Tuesday, November 25, 2008

என்னபேசி இருப்பார்கள்



கங்குலி மகள்: டாடி, நீங்க இப்பத் தான் நல்ல டாடி.
கங்குலி: வை.மை. சுவீட்டி?
கங்குலி மகள்: என்னையும் மமியையும் தனியே விட்டுட்டு
நீங்க உங்க பாட்டுக்கு கிரிக்கெட் விளையாட ஒவ்வொ
ரு நாடாபோயிடுவீங்க. நாங்க ஒங்கள டிவியிலதான்
பார்த்துகிட்டு இருப்போம். நீங்க ஓய்வு பெறப்போவதாக
அறிவிச்சிட்டீங்க. இப்ப எங்கக்கூடவே இருப்பீங்க தானே.
அதுதான் நீங்க நல்ல டாடி.


மெட்ரோநியூஸ் 24 12 2208

மகள்: என்ன டாடி உங்கள எல்லோரும் கிரிக்கெட்டில்
இருந்து ஓய்வு பெற சொல்கிறார்களே. ஏன் நீங்கள் ஓய்வு
பெறாமல் இருக்கிறீர்கள். அம்மா சொல்லும் வரை இருக்கிறீர்
களா?
கங்குலி: இல்ல மகளே இந்த கங்குலி ஒரு தரம் சொன்னா
நூறு தரம் சொன்னமாதிரி. அதனால் ஓய்வு பெற்றேதான்
ஆக வேண்டும். இல்லை என்றால் எல்லோருமே சேர்ந்து
என்னை தள்ளிவிடுவார்கள்.

சௌரவ் கங்குலி: ஹலோ! என் செல்லம் என்னடா பார்க்கி
ற?
மகள்: அப்பா நீங்க இனி மேல் கிரிக்கெட் விளையாட
மாட்டீங்களா?
சௌரவ் கங்குலி: இல்லடா செல்லம் இனிமேல் உன்னுட
னும் அம்மாவுடனும் தான் இருக்கப்போறது. நான் இப்ப
ஓய்வு பெறப்போறேன் அவ்வளவுதான்.
மகள்: அப்பா நீங்க சினிமாவுக்கு நடிக்கப்போக மாட்டீங்
களா?

கங்குலி: என்ன மகள் கடுமையாக யோசிக்கிறீங்க. அப்பா
ஓய்வு பெறப்போறேன் என்று கவலையா இருக்கா.
மகள்: ஆம், அப்பா.
கங்குலி: கவலைப்படாதீங்க மகள் அப்பா ஓய்வு பெற்றா
லும் டோனி சூப்பராப் பார்த்துப்பாரு.
மகள்: (மனதுக்குள்) அவர மாதிரி நீங்களும் பொறுமை
யானவரா இருந்திருந்தா. உங்களுக்கு இந்த நிலைமை வந்தி
ருக்குமா.

1 comment:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எல்லாரும் அப்படித்தான் பேசுவாங்க, டெந்துல்கருக்கும் அதுதான், யுவாவுக்கும் அதுதான்