Tuesday, October 7, 2008

தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் இலங்கைத்தமிழர் பிரச்சினை

இலங்கைப்பிரச்சினை காரணமாகஅரசியல் மீண்டும் அரசியல் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிஉள்ளது. கிளிநொச்சியில் நடத்தப்படும் விமானக்குண்டு வீச்சு, வன்னியை நோக்கிய இராணுவப் படை நகர்வு, மனிதஉரிமை ஆர்வலர்களை வன்னியிலிருந்து இலங்கை அரசாங்கம்வெளியேற்றியது. தமிழக மீனவர்களின்
மீதான தாக்குதல்கள் என்பனவற்றினால் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன.இலங்கை அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய எதிர்ப்பு உண்ணாவிரதப்போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முன்னேற்ற திராவிடக்கழகம் ஆகியவை கலந்துகொண்டு தமது ஆத
ரவை வெளிப்படுத்தின.பழ. நெடுமாறன், வைகோ, திருமாவளவன்,டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அர
சுக்கு எதிராகவும் அவ்வப்போது கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகமும் சர்ந்தர்ப்பம்கிடைக்கும் போது இலங்கைத் தமிழர் பற்றியதனது அக்கறையை வெளிப்படுத்தியது.தமிழீழ விடுதலைப் புலிகளை தனது விரோதியாகக் கருதும் காங்கிரஸ் கட்சி, இலங்கைத்தமிழர்களையும் தனது எதிரியாகவே கருதுகிறது.காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறிய இடதுசாரிகள்தமிழகத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்தலைமையிலான கூட்டணியில் இருந்துவெளியேறினர்.
தமிழக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவைவிலக்கிய இடதுசாரிகள் தமிழகத்தில் இருந்துதிராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அகற்றுவதற்கான காய்களை நகர்த்தி வருகின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டின் பின்னர் இந்திய மீனவர்கள்மீதான தாக்குதல், கொலை ஆகியவற்றுக்குமுடிவு கட்டப்படும் என்று கருதப்பட்டது. சார்க்மாநாட்டின் பின்னரும் இந்திய மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படை தாக்குல் நடத்தியது.தமிழக அரசியல் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, இந்தியப் பிரதமரின் ஆலோசகரான எம்.கே.நாராயணன் தமிழக முதல்வரைச் சந்தித்து இந்திய மீனவர்களின் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தாது என்றுஉறுதியளித்தார். அவர் உறுதியளித்த பின்னரும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்தொடர்கிறதுதிராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ்கட்சி ஆகிய இரண்டையும் தவிர தமிழகத்தின்ஏனைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துதமது ஆதங்கத்தை வெளிப்படுத்தின.
தமிழகத்தின்குரல் ஓங்கி ஒலிக்கையில் தனது குரல்அடங்கிப் போனதை உணர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் நாளை திங்கட்கிழமை தன்னிலை
விளக்கமளிக்கவுள்ளது.வைகோ, டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த்திருமாவளவன், பழ. நெடுமாறன் ஆகியோர்இலங்கைத் தமிழ் மக்களுக்காக உணர்வுபூர்வ
மாக குரல் கொடுத்து வருகின்றனர்.கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கு பற்றப் போவதாகஅறிவித்த ஜெயலலிதா இறுதி நேரத்தில்
காலை வாரிவிட்டார். விடுதலைப்புலிகளின்ஆதரவாளர்களும், விஜயகாந்தின் கட்சித்தொண்டர்களும் பங்கு பற்றியதால் ஜெயலலிதா தனது முடிவை மாற்றி இருக்கலாம்.பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியபிரமுகர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு பற்றவில்லை. இலங்கைத்தமிழர்களுக்காக ஒருமித்த குரல் கொடுக்கமுடியாத நிலையில் தமிழகக் கட்சிகள்உள்ளன. இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழகஅரசியலை விறுவிறுப்பாக்கி உள்ளது. இதே
வேளை தமிழக முதல்வரின் குடும்ப அரசியலும் சூடாகி உள்ளது. மாறன் சகோதரர்களின்சன் பிக்ஸர்ஸ் தயாரித்த காதலில் விழுந்தேன்
என்ற படம் மதுரையில் திரையிட முடியாதநிலை உள்ளது.தமிழக முதல்வரின் மகனான மு.க. அழகிரியின் அச்சுறுத்தல் காரணமாக மதுரையில்
உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் படத்தைத்திரையிடத் தயங்குகிறார்கள். ஆதாரத்துடன்புகார் தந்தால் விசாரணை நடத்தப்படும் என்றுமுதல்வர் பதிலளித்துள்ளார்.
மதுரையில் உள்ள தியேட்டர்களுக்கு உரியபாதுகாப்பை வழங்கி படத்தை திரையிடவேண்டியது தமிழக அரசின் கடமை. புகார்வரும் வரை விசாரணை முடியும் வரை பார்த்துக்கொண்டிருப்பது தமிழக அரசுக்கு அழகல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தில்இருந்து முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனை
வெளியேற்றி விட வேண்டும் என்பதில்தமிழக அரசியல் வாதிகள் குறியாக உள்ளனர்.அதற்கான நாளையும் அவர்கள் குறித்து விட்டார்கள். தமிழக அரசியல் கட்சிகளின் மாநாடுகளை நேரடி ஒளிபரப்புச் செய்து முதல்வரின்வெறுப்பைச் சந்தித்துள்ள சன் நிறுவனம் விஜயகாந்தின் அரசியல் கட்சியின் இளைஞர்
அணி மாநாட்டை நேரடி ஒளிபரப்புச் செய்யவுள்ளது.ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் ஆகியோர் கலந்துகொண்ட மாநாடுகளையும் கூட்டங்
களையும் நேரடி ஒளிபரப்புச் செய்து அவர்களிடம் நல்ல பெயரை வாங்கியுள்ளது சன்நிறுவனம். தமிழக முதல்வர் கலந்துகொண்டமாநாட்டையும் சன் நிறுவனம் நேரடி ஒளிபரப்புச் செய்தது. அதற்காக சன் நிறுவனத்தைமுதல்வர் பாராட்டவில்லை.தேசிய முன்னேற்ற திராவிடக் கட்சியின்
இளைஞர் அணி மாநாட்டை சன் நிறுவனம்நேரடி ஒளிபரப்புச் செய்த பின்னர் திராவிடமுன்னேற்றக் கழக உறுப்பினர் பதவியில்இருந்து தயாநிதி மாறன் விலக்கப்படுவார்என்ற செய்தியை முதல்வர் உண்மையாக்குவாரா தனது சாணக்கியத்தினால் இந்தப் பிரச்சினையை புஸ்வாணம் ஆக்குவாரா ன்பதைஅறிய தமிழக அரசியல்வாதிகள் ஆர்வமாக
உள்ளனர்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 05 10 2008

No comments: