Thursday, October 23, 2025

சூடு தணியாத கரூர் சம்பவம்


 கரூர் துயர சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. ஆனாலும்,பலர் அதில் இருந்து மீளவில்லை. சிபிஐ விசாரணை யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் என்ற விவாதங்கள் நடைபெறுகின்றன.

தமிழக வெற்றிக் கழகமும், விஜயும் எடுத்த சில முடிவுகள் அக்கட்சியினரை கடுமையான கோபத்திற்கும், விவாதத்திற்கும் உள்ளாக்கி உள்ளது. கட்சியில் என்ன நடக்கிறது.. எதிர்பார்த்தது ஒன்று ஆனால் நடப்பது வேறொன்று என்று ரசிகர்கள் சொல்லும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

 தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக நம்பியது. தமிழ்நாடு அதிகாரிகள் உள்ள SIT அமைப்பது சரியாக இருக்காது.. இதனால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தவெகவினர் கோரிக்கை விடுத்தனர்.

 பலியான குழந்தையின் அப்பா என்பவரின் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த மனுவில் கைய்ந்ழுத்திட்ட விவகாரம் புலைஅக் கிளப்பி உள்ளது. நீதிமன்ரா விசாரணைக்காக கையெழுத்திடவில்லை என்கிறார் இறந்தசிறுவனின் தந்தை. உயர் நீதிமன்றம் உருவாக்கிய அஸ்ரா கார்க் தலைமையிலான SITஐ கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

சிபிஐ விசாரணைக்கு சென்ற பின்பும் கூட தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை  விஜய் கரூர் செல்வார்.  இதற்காக அனுமதி கேட்பார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் விஜய் அதையும் செய்யவில்லை.புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக்கிவிட்டு வெளியே வந்த பின் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரும் மீடியா முன் பேசவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் முன்பும் பேசவில்லை புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் நடவடிக்கை  எடுப்பார் . அவர் தலைமறைவாக இருந்ததற்கு விளக்கம் கோரப்படும்  என்றும் கூறப்பட்டது. ஆனால் அப்படியும் எதுவும் நடக்கவில்லை.

புஸ்ஸி ஆனந்த் திரும்பி வந்த பின்  கரூரில் பலியான மக்களின் புகைப்படங்களுக்காகவாது புஸ்ஸி ஆனந்த் மாலை போடுவார். அல்லது விஜய் மாலை போடுவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

 இரந்தவர்கலின்  முடுப்ப உறுப்பினர்களுடன் விஜய் பேசியதாக தகவல் வெளியானது.  41 குடும்பங்களியும் விகஜ் தத்தடுப்பார் என அறிவிக்கப்பட்டது. 41 குடும்பங்களுக்கும் ஒரு நிறுவனம் மாதம் 5 ஆயிரம் ரூபா கொடுக்கும் என ஆதவ் அர்ஜுனா  தெரிவித்தார்.


 தமிழக சட்ட சபைத் தேர்தலில் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும்  ஒரே கூட்டணியில் உள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலைமையிலான       கூட்டணி, என அமித்ஷாவே  சொல்லிவிட்டார்.  ஆனால், முதலமைச்சர் யார் என‌ அமித்ஷா சொல்லவில்லை.  எடப்பாடிதான் முதலமைச்சர் என அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன்  போன்ற பாரதீய ஜனதாத் தலைவர்கள்  சொல்கிறார்கள்.  இறுதி முடிவை அமித்ஷா   அறிவிப்பார் எனவும் அவர்கள் சொல்கிறார்கள். முதலமைச்சர் யார் என்ற பட்டிமன்ற‌ம் இன்னமும் தொடர்கிறது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாவும் கூட்டணிப் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துவிட்டன.  இரண்டு கட்சிக்ளும்  ஒரே கூட்டணியில் இருக்கின்றன. ஆனாலும், வேறு வேறாக கூட்டணிப் பேச்சு வார்த்தைகளை நடத்துகின்றன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரேமலதாவுடன்  கூட்டப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது. 2024  பாராமுனறத்  தேர்தலின்போது, அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டனியில்  விஜயகாந்தின்  தேமுதிக இடம்பெற்றிருந்தது. எனினும்,  ராஜ்ய சபா எம்பி பதவி காரணமாக  பிணக்கும் ஏற்பட்டது.

  2024 மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை பதவி உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், மாநிலங்களவை தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன், 2026-ல் பதவி ஒதுக்கப்படும் எனஎடப்பாடி தெரிவித்தார். இது இரு கட்சிகளுக்கும் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

  இந்த அதிருப்தியைத் தொடர்ந்து,  ஜனவரியில் இறுதி முடிவை அறிவிப்பதாக பிரேமலதா தெரிவித்தார். மறுபுறம் திராவிட முன்னேறாக் கழகத்துடன்  பிரேல‌தா  கதைத்துக் கொடு இருக்கிறார்  : தேமுதிகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக முயன்று வருகிறது.  தேமுதிகவை தன் பகம் ஈர்ப்பதற்கு திமுகவும் முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 2025 நிலவரப்படி, தேமுதிக எந்தக் கூட்டணியில் இணைம் என்பது இன்னும் உறுதியாகவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தேமுதிகவின் இறுதி முடிவை எதிர்பார்க்கலாம்.

கரூர் சம்பவத்தை முன்வைத்து தவெகவை தங்களோடு சேர்த்துக் கொள்ளஎடப்பாடி முயற்சி செய்கிறார்.   அப்படி நடந்து விட்டால் அதிமுக கூட்டணி பலமானதாகிவிடும் என்பதால் இப்போது மெல்ல அதிமுகவின்   கதவைத் திறந்து வைக்கிறது தேமுதிக. அதனால் தான் அரசுக்கு எதிராக திடீர் தாக்குதல் தொடுத்திருக்கிறார் பிரேமலதா என்கிறார்கள். இருந்த போதும் அதையெல்லாம் பெரிதுபடுத்திக் கொள்ளாமல், விமர்சனம் செய்த மறுநாளே பிரேமலதாவின் தயார் இறப்புக்கு அஞ்சலி செலுத்தச் சென்றுவிட்டார் ஸ்டாலின்.

தேமுதிகவுக்கு அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இம்முறை குறைந்தது 8 எம்எல்ஏக்களை அந்தக் கட்சி பெறவேண்டும். அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் குறைந்தது 10 தொகுதிகளாவது நமக்கு நிச்சயம் கிடைக்கும் என கணக்குப் போடும் பிரேமலதா, விஜய்யும் வந்தால் மட்டுமே அதிமுக கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.

அப்படி இல்லாத பட்சத்தில் திமுக கூட்டணியில் இடம்பிடித்து தனக்கானதைக் கேட்டுப் பெறலாம் என நினைக்கிறார். ஆக எது வெற்றிக் கூட்டணியோ அதில் இணைவது என்பது தான் பிரேமலதாவின் திடமான முடிவு. அதனால் தான் வெற்றிக் கூட்டணிகள் முடிவாகும் வரை காத்திருப்போம் என தனது முடிவை ஜனவரிக்கு ஒத்திவைத்திருக்கிறார்.

11 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும்  கொடுப்பதறு எடப்பாடி தயராக  இருக்கிறார்.

சென்னை பனையூர் இல்லத்தில் பாட்டாளி மக்கள்கட்சித்  தலைவர் அன்புமணி ராமதாஸை பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு 1 மணி நேரமாக நீடித்தது. இந்த நிலையில் விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை பனையூரில் உள்ள அன்புமணியின் இல்லத்திற்கு வந்திருந்த பைஜெய்ந்த் அன்புமணியுடன், ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த ஆலோசனையில் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து பேரங்களும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  

 

Wednesday, October 22, 2025

உலகக் கிண்ணம் 2026 தகுதி பெற்ற நாடுகள்

உலகக் கிண்ணம் 2026

தகுதி  பெற்ற நாடுகள்

கனடா,மெக்சிகோ,கனடச ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் விளையாடுவதற்கு   28 நாடுகள் தகுதி பெற்றுளன. 

உலகண்ணிண்ண உதைபந்தாட்டத்தொடரில் இது வரைகாலமும் 32 நாடுகள் விளையாடின அடுத்த ஆண்டு 48 நாடுகள் விளையாட உள்ளன.

ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கேப் வெர்டே, என்ற நாடு முதன் முதலாக உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் விளையாடத் தகுதி  பெற்றுள்ளது. இது ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள பல தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசாகும்.10 தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடிய கேப்  வெர்டே  7 போட்டிகளில் வெற்றி பெற்று. ஒரு  போட்டியில் தோல்வியடைந்து இரண்டு போட்டிகளை சம நிலையில் முடித்தது.

2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியை நடத்திய கட்டாரும் தகுதி பெற்ற நாடுகளில் ஒன்றாகும். ஐரோப்பாவில் இருந்து முதல் நாடாக இங்கிலாந்து தகுதி பெறுள்ளது.

2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் நாடுகளின்  முழுப் பட்டியல்

 உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் நாடுகளான கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா

ஆசியக் கண்டத்தில் இருந்து அவுஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்தான், கட்டார், சவூதி அரேபியா, தென் கொரியா, உஸ்பெகிஸ்தான்

ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து அல்ஜீரியா, கேப் வெர்டே, எகிப்து, கானா, ஐவரி கோஸ்ட், மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா

ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து

ஓசியானியாவில் இருந்து நியூஸிலாந்து

தென் அமெரிக்காவில் இருந்து  ஆர்ஜென்ரீனா, பிறேஸில், கொலம்பியா, ஈக்வடார், பராகுவே, உருகுவே

லாட்வியாவை 5-0 என்ற கோல்  கணக்கில் வீழ்த்தி   உலகக்  கிண்ணப் போட்டிக்கு இங்கிலாந்து  தகுதி பெற்றது. 1966 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்ட சம்பியனாகிய பின்னர் இங்கிலாந்து ஆண்கள்  உதைபந்தாட்ட அணி பிரகாசிக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு முதல் அதன் கடைசி 37 உலகக் கிண்ண  தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அது தோற்கடிக்கப்படவில்லை. ஐரோப்பிய சம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுகளையும் சேர்த்து, 2015 முதல் 57 போட்டிகளில் வெற்றி பெற்றது.

  1993   ஆம் ஆண்டு முதல் 2021  ஆம் ஆண்டு வரை தகுதிச் சுற்றுகளில் ஸ்பெய்ன்  66  போட்டிகளில்   தோல்வியடைந்து முதலிடத்தில் உள்ளது.

2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியை நடத்திய பின்னர் முதல் முறையாக தென் ஆபிரிக்க மீண்டும் களமிறங்க உள்ளது. உலகக்கிண்ண  தகுதிச் சுற்றில் மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டதன் அவமானத்தைத் தாண்டி தென்னாப்பிரிக்கா செவ்வாய்க்கிழமை தனது குழுவில் முதலிடத்தைப் பிடித்தது.

நெல்ஸ்ப்ரூட்டில் நடந்த போட்டியில்   ருவாண்டாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரூப் சி பிரிவில்   தென்னாப்பிரிக்கா  முதலிடத்தைப் பிடித்தது.  சி பிரிவில் முதல் இடத்தில் இருந்த   பெனின்  , உயோவில் நடந்த போட்டியில் நைஜீரியாவிடம் 4-0 என்ற  கோல் கணக்கில் தோல்வியடைந்ததால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு சரிந்தது.நைஜீரியாவும், பெனினும் தலா 17 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். கோல் கணக்கில் நைஜீரியா இரண்டாவது இடத்தில் உள்ளது.


 உலகக்கிண்ண  தகுதிச் சுற்றில் 40 வயதான  கிறிஸ்டியானோ ரொனால்டோ  41 கோல்கள் அடித்து  புதிய சாதனை படைத்துள்ளார்.

1998  / 2016  ஆண்டுகளுக்கிடையில்   குவாத்தமாலா  ச வீரர் கார்லோஸ் ரூயிஸ்  39 கோல்கள் அடித்ததே இதுவரை சாதனையாக  இருந்தது.  ஹங்கேரிக்கு எதிராக  நடந்த போட்டியில்   இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் ரொனால்டோ அந்த சாதனையை  முறியடித்துள்ளார். போத்துகலுக்கு இன்னமும் இரண்டு போட்டிகள்  இருப்பதனால் அவரின் கோல் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் 39 கோல்களுடன் லியோனல் மெஸ்ஸி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.ஆர்ஜென்ரீனாவுக்கான தகுதிகான் ச்ற்றுப் போட்டிகள் அனைத்தும்  முடிந்து விட்டன.

 

ரமணி

19/10/25

  

Monday, October 13, 2025

மிலானோ கோர்டினா ஒலிம்பிக் கிராமம் இன்னும் முடிக்கப்படவில்லை

 இத்தாலியில் 2026  ஆம் ஆண்டு  நடக்கும் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுத் தொடக்க விழாவிற்கு நான்கு மாதங்கள் மீதமுள்ள நிலையில், மிலானீனில் அமைக்கப்படும் ஒலிம்பிக் கிராமம் இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை.

லோம்பார்ட் தலைநகரில் உள்ள முன்னாள் ரயில் நிலையத்தின் இடத்தில் அமைந்துள்ள ஒலிம்பிக் கிராமம், செப்டம்பர் மாத இறுதியில் €140 மில்லியன் மொத்த செலவில் கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக ஊடகங்களுக்குத் திறக்கப்பட்டது, இது ஆரம்பத்தில் பட்ஜெட் செய்யப்பட்டதை விட சுமார் 40% அதிகம்.

இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பான டெவலப்பர் கோய்மா, ஜூன் மாத இறுதியில் பணிகள் திட்டமிடப்பட்டதை விட ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டதாக நிகழ்வின் போது எடுத்துரைத்தார். இருப்பினும், இப்போது அழுத்தம் ஏற்பாட்டுக் குழுவின் மீது விழுகிறது, அவர்கள் சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர், இப்போது ஒரு சில வாரங்களில் சாப்பாட்டு மண்டபம், உடற்பயிற்சி கூடம், மருத்துவ மையம் போன்ற பொதுவான பகுதிகளை அமைப்பதில் சவாலை எதிர்கொள்கின்றனர். இந்த சூழ்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு கிராமம் சரியான நேரத்தில் முழுமையாக தயாராக இல்லாமல் போகலாம் என்ற ஆபத்து உள்ளது.

  மிலானோ கோர்டினா ஏற்பாட்டாளர்கள்  2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி புகழ்பெற்ற சான் சிரோ மைதானத்தில் நடைபெறும் திறப்பு விழாவிற்கு முன்னதாகவே அனைத்தும் தயாராக இருப்பதை உறுதி செய்ய "விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திட்டத்தை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்தார். கோய்மா எஸ்.ஜி.ஆரால் இந்த திட்டம் தாமதமாகி முன்கூட்டியே வழங்கப்பட்டதற்கு பாராட்டுக்கள் இருந்தபோதிலும், கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்ட போதிலும், அத்தியாவசிய சேவைகளை நிறுவுவதற்கான உறுதியான திட்டம் இன்னும் இல்லை என்றும் அந்த வட்டாரம் எச்சரித்தது.

68 மாடி கட்டிடங்களால் ஆன இந்த வளாகம், விளையாட்டுப் போட்டிகளின் போது 1,700 விளையாட்டு வீரர்கள்,அதிகாரிகளுக்கு இடமளிக்கும். ஒன்று அல்லது இரண்டு படுக்கைகள் கொண்ட அறைகள் அடிப்படை தளபாடங்கள், மேசைகள் மற்றும் தனியார் குளியலறைகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. வருகையின் போது தண்ணீர்,  மின்சாரம் என்பன   ஏற்கனவே சரியாக செயல்பட்டு வருகின்றன.  

ஒலிம்பிக்  ராலிம்பிக் போட்டிகள் முடிந்ததும், கிராமம் மீண்டும் கோய்மாவிடம் ஒப்படைக்கப்படும், செப்டம்பர் 2026 இல் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு வசதிகளை மாணவர் குடியிருப்புகளாக மாற்ற நான்கு மாதங்கள் அவகாசம் இருக்கும். ஆரம்பத்தில் பாராட்டப்பட்ட நகர்ப்புற மரபுத் திட்டம், வாடகை விலைகள் குறித்து சர்ச்சையைத் தூண்டியுள்ளது: ஒரு படுக்கையின் சராசரி விலை மாதத்திற்கு €864 ஆக இருக்கும், இது சந்தை மதிப்பை விட சுமார் 25% குறைவாக இருக்கும், ஆனால் பல இளம் மிலானியர்களால் இன்னும் அதிகமாகக் கருதப்படுகிறது.

 

ஒலிம்பிக் கிராமத்தின் கட்டிடக்கலை வடிவமைப்பு மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தில் கவனம் செலுத்துகிறது, இதில் 42 படிப்பு அறைகள், இரண்டு ஜிம்கள், விளையாட்டு மைதானங்கள், பொது சமையலறைகள், பசுமைப் பகுதிகள் மற்றும் சமூக இடங்கள் உள்ளன. 24 மணி நேர பாதுகாப்பு, ஒரு கான்சியர்ஜ் சேவை, சலவை வசதிகள் மற்றும் 380 சைக்கிள் பார்க்கிங் இடங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளும் வழங்கப்படுகின்றன.

"இது பொது நலன் சார்ந்த திட்டம், ஒலிம்பிக்கிற்கு சேவை செய்து பின்னர் மாணவர் இல்லமாக மாறுகிறது. ஒலிம்பிக் கிராமத்திலிருந்து மாணவர் தங்குமிடமாக மாற்றுவதே நாங்கள் எதிர்கொள்ளும் சவால், இது மிக விரைவாக செய்யப்பட வேண்டும்," என்று கோய்மாவின் தலைமை நிர்வாக அதிகாரி மன்ஃப்ரெடி கேட்டெல்லா கூறினார்.

 

ரமணி

12/10/25

  

கலவரமான கரூர் களேபரமான கூட்டணி


  கரூர்  அசம்பாவிதம் இந்திய அரசியல் வரலாறில் ஒரு  கரும் புள்ளியாகப் பதியப்பட்டுள்ளது.

விஜயைப் பார்க்க முண்டியடித்தபோது நெரிசல்லில் சிக்கிய 41 பேர் மரணமானார்கள்.  ஒரு கைக்குழந்தை, 10  சிறுவர்கள் மரணமானது கல் நெஞ்சையும் கரைத்து விட்டது.  111 பேர் காயமடைந்துள்ளன.

இந்தக்  கொடூரங்கள் அனைத்தையும்  தெரிந்துகொண்டும் கட்சித்தலைவர் பாதுகாப்பாக சென்னைக்கு ஓடிவிட்டார்.

புஸ்ஸி ஆனந்த்,   ஆதவ் அர்ஜுன் ஆகியோர் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை.

கரூர் மரணங்கள்  பற்றி திருச்சி விமான நிலையத்தில்  ஊடகவியலாளர்கள்  கேட்ட போது  பதிலளிக்காமல்  சென்றுவிட்டார் விஜய்.

மரணமானவர்கள் அனைவரும் தன்னைப்  பார்க்க வந்தவர்கள என்பதை தலைவர் விஜய்  உணரவில்லை.

தமிழ்த்திரை உலகில் அதிக ரசிகர்களால் விரும்பப்படும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததும்,  தமிழக அரசியல் களம் மாற்றமடையத் தொடங்கியது.

திராவிட முனேற்றக் கழகம் , அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு மாற்றீடாக விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் இயங்கும் என்ற எதிர்பார்ப்பு  ஏற்பட்டது.

கரூர் சம்பவம் நடைபெற்று  இரண்டு வாரங்கள்  முடிந்து விட்டன. கள நிலை மெது மெதுவாக மாறத்தொடங்கி விட்டது. அதற்கிடையில்பல சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. ராகுல் காந்தி கரூர் சம்பவம் பற்றி விஜயிடம் கேட்டறிந்தார் அமித் ஷா அதிக அக்கறை காட்டினார். எடப்பாடி, அண்ணாமலை, வானதி சீனிவாசன்  அமைச்சர் முருகன் ஆகியோர் வரிசையாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து  ஸ்டாலினைக் கண்டித்தார்கள்.ஏனைய கட்சிகள் அனைத்தும் விஜயைக் கண்டித்தன.விஜயை ஏன் கைது செய்ய வில்லை என   திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் கேள்வி எழுப்பின.

விஜயைக் கைது செய்தால் அவரது ரசிகர்கள்  போராட்டம் நடத்துவார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ,பாரதீய ஜனதாக் கட்சிகள் அவர்களின்  பின்னால் நிர்பார்கள். இதனால் ஸ்டாலின்  பொறுமை காக்கிறார்.கரூரில் பாதிக்கப்பட்டவர்கலின்  குடும்பத்துடான் விஜய் வீடியோகோலில் கதைத்து  ஆறுதல் சொன்னார். அவர்கள் விஜய் மீது இன்னமும் நம்பிக்கையுடன்  இருக்கிறார்கள்.


கரூர் சம்பவத்தை நீதிமன்றம் விசாரிக்கிறது. நீதிபதிகளின்  கேள்விகளால் விஜய் தரப்பு திணறுகிறது. தமிழக அரசை நீதிபதிகள் கேள்விகளால் துளைத்து எடுக்கிறார்கள்.   ஜெயலலிதா முதலமைச்சராக  இருந்திருந்தால்  இந்த நேரம்  விஜய் சிறையில் இருந்திருப்பார்.  கருணாநிதியை கதறக் கதற இழுத்துச் சென்றவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவைப் போன்ரு முரட்டுத்தனமாக ஸ்டாலின் செயற்படுவதில்லை.  அதனால் விஜய் சந்தோஷமாக வீட்டில் இருக்கிறார்.

தமிழக அரசு விசாரணைக் கமிஷனை அமைத்துள்ளது. ஜனவரியில் அதன் அறிக்கை கிடைக்கும். தமிழக சட்ட சபைக்கான தேர்தல் ஜூரம் அடுத்த ஆண்டு  ஆரம்பித்துவிடும். அந்த அறிக்கை விஜயின் அரசியல் எதிர் காலத்தை முடிவு செய்யும். இதேவேளை  உண்மை கண்டரியும் குழுவை  இந்திய மத்திய அரசு ஆரம்பித்துள்ளது.  அந்டஹ்க் குழுவின் அறிக்கை எப்படி இருக்கும் என்பதை  ஆய்வளர்கள்  இப்போதே  கணித்து விட்டார்கள்.

கரூர் சம்பவம்  தொடர்பாக ராகுல் காந்தி  தொலை பேசியில் விஜயுடன் கதைத்துள்ளார். அமித்ஷா அதிக அக்கறை காட்டுகிறார்.அமித்ஷாவும் ராகுலும் விஜயுடன் தொடர்புகொண்டதால் கூட்டணி களம் மாறுமா என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.

திராவிடக் கட்சிகளும் பாரதீய ஜனதாவும் இல்லாத  கூட்டணி  அமைக்க வேண்டும் எனப்தே விஜயின் நிலைப் பாடு. கட்சிஐயும் தன்னையும் பாதுகாப்பதற்காக   விஜய் பாரதீய ஜனதாவிடம் சரணடையலாம் என் சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் எடப்பாடிதரப்பு விஜயுடன் தொடர்பில் இருப்பதாகவும்   தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில்,   எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இரண்டு முறை திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்   பயணம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தொடர்ந்து கூட்டத்திற்கு மத்தியில் பேசுகையில், அதிமுகவின் கொடிகள் மட்டுமின்றி சிலர் தவெகவின் கொடிகளையும் கையில் ஏந்தி அசைத்தபடி இருந்தனர்.

அப்போது, “திமுக தலைமையில் அமைக்கின்ற கூட்டணி வலுவான கூட்டணி என ஸ்டாலின் எண்ணுகிறார். உண்மையா? அது வெற்றுக் கூட்டணி. வெல்லும் கூட்டணி என்பது அதிமுக தலைமையில் அமைகின்ற கூட்டணி. ஸ்டாலின் கூட்டணியை நம்பி இருக்கிறார். கூட்டணி தேவைதான், ஆனால் அதிமுக தலைமையில் அமைகின்ற கூட்டணி வலுவானதாக இருக்கும். அங்க பாருங்க கொடி பறக்குது (தவெக கொடியை குறிப்பிட்டு), பிள்ளையார் சுழி போட்டாச்சு   ஆகாயத்தில் கோட்டை கட்டி கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள். அது கானல் நீராக தான் போகும் என்றார்.

விஜயின் கட்சிக் கொடியை வைத்திருந்தவர்கள்  உண்மையின் அந்தக் கட்சியினரா அல்லது  எடப்பாடி அழைத்து வந்தவர்களா எனத் தெரியவில்லை.

தேர்தல் நெருங்குகையில் இதைப்போல பல மாயாஜாலங்கல் நடை பெறலாம் விஜய் சிக்கினால் எடப்பாடி பாரதீய ஜனதாவைக் கழற்றி விட்டு விடுவார்.

 அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரனைக்குழு  செயற்படத்தொடங்கிவிட்டது.  அந்த அறிக்கையில் சகல  உண்மைகளும் வெளியாகும்.

அரசியல் தலைவர்களுக்கு கரூர்  சம்பவம்  ஒரு பாடமாக அமைந்துள்ளது.

ரமணி

12/10/25

  

Tuesday, October 7, 2025

கிரீஸ்மன் 200 கோல்கள் அடித்து சாதனை


ச‌ம்பியன்ஸ் லீக்கில் ஐன்ட்ராக்ட் பிராங்பேர்ட்டை 5-1 என்ற கணக்கில் சொந்த மண்ணில் அட்லெடிகோ மட்ரிட் வீழ்த்திய போட்டியில்  அன்டோயின் கிரீஸ்மன் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக தனது 200வது கோலை அடித்தார்.

அட்லெட்டிகோவுக்காக   அதிக  போட்டிகளில் விளையாடிய எட்டாவது வீரர் கிரீஸ்மன்   கிரிஸி' 2014 ஆம் ஆண்டு  கோடையில் அட்லெட்டிகோ டி மாட்ரிட்டுடன் இணைந்தார்   அவர் சூப்பர்கோபா டி எஸ்பானாவை வென்றார், இது அட்லெட்டிகோ வீரராக அவரது முதல் பட்டமாகும். டிசம்பரில், அவர் சான் மாமஸில் அத்லெட்டிக் (4-1) அணிக்கு எதிரான நம்பமுடியாத வெற்றியில் தனது முதல் ஹட்ரிக் கோல் அடித்தார். அங்கிருந்து கிளப்பிலும் பிரான்ஸ்  தேசிய அணியிலும் அவரது வாழ்க்கை தொடங்கியது.

 2018 ஆம் ஆண்டில், ஒலிம்பிக் டி மார்செல்லாவுக்கு எதிரான யூரோபா லீக் இறுதிப் போட்டியில் (3-0) அவர் ஒரு முக்கிய வீரராக இருந்தார், லியோனில் நடந்த ஆட்டத்தின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு கோல்களை அடித்தார். அதே சீசனில், 2017 ஆம் ஆண்டில் லாலிகாவில் மலாகாவுக்கு எதிரான ஆட்டத்தில் அட்லெடிகோவின் வெற்றியின் போது ரியாத் ஏர் மெட்ரோபொலிட்டானோவில் நடந்த   போட்டியில் அவர் தனது முதல் கோலை அடித்தார்.

2010 ஆம் ஆண்டு பிரான்ஸ் அணியில்  இணைந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐரோப்பிய சம்பியன்ஷிப்பை கிரீஸ்மன் வென்றார்,

 2018 ஆம் ஆண்டு பிரான்ஸ்  தேசிய அணியில் டெஷாம்ப்ஸ் பயிற்சியாளராக இருந்த காலத்தில் ரஷ்யாவில் நடந்த  உலகக் கிண்ணப் போட்டியில் சம்பியனான அணியில் இருந்தார்.

  குரோஷியாவை (4-2) வீழ்த்திய அந்த இறுதிப் போட்டியில், கிரீஸ்மன் ஒரு கோல் அடித்து  ஆட்ட நாயகனாக  தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு பிரான்சுடன் இணைந்து ந‌ஷன்ஸ் லீக்கையும் வென்றார்.   2024  ஆம் ஆண்டு செப்ரெம்பர் 30 ஆம் திகதி , அவர் பிரெஞ்சு தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், அங்கு அவர் 137 போட்டிகளில் 44 கோல்களை அடித்தார். 

கிறிக்கெற் வீரர்களுக்குத் தடை விதித்த பாகிஸ்தான்


 வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்க விரும்பும் தேசிய  கிறிக்கெற் வீரர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து தடையில்லா சான்றிதழ்களையும் (NOCs) பாகிஸ்தான் கிரிக்கெட் சபை  (PCB) நிறுத்தி வைத்துள்ளது, ஏனெனில் எதிர்கால ஒப்புதல்களை வீரர்களின் செயல்திறனுடன் இணைக்கும் ஒரு புதிய உத்தியை அது இறுதி செய்து வருகிறது.

பாகிஸ்தான் அணியின் தலைமை இயக்க அதிகாரி சுமைர் அகமது சையத் வெளியிட்ட அறிவிப்பில், வெளிநாட்டு லீக்குகள் , போட்டிகளில் பங்கேற்பதற்கான அனைத்து என்ஓசிகளும் உடனடியாகவும், மறு உத்தரவு வரும் வரையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

டிசம்பரில் தொடங்கவுள்ள பிபிஎல் 15 க்கு பாபர், ரிஸ்வான் , ஷாஹீன் உள்ளிட்ட  வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்த இடைநீக்கம், பாபர் அசாம், ஷாஹீன் ஷா அப்ரிடி, முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ரவூஃப், ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப் உள்ளிட்ட பல முன்னணி   வீரர்களைப் பாதிக்கிறது, இவர்களுக்கு முன்னர்  அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் (பிபிஎல்) விளையாட அனுமதி வழங்கப்பட்டது

எதிர்காலத்தில் செயல்திறன் அடிப்படையிலான NOCகள் வழங்கப்படும் என்றும், சர்வதேச, உள்நாட்டு கிரிக்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை பூர்த்தி செய்யும் வீரர்கள் மட்டுமே வெளிநாட்டு லீக்குகளில் விளையாட தகுதி பெறுவார்கள் என்றும்  பாகிஸ்தான்  கிறிக்கெற்வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

  

Monday, October 6, 2025

உலகக் கிண்ண அதிகாரப்பூர்வ பந்தான ட்ரையோண்டா அறிமுகம்

அமெரிக்கா, மெக்சிகோ , கனடா ஆகிய மூன்று  நாடுகள் இணைந்து நடத்தும்  உலகக்கிண்ண உதைபந்தாடப் போட்டியின் அதிகார பூர்வ பந்தான ட்ரையோண்டா அறிமுகம் செய்யப்பட்டது.

ட்ரையோண்டா என்று அழைக்கப்படும் இந்தப் பந்து, 1970 போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வ உலகக்  கிண்ணப் பந்துகளை வழங்கும் ஜேர்மன்  நாட்டின்   அடிடாஸால் மீண்டும் வடிவமைக்கப்பட்டது.

வியாழக்கிழமை நியூயார்க்கில் நடந்த ஒரு  வைபவத்தில் பந்து வெளியிடப்பட்டபோது, "ட்ரியண்டாவை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்" என்று  பீபா தலைவர் கியானி இன்பான்டினோ கூறினார்.

மூன்று நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் உலகக்  கிண்ணப் போட்டியில் 48 அணிகள் போட்டியிடுகின்றன.  சிவப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்களைக் கொண்ட பந்தின் பெயர் , வடிவமைப்பு ஆகியஇரண்டையும் ஊக்கப்படுத்தியது.

ஒவ்வொரு ஹோஸ்ட் நாட்டிலிருந்தும் உருவப்படங்கள் - கனடாவிலிருந்து மேப்பிள் இலைகள், மெக்சிகோவிலிருந்து கழுகு ,அமெரிக்காவிலிருந்து நட்சத்திரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன, ஒரு முக்கோணம் மூன்று நாடுகளின் ஒற்றுமையைக் குறிக்கிறது.

"உகந்த விமான நிலைத்தன்மையை" உருவாக்க வடிவமைக்கப்பட்ட ஆழமான தையல்கள் மற்றும் ஈரமான அல்லது ஈரப்பதமான சூழ்நிலைகளில் பிடியை மேம்படுத்தும் புடைப்பு சின்னங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.

ஒரு மோஷன் சென்சார் சிப் பந்தின் இயக்கம் குறித்த தகவல்களைத் தெரிவிக்கும், வீடியோ உதவி நடுவர் (VAR) அமைப்புக்கு தரவை அனுப்பும்.

 பீபா அதன்  ஒன்லைன் கட்ட டிக்கெட் விற்பனை நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, 216 நாடுகநாடுகளைச் சேரந்த சுமார்    4.5 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் முன் விற்பனை டிராவில் நுழைந்துள்ளனர்.