Friday, September 2, 2011

புரட்சிக்குப் பலியான கடாபி

எண்ணெய் வளம் மிகுந்த லிபி யாவை 42 வருட காலம் தனது கட்டுப் பாட்டில் வைத்திருந்த கடாபி யின் ஆட்சி கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் முடி வுக்கு வந்தது. 1969ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முத லாம் திகதி இராணுவப் புரட்சி மூலம் லிபியாவை கைப்பற்றிய கடாபி 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நேட் டோவின் ஆதரவில் நடைபெற்ற புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
ஆபிரிக்கக் கண்டத்தின் வடபகுதியில் உள்ள மிகப் பெரிய நாடு லிபியா. லிபியாவின் கிழக்குப் பகுதியில் எகிப்து, தென்பகுதியில் சூடான், ஸ்காட், நைஜீரியா, மேற்குப் பகுதியில் அல்ஜீரியா, முனீஷியா ஆகிய நாடுகள் உள்ளன. வட பகுதியில் மத்திய தரைக் கடல் உள்ளது. நாட்டின் பெரும்பகுதி பாலைவனம். 65 இலட்சம் மக்கள் தொகை கொண்ட லிபியாவில் 82 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். "ன்னி முஸ்லிம்கள் 97 சதவீதமானவர்கள். லிபியாவில் பொருளாதாரத்தில் எண்ணெய் வளம் 95 சதவீதமாக உள்ளது. வேலையில்லாத திண்டாட்டம் 30 சதவீதம் மூன்றில் ஒரு பங்கினர் வறுமைக்÷ காட்டின் கீழ் உள்ளனர்.
இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றின் பிடியில் இருந்த லிபியா 1951 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி சுதந்திரம் பெற்றது. முதலாம் இத்ரிஸ் லிபியாவின் மன்னராகப் பதவியேற்றார். இத்தாலிக்கு எதிரான போராட்டத்தில் பங்குபற்றிய இளைஞர்களில் ஒருவர் முயாமர் அபுமின்யர் அல் கடாபி புரட்சியின் மூலம் லிபியாவில் ஜனாதிபதியாவேன் என்றோ உலகளாவிய புரட்சி லிபியாவை கைப்பற்றும் என்றோ கடாபி நினைக்கவில்லை. 1942ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி லிபியாவின் கிர்ட் நகர் அருகே உள்ள பாலை வனத்தில் கூடாரத்தில் பிறந்தார் கடாபி. கடாபடா என்ற சிறுபான்மை இனக்குழுவைச் சேர்ந்தவர் கடாபி. லிபிய இராணுவ அக்கடமியில் 1965 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர். அரபு உலகம் மதிக்கும் தலைவர் எகிப்தின் அன்றைய ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் வழி காட்டலில் ஈர்க்கப்பட்டவர் கடாபி.


லிபிய இராணுவத்தில் பணியாற்றிய கடாபி 1966ஆம் ஆண்டு பெங்காசி இராணுவப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1966ஆம் ஆண்டு பிரிட்டன் ரோயல் மிலிட்டரி அக்கடமியில் பயிற்சி பெற்றார். மீண்டும் நாடு திரும்பி இராணுவத்தில் பணியாற்றினார். லிபியாவில் மன்னராட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஆசை இவரது மனதில் அதிகமானது. லிபிய மன்னர் இத்ரிஸ் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக துருக்கி நாட்டிற்குச் சென்ற போது இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் லிபியாவைக் கைப்பற்றினார்.
லிபியாவின் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடிய கடாபி லிபியாவின் முடி சூடா மன்னராகவே இருந்தார். ஆட்சி அதிகாரம் அனைத்தையும் ஜனநாயகம் என்ற போர்வையில் தன் கையில் எடுத்தார். கடாபியின் குடும்பம் சகல வசதிகளையும் அனுபவித்தது. லிபிய மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. லிபிய அரபுக் குடியரசு என்று புது நாமம் சூட்டப்பட்டது. முப்படைகளின் தளபதியாகவும் ஆளும் கவுன்சில் தலைவராகவும் தன்னை அறிவித்தõர். 1969ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடாபிக்கு எதிராக ஒரு சில இராணுவ வீரர்கள் புரட்சி செய்ய முயற்சி செய்தார்கள். கடாபியின் உளவுப் படை அதனை முறியடித்தது.
1970-72 வரை பிரதமராகவும் இராணுவ அøமச்சராகவும் பதவி வகித்தார். 1979 ஆம் ஆண்டு ஆட்சியாளராகினார். மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை மலரச் செய்யப் போவதாக உறுதியளித்த இவர் தொடர்ந்து சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்தார். ஆட்சியைப் பிடித்ததும் வெளிநõட்டவர்களை விரட்டியடித்தார். மக்களின் ஆட்சியை அமைக்கப் போவதாகக் கூறியவர் பச்சைப் புத்தகம் என்ற பெயரில் தனது கொள்கைகளை லிபியாவில் பரப்பினார். கடாபியின் விருப்பப்படியே லிபியாவின் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டது. நாட்டின் நிரந்தர சகோதரத் தலைவர் புரட்சி வழிகாட்டி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

எதிர்க்கட்சிகள் முடக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன. சகல வசதிகளையும் செல்வங்களையும் கடாபியின் குடும்பம் அனுபவித்தது. பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்தது. கடாபியைக் காப்பாற்றுவதற்காக விசேட படைகள் உருவாக்கப்பட்டன. இவரது மெய்க்காப்பாளர்கள் அனைவரும் இளம் பெண்களே. கடாபியின் பாலியல் பலவீனம் பற்றி அப்போது சில தகவல்கள் இருந்தன. அதுபற்றி யாரும் அப்போது பெரிதாகக் கணக்கெடுக்கவில்லை. விக்கிலீக்ஸ் இதனை அம்பலப்படுத்தியது. கடாபிக்கு எதிரான குரல்கள் அனைத்தும் அவ்வப்போது அழிக்கப்பட்டன.
எகிப்து, டுனீஷியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சியும் அதன் பின்னராக நடந்த ஆட்சி மாற்றமும் கடாபியின் எதிர்ப்பாளர்களுக்கு உற்சாக மூட்டின. கடாபிக்கு எதிரான போராட்டங்களும் கிளர்ச்சிகளும் பெப்ரவரி 15ஆம் திகதி லிபியாவின் பெங்காசி நகரில் ஆரம்பித்தன. இப்போராட்டம் லிபியாவின் பல நகரங்களுக்கும் பரவியது. பேஸ்புக் இணையத்தளம் என்பன இப்போராட்டங்களுக்கு வலுவூட்டின. கிளர்ச்சியாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்திய லிபியாவின் இராணுவம் தொழில் நுட்பப் போராட்டத்துக்கு முகம் கொடுக்க முடியாது தடுமாறியது. கடாபியின் காட்டாட்சியை அகற்றுவதற்காக களமிறங்கிய புரட்சிப் படை பெங்காசி மிஸ்ராட்டா ஆகிய நகரங்களை கைப்பற்றியது.
கடாபிக்கு எதிரான போராட்டக்காரர்களை அடக்குவதற்காக மேலதிக இராணுவம் அதி நவீன ஆயுதங்களுடன் அடக்கு முறைகளைக் கையாண்டது. புரட்சிப் படையை ஒடுக்குவதற்காக லிபிய இராணுவம் வன்முறைகளை கையாண்டது. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் ஆகியவை கடும் எதிர்ப்பை வெளியிட்டு லிபியாவின் மீது பொருளாதாரத் தடை விதித்தன. புரட்சிப் படையினர் வசமாகிய லிபியாவின் கிழக்குப் பகுதியை நிர்வாகம் செய்ய அமெரிக்காவின் தலைமையில் மார்ச் 5ஆம் திகதி இடைக்காலக் கவுன்சில் அமைக்கப்பட்டது. மார்ச் 7ஆம் திகதி முதல் இங்கிலாந்து பிரிட்டன் ஆகிய நாடுகள் இதில் இணைந்து கொண்டன. புரட்சியாளர்களுக்கு எதிராக லிபிய விமானப்படை தாக்குதல் நடத்தியது. நேட்டோ படைகள் வான் வெளிக்கண்காணிப்பை ஏற்றுக்கொண்டது.
ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுக ளில் மூக்கை நுழைத்து அமெரிக்கா கையைச் சுட்டுக்கொண் டதால் லிபியாவில் அமெரிக்கா தலைமைவகிப் பதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் கண்காணிப்பு தலை மைப் பதவியிலிருந்து விலகியது அமெரி க்கா. ஐ.நா.வின் அனுமதியுடன் நேட்டோ பொறுப்பேற்றது. ஜூன் 27 ஆம் திகதி சர்வதேச நீதிமன்றம் கடாபி க்கும் அவரது மகன் சயீட் அல் இஸ் லாம் மீதும் பிடி ஆணை பிறப்பித்தது. கடாபியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று விரும் பிய நாடுகள் புரட்சிப் படைக்கு ஆயுத உதவி செய்தன.

லிபியா மீதான கடாபியின் பிடி மெது மெதுவாக விலகத் தொடங்கியது. லிபியாவின் பிரதான நகரங்களை புரட்சிப் படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கடந்த 21ஆம் திகதி புரட்சிப் படையினர் திரிபோலி மீது மும்முறை தாக்குதல் நடத்தினர். வட பகுதியான கடற்பரப்பை நேட்டோ படை முற்றுகையிட்டது. கடந்த ஆறு மாத காலமாக பகிரங்கமாக தோன்றாது கடாபி வானொலியில் நாட்டு மக்களுக்கு உøரயாற்றினார். இறுதிப் போரில் வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார். கடாபியின் வானொலி உரை நாட்டு மக்களை உற்சாகப்படுத்தவில்லை. எல்லாமே முடிந்து போன நிலையில் அவர் திரிபோலியில் இருப்பதாக மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே அந்த வானொலி உரை ஒலிபரப்பப்பட்டது.
லிபியாவுக்குள் புரட்சிப் படை நுழைந்து கடந்தவாரம் திரிபோலியருகே உள்ள சுபியா என்ற நகரைப் புரட்சிப் படையினர் கைப்பற்றிய போதே திரிபோலி விரைவில் வீழ்ந்து விடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கடாபியின் விசுவாசமான படை இறுதி வரை போராடியது. போராட்டம்
முடிந்து விட்டது என்பதை உணர்ந்த சில படையினர் புரட்சிப் படையினரிடம் சரணடைந்தனர். திரிபோலி மக்கள் புரட்சிப் படையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். திரிபோலி நகரில் முக்கிய இடமாக கிரீன் சதுக்கம் புரட்சிப் படை வசமானது. இங்கு தான் கடாபி உரை நிகழ்த்துவார். கடாபிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் இச் சதுக்கத்தில் அடிக்கடி நடைபெறும். கிரீன் சதுக்கத்தை தியாகிகள் சதுக்கம் என்று பெயரிட்டது புரட்சிப்படை

லிபியா புரட்சிப்படை வசமானது. கடாபியும் அவரது குடும்பமும் தலைமறைவாகிவிட்டனர். லிபிய நகரின் கீழே உள்ள நவீன சுரங்கங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தன. சல்லடை போட்டு கடாபியை தேடி வருகிறது புரட்சிப்படை. கடாபி லிபியாவில் பதுங்கி இருக்கிறாரா அல்லது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று விட்டாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கடாபி கைது செய்யப்பட்டால் லிபியாவில் விசாரணை செய்யப்படுவாரா அல்லது சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவாரா என்பதை புதிய அரசாங்கமே முடிவு செய்யும்.
புரட்சிப் படையின் கிளர்ச்சியை முறியடிப்பேன் எனது கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என்று பெப்ரவரி மாதம் வானொலியில் உரையாற்றிய கடாபி தலைமறைவாகி விட்டார். தனது ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது விசுவாசமிக்க படையினர் நெடு நாட்களுக்குப் போராடமாட்டார்கள். உலக நாடுகள் புரட்சிப் படைக்கு உதவி செய்கின்றன என்பதை உணர்ந்த கடாபி எகிப்து, துனிஷியா, மொராக்கோ, அல்ஜிரியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளிடம் அடைக்கலம் கேட்டு தூது விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. லிபிய பிரதமர் அல்பக்தாதி அரச தொலைக்காட்சித் தலைவர் அப்துல்லா மன்சூர் ஆகியோருக்கு மட்டும் துனீஷியா அடைக்கலம் கொடுத்துள்ளது.
கடாபியின் மனைவி சாடியா மகள் ஆயிஷா மகன்மாரான ஹனீபா,மொஹமட் ஆகியோர் தமது நாட்டில் அடைக்கலமடைந்திருப்பதாக அல் ஜீரியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
42 ஆண்டு லிபியாவை ஆட்டிப் படைத்த தலைவர் நாட்டையும் மக்களையும் கைவிட்டு தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். 27 வயதில் இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்த கடாபி 69 ஆவது வயதில் இரத்தப் புரட்சி மூலம் ஆட்சியைப் பறிகொடுத்தார்.
ரமணி
மெட்ரோநியூஸ்
02/09/11







.
ரமணி
மெட்ரோநியூஸ்
02/09/11

No comments: