Sunday, November 30, 2008

பாட்டாளி மக்கள் கட்சிக்குபச்சைக்கொடி காட்டிய முதல்வர்



இலங்கையில் நடைபெறும் யுத்தம்முடிவுக்கு வரவேண்டும்டிவுக்குவர வேண்டும் என்ற கோஷம் தமிழகத்தில்ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகமக்களின் இந்தக் கோஷம் டில்லியின் காதுகளுக்குஇன்னமும் கேட்கவில்லை.இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டப் பேரணி,
பொதுக் கூட்டம் என்பன தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக நடைபெற்று வருகின்றன.தமிழகத்தின் உணர்வலைகளை மத்தியஅரசு இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.அதன் காரணமாக இலங்கையில் நடைபெறும்யுத்தம் இன்னமும் வீரியம் பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களுக்காக தமிழகத்தில்இருந்து ஒலிக்கும் குரல்இரண்டுபட்டுள்ளது. தமிழகஅரசின் ஆதரவுடன் ஒருகுரலும் தமிழக அரசுக்குஎதிரான இன்னொரு குரலும் இலங்கைத் தமிழ் மக்களுக்குஆதரவாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தீர்மானங்களுக்குகாங்கிரஸ் கட்சிதுணைபோகின்றதே தவிரஅதன் எண்ணம் எல்லாம்
புலிகள் ஒடுக்கப்படவேண்டும் என்பதிலேயே குறியாகஉள்ளது.
புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வைகோ, பழ. நெடுமாறன் போன்றோர் தமிழகஅரசுடன் ஒத்துழைக்காதுஇலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ்கட்சி என்பன இலங்கைபிரச்சினைக்கு நல்லதொரு
தீர்வு கிடைக்க வேண்டும்என விரும்பும் அதேவேளை புலிகள் ஒடுக்கப்பட வேண்டும் என்பதிலும்கண்ணாக உள்ளனர்.
இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து யுத்தத்தைநிறுத்துவதற்கு மத்திய அரசுஇன்னமும் தயாராகஇல்லை. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்
சிகளின் தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளிமக்கள் கட்சி, காங்கிரஸ் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தமிழகத்தின் சார்பில் பிரதமரைச் சந்திப்பது உறுதியாகியுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம்,தேசிய முன்னேற்ற திராவிடக் கழகம் ஆகியனதமிழகத்தின் சார்பில் பிரதமøரச் சந்திக்கும்குழுவில் இடம்பெறப் போவதில்லை.கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும்
இது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை.இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாககுரல் கொடுக்கும் கட்சியினர் தமக்குள் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் பிரச்சினையில் முடிவெடுக்க வேண்டிய அதிகாரம்மத்திய அரசிடம் உள்ளது. இதற்காக அழுத்தம்
கொடுக்க வேண்டிய தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் ஆளுக்கு ஒரு பக்கம் நிற்கின்றன.பிரதமர் மன்மோகனைச் சந்தித்த பின்னர்
தமிழக முதல்வர் என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பதை அறிவதற்கு தமிழ் பேசும்உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.
பிரதமரின் பேச்சில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று வழமைபோன்று முதல்வர் அறிக்கை விடுவாரா அல்லது முடிவு
எடுக்க வேண்டிய அழுத்தத்தை பிரதமருக்குகொடுப்பாரா என்பதை அறிவதற்கு டிசம்பர்4ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் எதிர்காலத் தேர்தல்களின் முடிவுகளை இலங்கைப் பிரச்சினைதீர்மானிக்க உள்ளது. இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில் சிங்கள அரசுக்குஆதரவாக இந்திய மத்திய அரசு நடந்து கொள்கிறது என்பதை தமிழகம் அறிந்து கொண்டுள்ளது.
ஆகையினால் சிங்கள அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது என்ற எண்ணம் தமிழக மக்களிடம்
உள்ளது. ஆகையினால் தமிழக அரசும் மத்தியஅரசும் ஆக்கபூர்வமான ஏதாவது ஒருமுடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்
.இதேவேளை தமிழகத்தின் கூட்டணிகள்மாறக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அகில இந்ய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் ஜெயலலிதாவை கடந்தவாரம் தமிழகத்தில் சந்தித்த பின்னர் புதிய கூட்டணிஉருவாகும் என சூசகமாக அறிவித்துள்ளா
ர். ஜெயலலிதாவுக்கு இது வரை காலமும் போட்டியாளராக கருணாநிதிதான் இருந்தார். விஜயகாந்தின் வரவு ஜெயலலிதாவுக்குபெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கு பலமானகூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுடன் வைகோ மட்டும்தான்கூட்டணி சேர்ந்துள்ளார். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கும் மத்திய அரசுக்கு ஆதரவு
வழங்குவதற்கும் இது பலமான கூட்டணிஅல்ல என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும்.அதனால்தான் கம்யூனிஸ்ட் கட்சியுடன்
இணைந்து நாடளாவிய ரீதியின் மூன்றாவதுகூட்டணி அமைக்க விரும்புகிறார் ஜெயலலிதா.திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிர
ஸூம் ஒன்றை ஒன்று விட்டுப்பிரியாது என்பது நிரூபணமாகியுள்து. முதல்வர் கருணாநிதியால் வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள்கட்சி மீண்டும் இக்கூட்டணியில் சேரும்வாய்ப்பு உள்ளது. முதல்வரும் ராமதாஸும்சந்தித்துப்பேசிய பின்னர் பாட்டாளி மக்கள்கட்சியின் பிரசாரப் பீரங்கியான காடு வெட்டிகுரு மீதான குற்றங்களின் தாக்கம் குறைவடைந்துள்ளது.
விஜயகாந்தும் மாக்ஸிஸ்டுகளும் நெருங்கிவருகின்றனர். தமிழகத்தில் மூன்று பெரும் கூட்டணிகள் உருவாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.மத்தியில் ஆட்சியை அமைக்கும் வாய்ப்புகாங்கிரஸூக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும்தான் உள்ளது.
ஆகையினால் மூன்றாவது அணியில் போட்டியிட விரும்பும் ஜெயலலிதா கணிசமானவெற்றியை பெற்றால் மத்தியில் ஆட்சிஅமைக்கும் கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலைஉருவாகும்.இலங்கைப் பிரச்சினையும், புதிய கூட்டணிவியூகங்களும் தமிழக அரசியலை விறுவிறுப்படையவை த்துள்ளன.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 30 11 2008

No comments: