Thursday, January 20, 2011

இந்தியா வெற்றி பெற்றது.

களமிறங்கினார். இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் மூன்றாவது போட்டி பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணித் தலைவர் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். முதல் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய பந்து வீச்சாளர்களான சஹீர்கான், முனாப் பட்டேல் ஆகியோரின் அனல் பறந்த பந்துவீச்சில் தென்னாபிரிக்க வீரர்கள் தடுமாறினர். சஹீரின்பந்தில் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் அம்லா. ஹர்பஜனின் பந்தை கோக்லியிடம் பிடி கொடுத்த இங்ரம் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். யூசுப் பதானின் பந்தை தூக்கி அடித்த டிவிலியர்ஸ் 16 ஓட்டங்களுடன் சஹீர்கானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் ஸ்மித் ஹர்பஜனின் சுழலில் சிக்கி 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
23.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த தென்ஆபிரிக்கா 90 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்த போது ஐந்தாவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து டுமினி, பிளசிஸ் இணை 110 ஓட்டங்கள் சேர்த்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. அறிமுக வீரரான பிளசிஸ் முதலாவது அரைச் சதமடித்தார். 60 ஓட்டங்கள் எடுத்த பிளசிஸ் முனாப்பட்டேலின் வேகத்தில் வீழ்ந்தார். 52 ஓட்டங்கள் எடுத்த டுமினியை சஹீர்கான் வெளியேற்றினார். அடுத்து வந்த வீரர்கள் ஏமாற்ற தென் ஆபிரிக்கா 220 ஓட்டங்கள் எடுத்தது.
சஹீர்கான் மூன்று விக்கெட்டுகளையும் முனாப்பட்டேல், ஹர்பஜன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பியுசவ்லா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
221 என்ற சுலபமான இலக்கை எட்டிய இந்தியா ஆரம்பத்தில் தடுமாறியது. ஸ்டைனின் பந்தை அவரிடமே பிடி கொடுக்க ஒரு ஓட்டத்துடன் வெளியேறினர் முரளி,விஜய். கோஹ்லி அடுத்தடுத்து பவுண்டரிஸ் அடித்த போதும் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 23, டோனி 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 19.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா. எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ரெய்னா, யூசுப்பதான் ஜோடி இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டியது. போத்தா வீசிய ஒரு ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்து உற்சாகமூட்டினார் யூசுப்தான். 37 ஓட்டங்களில் ரெய்னா ஆட்டமிழந்தார். 59 ஓட்டங்களில் யூசுப்பதான் ஆட்டமிழக்க இந்தியா ரசிகர்கள் சோகமாகினர்.
ஹர்பஜன், சஹீர்கான் ஜோடி இந்தியாவின் வெற்றிக்காகப் போராடியது. 14 ஓட்டங்களில் சஹீர்கான் ஆட்டமிழந்தார். பர்னல், மார்கல் ஆகியோரின் ஓவரில் தலா ஒரு சிக்ஸர் அடித்து நம்பிக்கையூட்டினார். ஹர்பஜன். போத்தாவின் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் நெஹ்ரா.
மோர்கல் மூன்று, ஸ்ரைன் 2, பேஜா, டிசபேபட்,டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். யூசுப் பதான் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
சூரன்.ஏ.ரவிவர்மா

No comments: