Sunday, April 3, 2011

சம்பியன்களை வீழ்த்திமகுடம் சூட்டிய இந்தியா




மேற்கிந்தியத்தீவுகள், அவுஸ்திரே லியா, பாகிஸ்தான் இலங்கை ஆகிய முன்னாள் சம்பியங்களை வீழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா. இலங்கை இந்திய அணிகளுக்கிடையே மும்பை, வன்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆறு விக்கட்டுக்களினால் வெற்றி பெற்ற இந்தியா உலகக் கிண்ணச் சாம்பியனானது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சங்கக்கார துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 274 ஓட்டங்கள் எடுத்தது. தரங்க, டில்ஷான் இணை முதலில் களமிறங்கியது. இலங்கையின் பலமான இரு துடுப்பாட்ட வீரர்கள் களம் புகுந்ததும் இலங்கை ரசிகர்கள் உற்சாகக் குரல் கொடுத்தனர். காயத்திலிருந்து மீண்ட முரளி இலங்கை அணியில் இடம்பிடித்தார். நெஹ்ராவுக்குப் பதிலாக ஸ்ரீசாந்த் இந்திய அணியில் இடம்பிடித்தார். சஹீர்கான், ஸ்ரீசாந்த் ஆகியோரின் ஆரம்பப் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்ததனால் இலங்கையின் அதிரடி வீரர்கள் ஓட்டங்கள் எடுக்கத் தடுமாறினார். சஹீர்கான் முதலில் வீசிய இரண்டு ஓவர்களிலும் இலங்கை வீரர்கள் ஓட்டம் எடுக்கவில்லை. ஸ்ரீசாந்த் வீசிய ஆறாவது ஓவரில் டில்ஷான் இரண்டு பௌண்டரி அடிக்க இலங்கையின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. 20 பந்துகளுக்கு முகம் கொடுத்த தரங்க இரண்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 38 பந்துகளில் 17 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் சங்கக்கார, ஸ்ரீசாந்தின் ஓவரில் இரண்டு பௌண்டரி அடித்தார். இலங்கை வீரர்கள் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முற்பட்ட வேளையில் ஹர்பஜனின் சுழலில் சிக்கிய டில்ஷான் 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சங்கக்கார, டில்ஷான் ஜோடி 64 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்தது. மஹேல, சங்கக்கார ஜோடி இந்திய வீரர்களைத் திக்கு முக்காட வைத்தது. மஹேலவின் விஸ்வரூபத்தைத் தடுக்க முடியாது இந்திய வீரர்கள் தடுமாறினர். அனுபவமும் திறமையும் உள்ள மஹேலவும் சங்கக்காரவும் இலங்கையின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். 68 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர்கள் 62 ஓட்டங்கள் எடுத்தனர். யுவராஜ் சிங்கின் பந்தை டோனியிடம் பிடி கொடுத்த சங்கக்கார 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சமரவீர, மஹேல ஜோடி நிதானமாகத் துடுப்பெடுத்தாடியது. யுவராஜின் பந்தில் 21 ஓட்டங்களில் சமரவீர ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹப்புகெதர ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 39.5 ஓவர்களில் ஐந்து விக்கட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்தது இலங்கை. இக் கட்டான நேரத்தில் மஹேலவுடன் ஜோடி சேர்ந்தார் குலசேகர. துடுப்பாட்ட பவர்பிளேயைப் பயன்டுத்தி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர். 50 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர்கள் இருவரும் 66 ஓட்டங்கள் எடுத்தனர். சஹீர்கானின் ஓவரில் இமாலய சிக்சர் அடித்து மிரட்டினார் குலசேகர. மறுபுறத்தில் பௌண்டரியுடன் சதமடித்தார். மஹேல 32 ஓட்டங்கள் எடுத்த குலசேகர ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மஹேல, பெரேரா ஜோடி இந்திய வீரர்களின் பந்து வீச்சைத் துவம்சம் செய்தது. சஹீர்கான் கடைசி ஓவரில் இரண்டு பௌண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கலாக 18 ஓட்டங்கள் எடுத்தõர். இலங்கை வீரர்கள் சஹீர்கானின் கடைசி ஐந்து ஓவர்களில் 63 ஓட்டங்கள் அடித்தனர். 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுக்களை இழந்த இலங்கை 274 ஓட்டங்கள் எடுத்தது. மஹேல ஆட்டமிழக்காது 108 ஓட்டங்கள் எடுத்தõர். 88 பந்துகளுக்கு முகம் கொடுத்த மஹேல 13 பௌண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்கள் எடுத்தார். ஒன்பது பந்துகளுக்கு முகம் கொடுத்த பெரேரா ஒரு சிக்சர் மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 22 ஓட்டங்கள் எடுத்தார். சஹீர்கான், யுவராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் ஹர்பஜன் சிங் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். 275 என்ற பிரமாண்டமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா 48.2 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 277 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷேவாக்கும் சச்சினும் களம் புகுந்தனர். ஆரம்பமே இலங்கை அணிக்கு சாதகமானதாக அமைந்தது. ஓட்டம் எதுவும் எடுக்காது ஷேவாக் மலிங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 33 ஓட்டங்கள் எடுத்த சச்சினையும் மலிங்க வெளியேற்றினார். இந்திய அணியின் முக்கியமான இரு வீரர்கள் ஆட்டமிழந்ததால் இலங்கை வீரர்கள் உற்சாகமாயினர். கம்பீர், கோஹ்லி ஜோடியின் நிதானமான துடுப்பாட்டம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தது. 30 ஓட்டங்களில் கம்பீரின் பந்தை குலசேகர நழுவ விட்டார். பின்னர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கும் சந்தர்ப்பம் தவறியது களத்தில் நிலைத்து நின்றார் கம்பீர். கம்பீர் கோஹ்லி ஜோடி 97 பந்துகளில் 83 ஓட்டங்கள் எடுத்தது. 35 ஓட்டங்களில் கோஹ்லி ஆட்டமிழந்தார். கோஹ்லி வெளியேறியதும் டோனி களம் புகுந்தார். உலகக் கிண்ணத் தொடரில் ஏமாற்றிய டோனி இறுதிப் போட்டியில் அசத்தினார். டோனி, கம்பீர் ஆகிய இருவரும் இந்தியாவின் வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடினர். அடிக்கவேண்டிய பந்துகளை அடித்தும் தவிர்க்க வேண்டிய பந்துகளைத் தவிர்த்தும் தடுக்க வேண்டிய பந்துகளைத் தடுத்து ஆடினர். 120 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர்கள் இருவரும் 109 ஓட்டங்கள் எடுத்தனர். 97 ஓட்டங்கள் எடுத்தபோது பெரேராவின் பந்தை அடிப்பதற்காக முன்னோக்கி நகர்ந்த கம்பீர் ஆட்டமிழந்தார். டோனி, யுவராஜ் ஜோடி இந்திய அணியின் உலகக் கிண்ண வெற்றியை உறுதி செய்தனர். துடுப்பாட்ட பவர்பிளேயில் இவர்கள் இருவரும் இணைந்து குலசேகரவின் பந்தை சிக்சருக்கு அடி த்த டோனி வெற்றியை உறுதி செய்தார் டோனி. 42 பந்துகளுக்கு முகம் கொடுத்த டோனியும் யுவராஜும் 54 ஓட்டங்கள் எடுத்தனர். மலிந்த ஒரு விக்கட்டையும் பெரேரா, டில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக டோனியும் தொடர் நாயகனாக யுவராஜ்சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர். உலக கிண்ண போட்டியை நடத்தும் நாடு சம்பியன் ஆனாது இல்லை என்ற மூட நம்பிக் கையை தகர்த்து எறிந்த இந்தியா தாய் நாட் டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சம்பியனானது. . ரமணி சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

No comments: