Wednesday, February 3, 2010

விகடனில்என்கதை


குலதெய்வம்
சூரியன் உச்சிக்கு வந்துவிட்டான். பசியுடன் அலைந்த முதிய மீனுக்கு இரை கிடைக்கவில்லை. திடீரென நீரினுள் எழுந்த வித்தியாச அலையினால் எச்சரிக்கையான அந்த முதிய மீன் தனது இனத்தவரின் வருகை என்பதை புரிந்து கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. மிகச் சிறிய மீன்கள் முன்னே துள்ளிக் குதித்து வர, அதன் பின்னே பெரியதும் சிறியதுமான மீன்கள் அணிவகுத்து வந்தன. அதிக கூட்டமாக வரும் மீன்களைக் கண்ட முதிய மீன் ஆச்சரியத்துடன் பார்த்தது.
முதிய மீனை ஒரு பொருட்டாகக் கணக்கில் எடுக்காது மீன் கூட்டம் விலத்திக் கொண்டு விரைந்தது.
"ஏனப்பா என்ன ஏதாவது பிரச்னையா? சுனாமி வரப் போகுதா? எதற்காக இப்படிக் கூட்டமாக ஓடி வருகிறீர்கள்?" என்று முதிய மீன் கேட்டது.
"நாங்கள் பாதுகாப்பாக வாழப் போகின்றோம்," எனக் கூறிய சிறிய மீன், பெரிய மீன்களை முந்திக் கொண்டு சென்றது.
பாதுகாப்பாக உயிர் வாழ்வா?
எம்மையே பிடித்து விழுங்கத் துடிக்கும் பெரிய மீகள்கள், வலிமையான வலைகள்... இவற்றிடமிருந்து எப்படி நாம் உயிர் பிழைத்து பாதுகாப்பாக வாழ்வது எனச் சிந்தித்தபடி இரை தேடியது முதிய மீன்.
மீண்டும் ஒரு முறை நீரின் சலசலப்பு வித்தியாசமானதால் எச்சரிக்கையடைந்த முதிய மீன் உற்றுப் பார்த்தது. தன் இனத்தவரின் வரவினால் ஏற்பட்ட நீரின் மாற்றம் என்பதை உணர்ந்து நிம்மதியானது. முன்னர் வந்ததைவிட அதிக எண்ணிக்கையிலான மீன்கள், முதிய மீனைக் கடந்து சென்றன.
"எல்லோரும் எங்கே போகிறீர்கள்?" என்று முதிய மீன் கேட்டது.
"நாங்கள் பாதுகாப்பாக வாழப் போகின்றோம்," என்று கூறிய படி மீன்கள் வேகமாகச் சென்றன.
"நீ எதற்காக தனியே நிற்கிறாய்..? எங்களுடன் வந்தால் பாதுகாப்பாக உயிர் வாழலாம்," என்று முதிய மீனிடம் அதன் வயதை ஒத்த மீனொன்று அழைப்பு விடுத்தது.
"எங்கே ஐயா நாம் பாதுகாப்பாக வாழ்வது?" என்று முதிய மீன் கேட்டது.
"உனக்கு சங்கதி தெரியாதா?! குமரிக் கண்டத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள நாட்டில் மீனை பாதுகாக்க சட்டம் போட்டிருக்கிறார்கள். அவர்களின் குலதெய்வம் மீனாம். ஆகையால், பாதுகாப்பு வலையம் அமைத்து மீனைப் பாதுகாக்கிறார்களாம்," என்றது புகலிடம் தேடிச் செல்லும் மீன்.
"அப்படியா... உண்மையாகவா?!" என்று ஆச்சரியத்துடன் கேட்டது, முதிய மீன்.
"பக்கத்து நாட்டுக்காரன் மீன் பிடித்தாலும், அந்த நாட்டுக்காரன் அடிக்கிறானாம்," என்று கூறியபடி பாதுகாப்பு வலையம் நோக்கி சென்றது அந்த மீன

No comments: