Thursday, August 14, 2008

சர்ச்சையைக்கிளப்பியுள்ள



உலக அதிசயங்கள் ஏழு இருப்பதைஉலகமே ஒப்புக் கொண்டிருக்கையில் புதிய
உலக அதிசயங்களைத் தெரிவு செய்வதற்கான அறிவிப்பை இணையதளம் ஒன்று
2000 ஆம் ஆண்டு வெளியிட்டது. எஸ்.எம்.எஸ். மூலமும், இணையதளத்தின் மூல
மும் உலகில் உள்ள மக்களின் கருத்துக்கணிப்புக்கமைய புதிய உலக அதிசயங்கள்
அறிவிக்கப்படும் எனnew7wonders.com என்னும் இணையதளம் அறிவித்த
து.புதிய உலக அதிசயங்கள் பட்டியலிடப்போவதை அறிந்ததும் அதற்கு ஆதரவாகவு
ம் எதிராகவும் பல குரல்கள் ஒலித்தன.பாரம்பரிய மிக்க புராதன காலத்து கட்டடங்
களைப் பாதுகாக்கும் யுனெஸ்கோ இதற்குஎதிர்ப்புத் தெரிவித்தது. உலக அதிசயங்
களைப் பாதுகாக்க வேண்டுமே தவிரஅவற்றை முதலாவது, இரண்டாவது எனப்
பட்டியலிடுவது தவறு என்ற கருத்துமேலோங்கியது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகஎஸ்.எம்.எஸ். இணையதளம் என்பனவற்றின்
மூலம் போட்டிகள் நடைபெறுவதுசர்வ சாதாரணமாகி விட்டது. ஒரு எஸ். எம்.
எஸ். அனுப்புவதற்கு இரண்டு 2 ரூபா அறவிடப்படுவது வழமையானது என்றால் இப்
படிப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டுஎஸ். எம்.எஸ். அனுப்பினால் அதற்கு 10
ரூபா அறவிடப்படுகிறது.
ஆகவே இதில் உலக அதிசயங்களைப்பட்டியலிடுவதற்கு முதலிடம் கொடுக்கப்ப
டவில்லை. எஸ்.எம்.எஸ். இணையதளம்ஆகியவற்றின் மூலம் பெருந்தொகையான
பணம் சம்பாதிக்கும் முறையே நடைபெறுகிறது என இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்
கள் கூறினார்கள்.
இந்த எதிர்ப்புகளை எல்லாம் பொருட்ப
டுத்தாது தனது குறிக்கோளில் கண்ணாகஇருந்தார் இதனை நடத்திய பெர்னார்ட்
வெப்பர். சுவிட்ஸர்லாந்து பூர்வீகத்தைச்சேர்த கனடா நாட்டவரான இவரின் முயற்
சியில் உலகில் உள்ள 77 புராதன சின்னங்கள் பட்டியலிடப்பட்டன.
புதிய உலக அதிசயங்களைப் பட்டியலிடும் போட்டி நடைபெறுவதாக அறிவித்த
இந்தியர் இதில் தாஜ் மஹால் இடம்பெறவில்øல என்று வருத்தம் தெரிவித்தனர்.
இந்தியரின் உணர்வுகளைக் கண்டுகொண்ட வெப்பர் 2004 ஆம் ஆண்டு தாஜ்
மஹாலுக்கு முன்னால் ஐஸ்வர்யாராயைநிறுத்தி புகைப்படம் எடுத்து அந்தப் பட்டிய
லில் தாஜ்மஹாலைச் சேர்த்தார்.
புதிய உலக அதிசயப் பட்டியலில் தாஜ்மஹால் இணைக்கப்பட்டதால் இந்தியர்கள்
குதூகலத்துடன் வாக்களித்தார்கள். இந்தியர்களின் ஆர்வத்தைக் கண்டுகொண்ட நிறுவன
ம் மதுரை மீனாட்சி அம்மன், குதுப் மினார்போன்ற சில கட்டடங்களையும் புதிய உலக
அதிசயப் பட்டியலில் இணைத்தது. இந்தியாவில் உள்ள புராதன கட்டடங்கள்
இணைக்கப்பட்டதும் வாக்களிப்பின்வேகம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
இணையதளத்தின் மூலம் வாக்களித்ததில்முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம்
எனக் கருதப்படுகிறது. இணையதளத்தைப்பாவிக்கத் தெரியாத ஒருவர் நெற்கபேக்குச்
சென்று உரிய பணத்தைக் கொடுத்து தான்விரும்பிய கட்டடத்துக்கு வாக்களிக்கக்
கூறும் போது அங்கிருப்பவர் வேறொரு கட்டடத்துக்கு வாக்களித்திருக்கலாம் என்று
கருதப்படுகிறது.
மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டுபணம் சம்பாதிக்கும் இந்தப் போட்டியில்
சீனாவில் உள்ளவர்களும், இந்தியர்களும்அதிகளவில் கலந்துகொண்டார்கள்.
தனியார் நிறுவனம் நடத்திய இப்போட்டிøய உலகில் உள்ள எந்த ஒரு அரசாங்கமும்
அங்கீகரிக்கவில்லை. இது முழுக்க முழுக்கபணம் சம்பாதிக்கும் வழியே என்கிறார். ஆக்
ராவில் உள்ள வரலாற்று அறிஞரான பேராசிரியர் ஆர். நாத்.
புதிய உலக அதிசயப் பட்டியலுக்குஎதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும் போட்டி
யில் பங்குபற்றுபவர்களின் தொகைநாளுக்கு நாள் அதிகரித்தது. 10 கோடி மக்கள்
வாக்களித்துள்ளார்கள்.இதில் வசூலான தொகையில் 75 சதவீதம்
கொம் நிறுவனங்களுக்கும், 10 சதவீதம்தொழில்நுட்பத்துறையினருக்கும் வழங்கப்
படும்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களினால்குண்டு வைத்து தகர்க்கப்பட்ட பர்மியான்
புத்தர் சிலையை இந்த வருமானத்தின்மூலம் அமைக்கப் போவதாக வெப்பர் ஏற்கன
வே அறிவித்துள்ளார்.புதிய உலக அதிசயங்கள் பற்றிய பட்டி
யல் வெளியிடப்பட்டதில் அந்தக் கட்டடங்கள்உள்ள நாடுகளின் மக்கள் குதூகலத்துடன்
உள்ளனர். உலகில் உள்ள சிலர் இதனால்சலிப்படைந்துள்ளனர் அவர்களில்
முக்கியமானவர்கள் எகிப்தியர்.எகிப்தில் உள்ள பிரமிட்கள் உலக அதிச
யம் மிக்கவை. அவை எப்படிக் கட்டப்பட்டன.அங்குள்ள மம்மிகளைப் பாதுகாப்ப
தற்கு எப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பதை அறிவதற்கு இன்றும்
ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. புதியஉலகப் பட்டியலில் எகிப்து தெரிவு செய்யப்
பட்டதனால் எகிப்தியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எகிப்திய பிரமிட்கள் போட்டியின்றி தெரிவாகி உள்ளன என்று புதிய உலக அதிசயப்
பட்டியலை வெளியிட்ட ஏற்பாட்டாளர்கள்தெரிவித்துள்ளனர்.பிரான்ஸில் உள்ள ஈபிள்
டவர், இத்தாலியில் சாய்ந்த நிலையில்உள்ள பைஸா கோபுரம், அமெரிக்காவின்
சுதந்திர தேவி சிலை என்பன உலக அதிசயப் பட்டியலில் இல்லாததால் அந்த நாட்டு
மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.புதிய உலக அதிசயங்கள் என்ற பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இந்தப்
பட்டியலினால் யாருக்கும் எந்த நன்மையும்இல்லை. பரீட்சையிலோ அல்லது பொது
அறிவுப் போட்டியிலோ புதிய உலக அதிசயப் பட்டியலைக் கூறி புள்ளிகளைப் பெற
முடியாது. யுனெஸ்கோவும் உலக நாடுகளும் அங்கீகரிக்காத வரை இவை ஏட்டுச்
சுரைக்காயாகவே இருக்கும். புதிய உலகஅதிசயப் பட்டியல் வெளியிடப்பட்டதால்
பழைய உலக அதிசயங்கள் இல்லாமல்போகவில்லை. அவற்றின் மதிப்பு இன்னும்
எட்டு மடங்கு கூடியுள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 உலக
அதிசயங்கள் பற்றிய விவரங்கள், அதன்பெருமைகள் வருமாறு
முகலாய மன்னர் ஷாஜகான் தனது காதல்மனைவி மும்தாஜ் நல்லடக்கம் செய்யப்
பட்ட இடத்தில் எழுப்பப்பட்ட பளிங்குமாளிகைதான் தாஜ் மஹால். கட்டிட கலை
யின் சிறப்பையும் காதலின் சிறப்பையும்பறைசாற்றிக் கொண்டிருக்கும் தாஜ்மஹால்
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது.
1632 ஆம் ஆண்டு இந்தக் காதல்மாளிகை கட்டும்
பணி தொடங்கியது.1648 ஆம் ஆண்டில்இந்த பணி முடிவடைந்தது.
தாஜ்மஹாலை வடிவமைத்தவர் யார் என்பதில் சர்ச்சை நிலவுகிறது. என்றாலும்
உஸ்தாத் அகமதுலகாரி என்பவருக்குதாஜ்மஹாலை வடிவø
மத்ததில் முக்கியபங்கு உள்ளது. ஏற்கனவே உலக அதிச
யங்களில் ஒன்றாகஇடம்பெற்ற தாஜ்மஹால் மீண்டும் அதே
பெருமையை தக்கவைத்துக் ண்டுள்ளது
.உலக அதிசயங்கள்பட்டியலில் இடம்பிடித்துள்ள ரோமன்
கொலோசியம் முன்பு"பிளாவியன் அரங்கு' என்று அழைக்கப்
பட்டு வந்தது. இத்தாலியின் ரோம் நகரின்மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த
கொலோசியமும் கட்டிடக் கலையின் சிறப்புக்கு ஒரு எடுத்துக் காட்டு.
வீர விளையாட்டுக்களுக்காக இந்தஅரங்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. 50
ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாள்சண்டை போன்றவற்றை பார்த்து வந்தனர்.
கி.பி. 70 72 ஆம் ஆண்டில் வெஸ்பாசியான் என்ற மன்னரால் இது கட்டப்பட்டது.
ரோம் சாம்ராஜ்யத்தில் கட்டப்பட்ட பெரியகட்டிடம் இதுதான். கி.பி. 80 ஆம் ஆண்டில்
"டைட்டஸ்' என்ற மன்னர் காலத்தில் இந்தக்
கட்டிடம் கட்டும் பணி முடிவடைந்தது.டொ மிஷியான் என்ற மன்னர் காலத்தில்
இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.இப்போதும் அந்த மண்டபத்துக்குள் பல்
வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.சிசன் இட்சா பிரமீடு மெக்சிகோவின் யுகாதான்
தீபகற்ப பகுதியில் அமைந்துள்ளது.மாயா மக்களின் நாகரீகத்தையும் தற்கால
மெக்சிகோ நாகரீகத்தையும் கட்டிட கலைநுட்பத்தையும் வெளிப்படுத்தும் பிரமிடு
இது. இந்த பிரமிடுக்குள் இருந்த சில சிற்பங்கள் எரிந்து நாசமாகி விட்டது.
மாயபான் பகுதியில் இதேபோல் இன்னொரு பிரமிடை அமைத்துள்ளனர். ஏராள
மான சுற்றுலா பயணிகள் தினந்தோறும்பார்த்து செல்கிறார்கள்.
மெசுபிச்சு என்பது ஒரு பழங்கால அதிசயநகரம். பல நூற்றாண்டுகளாக இந்த அழகிய
நகரின் பெருமை வெளி உலகுக்கு தெரியவில்லை. தென்னாபிரிக்க நாடான பெரு
நாட்டின் மலைப் பகுதியில் அமைந்துள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 7970 அடி உய
ரத்தில் இது அமைந்துள்ளது.1911 ஆம் ஆண்டு ஹிராம் பிங்காம் என்ப
வர் இதன் பெருமையை உணர்த்த அதிககவனம் செலுத்தினார். இடிந்து போன கட்டிடங்
கள் கூட இயற்கை எழில் குறையாமல்உள்ளது.
புதிய உலக அதிசயங்களில் ஒன்றாகரெடிமர் ஏசு சிலை பிரேசில் நாட்டின் கார்
கோவடோ மலைப் பகுதியில் அமைந்துள்ளது. 1931 ஆம் ஆண்டு அக்டோபர்
மாதம் 12 ஆம் திகதி இந்த பிரமாண்ட ஏசுசிலை திறந்து வைக்கப்பட்டது. பிரான்சு
நாட்டு சிற்பி பால் லாண்டோவ்ஸ்கி என்பவர் இதை உருவாக்கினார். இன்றுவரை
அந்த சிலையில் சில மாற்றங்கள், புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாது
காத்து வருகின்றனர். இப்போது அந்த சிலையில் வண்ண விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.


உயரமான அந்த சிலையின் பாதம் வரைசெல்ல நகரும் படிக்கட்டுகளும் இப்போது
அமைக்கப்பட்டுள்ளன. 220 படிக்கட்டுகளிலும் சுற்றுலா பயணிகள் ஏறுவது மிகவும்
கடினம் என்பதால் இந்த ஏற்பாடு.ஜோர்டான் நகரில் உள்ள மலைப் பகுதிகளுக்கு
இடையே அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் இது. அராபத் பகுதியில் அகாபா கடீலா
முதல் மரணக் கடல் வரை உள்ள பகுதிபெத்ரா. இங்குள்ள பாறைகளை குடைந்து
அழகிய சிற்பங்களையும் கட்டிடங்களையும்அமைத்துள்ளனர். இதுவும் சிற்பக் கலை
யின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.இந்த கட்டடங்களில் பல கருவூலமாகவு
ம் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்ட கஜானாவாகவும் செயல்பட்டு வந்தன. சிவப்பு
ரோஜா நகரம் என்றும் இதை அழைத்து வந்தனர்.
உலக அதிசயங்கள் பட்டியலில் மீண்டும்இடம்பிடித்துள்ள சீன பெருஞ்சுவர் அந்த
நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. வெறும் கற்களாலும் மண்ணாலும்
அமைக்கப்பட்ட அந்த சுவர் வடக்கு பகுதியின் பாதுகாப்பு அரணாக கட்டப்பட்டது.
கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம்நூற்றாண்டு வரை அதில் புதுப்பிக்கும்
பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கி.பி 200ஆம்ஆண்டின் சீனாவின் முதலாவது சக்கர
வர்த்தி கின் சி ஹிவாங் புதிதாக சிலபணிகளை மேற்கொண்டார்.
பண்டைய உலக ஏழு அதிசயங்கள்
1. எகிப்து மன்னர் பாரோகூபுவின் சமாதி
அடங்கியுள்ள கிஸாபிரமீட்.
2. பாபிலோனியா நகரில் அமைந்திருந்த
தொங்கும் தோட்டம்.
3. ஆர்ட்டிமிஸ் கோவில்
4. ஒலிம்பியாவில் அமைந்திருந்த ஜீயஸ்
கடவுளின் சிலை.
5. மாசோலஸ் மசோலியம்
6. ரோட்ஸ் சிலை
7. அலெக்சாண்டரியா கலங்கரை
விளக்கம்.
உலக அதிசயங்கள்
பிரிட்டனின் ஸ்டோன் ரென்ஞ்
இத்தாலி கொலோஸியம்
சீனப்பெருஞ் சுவர்
சீனாவின் போர்பெலன்ஸ்கோபுரம்
துருக்கி ஹாக்கியா சோபியா
பைஸா சாய்ந்தகோபுரம்
எகிப்தின் கடகொம்போஸ்
புதிய உலக அதிசயங்கள்
தாஜ்மஹால் இந்தியா
சிஜன் இட்ஷாபிரமிட் மெக்ஸிகோ
ரெடிமர் ஏசு சிலை பிரேஸில்
சீனப் பெருஞ்சுவர் சீனா
மெசுபிட்சு பெரு
பெத்ரா ஜோர்தான்
ரோமன் கொலேõசியம் இத்தாலி.
ரமணி
மெட்ரோநியூஸ் 12 07 2007

No comments: