Wednesday, June 22, 2011

வெற்றியை எதிர்வுகூறத் தயாராகிறது ஒக்டோபஸ்




ஜேர்மனியில் நடக்க இருக்கும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் ஆருடம் கூறுவதற்காக 8 ஒக்டோபஸ்கள் தெரிவு செய்யப்பட்டு பல பயிற்சிகளும் நடைபெறுகின்றன.
கடந்த உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் வெற்றியாளரைச் சரியாக ஆருடம் செய்த போல் என அழைக்கப்பட்ட ஒக்டோபஸ் மரணமானதைத் தொடர்ந்து இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறுகிறார் ஜேர்மனியைச் சேர்ந்த பிரிட்டா அன்லொவ்.
ஜேர்மனியில் நாளை மறுதினம் போட்டி ஆரம்பமாகிறது. போட்டி நடக்கும் மைதானங்களில் ஒரே விதமான இயந்திரங்கள் வைக்கப்படும். ஜேர்மனியில் பங்கு பற்றும் ஒவ்வொரு போட்டியிலும் காலை 11 மணிக்கு இவை பேர்லின் ஹனேவர் கொசிக்ஸ்வின்னர், கொன்ய்ரன்ஸ், மூனிச், ஸ்மேயர், ரிமென்டோவர், போலின் சொந்த ஊரான ஓபர் சுனி ஆகிய இடங்களில் களமிறக்கப்படும்.
உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் கடந்த போட்டியின் 3 ஆவது ஜேர்மனி விளையாடிய எட்டு போட்டிகளிலும் முடிவை போல் ஆருடம் காட்டியது. அதே விதிமுறை இம்முறையும் பின்பற்றப்படும் எனத் தெரிகிறது.
பிரிட்டனில் பிறந்த அந்த ஒக்டோபஸ் இன் சாகசங்கள் உலகெங்கும் பிரபல்யமானது. இதன் மூலம் பல பந்தயக் காரர்கள் நட்ட பணத்தை சம்பாதித்துள்ளார்கள். இப் பிராணியை போல் உலக கோப்பை இறுதி போட்டியில் நெதர்லாந்தை ஸ்பெயின் வெற்றி கொள்ளும் என்றும் ஆருடம் கூறியது.

No comments: