Friday, November 12, 2010

களை எடுக்கும் ஜெயலலிதாகலக்கத்தில் தொண்டர்கள்


தமிழக சட்ட சபைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வரும் வேளையில் மாவட்டச் செயலாளர்களையும் மாவட்டப் பொறுப்பாளர்களையும் பதவியில் இருந்து தூக்கி எறிந்து அதிர்ச்சி வைத்தியம் செய்துள்ளார் ஜெயலலிதா. சக்தி மிக்க பொறுப்பாளர்களையும் நிர்வாகிகளையும் தூக்கி எறிவதற்கு ஜெயலலிதா எப்போதும் தயங்கியதில்லை.
தமிழக முதல்வராகப் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொன்னையன் போன்ற நிர்வாகிகளையே தூக்கி எறிந்த ஜெயலலிதா மாவட்டச் செயலாளர்களையும் பொறுப்பாளர்களையும் தூக்கி எறிந்தது ஆச்சரியமானதல்ல.
கோவையிலே தமிழக அரசு செம்மொழி மாநாட்டை நடத்தித் தனது பலத்தை வெளிப்படுத்தியது. அதே கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டத்தை நடத்தி ஆளும் கட்சியைக் கிலிகொள்ளச் செய்தவர் செ. ம. வேலுச்சாமி. அவருடைய மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு எம். ஜி. ஆர். மன்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் ஜெனிபர் சந்திரன், விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர் வளர்மதி ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
வட சென்னையில் 13 வருடங்களாக மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர் சேகர் பாபு. வடசென்னையில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்ப்பதில் முன்னிற்பவர். அவருடைய பதவி பறிக்கப்பட்டு எம். ஜி. ஆர். மன்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகச் சில தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சேகர் பாபுவின் ஆதரவாளர்களில் ஆயிரக்கணக்கானோர் இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள பிரமுகர்களில் சிலரின் பதவி பறிக்கப்படுவதும் அவர்களின் ஆதரவாளர்கள் அதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதும் வழமையான சம்பவங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.
சென்னையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் சேகர் பாபு. தமிழக சட்ட சபையில் ஜெயலலிதாவைத் தாக்கிப் பேசும் போது உரத்துக் குரல் கொடுப்பவர்களில் முதன்மையானவர் சேகர் பாபு. சபாநாயகரின் பணிப்பின் பேரில் பலமுறை அவைக் காவலர்களினால் தமிழக சட்டசபையில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர் சேகர் பாபு. அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி போன்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் கட்சியிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் விரித்த வலையில் சேகர் பாபுவும் விழப் போகிறார் என்ற சந்தேகத்திலேயே அவரிடமிருந்த பொறுப்பு பறிக்கப்பட்டது.
வட சென்னையில் சேகர் பாபுவின் செல்வாக்கு அதிகமானது. அவர் அணிமாறினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பலத்த வீழ்ச்சியாக அமையும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பெரும் புள்ளிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தாவும் போது கட்சிக்கு பாதிப்பு ஏற்படாது தொண்டர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்னால் நிற்பதாகவே தலைமைப்பீடம் கருதியது. ஆனால் அணி மாறியவர்களில் பலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ஜெயலலிதாவின் இந்த அதிரடியான நடவடிக்கைகளால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதாவால் வெளியேற்றப்படுவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஜெயலலிதாவைப் பழிவாங்கவும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் சூழ்நிலை தோன்றும் சந்தர்ப்பம் உள்ளது.
""நாம் ஒற்றுமையாக இருந்தால் ஆயிரம் தி. மு. க. வந்தாலும் எம்மை வீழ்த்த முடியாது'', ""ஆறாவது முறை நான் முதலமைச்சராவது மக்களின் கைகளில்தான் உள்ளது'' தமிழக சட்டமன்றத் தேர்தல்களையும், நாடாளுமன்றத் தேர்தல்களையும் பெரும் நம்பிக்கையுடன் எதிர்கொண்ட தமிழக முதல்வர் உரைத்த வார்த்தைகள் அவை. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் கூறுகிறாரா அல்லது ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் கூறுகிறாரா என்ற சந்தேகம் உள்ளது. அதேபோல் அடுத்த முறை தான் முதல்வராவது தமிழக மக்களின் கைகளில் என்கிறாரா அல்லது தனது மக்களின் கைகளில் உள்ளது என்கிறாரா?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாட்டுடன் அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடமையும் கண்ணியமும் திசைமாறிப் போய் விட்டன. இதுவரை இருந்த கட்டுப்பாடும் கட்டுமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. கோஷ்டி மோதல் இல்லாத கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்ளும் கோஷ்டி மோதல் ஒளிர்விடத் தொடங்கியுள்ளது. ஸ்டாலினின் ஆதரவாளர்களும் அழகிரியின் ஆதரவாளர்களும் வெளிப்படையாகவே தம்மை இனம் காட்டியுள்ளனர்.
ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே கோஷ்டிப் பூசல் உள்ளது. ஏனைய தலைவர்கள் கோஷ்டியாகச் செயற்படவில்லை என்றுதான் தலைமை நினைத்துக் கொண்டிருந்தது. அண்மையில் நடைபெற்ற மாவட்டக் கூட்டம் ஒன்றின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தமது கோஷ்டிப் பூசலை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்டாலினையும் அழகிரியையும் ஒற்றுமையாக்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய முக்கிய கடமைகளில் முக்கியமானது அழகிரியை சமாதானப்படுத்துவதுதான்.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 71/12/10




தமிழக சட்ட சபைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வரும் வேளையில் மாவட்டச் செயலாளர்களையும் மாவட்டப் பொறுப்பாளர்களையும் பதவியில் இருந்து தூக்கி எறிந்து அதிர்ச்சி வைத்தியம் செய்துள்ளார் ஜெயலலிதா. சக்தி மிக்க பொறுப்பாளர்களையும் நிர்வாகிகளையும் தூக்கி எறிவதற்கு ஜெயலலிதா எப்போதும் தயங்கியதில்லை.
தமிழக முதல்வராகப் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொன்னையன் போன்ற நிர்வாகிகளையே தூக்கி எறிந்த ஜெயலலிதா மாவட்டச் செயலாளர்களையும் பொறுப்பாளர்களையும் தூக்கி எறிந்தது ஆச்சரியமானதல்ல.
கோவையிலே தமிழக அரசு செம்மொழி மாநாட்டை நடத்தித் தனது பலத்தை வெளிப்படுத்தியது. அதே கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டத்தை நடத்தி ஆளும் கட்சியைக் கிலிகொள்ளச் செய்தவர் செ. ம. வேலுச்சாமி. அவருடைய மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு எம். ஜி. ஆர். மன்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் ஜெனிபர் சந்திரன், விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர் வளர்மதி ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
வட சென்னையில் 13 வருடங்களாக மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர் சேகர் பாபு. வடசென்னையில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்ப்பதில் முன்னிற்பவர். அவருடைய பதவி பறிக்கப்பட்டு எம். ஜி. ஆர். மன்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகச் சில தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சேகர் பாபுவின் ஆதரவாளர்களில் ஆயிரக்கணக்கானோர் இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள பிரமுகர்களில் சிலரின் பதவி பறிக்கப்படுவதும் அவர்களின் ஆதரவாளர்கள் அதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதும் வழமையான சம்பவங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.
சென்னையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் சேகர் பாபு. தமிழக சட்ட சபையில் ஜெயலலிதாவைத் தாக்கிப் பேசும் போது உரத்துக் குரல் கொடுப்பவர்களில் முதன்மையானவர் சேகர் பாபு. சபாநாயகரின் பணிப்பின் பேரில் பலமுறை அவைக் காவலர்களினால் தமிழக சட்டசபையில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர் சேகர் பாபு. அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி போன்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் கட்சியிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் விரித்த வலையில் சேகர் பாபுவும் விழப் போகிறார் என்ற சந்தேகத்திலேயே அவரிடமிருந்த பொறுப்பு பறிக்கப்பட்டது.
வட சென்னையில் சேகர் பாபுவின் செல்வாக்கு அதிகமானது. அவர் அணிமாறினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பலத்த வீழ்ச்சியாக அமையும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பெரும் புள்ளிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தாவும் போது கட்சிக்கு பாதிப்பு ஏற்படாது தொண்டர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்னால் நிற்பதாகவே தலைமைப்பீடம் கருதியது. ஆனால் அணி மாறியவர்களில் பலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ஜெயலலிதாவின் இந்த அதிரடியான நடவடிக்கைகளால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதாவால் வெளியேற்றப்படுவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஜெயலலிதாவைப் பழிவாங்கவும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் சூழ்நிலை தோன்றும் சந்தர்ப்பம் உள்ளது.
""நாம் ஒற்றுமையாக இருந்தால் ஆயிரம் தி. மு. க. வந்தாலும் எம்மை வீழ்த்த முடியாது'', ""ஆறாவது முறை நான் முதலமைச்சராவது மக்களின் கைகளில்தான் உள்ளது'' தமிழக சட்டமன்றத் தேர்தல்களையும், நாடாளுமன்றத் தேர்தல்களையும் பெரும் நம்பிக்கையுடன் எதிர்கொண்ட தமிழக முதல்வர் உரைத்த வார்த்தைகள் அவை. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் கூறுகிறாரா அல்லது ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் கூறுகிறாரா என்ற சந்தேகம் உள்ளது. அதேபோல் அடுத்த முறை தான் முதல்வராவது தமிழக மக்களின் கைகளில் என்கிறாரா அல்லது தனது மக்களின் கைகளில் உள்ளது என்கிறாரா?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாட்டுடன் அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடமையும் கண்ணியமும் திசைமாறிப் போய் விட்டன. இதுவரை இருந்த கட்டுப்பாடும் கட்டுமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. கோஷ்டி மோதல் இல்லாத கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்ளும் கோஷ்டி மோதல் ஒளிர்விடத் தொடங்கியுள்ளது. ஸ்டாலினின் ஆதரவாளர்களும் அழகிரியின் ஆதரவாளர்களும் வெளிப்படையாகவே தம்மை இனம் காட்டியுள்ளனர்.
ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே கோஷ்டிப் பூசல் உள்ளது. ஏனைய தலைவர்கள் கோஷ்டியாகச் செயற்படவில்லை என்றுதான் தலைமை நினைத்துக் கொண்டிருந்தது. அண்மையில் நடைபெற்ற மாவட்டக் கூட்டம் ஒன்றின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தமது கோஷ்டிப் பூசலை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்டாலினையும் அழகிரியையும் ஒற்றுமையாக்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய முக்கிய கடமைகளில் முக்கியமானது அழகிரியை சமாதானப்படுத்துவதுதான்.
சூரன்.ஏ.ரவிவர்மா

No comments: