Showing posts with label ஹங்கேரி. Show all posts
Showing posts with label ஹங்கேரி. Show all posts

Tuesday, November 2, 2021

மோசமான நடத்தைக்காக அபராதம் விதித்த பீபா


 சமீபத்திய சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகளில் இனவெறி தாக்குதல், பட்டாசு வெடித்தல், போத்தல் போன்ற பிற பொருட்களால் எறிதல்போன்ற  மோசமான நடத்தைக்காக 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக பீபா கடந்த  திங்களன்று அறிவித்தது.

உலக உதைபந்தாட்ட  ஆளும் குழுவின் ஒழுங்குமுறைக் குழுவின் தீர்ப்புகளின் பட்டியலில், ரசிகர்களால் இனவெறி கோஷம் எழுப்பப்பட்டு, புகை குண்டுகள் மற்றும் தடுக்கப்பட்ட படிக்கட்டுகள் உட்பட பாதுகாப்பு மீறல்கள் ஆகியவை அடங்கும்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன வெறி கோஷம் எழுப்பப்பட்டு போத்தல்கள் எறியப்பட்டதால் ஹங்கேரிக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

ஒரு போட்டி ரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்கினுள் நடைபெற்றது. ஒன்னொரு போட்டி இடைநிறுத்தப்பட்டது. இதேவேளை  வெளிநாட்டில் ந்டைபெறும் ஹங்கேரியின்  போட்டிக்கு அந்தாட்டு ரச்கர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. 281,000 சுவிஸ் பிராங்குகள் (266,000 யூரோக்கள்) அபராதம் ஆகியவற்றால் ஹங்கேரி பாதிக்கப்பட்டுள்ளது.

அல்பேனியா, மெக்ஸிக்கோ, பனாமா ஆகிய நாடுகளிலும் ரசிகர்கள் இல்லாமல் மூடிய   அரங்கத்தில் போட்டிகள் நடைபெற்றது.அதே நேரத்தில் போலந்து ரசிகர்கள் ஒரு வெளிநாட்டு போட்டியைப் பார்வையிடத்தடை விதிக்கப்பட்டது.

அர்ஜென்டீனா, சிலி, எல் சால்வடார், ஹோண்டுராஸ், மாண்டினீக்ரோ, பெரு ஆகிய நாடுகள் அனைத்தும் "குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களுடன்" விளையாட வேண்டும்.

பொலிவியாவுக்கு எதிரான   ஆட்டம் தாமதமாக துவங்கியதால் அர்ஜென்ரீனாவுக்கும் எச்சரிக்கை கிடைத்தது, உருகுவே சென்றபோது ரசிகர்களின் "பாரபட்சமான நடத்தை" காரணமாக ரசிகர்களின் தடைக்கு கூடுதலாக 30,000 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.

செப்டம்பர் தொடக்கத்தில் ஸ்ட்ராஸ்பேர்க்கில் பொஸ்னியா-ஹெர்ஸகோவினாவுடன் போட்டியின்  போது ஆதரவாளர்கள் முகமூடி அணியாததால் உலக சாம்பியனான பிரான்ஸுக்கு 2,000 சுவிஸ்-ஃபிராங்க் அபராதம் மற்ற தண்டனைகளில் அடங்கும்.

இரண்டாம் உலகப் போரில் நாஜிகளுக்காகப் போரிட்ட சோவியத் யூனியனைச் சேர்ந்த வீரர்களுக்கு ரசிகர்கள் பதாகையைக்  காட்டியதால் கஜகஸ்தானுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு ட்ரோன் தேசிய கீதத்தை இடைமறித்ததால் மால்டோவா தண்டிக்கப்படது.

 

Saturday, July 24, 2021

நூற்றாண்டைக் கடந்த ஒலிம்பிக் சம்பியனான ஜிம்னாஸ்டிக் ராணி


 ஒலிம்பிக்  போட்டிகளில் பதக்கங்கள்  பல  பெற்றவர்களில் நூறு வயதைத்  தாண்டி இன்றும்  வாழ்ந்துகொண்டிருப்பவர் ஏக்னஸ்  கெலடி. ஹங்கேரியைச் சேர்ந்தகெலடி  கடந்த ஜனவரி மாதம்  9 ஆம் திகதி தனது  நூற்றாண்டு விழாவைக்  கொண்டாடினார். டோக்கியோ ஒலிம்பிக்கில்  சாதிக்கக்  காத்திருக்கும் வீரர்களுக்கு தனது  வாழ்த்தைத்  தெரிவித்துள்ளார்.

ஹங்கேரியில், புடாபஸ்ரியில் 1921 ஆம்  ஆண்டு  ஜனவரி  9ஆம் திகதி பிறந்த ஏக்னஸ் கெலடி நூற்றாண்டின் போது  ஒலிம்பிக்  நடப்பது சிறப்பம்சமாகும்.  சோகம்,பின்னடைவு, துபுறுத்தல் ,படுகொலை  முயற்சி, மரணவதை  முகாம்  போன்றபல  தடைகளைத்  தாண்டியே கெலடி கெலடியால் சாதிக்க முடிந்தது.

ஜிம்னாஸ்டிக்கில் சிறந்து  விளங்கிய ஏக்னஸ்  கெலடி, 16 ஆவது  வயதில் ஹாங்கேரியில் நடந்த  தேசிய போட்டியில்  முதலாவது  தங்கத்தை  வென்றார். ஒலிம்பிக்கில் 5 தங்கம் [1952 ஆம்  ஆண்டு ஒன்று, , 1954 ஆம்  ஆண்டு  நான்கு], 3 வெள்ளி [ 1952  ஆம்  ஆண்டு ஒன்று,195 ஆம்  ஆண்டு இரண்டு], 2  பித்தளை  [ 1956 ஆம்  ஆண்டு இரண்டு] பதக்கங்களையும், உலக  சம்பியன்  போட்டிகளில் 1954  ஆம்  ஆண்டு தலா ஒரு ங்கம்,வெள்ளி, பித்தளை  பதக்கங்களைப்  பெற்றார். 16  வயதி  தொடங்கிய  பதக்க  வேட்டை 35 வயது  வரை  தொடர்ந்தது

கெலடியின் யூத பின்னணி காரணமாக  1940 ஆம்  ஆண்டு விளையாட்டில்  இருந்து  கெலடி  தடை  செய்யப்பட்டார்.இரண்டாவது  உலக  மகா யுத்தம்  கெலடியின் வாழ்க்கையில்  விளையாடியது.1944  ஆம் ஆண்டு மார்ச்  மாதம் ஹிட்லரின் படைகள் கேரியைக்  கைப்பற்றியது. தவறான ஆவணங்களைப் பெற்று ஒரு வேலைக்காரி பெண் பிரோஸ்கா ஜுஹாஸின் அடையாளத்தை எடுத்துக் கொண்டு மரண முகாமுக்கு நாடு கடத்தப்பட்டார். "நான் உயிருடன் இருந்தேன். பைரோஸ்காவிடம் நான் உடைகள் மற்றும் காகிதங்களை மட்டுமல்லாமல், அவள் பேசிய விதத்தையும் மாற்றிக்கொண்டேன், ”என்று கெலெட்டி கூறினார்.  நாஜிப்  ஆஷ்விட்ஸ்-பிர்கெனோ வதை முகாமில்  கெலடியின் தகப்பனும்  உறவினர்களும்  கொல்லப்பட்டனர்.

தோல்வியுற்ற சோவியத் எதிர்ப்பு எழுச்சிக்கு ஒரு வருடம் கழித்து 1957 ஆம் ஆண்டில் கெலடி அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். 1959 ஆம் ஆண்டில் ஒரு ஹங்கேரிய விளையாட்டு ஆசிரியரான ராபர்ட் பீரோவை மணந்தார், அவருக்கு இரண்டு குழந்தைகள்  பிறந்தன. அவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தார், மேலும் இஸ்ரேலிய தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக  கடமையாற்றினார்.


கெலடியின்  நூற்றாண்டு பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டஜிம்னாஸ்டிக்ஸ் ராணி, ஆக்னஸ் கெலெட்டியின் 100 ஆண்டுகள்என்ற என்ற புத்தகம்  வெளியிடப்பட்டது. 1921 ஆம் ஆண்டில் பிறந்த அவர், மொத்தத்தில் 10 ஜிம்னாஸ்டிக் பதக்கங்களை வென்றார்.

Wednesday, June 16, 2021

ரொனால்டோவின் புதிய சாதனை


 யூரோ  கிண்ணப்  போட்டியில் அதிக  கோல்  அடித்து  ரொனால்டோ  புதிய  சாதனை  படைத்துள்ளார்.

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

  புடாபெஸ்ட் நகரில்   நடந்த  எப் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், ஹங்கேரி அணிகள் மோதின‌. முதல் பாதியில் இரு அணியினரும் கோல் போடவில்லை.

பிற்பாதியில் கடைசி கட்டத்தில் போர்ச்சுகல் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்தது. 84-வது நிமிடத்தில் ரபெல் குயரிரோ கோல் அடித்தார். 87-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய ரொனால்டோ, கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். பிரமிக்க வைத்தார்.

முடிவில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வென்றது. இந்த ஆட்டத்தில் 2 கோல் அடித்த 36 வயதான ரொனால்டோ யூரோ  கிண்ண உதைபந்தாட்ட  வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்பு பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. அத்துடன் தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். போர்ச்சுகல் அணிக்காக அவர் 106 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து நடந்த மற்றொரு எப் பிரிவு லீக் ஆட்டத்தில்ஜேர்மனியை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது. உள்ளூர் ரசிகர் பட்டாளத்திற்கு மத்தியில் களமிறங்கிய ஜெர்மனி அணியில் வீரர்கள் சோபிக்க தவறினர். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ஜெர்மனியின்  பின்கள  வீரர் மாட்ஸ்  ஹம்மல்ஸ் கோல் போவதைத் தடுக்க  முயற்சி  செய்தபோது  அது  கோலாகியது.