Thursday, May 20, 2010

உலகக்கிண்ணம்2010


மெக்சிக்கோ1970
மெக்ஸிக்கோவில் 1970ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இத்தாலியை வீழ்த்தி பிரேஸில் சம்பியனானது. ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முதன் முதலாக வட அமெரிக்க நாட்டில் நடைபெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 75 நாடுகள் போட்டியிட்டன. 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து மொராக்கோ தகுதி பெற்றது. ஆர்ஜென்ரீனா, பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை.
ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து மொராக்கோ, ஐரோப்பாவிலிருந்து பெல்ஜியம், பல்கேரியா, செக்கஸ்லோவாகியா, இங்கிலாந்து, ஜேர்மன், இஸ்ரேல், இத்தாலி, ரொமானியா, சோவியத் யூனியன், சுவீடன், வட மத்திய அமெரிக்காவிலிருந்து எல்சல்வடோர் மெக்ஸிக்கோ தென் அமெரிக்காவிலிருந்து பிரேஸில், பெரு, உருகுவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
16 நாடுகளும் நான்கு குழக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. ஒவ்வொரு குழுவிலும் அதிக புள்ளிகளைப் பெற தலா இரண்டு நாடுகள் காலிறுதிக்குத் தெரிவாகின.
பிரேஸில் பெரு மேற்கு ஜேர்மன், இங்கிலாந்து இத்தாலி, மெக்ஸிக்கோ உருகுவே, சோவியத் ரஷ்யா ஆகியன காலிறுதியில் விளையாடின. காலிறுதியில் வெற்றி பெற்ற பிரேஸில் இத்தாலி, உருகுவே, மேற்கு ஜேர்மனி ஆகியன அரையிறுதியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. உருகுவேக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிரேஸில் ஜேர்மனுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இத்தாலி ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த மேற்கு ஜேர்மன், உருகுவே ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மன் மூன்றாவது இடத்தையும் உருகுவே நான்காவது இடத்தையும் பிடித்தன.
இங்கிலாந்தில் நடைபெற்ற எட்டாவது உலகக் கிண்ணஉதைபந்தாட்ட போட்டியில் இறுதிவரை முன்னேறி தோல்வி அடைந்த மேற்கு ஜேர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 1958, 1962ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியனான பிரேஸில் சம்பியனான கனவுடன் இறுதிப் போட்டியில் இத்தாலியை எதிர்த்த விளையாடியது பரபரப்பான இறுதிப் போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி சம்பியனானது பிரேஸில். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இத்தாலி இரண்டாமிடத்தைப் பிடித்தது.
பிரேஸில் 19 கோள்களும் மேற்கு ஜேர்மனி 17 கோல்களும் இத்தாலி 10 கோல்களும் அடித்தன. மேற்கு ஜேர்மனியை சேர்ந்த கிரேட் முல்லர் 10 கோல்கள் அடித்தார். ஜய்சின்ஹோ (பிரேஸில்) ஏழு கோல்கள் அடித்தார்.
உருகுவேக்கு எதிராக ஆறு தடவை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஜேர்மனி வீரர் கிரேட் முல்லருக்கு கேடன் ஷý வழங்கப்பட்டது. கிரேட் முல்லர் (மேற்கு ஜேர்மனி) ஜய்சின்ஹோ (பிரேஸில்) கியுபிலஸ் பெரு அணி வீரர்கள் கோல்டன் ஷýவுக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.
பெருநாட்டு வீரர் கியுபிலஸ் சிறந்த இளம் வீரராகத் தெரிவானார். 1958ஆம் ஆண்டு சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது. 1958ஆம் ஆண்டு பீலே ( பிரேஸில், முதன் முதலில் சிறந்த இளம் வீரர் விருதைப் பெற்றார். 1962ஆம் ஆண்டு அல்பேட் (ஹங்கேரி, 1966 ஆம் õண்டு பெக்கன் பலூர் ( மே. ஜேர்மனி) ஆகியோர் இளம் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் முதன் முதலாக கலரில் ஒளிபரப்பப்பட்டன. ஒரு வீரர் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரர் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு அணியிலிருந்து இரண்டு மாற்று வீரர்கள் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு அணியும் சம புள்ளி பெற்றால் கோல்களின் அடிப்படையில் சராசரி புள்ளி கணக்கிட்டு அணிகள் தரப்படுத்தப்பட்ன.
பிரேஸில் வீரர் பீலே கடைசியாக விளையாடிய உலகக் கிண்ணப போட்டி இங்கிலாந்து அணித் தலைவர் பொபி மோரே திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியின் முதல் நாள் இரவு இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் முன்னால் ஆடிப் பாடிய பிரேஸில் ரசிகர்கள் இங்கிலாந்து வீரர்களின் தூக்கத்தைக் குழப்பினர். 32 போட்டிகளில் 95 கோல்கள் அடிக்கப்பட்டன. 1603975 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர். சிவப்பு அட்டையும் மஞ்சள் அட்டையும் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

ரமணி

மெட்ரோநியூஸ்

No comments: