Thursday, April 15, 2010

உலகக்கிண்ணம்2010


இத்தாலி 1934

இத்தாலியில் 1934ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலி சாம்பியனானது. இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டியில் 16 நாடுகள் பங்கு பற்றின. முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களில் உள்ள நாடுகள் மட்டும் பங்குபற்றின. இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டியில் ஆபிரிக்க கண்டத்தில் இருந்து எகிப்து பங்குபற்றியது.
ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து ஒஸ்ரியா, பெல்ஜியம், செக்கோஸ்லாவியா, பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி, நெதர்லாந்து, ரொமானியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் பங்கு
பற்றின. வட மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவும் தென் அமெரிக்காவில் இருந்து பிரேஸில், ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளும் பங்குபற்றின. இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 32 நாடுகள் போட்டியிட்டன.
முதல் சுற்றில் விளையாடிய 16 நாடுகளில் இருந்து புள்ளிகளின் அடிப்படையில் எட்டு நாடுகள் காலிறுதிக்குத் தெரிவாகின. காலிறுதியில் வெற்றி பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இத்தாலி, ஒஸ்ரியா,செக்கோஸ்லேவியா, ஜேர்மன் ஆகிய நாடுகள் அரையிறுதிக்குத் தெரிவு செய்யப்பட்டன. முதல் சுற்றில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 71 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது.
ஒஸ்ரியாவுடன் நடந்த போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலியும் ஜேர்மனியுடனான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செக்கோஸ்லேவியாவும் இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. மூன்றாம் இடத்தைப் பெறுவதற்காக ஜேர்மனியும் ஒஸ்ரியாவும் மோதின. இதில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மன் மூன்றாம் இடத்தையும் ஒஸ்ரியா நான்காம் இடத்தையும் பிடித்தன.
இத்தாலிக்கும் செக்÷காஸ்லேவியாவுக்கும் இடையில் நடந்த இறுதிப் போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இத்தாலி சாம்பியனானது.
17 போட்டிகளில் 70 கோல்கள் அடிக்கப்பட்டன. 3,58,000 பேர் மைதானங்களில் போட்டியைப் பார்த்தனர். சிறந்த வீரருக்கான கோல்டன் சூவைப் பெறுவதற்காக ஒஸ்ட்ரிச் நெஜெட்லி (செக்
÷காஸ்லேவியா), எட்மன்ட் கொனென் (ஜேர்மனி), அங்கலோ ஸ்செஸ்வியோ (இத்தாலி) ஆகிய வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஐந்து கோல்கள் அடித்த செக்÷காஸ்லேவிய வீரரான ஒஸ்ட்ரிட் நெஜெட்லிக்கு கோல்டன் சூ வழங்கப்பட்டது. ஐந்து போட்டிகளில் விளையாடிய இத்தாலி 12 கோல்களையும் நான்கு போட்டிகளில் விளையாடிய ஜேர்மன் 11 கோல்களையும் அடித்தன. ஹங்கேரிய வீரரான இம்ரி மார்கோஸுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
ரமணி

மெட்ரோநியூஸ்

No comments: