Wednesday, May 19, 2010

உலகக்கிண்ணம்2010


சிலி1962
சிலியில் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் செக்கோஸ்லோவாக்கியாவை வீழ்த்திய பிரேஸில் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
1960ஆம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மரணமானார்கள். உலகக் கிண்ண உதைபந்தாட்டம் நடைபெறும் மைதானம் பாதிக்கப்பட்டது. சிலி நாட்டு ஜனாதிபதியின் முயற்சியினால் விரைவாக புதிய மைதானம் கட்டப்பட்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 56 நாடுகள் போட்டியிட்டன. 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. கடந்த உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய சுவீடன் தகுதி பெறவில்லை. கொலம்பியா உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
ஐரோப்பாவிலிருந்து பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, இங்கிலாந்து, மேற்கு ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, சோவியத் ரஷ்யா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, யூகோஸ்லாவியா வட மத்திய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோ, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், சிலி, கொலம்பியா, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. 16 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. நான்கு குழுக்களிலும் இருந்து அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற தலா இரண்டு நாடுகள் காலிறுதிக்குத் தெரிவாகின. 21 வயதான பீலே மெக்ஸிக்கோவுக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து பிரேஸிலின் வெற்றிக் கணக்கை தொடக்கி வைத்தõர்.
முதல் சுற்றில் பல்கேரியாவுக்கு எதிரான போட்டியில் 61 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஹங்கேரி, ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமை பெற்றது. கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 50 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற யூகோஸ்லாவியா அதிக கோல் அடித்த இரண்டாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.
சோவியத் யூனியன், கொலம்பியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 44 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மேற்கு ஜேர்மன் இத்தாலி, பிரேஸில் செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆர்ஜென்ரீனா, இங்கிலாந்துபல்கேரியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டிகள் கோல் எதுவும் அடிக்காமையினால் சமநிலையில் முடிவடைந்தன.
முதல் சுற்றில் அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற பிரேசில், இங்கிலாந்து சிலி, சோவியத் யூனியன் யூகோஸ்லாவியா, ஜேர்மன் செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆகியன காலிறுதியில் விளையாடின. காலிறுதியில் வெற்றி பெற்ற செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லாவியா, பிரேஸில், சிலி ஆகியன வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
செக்கோஸ்லோவாக்கியாவுடனான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற யூகோஸ்லாவியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. சிலியுடனான போட்டியில் 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் இறுதிப் போட்டிக்கு விளையாடத் தகுதி பெற்றது.
அரையிறுதியில் தோல்வியடைந்த சிலி, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சிலி மூன்றாவது இடத்தையும் யூகோஸ்லாவியா நான்காவது இடத்தையும் பிடித்தன.
பிரேஸில், செக்கோஸ்லோவாக்கியா ஆகியவற்றுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் 3 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தைத் தக்க வைத்தது.
பிரேஸில் 14 கோல்களும் யூகோஸ்லாவியா, சிலி ஆகியன தலா 10 கோல்களும் சோவியத்யூனியன் ஒன்பது கோல்களும் ஹங்கேரி எட்டு கோல்களும் அடித்தன.
வாவா (பிரேஸில்), லியோனல் சன் செஸ் (சிலி), ஜாகோவிச் (யூகோஸ்லாவியா), அல்பேட் (ஹங்கேரி), இவானோவ் (சோவியத் யூனியன்) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷýவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தலா நான்கு கோல்கள் அடித்தனர். ஹங்கேரியைச் சேர்ந்த அல்பேட் சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டு கோல்டன் ஷý வழங்கப்பட்டது.
பெரினி (இத்தாலி), டேவிட் (இத்தாலி), கப்ரெரா (உருகுவே), லண்டா (சிலி), சரிஞ்சா (பிரேசில்) ஆகியோருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.32 போட்டிகளில் 89 கோல்கள் அடிக்கப்பட்டன. 89,074 பேர் போட்டிகளை மைதானங்களில் பார்வையிட்டனர்

ரமணி

மெட்ரோநியூஸ்

2 comments:

அ.முத்து பிரகாஷ் said...

ஜெர்மனிக்கு தான் இந்த கப் ன்னு சொல்றேன் நான் ...
என்ன சொல்றீங்க வர்மா ...?

--------------------------------------
advt.
தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html

வர்மா said...

நியோ said...
ஜெர்மனிக்கு தான் இந்த கப் ன்னு சொல்றேன் நான் ...
என்ன சொல்றீங்க வர்மா

வாழ்த்துக்கள் நியோ. பிரேஸில் சவால்விடும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
வர்மா