Monday, March 9, 2009

சாதனைகளுடன் வென்றது இந்தியா


நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 58 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் நான்கு விக்öகட்டுகளை இழந்து 392 ஓட்டங்கள் எடுத்தது
நியூஸிலாந்து பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்த ஷேவாக் மூன்று ஓட்டங்களுடன் மில்ஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கம்பீர் 27 பந்துகளுக்கு 15 ஓட்டங்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
மூன்றõவது இணைப்பாட்டத்தில் விளையாடிய சச்சின், யுவராஜ் ஜோடி மிகச் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்தியது.
ஷேவாக் ஆட்டமிழந்ததனால் மகிழ்ந்திருந்த நியூஸிலாந்து வீரர்கள் சச்சினின் அதிரடியைச் சமாளிக்க முடியாது திணறினர். 60 பந்துகளுக்கு முகம் கொடுத்த யுவராஜ்சிங் ஆறு சிக்ஸர் 10 பௌண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்கள் எடுத்தார்.
யுவராஜ், சச்சின் ஜோடி 138 ஓட்டங்கள் எடுத்தது. இவர்கள் இருவரும் இணைந்து 76 பந்துகளில்100 ஓட்டங்கள் எடுத்தனர்.
யுவராஜ் ஆட்டமிழந்ததும் சச்சினுடன் ஜோடி சேர்ந்தார் டோனி. இவர்கள் இருவரும் இணைந்து 135 ஓட்டங்களை அடித்தனர்.
மிகச் சிறந்த முறையில் துடுப்படுத்தாடிய சச்சின் டெண்டுல்கர் 163ஓட்டங்கள் எடுத்தபோது தசைப்பிடிப்பு காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
59 பந்துகளில் 50 ஓட்டங்களையும் 101 பந்துகளில் 100 ஓட்டங்களையும் 137 பந்துகளில் 150 ஓட்டங்களையும் எடுத்த சச்சின் டெண்டுல்கர் 133 பந்துகளில் ஐந்து சிக்ஸர் 16 பௌண்டரிகள் அடங்கலாக 163 ஓட்டங்கள் எடுத்தõர். இது சச்சினின் 43ஆவது சதமாகும். ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தில் முத ன் முதலாக சதமடித்தார்.
கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி சிட்னியில் 117 ஓட்டங்கள் அடித் தார்.
சச்சின் வெளியேறியதும் டோனியுடன் இணை ந்த ரெய்னாவின் அதிரடி நியூசிலாந்து வீரர்களை தடுமாற வைத்தது.
58 பந்துகளுக்கு முகங் கொடுத்த டோனி இர ண்டு சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி நேரத்தில் விஸ்வரூபமெடுத்த ரெய்னா 18 பந்துகளில் ஐந்து சிக்ஸர் உட்பட 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆட்டநேர முடிவின் போது இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 392 ஓட்டங்கள் எடுத்தது. நியூஸிலாந்தில் இந்திய அணி அடித்த அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். 18 சிக்ஸர்கள் அடித்து தென் ஆபிரிக்காவின் சாதனையை சமப்படுத்தியது. மில்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் பட்லர், எலியட் ஆகியோர் தலா ஓரு விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
10 ஓவர்கள் பந்து வீசிய சுதி 105 ஓட்டங்களை கொடுத்தார்.
393 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, இந்திய அணியை மிரட்டியது. நியூசிலாந்து அணி 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 334 ஓட்டங்கள் எடுத்தது.
மில்ஸ், மக்கலம் ஜோடி 166 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணியை மிரட்டியது. 68 பந்துகளைச் சந்தித்த மக்கலம் மூன்று சிக்ஸ்ர், 6 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
80 பந்துகளைச் சந்தித்து நான்கு சிக்ஸர்கள் 12 பௌண்டரிகள் அடங்கலாக 105 ஓட்டங்கள் எடுத்த ரெய்டர் ஆட்டம் இழந்ததும் இந்திய அணியின் கை ஓங்கியது.
ரவ்லர் 7, குப்தில் 1, எலியட் 18, ஓராம் 7 மைக் கிலைன் 7,பட்லர் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்திய அணி வெற்றியின் அருகில் சென்றது.
மில்ஸ், சுதி ஜோடி இந்திய அணியின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் விளையாடியது. மில்ஸ் 54, சுதி 32 ஓட்டங்களில் ஆட்டம் இழந்ததும் இந்திய அணியின் வெற்றி உறுதியாகியது.
சஹீர்கான், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் ஆகியோர்தலா இரண்டு விக்கெட்டுகளையும் பிரவீன் குமார், பதான் ஆகியோர் தலா ஒரு விக்öகட்டையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது. நான்காவது ஒருநாள் போட்டி 11 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறும்.

No comments: