கொள்கை,கோட்பாடு என்ற அரசியல் மலினப்பட்டு சந்தர்ப்பவாத அரசியல்தலைதூக்கி உள்ளது.
எது
நடக்கக்கூடாதொ அதுவெல்லாம் நடது முடிந்துவிட்டது.தேர்தல் காலத்தில் மேடை போட்டி பேசிய பேச்சுகள்,அடிய ஆட்டங்கள்,சாபங்கள், சபதங்கள்
எல்லாம் பொசுக்கென்று போய்விட்டது.இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களை
ஏமாற்றி விட்டன. பரம்பரை பரம்பரையாக வாக்களித்தவர்களை இன்றைய தலைவர்கள் எனச் சொல்பவர்கள் நட்டாற்றில்
விட்டுவிட்டனர்.
10 கட்சிகள், 15 சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில்
போட்டியிட்ட போதும், தனக்குப் பிடித்தமான சின்னத்துக்கு
அல்லது வேட்பாளருக்கு புள்ளடியிட்டவர்கள் ஏமாந்து போயுள்ளனர்.
வேட்பாளர்
அல்லது சின்னம் சரியாக இருக்கும் என நம்பித்தான் வாக்க்காளர் புள்ளடியிடுவார். அந்தப் புள்ளடி, அரசியல் சதுரங்கத்தில் பிழையாகிவிட்டது.
வீட்டுக்கும்,
சைக்கிளுக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்
சங்குக்கு வாக்களித்தார்கள்.
வீட்டை
விட்டு வெளியிலை வந்து தனிகுடித்தனம் செய்யும் சங்குக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள்
சைக்கிளுக்கு வாக்களித்தார்கள். இவர்களுக்கு வீட்டையும் பிடிக்காது.
இப்ப சைக்கிளும்,சங்கும் சேர்ந்து விட்டன.
இவர்களை
நம்பி வாக்களித்தவர்கள் நடுத்தெருவில்.
இவர்கள்
பதவி ஆசனத்தில் பரம அரசியல் எதிரியான வீணை வீட்டுக்குள்ளை போட்டுது.
முன்னாள்
முதலமைச்சர், முன்னாள் மேயர் [மான்] இரண்டு பேரும் வீட்டுக்கை தஞ்சமடைசிருக்கினம்.
சைக்கிளும்,சங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருகினமாம்.
வாக்களித்த மக்களுக்குத் தெரியாமல் அதென்ன புரிந்துணர்வு. பதவிக்காகவே புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது மக்களுக்கு நன்றாகப் புரிகிறது.
யாழ்ப்பாண
மாநகரசபையை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் தமிழ் அரசுக் கட்சி வென்றுள்ளது.டக்ளஸைத்
தேடி வீடு போனதுதான் இங்கு பேசு
பொருளாகி உள்ளது. தமிழ்க் கட்சிகள் எவையுடனும் டக்ளஸ்,கருணா, பிள்ளையான் ஆகியோர் இணைய மாட்டார்கள் என்ற கோட்பாடு
தவிடுபொடியாகி உள்ளது.
வவுனியாவில் நிலைமை வ்வேறு விதமாக உள்ளது.அங்கு அங்குக்கும், தபால் பெட்டிக்கும் பதவியைக்
கொடுப்பதற்காக வீடும், சைக்கிளும் கைகோர்த்துள்ளன.
மட்டக்களப்பில் தமிழ் அரசுக் கட்சி ஹக்கீமுடன் இணைந்து ஆட்சியைப் பிடித்துள்ளது. ஹக்கீம் துரோகம்
செய்துவிட்டதாக பதியுதீன் புலம்புகிறார்.தமிழ்,
முஸ்லீம் பிரிவினைக்கு அங்கு தூபமிடப்படுகிறது.
வடக்கு,
கிழக்கு மட்டுமல்லாது இலங்கை பூராவும் இந்த
நிலை தான் உள்ளது.
ஜனாதிபதித்
தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று இறுமாப்புடன் இருந்த என்பிபி உள்ளுராட்சித் தேர்தலில் சறுக்கியது.
ஆட்சியில்
இருகும் மக்கள் ஐக்கிய சக்தியை விட அதிக உள்ளூராட்சி சபைகளில் எதிர்க் கட்சிகளும் சுயேட்சைக்
குழுக்களும் வென்று மிரட்டியுள்ளன. சுயேட்சைக் குழுக்களுடனும், சிறிய கட்சிகளுடனும்
அனுரவின் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. சில இடங்களில் டீல் ஓகேயானது.
கொழும்பை
அனுரவின் அரசு கைப்பற்றியது. வேறு சில இடங்களில் நம்பியவர்கள் காலை வாரியதால் ஆட்சி
அமைக்கம் உடியாத நிலை உள்ளது.
மக்கள்
ஐக்கிய சக்தி 151 உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்றது.சில சபைகளில் எதிர்க்கட்சிகளின் கை ஓங்கியதால் அட்சி அமைக்க முடியாத
நிலை உள்ளது.
கண்டி
மாவட்டத்தில் உள்ள கடுகண்ணாவை நகர சபையில் என்பிபி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
ஆனால், ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லை. அங்கு சாதிர்யமாகக் காய் நகர்த்திய சஜித்
,அனுரவைத் தோறக்டித்தார்.
குருநாகல்
மாவட்டத்தில் உள்ள குளியாப்பிட்டி பிரதேச சபையிலும் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டது. தேசிய மக்கள் சக்தி 21 இடங்களை வென்றது, ஆனால்
மற்ற கட்சிகளும்,, குழுக்களும் 25 இடங்களீல் வெற்றி பெற்றன.
தேசிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி
இரண்டும் கவுன்சில் தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை நிறுத்தின. . ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி
வேட்பாளர் வெற்றி பெற்றார்.
பண்டுவஸ்நுவர
பிரதேச சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வெள்ளிக்கிழமைஇரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது,
அங்கு NPP க்கு 17 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு மொத்தம் 21 இடங்களும் இருந்தன. சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வஜன பலய உறுப்பினரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை
என்ற காரணத்திற்காக வாக்கெடுப்பு முன்னர் சபையில்
அவர் இருந்து வெளியேற்றப்பட்டர். இரகசிய வாக்கெடுப்பில் என்பிபி வெற்றி பெற்றது.
கொழும்பிலும், மதவாச்சியிலும் நடைபெற்ற இரகசிய வாக்களிப்பில் முறைகெடு நடந்ததாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஜனநாயகத்
தேர்தல் முறையை அரசியல் தலைவர்கள் கேலிக்கூத்தாக்கி விட்டனர்.
குப்பை
அள்ளவும், லைற்றுப் போடவும், றோட்டுத் திருத்தவும் இந்தக் கூத்து
ஒரு
விரல் புரட்சி வரும் வரை காதிருப்போம்
No comments:
Post a Comment