Monday, June 14, 2010

தவிக்கிறது பா.ம.க.தள்ளாடுகிறது அ.தி.மு.க.




தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி யாக விளங்கிய டாக்டர் ராமதாஸ் கூட்டணி பற்றிய முடிவு எடுக்க முடியாது தடுமாறு கிறார். அரசியல் கள நிலைவரங்களின்போது அடிக்கடி கூட்டணி மாறி தேர்தல்களில் வெற்றி பெற்ற டாக்டர் ராமதாஸ் கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மீண்டும் திராவிட முன்னேற்றக் கூட்டணியில் சேர்வதற்கு தூதுவிட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ப்பதாக உறுதி மொழி கூறிய பின்பும் முடிவெடுக்க முடியாது தடுமாறுகிறார் டாக்டர் ராமதாஸ்.
அண்ணாதிராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெளியேறி பென்னாகரம் இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனியாக போட்டியிட்ட போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூதை நிராகரித்தார் டாக்டர் ராமதாஸ். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு சரிவதைத் தெரிந்துகொண்ட டாக்டர் ராமதாஸ், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெறும் என்று உறுதி யாக நம்பியதால் அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தின் தூதை நிராகரித்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய பாட்டாளி மக்கள் கட்சியை தனது தலைமையிலான கூட்டணி யில் முதல்வர் கருணாநிதி இணைப்பார் என்றே டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்தார். பாட்டாளி மக்கள் கட்சி கடந்த காலங்களில் அணி மாறிய சந்தர்ப்பங்களை சுட்டிக் காட்டிய முதல்வர் கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ப்பதற்கு காலக்கெடு விதித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி அடிக்கடி அணி மாறுவதை காங்கிரஸ் தலைமையும் விரும்ப வில்லை. தமது தேவை நிறைவேறிய பின்னர் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அணி மாறுவது பாட்டாளி மக்கள் கட்சியின் கொள் கைகளில் ஒன்று என்பது வெளிப்படையானது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ராஜ்ய சபா பதவியும் தருவதாக உறுதி வழங்கப்பட்டது. ஆனால் மேலும் ஒரு தொகுதி வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அடம் பிடித்தது. அதுபற்றிய பேச்சுவார்த் தைக்கு வருமாறு அழைத்த போது உதறித் தள்ளிவிட்டு ஜெயலலிதாவுடன் ஒட்டிக் கொண்டார் டாக்டர் ராம தாஸ்.
இலங்கையில் யுத்தம் உச் சக்கட்டத்தை அடைந்திருந்த வேளையில் இந்திய நாடா ளுமன்றத் தேர்தல் நடை பெற்றது. தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் எதிரான உணர்வலைகள் தமிழகத்தில் மேலோங்கி இருந்தன. திரா விட முன்னேற்றக் கழகத் தின் தலைமையிலான கூட் டணி தோல்வியடையும் என்று டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்ததனால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார். டாக்டர் ராமதாஸை இருகரம் நீட்டி மகிழ்வுடன் எதிர்கொண்ட ஜெயலலிதா காலப்போக்கில் டாக்டர் ராமதாஸை ஏறெடுத் தும் பார்க்கவில்லை. தேர்தலில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் ஜெயலலிதாவை தடு மாறச் செய்தன. டாக்டர் ராமதாஸின் எதிர் பார்ப்பு நிறை வேறாமையினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலி ருந்து வெளி யேறினார் டாக்டர் ராமதாஸ்.
திராவிட முன்னேற்றக் கழக அரசை விமர் சிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்க ஆரம்பித் துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்ட ணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி வரும். ஆனால் இப்போதைக்கு வராது என்று முதல்வர் கருணாநிதி சூசகமாக வெளியிட்ட கருத்தால் நொந்து போயுள்ளார் டாக்டர் ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சியின் பிரசாரப் பீரங்கி யான காடு வெட்டி குரு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் மீது மீண்டும் வசை பாடத் தொடங்கி விட்டார். ஆகையால் இப் போதைக்கு கூட்டணி பற்றிய முடிவை டாக்டர் ராமதாஸ் வெளியிட மாட்டார்.
முதல்வர் கருணாநிதியின் இந்த முடிவு அரசியல் சாணக்கியம் மிக்கது என்று பத்திரி கைகள் விமர்சித்திருந்தன. கருணாநிதி தனது அரசியல் அனுபவத்தின் மூலம் டாக்டர் ராமதாஸை பொறியில் விழுத்தியுள்ளார் என்ற விமர்சனம் டாக்டர் ராமதாஸை சீண்டி விட் டது. அதனால் கொதித்தெழுந்த டாக்டர் ராம தாஸ் சாணக்கியன் ஒரு துரோகி என்று மறைமுகமாக கருணாநிதியைச் சாடியுள்ளார். கூட்டணி பற்றிய முடிவை இப்போதைக்கு டாக்டர் ராமதாஸ் வெளியிடமாட்டார் என் பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
கருணாநிதி விதித்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு கூட்டணியில் சேர்வதாக அறி வித்தால் அது தனது பலவீனமாக வெளிப் படுத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் பயப் படுகிறார். தமிழக சட்ட சபைத் தேர்தல் வரை முடிவைக் கூறாது டாக்டர் ராமதாஸ் காலத் தைக் கடத்த திட்டமிட்டுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவரான முன் னாள் அமைச்சர் முத்துசாமி அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளி யேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். எம். ஜி. ஆரின் தீவிர விசுவாசிகளில் ஒருவர் முத்துசாமி. ஜெயலலி தாவின் தலைமையிலும் எம். ஜி. ஆரின் மனைவி ஜானகியின் தலைமையிலும் அண் ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவு பட்டிருந்த போது எம். ஜி. ஆரின் விசுவாசிகள் பலர் ஜனானகியின் தலைமை யையே விரும்பினார்கள். ஜானகியைத் தலைவியாக ஏற்றுக் கொண்டவர்களில் முத்துசாமியும் ஒருவர். பிளவுபட்ட திராவிட முன் னேற்றக் கழகம் ஜெயலலி தாவின் தலைமையில் ஒன்றாகியபோது எம். ஜி. ஆரின் விசுவாசிகள் பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளி யேறினர். எம். ஜி. ஆர். உருவாக்கிய கட்சி சின்னாபின்னமாகக் கூடாது என்ற உணர்வில் ஜெயலலிதாவின் தலைமையில் சிலர் செயற் பட்டனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் துக்கு ஜெயலலிதா தலைவராக உள்ளார். ஆனால் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்ற இரண்டு அணிகள் இருப்பது வெளியில் யாருக்கும் தெரியாது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அண்மையில் வெளியேறுப வர்கள் அனைவரும் எம். ஜி. ஆரின் தீவிர விசுவாசிகள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒருவர் வெளியேறப் போகிறார் என்று தெரிந்தால் அவரை ஓரம் கட்டுவது ஜெயலலி தாவின் வழமையான நட வடிக்கை களில் ஒன்று. முத்துசாமி வெளி யேறப் போகிறார் என அறிந்ததும் அவரைச் சந்திப்பதற்கு ஜெயலலிதா விரும்பினார். பிரச்சினைகளை நேர டியாகக் கேட்டு முடிவெடுப்போம் என்று ஜெயலலிதா அறிவித்தார். ஜெயலலிதாவைச் சந்திக்க விரும் பாத முத்துசாமி கட்சிக்குள் உள்ள குறைபாடுகளைக் கடித மூலம் அறி வித்தார்.
சேலம், நாமக்கல், ஈரோடு, பொள் ளாச்சி, திருப்பூர், கோவை உள் ளிட்ட இடங்களில் முத்துசாமிக்கு செல்வாக்கு அதிகம். நடைபெற்ற தேர்தல்களில் இப்பகுதிகளில் திரா விட முன்னேற்றக் கழகம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. முத்து சாமியின் வரவால் அப்பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் எழுச்சி பெறும் என்று கருதப்படு கிறது.
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றி அறுதிப் பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே முதல்வர் கருணாநிதியின் விருப்பம். அதற்காகவே செல் வாக்கு மிக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களைத் தேடி வலை வீசப் படுகிறது. முத்துசாமியின் வரவால் சேலம், கோவை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் பலமடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கொங்கு மண்ட பத்தில் திரா விட முன்னேற்றக் கழகம் இழந்த செல்வாக்கை முத்துசாமி உயர்த்துவார்.
அதேபோல் நாமக்கல், சேலம் போன்ற பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவதற்கு அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி உதவி செய்வார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த செல்வ கணபதி ராஜ்ய சபா உறுப்பினராகிறார். அப்பகுதியில் உள்ள வன்னியரின் வாக்கை அவர் வசூலிப்பார் என்ற நம்பிக்கை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உள்ளது.
ஜெயலலிதாவுடன் முரண்பட்டிருக்கும் இன் னும் பலர் கட்சி மாறுவார்கள் என்ற எதிர் பார்ப்பு உள்ளது. அண்ணா திராவிட முன்னேற் றக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைபவர்களுக்கு பலமான தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிலை உள் ளது.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்குரிய தொகுதிகள் ஒதுக்கப் பட்ட பின்பே பாட்டாளி மக்கள் கட்சிக்கு தொகுதி கள் ஒதுக்குவார் கருணாநிதி. அதற்காகவே 2011 சட்ட சபைத் தேர்தல் வரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு காலக்கெடு விதித்துள்ளார் கருணாநிதி.


வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 13.06.10

No comments: