Thursday, September 15, 2016

காவிரிக்காக எரிக்கிறது கர்நாடகம் கையேந்துகிறது தமிழகம்

தமிழகம் கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கிடையிலான உறவு காவிரியினால்  கனன்று போயுள்ளது. காவிரியில் பெருக்கெடுத்தோடி வரும்  நீரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கர்நாடகத்திடம் இருப்பதனால் காவிரி நீருக்காக  கர்நாடகத்திடம் கையேந்த வேண்டிய நிலையில் தமிழகம் இருக்கிறது.. காவிரி நீரைப பங்கிடும் பிரச்சினை நிதிமன்றம் வரை சென்று முடிவு காணப்பட்டது.  உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைகொடுக்க  கர்நாடகம் மறுக்கிறது.


தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நீரைக் கொடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 10  நாட்களுக்கு   15 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த  கர்நாடகம் தயங்கியது. தமிழக அரசியலுடனும் கர்நாடக அரசியலுடனும் காவிரி பின்னிப் பிணைந்துள்ளது. காவிரி நீரைத்  தமிழகத்துக்கு கொண்டுவந்தது எனது அரசாங்கம் தான் என்று உரிமை கொண்டாடுவதில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. விவசாயிகளின் வாக்கு வங்கியைக் குறிவைத்து திராவிட முன்னேற்றக் கழக‌மும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌மும் அரசியல் செய்கின்றன.
கர்நாடக அரசியலும் காவிரியை முன்னிறுத்தியே நடைபெறுகிறது. தமிழகத்துக்கு காவிரி நீரைக் கொடுக்காத கட்சிதான் அங்கு கொடிகட்டிப் பறக்க முடியும். காவிரி நீரை தமிழகத்துக்குக்  கொடுத்தால் அங்கு  அரசியல் நடத்து முடியாது. காவிரி நடுவர் மையம்வழங்கும் பரிந்துரைகளையும், நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும் கர்நாடக அரசியல்வாதிகள்  கவனத்தில் எடுப்பதில்லை.இம்முறை உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்குக்    கீழ்ப்படிய‌ வேண்டிய கடப்பாடு கர்நாடக முதலமைச்சருக்கு உள்ளது. தன மீதான பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்தாலோசித்து கனத்த இதயத்துடன் நீரைத் திறந்து விடுகிறேன் எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தின் நிலை இதற்கு எதிர் மாறாக உள்ளது. நெருக்கடியான நேரத்தில் அனைத்துக் கட்சிகளையும்  கூட்டி ஆலோசனை செய்வதற்கு  ஜெயலலிதா விரும்புவதில்லை.  காவிரி நீர் வருவதற்கு நான் மட்டும் தான் காரணம் எனக் கூறுவதையே ஜெயலலிதா விரும்புவார். மற்றைய தலைவர்கள் அதில் உரிமை கோருவதை அவர் விரும்பமாட்டார். இதனைத் தெரிந்து கொண்டும்  அனைத்துக்  கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு  ஏனைய தலைவர்கள் கூப்பாடு போடுவார்கள் ஜெயலலிதாவின் காதுக்கு அவை கேட்பதில்லை தமிழகத்துக்கு என ஒரு நன்மை நடந்தாலும் அதற்கு ஜெயலலிதா   தான் கரணம் என மற்றவர்கள் சொல்ல வேண்டும் என்பதே அவரின் இலட்சியம். அதனால்  ஏனைய தலைவர்களை அலட்சியப்படுத்துகின்றார்.

காவிரி நிறை தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டும்  என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பு கர்நாடகத்துக்கு எதிரானது என்ற மனநிலை அந்த மாநிலத்தவர்களின் மத்தியில் தோன்றியுள்ளது.  அப்படி ஒரு மனநிலை இயற்கையாகத் தோன்றவில்லை. அங்குள்ள அரசியல் கட்சிகளினால் தோற்றுவிக்கப்பட்டது.மலின  அரசியலுக்காக கர்நாடக அரசியல்வாதிகள் காவிரி நீரை பகடைக்காயாக்கி  உள்ளார்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக உருவெடுத்துள்ளது. தமிழர்களுக்கு  எதிரான வன்முறை கலந்த போராட்டங்களை கர்நாடக பொலிஸார் கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தனர். நான்கு நாட்கள்  நடைபெற்ற வன்முறை உச்சக்கட்டத்தை அடைந்தபின்னர்தான் மத்திய ரிசவ் படை களத்தில் இறங்கியது.
கர்நாடகத்தில் இருக்கும் தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டர்கள், தாக்கப்பட்டார்கள். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. நூற்றுக்கும்  அதிகமான சொகுசு பஸ்களும் லொறிகளும் தீக்கிரையகின.    கர்நாடகத்துக்கு   எதிரான போராட்டம் தமிழகத்தில்   ஒரு சில இடங்களில் நடைபெற்றாலும் அவை கட்டுப்படுத்தப்பட்டன. அப்படிப்பட்ட போராட்டங்களை நடத்த வேண்டாம் என தமிழகத் தலைவர்கள் அறிவித்தனர். கர்நாடக   நடிகர்கள்  தமது  கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஒரு சிலர கடுமையாகப் பசொனாலும் சிலர் மென்போக்கைக் கடைப்பிடித்தனர். 

தமிழ்த் திரைப்படம் வெளியிட்ட தியேட்டர்கள் இழுத்து  மூடப்பட்டன..கட அவுட்கள் கிழித்தெறியப்பட்டன. ஜெயலளிதவிம் உருவபொம்மைகள் தீஇட்டுக் கொளுத்தப்பட்டன. ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிப்பது தவறு என்ற குரலும் கர்நாடகத்தில் ஒலித்தது. தமிழ் நட்டு நடிகர்கள் தமது எதிர்ப்பை அறிக்கையில் மட்டும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் பிரபலமான நடிகர்களில் பலர்  கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்.கர்நாடகத்  திரைப்படங்கள் தமிழகத்தில் திரையிடப்படுவதில்லை. அதனால் அவர்கள் துணிச்சலுடன் தமது எதிர்ப்பை   வெளிப்படுத்தினர். தமிழ் நடிகர்களின் படங்கள் கர்நாடகத்தில் அதிக வசூலைப்  பெறுகின்றன ஆகையால் தமிழ் நடிகர்கள் அடக்கி வாசிக்கின்றனர். 
உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் கர்நாடகம் கொந்தளிக்கிறது.ஆகையால் தீர்ப்பை மாற்ற வேண்டும் என கர்நாடகம் கோரிக்கை வைத்தது. கர்நாடகத்தின்  கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.    நீதிமன்றத் தீர்ப்பை ஆல்படுத்த வேண்டும் என  குட்டு வைக்கப்பட்டது. மக்கள் போராட்டத்தால் நீதிமன்றத் தீர்ப்பை மற்ற முடியாது என்பதை கர்நாடக அரசியல்வாதிகள் உணரத் தவறியதன் விளைவை அம்மாநில மக்கள் அனுபவிக்கின்றனர். ,நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்லும் மனப்பக்குவம் கர்நாடக அரசியல் தலைவர்களிடம் இல்லை.


 கர்னாடகத்தில்   காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும்  தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மெளனமாக இருக்கிறர்கள். நிஜத்தைப் பேசினால் கர்நாடகத்தில் ஆட்சியைத் தக்கவைக்க முடியாது என்பதனால் காங்கிரஸ் தலைமை மெளன சாட்சியாக இருக்கிறது. எமது மக்களுக்கு குடிக்கத் தண்ணீர் இல்லை. தமிழகத்தில் விவசாயம் செய்ய எப்படித் தண்ணீர் தருவது என கர்நாடக அரசு கேட்கிறது.   மழை  வீழ்ச்சி  குறைவு எனக் கூறி தமிழகத்துக்கு காவிரி நீரைக்   கொடுக்க கர்நாடகம் பின்னடிக்கிறது.   ழை  வீழ்ச்சி  குறைவுதான் கர்நாடகம் சொல்வது போல் குறைவு அல்ல என  தமிழகம் கூறுகிறது. 
காங்கிரஸ்,பாரதீய ஜனதாக்  கட்சி,மத சார்பற்ற ஜனதாதளம்,விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தமிழகத்திலும் கர்நாடகத்திலும்  உள்ளன.  கர்நாடகத்தில் உள்ள இக்கட்சிகள் அங்குள்ள மக்களுக்கு சரியான வழியைக் காட்ட முன்வரவில்லை.

காவிரி பாலாறு , சிறுவாணி , முல்லைப்பெரியாறு  ஆகியவற்றின் காரணமாக  அண்டை மாநிலங்களுடன் தமிழகம் முரண்படும்போது இரண்டு மாநில மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்குரிய உறுதியான முடிவை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் தவறினால் இந்தியன் இன்ற பலம் குறைந்துவிடும்.
வர்மா 


No comments: