இஸ்ரேல், ஈரான் போரினால் உலக நடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் பதிலடி கொடுத்தது.
ஈரானின்
கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களிக் குறை வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் ஹைஃபா, டெல் அவிவ் , ஜெருசலேம் ஆகிய நகரங்கள் ஈரானின் தாக்குதலால் சிதைந்தன.இஸ்ரேலின் தாக்குதலை ஈரானால் சமாலிக்க்
முடியாது என்றே பலரும் நினைத்தார்கள்.
ஆனால்
ஈரானின் பதில்தாக்குதல் இஸ்ரேலை அதிரச் செய்தது.
பலம்
வாய்ந்த இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறை ஈரானால்
தாக்குதல் நடத்த முடியாது என்றே போர் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ஹமாஸின்
தாக்குதலால் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிதைத்தது. அதிலிருந்து பாடம் கற்ற இஸ்ரேல் எச்சரிக்கையானது.
ஈரானின் ஏவுகளைகளைத்தடுக்க இஸ்ரேலால் முடியவில்லை.
இரானின்
அரக்கன் என வர்ணிக்கப்படும் ஹைபர் சுப்பர் சொனிக் ஏவுகளைகள் இஸ்ரேலின் முக்கிய நகரங்களைச் சிதைத்தன.
ஹைபர்சோனிக் ஏவுகணையான ஃபட்டா-1 ஐ இஸ்ரேலிம்
மீது ஏவியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை
அறிவித்தது.
இஸ்ரேலுக்கு எதிரான மோதலில் ஹைபர் சுப்பர்சொனிக் முதன் முதலில்
பயன்படுத்தப்பட்டது.
2023 ஆண்டு உலகத்துக்கு வெளிப்படுத்தப்பட்ட இந்த ஏவுகணைக்கு ஈரானின்
தலைவர் அயதுல்லா அலி கொமேனி தான் பெயரிட்டார்.
IRGC-யால்
உருவாக்கப்பட்டு ஜூன் 2023 இல் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட ஃபட்டா-1, ஒரு நடுத்தர
தூர ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
ஈரான்-இஸ்ரேல்
போரில் பயன்படுத்தப்பட்ட ஃபட்டா-1 ஹைபர்சோனிக் ஏவுகணைகள் என்றால் என்ன?
ஃபட்டா-1 ஏவுகணை என்றால் என்ன?
IRGC
படி, இந்த தாக்குதல் ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3-இன் 11வது அலையின் ஒரு பகுதியாகும்.
ஃபட்டா-1 ஏவுகணை இஸ்ரேலின் இரும்பு டோம் மற்றும் அம்பு போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளைத்
தவிர்ப்பதற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈரானிய
அதிகாரிகள் இதை "இஸ்ரேல்-ஸ்ட்ரைக்கர்" என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த
ஏவுகணை மணிக்கு சுமார் 15,000 கிலோ மீற்றர்
செல்லும் திறன் கொண்டது.
இது 350-450 கிலோ எடையுள்ள வெடிமருந்திஅச் சுமந்து செல்லும்.
இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் தற்போது பெரிதாக வெடித்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின்
வான்பாதுகாப்பு அமைப்பான ஐயன் டாம் ஈரான் ஏவிய ரொக்கெற்களையும், ஏவுகணைகளையும் வானிலேயே
இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.
ஆனால்,
ஈரான் அனுப்பிய ஹைபர்சோனிக் ஏவுகளைகளையும், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தாக்கியபோது,
இஸ்ரேலின் ஐயன் டாம் வான் பாதுகாப்பு அமைப்பால் கூட அதனைத் தடுக்க முடியாமல் இஸ்ரேலைச் சீரளித்தன. ஈரானின் இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகளை இடைமறித்து
தாக்கும் திறன் எந்த நாட்டிடமாவது இருக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.
ஆயுதங்களின்
நவீன அரக்கனான சுப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம்
உகரைனின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
சண்ண்டையை
நிறுத்தும்படியும்சரணடையும் படியும் ஈரானிடம்
ட்ரம்ப் கூறினார். ட்ரம்பின் சொல்லைக் கேட்ட முடியாது என கொமேனி பதிலளித்தார்.
கொமேனி
பதுங்கி இருக்கும் இடம் தெரியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப் போர் செய்வார்
என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளை மாளிகையில் தனது தேசிய பாதுகாப்பு குழுவுடன்
ட்ரம்ப் ஒரு மணி நேரம் 20 நிமிட சந்தித்து உரையாடினார்.
ஈரானிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேலின்
இராணுவ தாக்குதலில் இணைவதற்கு ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக மூத்த உளவுத்துறை அதிகாரி ,பாதுகாப்புத் துறை அதிகாரி
உட்பட சிலர் ஊடகங்களுக்குத் தெரிவித்துளனர்.சமூக ஊடகங்கள் இதனை விவாதிக்கின்றன.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்
இணையும் வாய்ப்புள்ளது என்று பிரதமர்
பெஞ்சமின் நெதன்யாகுவும் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமும் நம்புவதாக இரண்டு இஸ்ரேலிய
அதிகாரிகள் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
.
கனடாவில்
நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து ட்ரம்ப் திடீரென வெளியேறியதும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து
வந்த ட்ரம்பின் அச்சுறுத்தும் எச்சரிக்கைகளும்,
அமெரிக்காவின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தின.
ரஷ்யாவும், வட கொரியாவும்
இஸ்ரேலைக் கண்டித்துள்ளன. இஸ்ரேலுக்கு
ஆதரவாக அமெரிக்கா போர் செய்தால் நிலமை மேலும் விபரீதமாகும்.
ஈரானின்
ஆயுதப் பலம் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக
உள்ளது.
ஈரானுக்கு அருகில் அமெரிக்க இராணுவத் தளங்கள் உள்ளன. இந்தப் போர் இப்போதைக்கு முடியும் போல் தெரியவில்லை
No comments:
Post a Comment