லாத சுவரொட்டி என வகைவகையான சுவரொட்டிகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் வெளியிடுகின்றனர்.

இவை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் வெளியான சுவரொட்டி எடப்பாடிக்கும், பன்னீருக்கும் சவால் விடுவது போல் அமைந்துள்ளது. சசிகலாவை வரவேற்ரு ஒட்டப்பட்ட சுவரொட்டியில் எடப்பாடி, பன்னீர் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. சசிகலாவை எதிர்க்கும் இருவரின் படங்களுடன்  வெளியான சுவரொட்டி அரசியல்  அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் ஓய்வெடுக்கும் சசிகலா அடுத்த மாதம்  7 ஆம் திகதி தமிழகத்துகு விஜயம் செய்யவுள்ளார். நான்கு வருடங்கலுக்கு முன்னர்   ஜெயலலிதாவின் சமாதியில்  மூன்று முறை அடித்து சத்தியம் செய்தபினர்  சிறைக்குச் சென்ற  சசிகலா தமிழகத்துக்குள் நுழைந்ததும் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்வார். அங்கிருந்து ஆரம்பமாகும் அவர்  மீதான் ஊடக  வெளிச்சம் அண்ணா திராவிட முன்னாற்றக் கழகத் தலைவர்களின் கண்களில் கூச்சத்தை ஏற்படுத்தப்போவது உண்மை.

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் சசிகலாவின் வகிபாகம் தவிர்க்க முடியாதது. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வீழ்ச்சியை சசிகலாவால் தடுத்து நிறுத்த முடியாது. அண்ணா திராவிட  உரிமைப் பிரச்சினை சம்பந்தமாக சசிகலா தோடுத்த   வழக்கு நிலுவையில் உள்ளது. சசிகலா தனி ஆவர்த்தனம் தொடங்கினால் அண்ணா திராவிட முன்னாற்றக் கழகத்தில் பிளவுஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.ஜெயலலிதா உயிர்ப்புடன் இருக்கும் வரை அவரைப் பாதுகாக்கும்  அரணாக விளங்கியவர் சகிகலா.  சசிகலா கண் அசைத்தால்தான் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியும். ஜெயலலிதாவை ”அம்மா” என்றும் சசிகலாவை  “சின்னம்மா” என்றும் போற்றியவர்கள் பதவியை அனுபவிப்பதற்காக சசிகலாவைத் தூக்கி எறிந்தனர்.

அதிகாரத்துக்கு ஆசைப்பட்ட சசிகலா தமிழக முதல்வராக விரும்பினார். சிறைத்தண்டனை அதற்கு முட்டுக்கட்டை போட்டது.  ஜெயலலிதாவின் விசுவாசியான பன்னீர்ச்செல்வதை நீக்கிவிட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார் சசிகலா.

வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு, ஊழல் குற்றச்சாடுகளில்  சைலலா சிறைக்குச் சென்றபோது  ஆட்சியைத் தக்க வைப்பதற்காக சசிகலாவைத் தூக்கி எறிந்துவிட்டு பன்ன்னீருடன் கைகோர்த்தார் எடப்பாடி.

 நான்கு வருட சிறைவாசத்தின் பின்னர் சசிகலா வெளியே வரும் ஜனவரி  27 ஆம் திகதி அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.  ஊடக  வெளிச்சம் சசிகலாவின் மீது பட்டுவிடக்கூடாது  என்பதற்காக அதே நாள் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் திறக்க ஏற்பாடு செய்தார்கள்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த சசிகலா வைத்திய சாலையில் விடுதலையானார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் எதிர்பார்த்தது போன்று  சசிகலா தமிழகத்துக்கு வரவில்லை. ஜெயலலிதா பாவித்த காரில் அண்ணா திராவிட முன்னேறக் கழகக் கொடியை ஏற்றி  தனது அரசியல் எதிரிகளைக் கதிகலங்க வைத்தார். சசிகலாவின் இச்செயல்   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பதை தான் இருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.

சிறையில் இருந்து விடுதலையான சசிகலா நிறையப் பேசுவார் என்ற எதிர் பார்ப்பு இருந்தது. ஜெயலலிதாவின் காரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கொடியைக் கட்டி அமைதியாகத் தனது எதிர்ப்பை  வெளிக்காட்டியுள்ளார்.

சசிகலாவை கட்சியில் சேர்க்க மாட்டேன் என எடப்பாடியார் டில்லியில் முழக்கமிட்டார். ஆனால், அவரின் கட்சியின் முக்கைய பிரமுகர்கள் சசிகலாவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். சசிகலாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவு கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் இருக்கிறது.  கழகக்  கொடியைக் கட்டியதற்காக சசிகலாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாகக் கூறினார். ஆனால், இதுவரை அப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

சசிகலாவை மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சி முயற்சி செய்கிறது. எடப்பாடியும், பன்னீரும் தங்கள் பதவியைக் காப்பாற்ற முயற்சி  செய்கிறார்களே தவிர கட்சியின் முன்னேற்றத்துகுரிய வேலைத் திட்டங்களை முறையாக முன்னெடுக்கவில்லை. கட்சியை ஒழுங்கமைப்பதற்கு சசிகலாவின் தலைமைத்துவம் தேவை எனப்தை பாரதீய ஜனதா நம்புகிறது.

சசிகலாவின் வருகையால் தனது முதல்வர்  பறிக்கப்படும் என்பதை எடப்பாடி நன்கு அறிவார்.  தனக்குத்ட் ஹுரோகம் செய்த எடப்பாடியின் பதவியை பறிப்பதே சசிகலாவின் முதல் வேலையாக இருக்கும். அமைதியாக நீட்டம் பார்க்கும் பன்னீருக்கு சிலவேளை அதிர்ஷ்டம் அடிக்கக்கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதைத் தவிர்ப்பதே பாரதீய ஜனதா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின்  குறிக்கோள்.  இரண்டு கட்சிகளும் இரண்டு துருவங்களாக நிற்பதால் ஸ்டாலின் பதற்றமிலாமல் பிரசாரம் செய்கிறார்.   தொடர்ந்து பத்து வருடங்களாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருப்பதால்  தமிழக மக்கள் மிகுந்த கோபத்தைல் இருக்கிறார்கள். மக்களின்  கோபத்தைத் தணிப்பதற்காக கவர்ச்சிகரமான திட்டங்களை எடப்பாடி அறிவிகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் திட்டங்களை பாரதீய ஜனதாவும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து நடை முறைப் படுத்துகின்றன.அமைச்சர்களும், தொண்டர்களும் சசிகலாவுடன் தொரபில் இருக்கிறார்களா என்பதை உளவுத் தகவல் மூலம் எடப்பாடி தெரிந்து வைத்துள்ளார்.  இதை எல்லாம் மீறி சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் தொகை அதிகரித்துள்ளது.

ஒன்றிரண்டு சுவரொட்டிகள்  முளைத்தபோது முன் எச்சரிக்கையாக அவற்றை வெளியிட்டவர்களை கட்சியில் இருந்து எடப்பாடி நீக்கினார்.   சசிகலாவை வரவேற்று பன்னீரின் ம்கனும் ஒரு சுவரொட்டி வெளியிட்டார். அவர் மீது எடப்பாடி நடவடிக்கை எடுக்கவில்லை.  ஜெயலலிதாவின் படமும் சசிகலாவின் படமும் இணைந்த சுவரொட்டி, சசிகலா, ஜெயலலிதா, தினகரன் ஆகியோரின் படங்களுடனான சுவரொட்டி, தினகரனின் படம் இல்லாத சுவரொட்டி என வகைவகையான சுவரொட்டிகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் வெளியிடுகின்றனர்.

இவை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் வெளியான சுவரொட்டி எடப்பாடிக்கும், பன்னீருக்கும் சவால் விடுவது போல் அமைந்துள்ளது. சசிகலாவை வரவேற்ரு ஒட்டப்பட்ட சுவரொட்டியில் எடப்பாடி, பன்னீர் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. சசிகலாவை எதிர்க்கும் இருவரின் படங்களுடன்  வெளியான சுவரொட்டி அரசியல்  அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் ஓய்வெடுக்கும் சசிகலா அடுத்த மாதம்  7 ஆம் திகதி தமிழகத்துகு விஜயம் செய்யவுள்ளார். நான்கு வருடங்கலுக்கு முன்னர்   ஜெயலலிதாவின் சமாதியில்  மூன்று முறை அடித்து சத்தியம் செய்தபினர்  சிறைக்குச் சென்ற  சசிகலா தமிழகத்துக்குள் நுழைந்ததும் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்வார். அங்கிருந்து ஆரம்பமாகும் அவர்  மீதான் ஊடக  வெளிச்சம் அண்ணா திராவிட முன்னாற்றக் கழகத் தலைவர்களின் கண்களில் கூச்சத்தை ஏற்படுத்தப்போவது உண்மை.

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் சசிகலாவின் வகிபாகம் தவிர்க்க முடியாதது. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வீழ்ச்சியை சசிகலாவால் தடுத்து நிறுத்த முடியாது. அண்ணா திராவிட  உரிமைப் பிரச்சினை சம்பந்தமாக சசிகலா தோடுத்த   வழக்கு நிலுவையில் உள்ளது. சசிகலா தனி ஆவர்த்தனம் தொடங்கினால் அண்ணா திராவிட முன்னாற்றக் கழகத்தில் பிளவுஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.