Tuesday, June 22, 2010

தி.மு.க.வை ஓரங்கட்டராகுல்காந்தி முயற்சி


தமிழக சட்ட சபைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே முதலமைச்சர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அடுத்த கட்ட நகர்வைப் பற்றி யோசிக்கிறார்கள். தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலவீனமாக்கும் நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களுடன் ஜெயலலிதா ஒரே மாதிரிப் பழகுவதில்லை. தன் மீது விசுவாசமாக உள்ள ஒரு சிலருடன் தான் ஜெயலலிதா பேசுவார். ஏனையோரை மிகவும் தூரத்திலேயே வைத்துள்ளார்.
ஜெயலலிதாவின் பார்வைக்கு அப்பாற்பட்டவர்களின் பெயர் விபரங்களைக் கையில் எடுத்த திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களைத் தன்வசம் இழுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட பலர் திராவிட முன்னேற்றக் கழகம் விரித்த வலையில் எளிதாக வீழ்ந்தார்கள். இன்னும் சிலர் அணி மாறுவதற்குத் தயாராக உள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த போது அவர்களின் ஆதரவாளர்களும் அணி மாறினார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் கட்சி மாறும் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி பலவீனமடையத் தொடங்கியது.
இந்நிலையில், தலைவர்களும் தொண்டர்களும் கட்சி தாவுவதைத் தடுப்பதற்காக தொண்டர்களிடம் மனு வாங்கும் திட்டத்தை அரங்கேற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பதற்கு தொண்டர்கள் முண்டியடித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஜெயலலிதாவிடம் மனுக் கொடுத்தனர். அவற்றை புன்முறுவலுடன் வாங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்ட மனுக்களில் அதிகமானவை தமது குறைபாடுகளைப் பற்றியதே தவிர கட்சியின் வளர்ச்சி எதிர்காலத் திட்டம் பற்றிய ஆலோசனைகள் எதுவும் இல்லாமையால் ஜெயலலிதா அதிருப்தியடைந்துள்ளார்.
அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை உயர்த்துவதற்காக இறங்கி வந்துள்ளார் ஜெயலலிதா. தொண்டர்களின் குறையை கேட்டு கட்சியில் உள்ள முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்கு ஜெயலலிதா முன்வந்தால் வீழ்ந்துவிட்ட செல்வாக்கு மீண்டும் உயர்வதற்கு வழி பிறக்கும். ஆனால், ஜெயலலிதா அதனைக் கடைப்பிடிப்பாரா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறிய போதும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் ஜெயலலிதா செய்யவில்லை. கட்சி மாறும் ஒருவரின் பின்னால் அவருடைய ஆயிரக் கணக்கான தொண்டர்களும் அணிமாறுவதால் கட்சியின் வாக்கு வங்கியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இந்த அசமந்தப் போக்கை திராவிட முன்னேற்றக் கழகம் தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் அசைக்க முடியாது அசுர பலம் பெற்றுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சி இறுதியாக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணையுடன் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடையாத கட்சியாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எவையும் பலம் வாய்ந்ததாக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சவால் விடும் வகையில் இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ந்துவிட்ட தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டுவதற்கு பலமான கூட்டணி அமைப்பதற்கு பேரம் பேசி வருகிறது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற பெரும் ஆரவாரத்துடன் அரசியலில் நுழைந்த விஜயகாந்தால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் வீட்டுக்கு அனுப்பி தமிழகத்தின் முதல்வராகும் கனவுடன் அரசியல் கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் அரசியல் வேறு சினிமா வேறு என்பதை நன்கு உணர்ந்துள்ளார். கூட்டணி இல்லாது ஆட்சி அமைக்க முடியாத என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள விஜயகாந்த், கூட்டணி சேர்வதற்குத் தயாராக உள்ளார். ஆனால், கூட்டணி சேர்வதற்கு அவர் விதிக்கும் நிபந்தனைகள் அவருடன் சேர விரும்பும் கட்சிகளை தூரத்தில் வைத்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியை விரும்பாத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி சேர விரும்பினார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட்டால் கூட்டணிக்குத் தயார் என்று விஜயகாந்தின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. திராவிட முன்னனேற்றக் கழகத்தை கைவிட டில்லித் தலைமை விரும்பாததனால் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் கிடப்பில் போடப்பட்டது.
எதிரும் புதிருமாக உள்ள விஜயகாந்தையும் ஜெயலலிதாவையும் இணைப்பதற்கு ஒரு சிலர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். அதிகளவான தொகுதிகளும் துணை முதல்வர் பதவியும் விஜயகாந்தின் தரப்பில் இருந்து நிபந்தனையாக விதிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. துணை முதல்வர் பதவியை வேறு கட்சியுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஜெயலலிதா விரும்பவில்லை. இதேவேளை கூடுதலான தொகுதிகளை விட்டுக் கொடுக்கவும் ஜெயலலிதா தயாராகவில்லை. இதன் காரணமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் இணைந்தால் வைகோவின் மதிப்பு குறைந்து விடும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அடுத்த நிலையில் உள்ள வைகோ தூக்கி எறியப்பட்டு அந்த இடத்தில் விஜயகாந்த் வந்து அமர்ந்து விடுவார். வைகோவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளைவிட அதிக தொகுதிகள் விஜயகாந்துக்கு ஒதுக்கப்பட்டால் இரண்டாவது இடத்தில் உள்ள வைகோ, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விடுவார். இது வைகோவின் சுயமரியாதைக்கு விடும் சவாலாக அமையும்.
கூட்டணியில் இருந்து வெளியேறிய டாக்டர் ராமதாஸை மீண்டும் உள்ளே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்குச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சித் தூதுக்குழு அவமானப்படுத்தப்பட்டது. இதனால் டாக்டர் ராமதாஸ் மனமுடைந்து போயுள்ளார். ஆனாலும் "எம்மை அவமானப்படுத்திய திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைக்க மாட்டோம்' என்று டாக்டர் ராமதாஸ் முழக்கமிடவில்லை.
பென்னாகரம் இடைத்தேர்தலின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டதனால் தாம் நீட்டிய கையை முதல்வர் கருணாநிதி பற்றிப் பிடிப்பார் என்று டாக்டர் ராமதாஸ் போட்ட கணக்கு தப்பாகிப் போய்விட்டது. டக்டர் ராமதாஸ் நீட்டிய கையை புறந்தள்ளிய முதல்வர் கருணாநிதி 2011ஆம் ஆண்டுவரை காத்திருக்குமாறு கூறிவிட்டார். இந்த நிலையில் தான் பாட்டாளி மக்கள் கட்சி மீது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருணைப் பார்வை விழுந்துள்ளது. ஆனால், டாக்டர் ராமதாஸ் இப்போதைக்கு அவசரப்படவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல்வரை கூட்டணி பற்றிய முடிவை அவர் வெளியிடமாட்டார். வழக்கம்போல் இரண்டு பிரதான கட்சிகளுடனும் கூட்டு பேரம் பேசி அதிக தொகுதிகளும் கூடுதலான சலுகைகளும் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காக காத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு தருணம் பார்த்திருக்கும் வேளையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை குப்புற வீழ்த்திவிட திடசங்கற்பம் பூண்டுள்ளனர் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தலை தூக்காமல் இருப்பதற்கு கோஷ்டிப் பூசலே ஒரு காரணம். கோஷ்டி இல்லாத காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்கிறார். ராகுல் காந்தியின் மேற்பார்வையில் தமிழகத்தில அமைக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸில் பன்னிரண்டு இலட்சம் பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் பத்து வருடங்களில் தமிழகத்தின் தலைவிதியை இந்த இளைஞர் காங்கிரஸே தீர்மானிக்கும் என்று நம்புகிறார் ராகுல்காந்தி.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும் என்று விரும்புகிறவர்களில் முதன்மையானவர் ராகுல் காந்தி. வட இந்திய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்தி மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களை வீழ்த்தியது போல் தமிழகத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தத் திட்டம் போட்டுள்ளார் ராகுல்காந்தி.
டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் தமிழக காங்கிரஸ் தலைமையகத்துக்குச் செல்லாவிட்டாலும் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று குசலம் விசாரிப்பது வழமை. தமிழகத்துக்கு அடிக்கடி விஜயம் செய்யும் ராகுல் காந்தி, முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறார். தமிழகத்தில் இருக்கும்போது தொலைபேசியில் கூட அவரை நலம் விசாரித்ததில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுலின் நடவடிக்கைக்கு துணையாக உள்ளார்கள்.

தமிழக சட்ட சபைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே முதலமைச்சர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அடுத்த கட்ட நகர்வைப் பற்றி யோசிக்கிறார்கள். தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலவீனமாக்கும் நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களுடன் ஜெயலலிதா ஒரே மாதிரிப் பழகுவதில்லை. தன் மீது விசுவாசமாக உள்ள ஒரு சிலருடன் தான் ஜெயலலிதா பேசுவார். ஏனையோரை மிகவும் தூரத்திலேயே வைத்துள்ளார்.
ஜெயலலிதாவின் பார்வைக்கு அப்பாற்பட்டவர்களின் பெயர் விபரங்களைக் கையில் எடுத்த திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களைத் தன்வசம் இழுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட பலர் திராவிட முன்னேற்றக் கழகம் விரித்த வலையில் எளிதாக வீழ்ந்தார்கள். இன்னும் சிலர் அணி மாறுவதற்குத் தயாராக உள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த போது அவர்களின் ஆதரவாளர்களும் அணி மாறினார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் கட்சி மாறும் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி பலவீனமடையத் தொடங்கியது.
இந்நிலையில், தலைவர்களும் தொண்டர்களும் கட்சி தாவுவதைத் தடுப்பதற்காக தொண்டர்களிடம் மனு வாங்கும் திட்டத்தை அரங்கேற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பதற்கு தொண்டர்கள் முண்டியடித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஜெயலலிதாவிடம் மனுக் கொடுத்தனர். அவற்றை புன்முறுவலுடன் வாங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்ட மனுக்களில் அதிகமானவை தமது குறைபாடுகளைப் பற்றியதே தவிர கட்சியின் வளர்ச்சி எதிர்காலத் திட்டம் பற்றிய ஆலோசனைகள் எதுவும் இல்லாமையால் ஜெயலலிதா அதிருப்தியடைந்துள்ளார்.
அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை உயர்த்துவதற்காக இறங்கி வந்துள்ளார் ஜெயலலிதா. தொண்டர்களின் குறையை கேட்டு கட்சியில் உள்ள முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்கு ஜெயலலிதா முன்வந்தால் வீழ்ந்துவிட்ட செல்வாக்கு மீண்டும் உயர்வதற்கு வழி பிறக்கும். ஆனால், ஜெயலலிதா அதனைக் கடைப்பிடிப்பாரா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறிய போதும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் ஜெயலலிதா செய்யவில்லை. கட்சி மாறும் ஒருவரின் பின்னால் அவருடைய ஆயிரக் கணக்கான தொண்டர்களும் அணிமாறுவதால் கட்சியின் வாக்கு வங்கியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இந்த அசமந்தப் போக்கை திராவிட முன்னேற்றக் கழகம் தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் அசைக்க முடியாது அசுர பலம் பெற்றுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சி இறுதியாக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணையுடன் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடையாத கட்சியாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எவையும் பலம் வாய்ந்ததாக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சவால் விடும் வகையில் இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ந்துவிட்ட தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டுவதற்கு பலமான கூட்டணி அமைப்பதற்கு பேரம் பேசி வருகிறது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற பெரும் ஆரவாரத்துடன் அரசியலில் நுழைந்த விஜயகாந்தால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் வீட்டுக்கு அனுப்பி தமிழகத்தின் முதல்வராகும் கனவுடன் அரசியல் கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் அரசியல் வேறு சினிமா வேறு என்பதை நன்கு உணர்ந்துள்ளார். கூட்டணி இல்லாது ஆட்சி அமைக்க முடியாத என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள விஜயகாந்த், கூட்டணி சேர்வதற்குத் தயாராக உள்ளார். ஆனால், கூட்டணி சேர்வதற்கு அவர் விதிக்கும் நிபந்தனைகள் அவருடன் சேர விரும்பும் கட்சிகளை தூரத்தில் வைத்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியை விரும்பாத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி சேர விரும்பினார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட்டால் கூட்டணிக்குத் தயார் என்று விஜயகாந்தின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. திராவிட முன்னனேற்றக் கழகத்தை கைவிட டில்லித் தலைமை விரும்பாததனால் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் கிடப்பில் போடப்பட்டது.
எதிரும் புதிருமாக உள்ள விஜயகாந்தையும் ஜெயலலிதாவையும் இணைப்பதற்கு ஒரு சிலர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். அதிகளவான தொகுதிகளும் துணை முதல்வர் பதவியும் விஜயகாந்தின் தரப்பில் இருந்து நிபந்தனையாக விதிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. துணை முதல்வர் பதவியை வேறு கட்சியுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஜெயலலிதா விரும்பவில்லை. இதேவேளை கூடுதலான தொகுதிகளை விட்டுக் கொடுக்கவும் ஜெயலலிதா தயாராகவில்லை. இதன் காரணமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் இணைந்தால் வைகோவின் மதிப்பு குறைந்து விடும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அடுத்த நிலையில் உள்ள வைகோ தூக்கி எறியப்பட்டு அந்த இடத்தில் விஜயகாந்த் வந்து அமர்ந்து விடுவார். வைகோவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளைவிட அதிக தொகுதிகள் விஜயகாந்துக்கு ஒதுக்கப்பட்டால் இரண்டாவது இடத்தில் உள்ள வைகோ, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விடுவார். இது வைகோவின் சுயமரியாதைக்கு விடும் சவாலாக அமையும்.
கூட்டணியில் இருந்து வெளியேறிய டாக்டர் ராமதாஸை மீண்டும் உள்ளே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்குச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சித் தூதுக்குழு அவமானப்படுத்தப்பட்டது. இதனால் டாக்டர் ராமதாஸ் மனமுடைந்து போயுள்ளார். ஆனாலும் "எம்மை அவமானப்படுத்திய திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைக்க மாட்டோம்' என்று டாக்டர் ராமதாஸ் முழக்கமிடவில்லை.
பென்னாகரம் இடைத்தேர்தலின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டதனால் தாம் நீட்டிய கையை முதல்வர் கருணாநிதி பற்றிப் பிடிப்பார் என்று டாக்டர் ராமதாஸ் போட்ட கணக்கு தப்பாகிப் போய்விட்டது. டக்டர் ராமதாஸ் நீட்டிய கையை புறந்தள்ளிய முதல்வர் கருணாநிதி 2011ஆம் ஆண்டுவரை காத்திருக்குமாறு கூறிவிட்டார். இந்த நிலையில் தான் பாட்டாளி மக்கள் கட்சி மீது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருணைப் பார்வை விழுந்துள்ளது. ஆனால், டாக்டர் ராமதாஸ் இப்போதைக்கு அவசரப்படவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல்வரை கூட்டணி பற்றிய முடிவை அவர் வெளியிடமாட்டார். வழக்கம்போல் இரண்டு பிரதான கட்சிகளுடனும் கூட்டு பேரம் பேசி அதிக தொகுதிகளும் கூடுதலான சலுகைகளும் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காக காத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு தருணம் பார்த்திருக்கும் வேளையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை குப்புற வீழ்த்திவிட திடசங்கற்பம் பூண்டுள்ளனர் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தலை தூக்காமல் இருப்பதற்கு கோஷ்டிப் பூசலே ஒரு காரணம். கோஷ்டி இல்லாத காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்கிறார். ராகுல் காந்தியின் மேற்பார்வையில் தமிழகத்தில அமைக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸில் பன்னிரண்டு இலட்சம் பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் பத்து வருடங்களில் தமிழகத்தின் தலைவிதியை இந்த இளைஞர் காங்கிரஸே தீர்மானிக்கும் என்று நம்புகிறார் ராகுல்காந்தி.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும் என்று விரும்புகிறவர்களில் முதன்மையானவர் ராகுல் காந்தி. வட இந்திய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்தி மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களை வீழ்த்தியது போல் தமிழகத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தத் திட்டம் போட்டுள்ளார் ராகுல்காந்தி.
டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் தமிழக காங்கிரஸ் தலைமையகத்துக்குச் செல்லாவிட்டாலும் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று குசலம் விசாரிப்பது வழமை. தமிழகத்துக்கு அடிக்கடி விஜயம் செய்யும் ராகுல் காந்தி, முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறார். தமிழகத்தில் இருக்கும்போது தொலைபேசியில் கூட அவரை நலம் விசாரித்ததில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் காங்கிரஸ் செய்யும் ராகுல் காந்தி, முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறார். தமிழகத்தில் இருக்கும்போது தொலைபேசியில் கூட அவரை நலம் விசாரித்ததில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுலின் நடவடிக்கைக்கு துணையாக உள்ளார்கள்.

வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 20.06.10

No comments: