Thursday, April 15, 2010

உலகக்கிண்ணம்2010


உருகுவே 1930

முதலாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 1930ஆம் ஆண்டு உருகுவேயில் நடைபெற்றது. உருகுவே, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் உருகுவே வெற்றி பெற்று முதலாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 1904 ஆம் ஆண்டு பிஃபா (The Federation International de Football Association- FIFA ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவரான ஜுலிஸ் ரிமெட் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த வேண்டும் என்று 1929ஆம் ஆண்டு ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனையின் பிரகாரம் 1930ஆம் ஆண்டு உருகுவேயில் மிகவும் சிறப்பான முறையில் முதலாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
முதலாவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் 13 நாடுகள் பங்கு பற்றின. பெல்ஜியம், பிரான்ஸ், ரொமேனியா, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகள் ஐரோப்பாவிலிருந்தும் மெக்
ஸிக்கோ, அமெரிக்கா ஆகிய நாடுகள் வட மத்திய அமெரிக்காவில் இருந்தும் ஆர்ஜென்ரீனா, பொலிவியா, பிரேசில், சிலி, பரகுவே, பெரு, உருகுவே ஆகிய நாடுகள் தென் அமெரிக்காவில் இருந்தும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
13 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. குழு 1இல் ஆர்ஜென்ரீனா, சிலி, பிரான்ஸ், மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளும் குழு 2இல் யூகோஸ்லேவியா, பிரான்ஸ், பொலிவியா ஆகிய நாடுகளும் குழு 3இல் உருகுவே, ரொமேனியா, பெரு ஆகிய நாடுகளும் குழு 4இல் அமெரிக்கா, பரகுவே, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் போட்டியிட்டன.
நான்கு குழுக்களிலும் முதலிடம் பிடித்த நான்கு நாடுகள் அரையிறுதியில் விளையாடின. ஆர்ஜென்ரீனா, அமெரிக்கா, உருகுவே, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகள் அரையிறுதிக்குத் தெரிவாகின.
ஆர்ஜென்ரீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் 61 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது. உருகுவே, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 61 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது.
உருகுவே, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகள் முதலாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மோதின. முதல் பாதியில் ஆர்ஜென்ரீனா 21 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இடைவேளையின் பின் உருகுவே மூன்று கோல்கள் அடித்து 42 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலாவது உலகக் கிண்ண சம்பியனானது.
அமெரிக்காவுக்கும் யூகோஸ்லேவியாவுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அமெரிக்கா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. தோல்வி அடைந்த யூகோஸ்÷லவியா நான்காவது இடத்தைப் பிடித்தது.
குல்லரிமோ ஸ்ரெபில் (ஆர்ஜென்ரீனா), பெட்ரோசியா (உருகுவே), பேர்ட் பெட்ரனாயடி (அமெரிக்கா), குல்லரிமோ சுபியப்ரி (சிலி) ஆகியோர் கோல்டன் சூ பெறுவதற்காக பரிந்துரை செய்யப்பட்டனர். எட்டு கோல்கள் அடித்த ஆர்ஜென்ரீனா வீரர் குல்லரிமோ ஸ்ரெபிலுக்கு கோல்டன் சூ வழங்கப்பட்டது.முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் 18 போட்டிகள் நடைபெற்றன. 70 கோல்கள் அடிக்கப்பட்டன. ஆர்ஜென்ரீனா அதிகபட்சமாக 18 கோல்கள் அடித்தது. உருகுவே 15 கோல்கள் அடித்தது. பெரு நாட்டின் வீரர் பிலா கிடோ திலின்டோவுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது

ரமணி

மெட்ரோநியூஸ்

No comments: