Monday, January 17, 2011

ஒரு ஓட்டத்தால் வென்றது இந்திய அணி

இந்திய தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையே ஜொஹன்னஸ்÷பர்க்கில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 190 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான விஜயும் சச்சினும் மிக மெதுவாக ஓட்டங்களைச் சேர்த்தனர்.
முரளி 16, டெண்டுல்கர் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கோஹ்லி 22 ஓட்டங்களுடன் வெளியேறினார். யுவராஜ் சிங்கும் டோனியும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை உய ர்த்தினர். ஒருநாள் அரங்கில் 45 ஆவது அரைச்சதம் கடந்த. யுவராஜ் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஐந்தாவது அரைச் சதம் கடந்தார். டோனியும் யுவராஜ் இருவரும் 83 ஓட்டங்கள் அடித்தனர். 53 ஓட்டங்களில் யுவராஜ்சிங் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரெய்னா 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
டோனி 38 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்த வந்த இந்திய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
ஐந்து ஓவர்கள் கொண்ட பவர் பிளேயில் 14 ஓட்டங்கள் மட்டும் எடுத்த இந்தியா நான்கு விக்கட்டுக்களை இழந்தது. டிசோச பேடி 4 விக்கெட்டுக்களை யும் ஸ்டைன், மோர்க்கல் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
191 என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க வீரர் அம்லா ஏமாற்றினார். இவர் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஸ்மித் 77 ஓட்டங்கள் எடுத்தார். ஏனைய வீரர்களின் போராட்டம் வீணாகியது. தென் ஆபிரிக்கா 43 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்கள் எடுத்தது.
சஹீர்கான் இரண்டு விக்கட்டுகளையும் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், ரோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர். 29 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கட்டுகளை வீழ்த்திய முனாப் பட்டேல் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 16/01/11

No comments: