Sunday, October 5, 2008

ட்ரவிட்டின்முடிவு சரியா?தவறா?



இங்கிலாந்து மண்ணில் விளையாடியஇந்திய அணி 21 வருடங்களின் பின்னர்
டெஸ்ட் தொடரொன்றை வென்றுள்ளது.இந்திய ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சி தரக்கூடி
ய செய்திதான் என்றாலும் மூன்றாவதுடெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலை
வர் ட்ராவிட்டின் முடிவு பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.
லோர்ட்ஸில் நடைபெற்ற முதலாவதுடெஸ்ட்டில் மழை பெய்ததால் இந்திய
அணி தப்பிப் பிழைத்தது. ட்ரன்ட் பிரிட்ஜில்நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்
ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்துஅணியை வீழ்த்திய இந்திய அணி 1 0
என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலை வகித்தது. ஓவலில் நடந்த மூன்றாவது
டெஸ்ட்டின் முடிவை கிரிக்கெட் உலகம்ஆவலுடன் எதிர்பார்த்தது.
மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்றுதமது கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டிய
இக்கட்டான சூழ்நிலையில் இங்கிலாந்துஅணி களமிறங்கியது. ஆறு வருடங்களாக
டெஸ்ட் தொடரில் தாய் மண்ணில் தோல்வியடையாத இங்கிலாந்து அணி அந்தக் கௌர
வத்தைக் காப்பாற்ற முயற்சி செய்யும்நிலைக்குத் தள்ளப்பட்டது.
வெற்றியும் வேண்டாம், தோல்வியும்வேண்டாம் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெற்றி தோல்வி இன்றி முடித்தாலேபோதும் என்ற எண்ணத்துடன் இந்தியஅணி களமிறங்கியது.
ஆரம்ப ஜோடி இன்றி தடுமாறிய இந்தியஅணிக்கு தினேஷ் கார்த்திக் ஜபார் ஜோடி
பெரிதும் கை கொடுத்தது. உலகக் கிண்ணப் போட்டியில் பார்
வையாளராக இருந்த கார்த்திக்கின் திறமையை கிரிக்கெட் ரசி
கர்கள் இப்போது தெரிந்துகொண்டார்கள்.மூன்று டெஸ்ட்களிலும் மூன்று
அரைச்சதங்களைக் கடந்து263 ஓட்டங்கள் எடுத்த கார்த்திக்
இந்திய தரப்பில் அதிகூடியஓட்டங்களைப் பெற்றார். சதமடி
க்கும் சந்தர்ப்பத்தை தவறவிட்டார் கார்த்திக். ஜபார் இரண்டு
அரைச்சதங்கள் கடந்து இந்தியஅணிக்கு நல்ல ஆரம்பத்தை
பெற்றுக்கொடுத்தார்.
ஓவல் மைதானத்தில் இந்தியதுடுப்பாட்ட வீரர்களின் அதிரடி
இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை வெறுப்பேற்றியது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவை எதிர்பார்த்து கிரிக்கெட்
உலகமே ஏக்கத்துடன்காத்திருக்க இந்திய அணித்தலைவர் மிக நிதானமாக முடிவைத்
தீர்மானித்துவிட்டார்.மூன்றாவது டெஸ்ட்டிலும்
வெற்றி பெற வேண்டும் என்றேஇந்திய ரசிகர்களும், சில விமர்ச
கர்களும் விரும்பினார்கள்.இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில்
இந்திய வீரர்கள் எவரும் சதமடிக்கவில்லை.டெண்டுல்கர் 91, கார்த்திக் 91, டோனி 92
ஓட்டங்கள் அடித்து சதத்தைத் தவறவிட்டனர்.இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான
அனில்கும்ப்ளே சதமடிக்கும் நிலையில்இருந்தார். அவரது வாழ்க்கையில் முதலாவது
சதத்தை அடிப்பாரா அடிக்க மாட்டாராஎன்ற ஆர்வம் ரசிகர்களின் இரத்த ஓட்டத்தை
அதிகமாக்கியது. இந்திய அணி தேவைக்குஅதிகமான ஓட்டங்களை
ப் பெற்றுவிட்டது. ஆகையினால் ஆட்டத்தை நிறுத்தி
இங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாடும்படி இந்திய
அணித்தலைவர் பணிப்பார்என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
கும்ப்ளே சதமடிக்க இந்தியஅணி ஆட்டத்தை நிறுத்தும்
அல்லது அவர் ஆட்டமிழந்தால் இந்திய அணி ஆட்டத்தை
நிறுத்தும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். கும்ப்ளே
சதமடித்துவிட்டார். கிரிக்கெட்வரலாற்றில் முதலாவது
சதத்தை கும்ப்ளே தொட்டுவிட் டார். இந்திய அணி ஆட்டத்தை
நிறுத்தும் என எதிர்பார்த்தவர்களின் எண்ணத்தை
ப் பொய்யாக்கிய ட்ராவிட்,இந்திய அணி வீரர்கள் அனைவரும்
ஆட்டம் இழக்கும்வரை காத்திருந்தார்.கும்ப்ளேயுடன் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீசாந்த்
ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் முதலாவதுஇன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இந்திய அணியின் 667 ஓட்டங்களுக்குபதலளித்தாடிய இங்கிலாந்து அணி முதல்
இன்னிங்ஸில் 345 ஓட்டங்களை எடுத்தது.இங்கிலாந்து அணிக்கு ப்லோ ஒன் கொடுக்காது
இந்திய அணி துடுப்பெடுத்தாடியது.இந்திய அணித்தலைவரின் இந்த முடிவு
பெரும் விமர்சனத்துக்குள்ளாகியது.இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்
ஸில் தொடர்ந்து விளையாடும்படிபணிக்காது இந்திய அணி விளையாடியது.
இந்திய அணி வேகமாகஒட்டங்களைக் குவித்து
இங்கிலாந்து அணிக்குமேலும் நெருக்கடி கொடுக்
கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால், இந்திய அணி
யோ துடுப்பாட்டத்தில்கவனம் செலுத்தாது
நேரத்தைக் கடத்துவதிலேயே குறியாக இருந்தது.
அணித் தலைவர் ட்ராவிட்140 பந்துகளுக்கு
12 ஓட்டங்களும், சச்சின் 13 பந்துகளுக்கு
ஒரே ஒரு ஓட்டத்தைப்பெற்று வெறுப்பேற்றினர். இந்திய அணி
யின் வெற்றியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்குஇவர்களின் விளையாட்டு அவமான
மாக இருந்தது.ஆறு விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை எடுத்த இந்திய அணி இங்கி
லாந்து அணியை துடுப்பெடுத்தாடும்படிநான்காம் நாள் மாலையில் கூறியது.
500 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்டமானஇலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து
அணி கடைசிவரை போராடி, ஆறு விக்கட்டுகளை இழந்து 369 ஓட்டங்களை மட்டுமே
எடுத்தது.இந்திய பந்துவீச்சாளர்கள் களைத்துவிட்டன
ர். ஆகையினால் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகவே இரண்டாவது இன்னி
ங்ஸை தாம் விளையாடியதாக ட்ராவிட் கூறியுள்ளார்.
இந்திய ரசிகர்கள் விரும்பியதுபோல் நடந்திருந்தால் இந்திய அணியின் தொடர்
வெற்றி சில வேளையில் கனவாகிப் போயிருக்கும். இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்
களைவிட போராடும் குணம் அதிகம் உள்ளவர்கள். ஆகையினால் இரண்டாவது இன்னிங்
ஸில் இங்கிலாந்து வீரர்கள் நெருக்கடியைக் கொடுப்பார்கள் என ட்ராவிட் எதிர்
பார்த்தார். தனது அணியின் மீதான நம்பிக்கையின்மையினாலேயே பொலோ ஒன்
கொடுக்காது இந்திய அணியைத் துடுப்பெடுத்தாடும்படி ட்ராவிட் பணித்தார். மூன்றாவது
போட்டியின் முடிவை ட்ராவிட் எப்போதோ முடிவு செய்து விட்டார். அவரது
விருப்பப்படியே மூன்றாவது போட்டியில்முடிவு அமைந்துவிட்டது. இங்கிலாந்தில்
தொடர் வெற்றி பெற்றாலும் ட்ராவிட்டின்தலைமையில் விழுந்த கரும்புள்ளியாகவே
இதனைக் கருத வேண்டியுள்ளது.""வீட்டு ரூமில் இருந்து பார்த்தவர்கள் என
ட்ராவிட் மிகச்சாதாரணமாகச் சொல்லிவிட்டார். வீட்டில் இருந்து பார்த்தவர்களில்
நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடியவர்களும் அடங்குவர் என்பதை மறந்துவிட்டார்.
ட்ராவிட் பொலோ ஒன் கொடுத்திருக்கவேண்டும். ட்ரா செய்யும் நோக்கில் தவறான
முடிவை எடுத்துவிட்டார்.''

அன்ஷû மான் கெய்க்வாட், முன்னாள்
வீரர் பயிற்சியாளர்
இந்தியா, ஓவல் டெஸ்ட்டில் பொலோ கொடுக்காதது ட்ராவிட்டின் தனிப்பட்ட
முடிவாக இருந்திருக்காது. இரண்டாவதுடெஸ்ட்டில் அதிரடியாக ரன் எடுத்திருக்க
வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வுகொடுக்க வேண்டிய அவசியம் எனக்குப்
புரியவில்லை.''
கபில்தேவ் முன்னாள் தலைவர் இந்தியா.
""முடிவு எடுக்கும் அதிகாரம் கப்டனுக்குஉண்டு. தொடரை வென்றதால் ட்ராவிட்
எடுத்த முடிவு சரியானதாக இருந்திருக்கும்.ஆனால் ட்ரா செய்யும் நோக்கில் செயற்பட்டது
தவறான முடிவு.''
மதன்லால் முன்னாள் வீரர் இந்தியா
ராகுல் ட்ராவிட்டின் நிலையில் நான் இருந்திருந்தால் பொலோ ஒன் நிச்சயம் கொடுத்தி
ருக்கமாட்டேன். 1 0 என்ற முன்னணியில்இருக்க டெஸ்ட் தொடரை இழக்க யாரும்
விரும்பமாட்டார்கள்.
வோன் தலைவர் இங்கிலாந்து
ட்ராவிட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும்முன்னாள் வீரர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ள
னர். இவர்களில் இங்கிலாந்து அணித்தலைவரின் கருத்து மிக முக்கியமானது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சமநிலையில் முடிந்திருந்தால் அல்லது ஒரு
போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தால் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்
தில் ட்ராவிட் முடிவெடுத்திருப்பார்.
ரமணி
மெட்ரோநியூஸ் 17 08 2007

No comments: