Tuesday, August 3, 2021

ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய மகளிர் அணி


  டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹொக்கி காலிறுதி ஆட்டத்தில் வலுவான அவுஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் ஹொக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதில் ‘சுவர் என்ற வார்த்தைக்கே புதிய விளக்கமாகத் திகழ்ந்தவர் இந்திய கோல் கீப்பிங் வீராங்கனை சவிதா பூனியா என்றால் மிகையாகாது. 

ஒலிம்பிக் ஹொக்கி இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜித் கவுர் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார், இதுவே வெற்றி கோலாக அமையும் என்று அவர் அப்போது கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

 ஒலிம்பிக் ஹொக்கி இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜித் கவுர் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார், இதுவே வெற்றி கோலாக அமையும் என்று அவர் அப்போது கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

ஆனால் ஆட்டத்தின் நாயகி, ஹீரோயினி, கதாநாயகி யார் என்றால் இந்திய கோல் கீப்பர் சவிதா பூனியாதான். இவர் இல்லையெனில் 3 முறை சாம்பியன்களான அவுஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்க முடியாது, வரலாறும் படைத்திருக்க முடியாது.

No comments: