Monday, April 19, 2010

திரைக்குவராதசங்கதி 18




நானும் ஒரு பெண் என்ற படத்தில்கறுப்புப் பெண்ணாக விஜயகுமாரி நடித்தார். அழகில்லாதவர்கள் கூட மேக்கப்பினால் தம்மை அழகுபடுத்திக் காட்டும்
நேரத்தில் விஜயகுமாரியோ கறுப்புப்பெண்ணாக நடிக்க ஒப்புக் கொண்டார்.விஜயகுமாரியின் பாத்திரத்தைப் பற்றிகேள்விப்பட்டவர் அவருடைய ஆட்டம்முடிந்து விட்டது என்று நேரடியாகக் கூறினார்கள். நிச்சயம் உன்னுடைய மாக்கட்அவுட் என்றார்கள்.நானும் ஒரு பெண் படத்தில் நடித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் வசந்திஎனும் படத்தில் நடிப்பதற்கு விஜயகுமாரி ஒப்புதல் வழங்கினார்.வசந்தி படப் பூஜைக்கு கறுப்புப்பெண் மேக்கப்பில் போனார். அதனைத்கண்ட பலர் அங்கும் தமது கைவரிசையைக் காட்டினார். பொது இடங்களில்மேக்கப்புடன் வந்தால் உன் இமேஜ்படுத்து விடும் என்றனர்.கறுப்புப் பெண் வேடத்தைப் பற்றிபலரும் மிரட்டியதால் விஜயகுமாரிக்குபயம் வந்து விட்டது. நானும் ஒரு பெண்படத்துடன் தனது சினிமா வாய்ப்புமுடிந்துவிடுமோ என்று விஜயகுமாரிநினைத்தார்.
வசந்தி படப் பூஜைக்கு வந்த நடிகர்திலகம் அங்கு விஜயகுமாரியைக் கண்டுஅதிசயப்பட்டு விபரம் கேட்டார்.விஜயகுமாரி கூறுவதைக் கவனமாகக்கேட்ட நடிகர் திலகம் நான் பெண்ணாகஇருந்தால் ஏ.வி.எம்.மிடம் கேட்டு இந்த பாத்திரத்தில் நான்நடிப்பேன். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார் நடிகர் திலகம்.நானும் ஒரு பெண் பெருவெற்றி பெற்றது. விஜயகுமாரிக்கு ஜனாதிபதி விருதுகிடைப்பதற்கு நானும் ஒரு பெண்திரைப்படம் வழி வகுத்தது.
ஸ்ரீதரின் இயக்கத்தில் கொடி மலர்என்ற படத்தில் விஜயகுமாரி நடித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பின் போதுஒருநாள் விஜயகுமாரியிடம் இரண்டுபுகைப்படங்களை ஸ்ரீதர் காட்டினார்.முதலாவது படத்தில் உள்ள பெண் மிகவும் ஒல்லியாக இருந்தார். இரண்டாவதுபடத்தில் உள்ள பெண் அளவான தேகக்கட்டுடன் இருந்தார்.புதிய நடிகர்களை வைத்து படமொன்று இயக்கப் போகிறேன். இந்தஇரண்டில் யாரைத் தெரிவு செய்வாய்என்று ஸ்ரீதர் கேட்டார். இரண்டு படங்களையும் மிகவும் அவதானமாகப் பார்த்தவிஜயகுமாரி இரண்டாவது படத்தில்உள்ள பெண்ணையே தான் தெரிவு செய்வதாகக் கூறினார்.விஜயகுமாரியின் பதிலைக் கேட்டஸ்ரீதர் சிரித்து விட்டு அந்தப் பெண்ணைத்தான் நாங்களும் தெரிவு செய்துள்ளோம் என்றார்.அந்தப் பெண்தான் வெண்ணிறஆடை படத்தின் மூலம் அறிமுகமாகிஇன்று இந்திய அரசியலைக் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெயலலிதா ஸ்ரீதரால்நிராகரிக்கப்பட்டவர் ஹிந்தித் திரை உலகில் கனவுக் கன்னியாக விளங்கியஹேமமாலினி.
ஜெயலலிதாவின் 100ஆவது படமான சூரியகாந்திபடத்தின் 100 ஆவது நாள்விழாவில் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அந்தவெற்றி விழாவில் பேசியவிஜயகுமாரி, ஜெயலலிதாமிகவும் திறமையானவர்.அவர் அரசியலில் நுழைந்தால் இந்திரா காந்திபோல் பிரபல்யமாவார்'' என்றுபேசினார்.எஸ்.எஸ்.ஆர். விஜயகுமாரி நடித்த முத்து மண்டபம்என்ற நாடகம் தமிழகத்தில்மிகவும் புகழ்பெற்றது. அந்தநாடக விழாவின்போது கலை
ஞர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. டி.கே.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய ம.பொ.சி.கண்ணகி வரலாறு படமானால் அதில்நடிப்பதற்கு மிகவும் பொருத்தமான நடிகைவிஜயகுமாரி என்று கூறினார்.அந்தக் கூட்டத்தின் இறுதியில் கலைஞர் பேசினார். கண்ணகி வரலாறு பூம்புகார் என்ற பெயரில் வெளியாகும் அதில்கோவலனாக எஸ்.எஸ். ஆரும் கண்ணகியாக விஜயகுமாரியும் நடிப்பார்கள்என்று பதிலளித்தார். பூம்புகார் படத்தைமுரசொலி மாறன் தயாரித்தார். கதைவசனத்தை கலைஞர் எழுதினார். விஜயகுமாரிக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது அப்படம்.பூம்புகார் படம்வெளிவருவதற்கு முன்னர் கண்ணாம்பாநடித்த கண்ணகி என்ற படம் வெளியாகியது. அதில் கண்ணகியாக கண்ணாம்பாநடித்தார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட கண்ணாம்பா தமிழைத்தடையின்றி சுத்தமாகப் பேசுவார்.பூம்புகார் படத்தில் நடிக்க முன்பு கண்ணாம்பாவிடம் சென்று ஆசி பெற்றார்விஜயகுமாரி.
ரமணி
மித்திரன்வாரமலர்

09/09/2007

No comments: