Monday, July 7, 2025

புதிய தலைமுறையுடன் களம் இறங்கும் விஜய்

 

தமிழக அரசியலில் விஜயி  பெயர் பரபரப்பாக அடிப்டுகிறது. நடிகரான விஜய் தன்னை முழுமையான்ம அரசியல் வாதியாக மாற்ற்றிவிட்டார். முதல்வரே, ஸ்டாலினே பதிஒல் சொல் என  ஆவேசமாகப் பேசி கைதட்டல் வாங்கிகிறார்.

பனையீரில் நேற்று நடந்த அவரது கட்சியின் செயற்குழு மாநாடு விஜய்க்கு அரசியல் அங்கீகாரமளித்தது. தமிழகத்தின் முதல் வேட்பாளர் விஜய் என்ற தீர்மானம் நிறவேற்றப்பட்டது. இதனால் ரசிகர்களான கட்சித் தொண்டர்கள்  மகிழ்ச்சியடந்துள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்ட்னியின் முதலமைச்சர் வேட்பாள‌ர் ஸ்டாலின் எனபதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிக தொகுதிகள்  ஒதுக்கப்பட வேண்டும்,  துணை முதலமைச்சர், அமைச்சரவையின்  பங்கு போன்ற உட்பூசல்கள்  இருந்தாலும் கூட்டணி  பலமாக  உள்ளது. பாரதீய ஜனதாவுக்கான எதிர்ப்பு என்ற ஒற்றைச் சிந்தனை  கூட்டனியைப் பலமாக்கி உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி. எடப்பாடி முதலமைச்சர் என அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தினர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். 

ஆனால், அமித்ஷாவின் கணக்கு வேறு விதமாக  உள்ளது. தமிழகத்தில் கூட்டனி ஆட்சி. அமைச்சரவையில்  பாரதீயஜனதா இருக்கும் என்கிறார் அமித்ஷா.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இதனை  மறுக்கிறார்கள். கூட்டணி ஆட்சிக்கு தமிழக மக்கள்  ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  அடுத்த முதலம்மைச்சர்  எடப்பாடி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அடித்துச் சொல்கிறார்கள்.  கூட்டனியின்  முதல்வர் என அமித்ஷா எந்த இடத்திலும் சொல்லவில்லை.

இப்படியான சிக்கல் இருக்கையில் தமிழக மக்கள்  இந்தக் கூட்டணிக்கு வாக்களிபார்களா என்பது கேள்விக்குறி.

இள வயது ரசிகர்களை நம்பி அரசியல் களத்தில்  குதித்த விஜய் தமிழக அரசியலைப் புரட்டிப் போடப்போவதாக சபதம் எடுத்துள்ளார்.தமிழக அரசிலயையும் சினிமாவையும்  பிரிக்க முடியாது. தமிழக அரசியலுடன் பின்னிப் பிணைந்தது சினிமா. அண்ணா, கலைஞர், சிவாஜி,எம்ஜிஆர், எஸ் எஸ் ஆர், கலைவாணர், எம் ஆர் ராதா, கண்ணதாசன், ஜெயலலிதா போன்றவர்கள் நாடகம், சினிமா ஆகிய  கலைகளில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்.  நாடகம், சினிமா ஆகியவற்றின்  மூலம் அரசியல் பாடத்தை மக்களுக்குப் புகட்டி வெற்றி பெற்றவர்கள்.

இவர்களுக்குப் பின்னர் சினிமாவில் இருந்து பலர் அரசியலுக்குள் நுழைந்தார்கள் யாரும் வெற்றி பெறவில்லை. 

 

 

 

No comments: