Tuesday, May 4, 2021

தமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியின் ஏற்றமும் இறக்கமும்

  இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரத்தை இழந்த  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும்  தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம்  மீண்டும் தமது  கட்சியின் அங்கீகாரத்தைப்  பெற்றுள்ளன. விஜயகாந்தின் தேசிய  முற்போக்கு  திராவிடக்  கட்சி  படுதோல்வியடைந்ததால் அங்கீகாரத்தை  இழந்துள்ளது. ஒருதொகுதியிலும்  வெற்றி பெறாவிட்டாலும் 6.85 சதவீத  வாக்கு  பெற்ற  நாம்  தமிழர்  கட்சி  அங்கீகாரம்  பெற்ற கட்சியாக பரிணமிக்கிறது.

 தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற்றது. கடந்த மே மாதம் 2 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.தமிழக சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கூட்டனி   அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது . மு. ஸ்டாலின் மே 7ம் திகதி  முதல்வராகப் பதவியேற்கிறார்.

தமிழகதேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்ற விபரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

வெற்றி விவரம் திமுக கூட்டணி - 159 இடங்களில் வெற்றி திமுக - 125 இடங்களில் வெற்றி காங்கிரஸ் - 18 விசிக - 4 மதிமுக (உதயசூரியன் சின்னம்) - 4 சிபிஎம் - 2 சிபிஐ - 2 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி1, மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றீந்திய  யூனியன்  முஸ்லிம்  லீக்,மக்கள்  விடுதலைக்  கட்சி,  ஆதித்  தமிழர்  பேரவை  ஆகியன  போட்டியிட்ட  தொகுதிகளில்  தோல்வியடைந்தன.

அதிமுக கூட்டணி - 75 இடங்களில் வெற்றி அதிமுக - 65 பாமக - 5 பாஜக ‍ 4 , புரட்சி  பாரதம்  1 தொகுதியில்  வெற்றி பெற்றது. வாசனின்   தமிழ்  மாநில  காங்கிரஸ்  , பெருந்தலைவர்  மக்கள்  கட்சி,  தமிழ்  மக்கள்  முன்னேற்றக்  கழகம், மூவேந்தர்   முன்னேற்றக்  கழகம்,  மூவேந்தர்  முன்னேற்ற  முன்னணி, பசும்  பொன்  தேசியக்  கழகம் ஆகிய  கட்சிகள்  போட்டியிட்ட  தொகுதிகளில்   வெற்றி  பெறவில்லை.

 கமலின் மக்கள் நீதி  மய்யம், சீமானின்  நாம் தமிழர்தினகரனின்  அம்மா  மக்கள்  முன்னேற்றக்  கழகம் ஆகியன ஒரு தொகுதியில்  கூட  வெற்றி  பெறவில்லை.   கமலின்  கட்சியும்தினகரனின்  கட்சியும்  வெற்றி  பெறவில்லை  ஆயினும்   பலதொகுதிகளில் பிரதான  வேட்பாளர்களுக்கு  போட்டியாக  இருந்தன. கொங்கு  மண்டலத்தில் கமலின்  கட்சி  கணிசமான  வாக்குகளைப்  பெற்றுள்ளது

அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழகத்தை விட, 4.4 சதவீதம் வாக்குகளை அதிகமாகதிராவிட  முன்னேற்றக்  கழகம்  பெற்றுளது. இந்திய  நாடாலுமன்றத்  தேர்தலைல்  பெற்ற  வாகுகளை விட  அதிகமான  வாக்குகளை  இரண்டு  பிரதான  கட்சிகளும்  பெற்றுள்ளன. இதனால் இரண்டு  கட்சிகளின்  வாக்கு  சத  வீதமும்  அதிகரித்துள்ளன. 234 தொகுதிகளிலும்  தனியாகப்  போட்டியிட்ட  சீமானின்  நாம்  தமிழர்  கட்சி  6.85 சதவீத  வாக்குகளைப்  பெற்று மூன்றாவது  கட்சியாக உருவெடுத்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.., 37.7 சதவீதம்; .தி.மு.., 33.3; காங்கிரஸ், 4.27; பா..., 3.80; பா.., 2.62; இந்திய கம்யூ., 1.09; மார்க்சிஸ்ட் கம்யூ., 0.85; நாம் தமிழர் கட்சி, 6.85; மக்கள் நீதி மய்யம், 2.45; விடுதலை சிறுத்தைகள் கட்சி, 1.06 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன..தி.மு.., 2016 சட்டசபை தேர்தலில், 40.88 சதவீத வாக்குகளை பெற்றது.

 2019 நாடாளுமன்றத்   தேர்தலில், 19.19 சதவீத  வாக்குகளை மட்டும் பெற்றது. தற்போதைய, சட்டசபை தேர்தலில், அதன் வாக்கு சதவீதம் அதிகரித்து, 33.3 சதவீதமாகி உள்ளது.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.., 31.7 சதவீதம் வாக்குகளை பெற்றது.  2019 நாடாளுமன்றத் தேர்தலில், 33.5 சதவீதமாக அதிகரித்தது. இந்த தேர்தலில், 37.7 சதவீதம் வாக்குகளை பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது.

234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்ட, நாம் தமிழர் கட்சி, 6.85 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இக்கட்சி, 2016 சட்டசபை தேர்தலில், 1.06 சதவீதம்; 2019  நாடாலுமன்றத் தேர்தலில், 3.85 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. இந்த தேர்தலில், அதன் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற, சட்டசபை தேர்தலில், இரண்டு எம்.எல்..,க்கள் அல்லது 6 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும். நாம் தமிழர் கட்சி, அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது.

  திராவிட  முன்னேற்றக்  கழக  கூட்டணியில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வெற்றி பெற்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சியும், ஐந்து இடங்களில் வெற்றி பெற்ற பாட்டாலி  மக்கள்  கட்சியும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளாக மாறியுள்ளன...மு.., கூட்டணியில் இடம் பெற்று,


போட்டியிட்ட  அனைத்து  தொகுதிகளிலும்  படுதோல்வியை சந்தித்த தேசிய  முற்போக்கு  திராவிட  கழகம்  அங்கீகாரத்தை இழந்துள்ளது. அக்கட்சியின், வாக்கு  சதவீதம் மிக மோசமாக சரிந்த நிலையில், நாம் தமிழர் கட்சி வாகு  சதவீதம் அதிகரித்துஉள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், அக்கட்சி சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்  தேர்தலில் வாக்களித்தவர்களைவிட  இந்த சட்டசபை தேர்தலில், 23.87 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர். அண்ணா  திராவிட  முன்னேற்றக்க  கழகமும், திராவிட  முன்னேற்றக்  கழகமும் நாடாளுமன்றத்  தேர்தலில், அதிக இடங்களை கூட்டணிக்கு கொடுத்ததால், அக்கட்சிகளுக்கான ஓட்டுவாக்கு  சதவீதம் சரிந்தது.

சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதற்காகவே, சிறிய கட்சிகளையும் தங்கள் சின்னங்களில் போட்டியிட வைத்து, இரு கட்சிகளும், தலா, 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டன.இதன் காரணமாக, இந்த கட்சிகளுக்குமான வாக்கு  சதவீதம் அதிகரித்துள்ளது.

No comments: