Tuesday, July 25, 2017

ரசிகர்களுடன் பகடையாடும் பிக்பொஸ்

பொழுது போக்கான ஆரம்பிக்கும் விஷயங்கள் நாம் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்று நேரத்தையும் பணத்தையும் விரயமாக்குவதுண்டு. பிக்பொஸ் நிகழ்ச்சி ஆரம்பமானபோது  மெகா சிரியலில்  மூழ்கிக்கிடந்த தாய்க்குலம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. உள்ளே நடக்கும் பிரச்சினைகள் போட்டுக்கொடுத்தால் ஆகியவற்றைக் கேள்விப்பட்டதும். பிக்போஸின் ரசிகர்களாக மாறிவிட்டார்கள். கமலின் ரசிகர்கள் அதனை விரும்பிப்பர்க்கிரர்கள். கமலின் எதிரிகள் குறைகண்டு பிடிப்பதற்காகப் பார்க்கிறார்கள். மீம்ஸ்களை உருவாக்குபவர்கள் கழுவி ஊத்துவதற்காகப் பார்க்கிறார்கள். 

வீடு அலுவலகம் அங்கும் இப்போது பிக்பொஸ் பற்றியே பேச்சு முதல் நாளில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள். அடுத்த நாளில் இருந்து உண்மை முகம் வெளியாகத் தொடங்கியது. காயத்திரி ரகுராமும் ஆர்த்தியும் சேர்ந்து  ஜூலியைக் குறிவைத்துத் தாக்கினார்கள். ஜூலியை வெளியேற்றுவதில் இருவரும்  ஒன்றிணைந்து    போராடினார்கள். ஜூலி சபதமிட்டதுபோல ஆர்த்தி  வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் ஜூலியின்மீது ரசிகர்கள் அன்பு பாராட்டினார்கள். அவரின் உண்மை முகம்  தெரிய வந்ததும் அவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சுகவீனம் காரணமாக  ஸ்ரீ வெளியேறினார். சக போட்டியாளர்களின்  தொல்லை தங்க முடியாமல் சுவர் ஏறிக்குதிக்க முயன்ற பரணி போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். கஞ்சா கருப்பை மக்கள் வெளியேற்றிவிட்டனர்.
ரசிகர்களின்  ஒட்டுமொத்த ஆதரவைபெற்ற ஓவியா பிக்பொஸின் வீட்டில் தொடர்ந்து தங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.  பிக்பொஸின் விட்டில் இருந்து ஓவியாவை  வெளியேற்றுவதில் அங்குள்ள அனைவரும் குறியாக உள்ளனர். ஆனால், ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப்பெற்ற ஓவியா தொடர்ந்தும்  உள்ளே இருக்கிறார்.
வயிற்று வலியால் துடித்த ஜூலி பொய் சொல்கிறார் நடிக்கிறார் என காயத்திரியும் நமீதாவும் சொல்வதை மற்றவர்கள் நம்புகின்றனர். ஓவியா ஜூலிக்கு ஆதரவு தெரிவித்து அரவணைக்கிறார். சுகமடைந்ததும் ஓவியாவை கழற்றி விடுகிறார் ஜூலி  நமீதா காயத்திரி ஜூலி ஆகிய மூவரும் இணைந்து ஓவியவுக்குத் தொல்லை கொடுத்தனர்.ஒருநாள் இரவு  ஆண்களின் அறையில் ஓவியா தங்கினார்.  ஜூலி சொன்னதை நம்பியவர்கள் அனைவரும் ஓவியாவை வெளியேற்ற வேண்டும் என பிக்பொஸ்ஸிடம் கோரிக்கை வைத்தனர்.உண்மையை பிக்பொஸ்  தெரிவித்ததால் ஜூலியின் மீது  கோபமடைகின்றனர். 
   .காயத்திரியையும் நமீதாவையும் பற்றி தன்னிடம் ஓவியா தவறாகச் சொல்லி யதாக ஜூலி தெரிவிக்கிறார். அப்படி ஒரு பதிவு தங்களிடம் இல்லை என  கமல் விளக்கியுயும் ஜூலி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூலியைக் கண்டித்த கமல் அங்கு சகுனி வேலை செய்யும் கயத்திரியைக் கண்டுகொள்ளாளதை பலரும் விமர்சித்துள்ளனர். கமலின் கட்டிப்பிடி வைத்தியத்தை சினேகன் கச்சிதமாகச்  செய்கிறார். சிநேகனும் வையாபுரியும் அவ்வப்போது அழுது புலம்பி தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் ஜூலி அழுதபோது கலங்கிய ரசிகர்கள் இப்பொழுது கண்டு கொள்வதில்லை. நல்லவனாக இருந்த சக்தியின் மீதும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

தொலைக்காட்சித் தொடரில் வில்லன் வில்லி யார் என்பதை அடையாளம் கட்டிவிடுவார்கள். பிக்பொஸ்ஸின் வீட்டில் இருப்பவர்களுக்கு தமது எதிரியை அடையாளம் காண முடியாதுள்ளது. பிக்பொஸ்ஸின் விட்டில் இருந்து வெளியேறிய நமீதா அது ஒரு ஃபவ் ஸ்டார் சிறை என்றார். வெளியிலையும் அது இருக்கு என அரசியலை  சுட்டிக் காட்டினர் கமல்.பிரபலங்களைச் சிறைவைத்து நடைபெறும் இந்த பகடையாட்டம் உச்சத்தை அடையும் என்பதில் சந்தேகமில்லை.

No comments: