Sunday, January 13, 2019

கொடநாட்டைச் சுற்றிய மர்ம முடிச்சு எடப்பாடி மீது குற்றச்சாட்டு


ஜெயலலிதா ஓய்வெடுக்கும் வாசஸ்தலமான கொடநாட்டைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளிவருவதில்லை. ஜெயலலிதா கொடநாட்டுக்குச் சென்றார். ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து திரும்பிவிட்டார்  போன்றவையே அப்போதைய பரபரப்பான செய்தியாக இருந்தன.ஜெயலலிதா அங்கே என்ன செய்தார் என்ற விபரம் எதுவும் வெளிவருவதிலை. கொடநாட்டு காவலாளி கொலை செய்யப்பட்டு விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள்  திருடப்பட்ட செய்தி பெரிய பரபரப்பின்றி அடங்கியது. பின்னர் நடைபெற்ற விபத்து மரணங்களும் தற்கொலையும் சந்தேகத்தை ஏற்படுத்தியனவே தவிர சர்ச்சையாகவில்லை. கொள்ளை கொலைகள் ஆகியவற்றின் பின்னால் இருப்பவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ற குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொடநாட்டுக் கொள்ளை, அதன் பின்னர் நடைபெற்ற மரணங்கள் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவால் நடைபெற்றதாக   டெஹெல்காவின் முன்னாள் ஆசிரியர் மத்தியூஸ் சாமுவேல், டெல்லியில்   பத்திரிகையாளர் முன் குற்றம் சாட்டியுள்ளார். கொடநாட்டு கொள்ளை குற்றவாளிகளான சயானும் வாளையா மனோஜும், மத்தியூஸ் சாமுவேலுடன் சேர்ந்து எடப்பாடி மீதான குற்றச்சாட்டை பத்திரிகையாளர் முன்னால் உறுதிப்படுத்தினர்.

முதலமைச்சராக இருக்கும்போது குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை பெற்ற அவப்பெயர் தமிழகத்தின் மீது படிந்துள்ளது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட முதலமைச்சர் எனும் கரும் புள்ளியும் தமிழகத்தின் மீது விழுந்துள்ளது. முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும் என்ற  எதிர்க்கட்சிகளின் குரல்  ஓங்கி ஒலிக்கத்தொடங்கிவிட்டது. தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களும் எடப்பாடிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது எதிர்க்கட்சிகளின் சதி பின்னணியில் இருப்பவரை விரைவில் வெளிப்படுத்துவேன் என  எடப்பாடி சூழுரைத்துள்ளார்.

கொள்ளையடிப்பதற்காக கொடநாட்டுக்குச் சென்றவர்கள் கவலாளிகளைக் கட்டிவைத்துவிட்டு உள்ளே சென்றார்கள். மூச்சுத்திணறி ஓம் பிரகாஷ் என்ற காவலாளி மரனமானார். இச்சம்பவம் நடைபெற்ற சில நாட்களின் பின்னர் கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்தில் சயான் என்பவர் படுகாயமடைந்தார். அவரது மனைவி விஷ்ணுபிரியாவும் மகள் நீத்துவும் கொல்லப்பட்டனர். அந்த விபத்தில் காயங்களுடன் தப்பிய சயான் என்பவர் தான் இன்று எடப்பாடிமீது குற்றம் சுமத்தியுள்ளார். கொடநாட்டில் சீசீரிவி  இயக்குநராகக் கடமையாற்றிய தினேஸ்குமார் தற்கொலை செய்தார். ஜெயலலிதாவின் கார்ச் சாரதியான கனகராஜ் என்பவர் எடப்பாடியில் சாலை விபத்தில் பலியானார்.

காவலாளி கொலை, தற்கொலை விபத்து மரணங்கள் பற்றி அப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. கனகராஜின் அண்ணன், எடப்பாடிமிது குற்றம் சுமத்தி சிபிஐ விசாரனை வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தகுந்த சாட்சிகள், ஆதாரங்கள் என்பன இல்லமையால் அவை அப்போதே மறக்கடிக்கப்பட்டன. மத்தியூஸ் சாமுவேலின் கொடநாடு ஆவணப்படத்தின் மூலம் அந்தச் சம்பவங்கள் அனைத்தும் உயிர் பெற்றுள்ளன.

”குற்றம் செய்த தனது கட்சியின் உறுப்பினரிடம் வீடியோ மூலம் வாக்கு மூலம் பெற்ற ஜெயலலிதா, அதனைப் பாதுகாப்பாக வைத்திருந்தார். அதனால்தான் யாரும் அவரை எதிர்த்து எதுவும் பேசுவதில்லை. அந்த வீடியோ வாக்கு மூலம் அனைத்தும் இப்போது எடப்பாடியிடம் உள்ளன” என்கிறார் மத்தியூஸ் சாமுவேல்.

பத்திரிகையாளர் மத்தியில் சயான் தெரிவிக்கையில், ”கொடநாட்டில் 20 கோடிரூபா பணம் இருக்கிறது அதனையும் சில ஆவனங்களையும் எடுக்க வேண்டும்.   தமிழகத்தில் இருந்து யாரும் வேண்டாம் கேரளாவில் இருந்து ஆட்களைக்கொண்டுவா என ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் கேட்டார். நாங்கள் கனகராஜ் நான் உட்பட 10 பேர் கொடநாட்டுக்கு கொள்ளையடிக்கச் சென்றோம். கனகராஜும் நானும் இன்னும் இரண்டுபேர் உள்ளே போனோம். கனகராஜ் சில ஆவணங்களையும், பென்ரைவ்களையும் சிடிக்களையும் தனது பையில் போட்டார். முதலமைச்சர் எடப்பாடிதான் செய்யச்சொன்னார் ஒரு பிரச்சினையும் வராது என்று கனகராஜ் கூறினார்” என்றார்.

டெல்லிப் பத்திரிகையாளர் முன்னால் தெரிவித்த குற்றச்சாட்டுகளை மருத்த எடப்பாடி. சென்னையில் சைபர் கிரைமில் புகார் செய்தார். உடனடியாக டெல்லிக்கு விரைந்த தனிப்படை சயானையும் அவரது கூட்டாளையையும் கைதுசெய்து சென்னைக்குக் கொண்டுவந்துள்ளது. அவர்களின் உயுருக்கு உத்தரவாதமில்லை என மத்தியூஸ் சாமுவேலும்  தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களும்  தெரிவித்துள்ளனர்.

கொடநாட்டுக் கொள்ளை தொடர்பாக சயான் உட்பட10  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  பிணையில் விடுதலை செய்யப்பட்ட சயானையும் அவரது நண்பரையும் தமிழகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளை நடைபெற்ற அன்று கொடநாட்டில் மின்சாரம் இருக்கவில்லை. சீசீரிவி வேலை செய்யவில்லை என பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாசஸ்தலத்தில் அபப்டி இரு சம்பவம் நடக்க வாய்ப்பு இல்லை என்பதே பொதுவான கணிப்பு.

கொடநாடு யாருடையது. அங்கே எப்படியான பாதுகாப்பு இருக்கும். வெளியார் யாரும் கொள்ளையடிக்கும் நோக்குடன் உள்ளே நுழைய முடியாது. என்ன பொருள்  எங்கே இருக்கிறதென்பது எவருக்கும் தெரியாது. உள்ளே இருந்தவரின் உதவி இன்றி கொள்ளை நடைபெற்றிருக்க் முடியாது.

எடப்பாடி முதல்வராக இருக்கையில் தமிழக  பொலிஸ் விராசணையில் நம்பிக்கை இல்லை. எடப்பாடி பதவி விலகி விசாரனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதே பொதுவான அபிப்பிராயமாகும். தான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு எடப்பாடிக்கு உள்ளது.

சூரன்.ஏ.ரவிவர்மா.

No comments: