Thursday, February 25, 2010

உலகக்கிண்ணம்2010


ஸ்லோவாக்கியா
ஒன்றிணைந்த செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்றானஸ்லோவாக்கியா உலகக் கிண்ணஉதைபந்தாட்டப் போட்டியில் விளையாடு
ம் தகுதியைப் பெற்றுள்ளது. குழு "3'இல் ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா,செக்குடியரசு, அயர்லாந்து, போலந்து,சன்மரினோ ஆகிய நாடுகள் போட்டியிட்டன.குழு 3 இல் 22 புள்ளிகளைப் பெற்றுமுதலிடத்தைப் பிடித்த ஸ்லோவாக்கியாஉலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.10 போட்டிகளில் விளையாடியஸ்லோவாக்கியா ஏழு போட்டிகளில்வெற்றி பெற்று ஒரு போட்டியை சமப்படுத்தியது. இரண்டு போட்டிகளில்தோல்வி அடைந்தது. 22 கோல்கள் அடித்தஸ்லோவாக்கியாவுக்கு எதிராக 10கோல்கள் அடிக்கப்பட்டன. 18 தடவைமஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.இரண்டு முறை எச்சரிக்கை விடப்பட்டது.சன்மரினோவுக்கு எதிரான போட்டியில் 7:0 என்ற கோல் கணக்கில் வென்றுதனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது.மூன்று போட்டிகளில் ஸ்லோவாக்கியாவுக்குஎதிராக கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. ஸ்லோவேனியாவுக்கு எதிரானஇரண்டு போட்டிகளிலும் ஸ்லோவாக்கியா தோல்வி அடைந்தது.முதலாவது போட்டியில் 2 1 என்றகோல் கணக்கிலும் இரண்டாவது போட்டியில் 2 0 என்ற கோல் கணக்கிலும்ஸ்லோவாக்கியா தோல்வி அடைந்தது.லிவப்பூர் அணியில் விளையாடும் மார்ட்டின்ஸ்கிரெல், மார்க்ஹம்கித், ஆறுகோல்கள் அடித்து அசத்தி உள்ள னர் ஸ்ரனிஸ்லார் செஸ்ரக் ஆகியோர் மீது மிகுந்தஎதிர்பார்ப்பு உள்ளது. விளாடிமிர் வெசஸ்ஸ்லோவாக்கியா உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார். இவரதுதந்தை செக்கோஸ்லோவாக்கியா அணியின் வீரர் என்பதுகுறிப்பிடத்தக்கது.குழு எஃப்பில்இத்தாலி, நியூஸிலாந்து, பரகுவேஆகிய நாடுகளும்ஸ்லோவாக்கியாவும்உள்ளன

மெட்ரோநியூஸ்

No comments: