Thursday, February 2, 2012

முத்தரப்பு ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை

இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையேயான முத்தரப்பு ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது.
இந்தியா கடந்த ஆண்டு 28 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. 19 போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டன. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் இரண்டு அணிகளும் 338 ஓட்டங்கள் எடுத்ததனால் போட்டி சமநிலையில் முடிந்தது. இலங்கை ஒரு நாள் ÷õட்டிகளில் விளையாடியது. 11 போட்டிகளில் வெற்றி பெற்றது. 12 போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. அவுஸ்திரேலியா 23 போட்டிகளில் விளையாடி 16 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆறு போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியா ஒன்பது போட்டிகளில் விளையாடியது.இதில் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. ஒருபோட்டி சமநிலையில் முடிந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் 3 -2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டன. இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5- 0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது.
மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் விளையாடிய இலங்கை ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. எட்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய இலங்கை ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒருபோட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 2- 2 என்ற கணக்கில் சமப்படுத்தியது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 3- 2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4 -1 என்ற கணக்கில் இலங்கை தோல்வியடைந்தது.
இங்கிலாந்து, பங்களாதேஷ், இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகியவற்றுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடிய இந்தியா ஒருதொடரில் தோல்வியடைந்தது ஒரு தொடரில் வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் சமநிலையில் முடிவடைந்தது.

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகியவற்றக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை தோல்வியடைந்தது. மேற்கிந்தியத்தீவுகள் இங்கிலாந்து ஆகியவற்றுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை இலங்கை சமப்படுத்தியது.
இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் கடந்த ஆண்டு ஒரு நாள் போட்டியில் மோதின. அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா இலங்கையில் கடந்த ஆண்டு ஆறு ஒரு நாள் போட்டிகளில் விளையாடின. அவுஸ்திரேலியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்து. ஒருபோட்டி மழை காரணமாகக் கைவிட்பபட்டது.
இந்தியாவும் இலங்கையும் கடந்த ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடின. இந்தியா வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இந்தியா கடந்த ஆண்டு ஐந்து போட்டிகளில் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தது. ஒரு போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராகவும் நான்கு போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராகவும் 300 ஓட்டங்களைக் கடந்தது. இந்தியா, இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராக 338 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து, கென்யா, பங்களாதேஷ் ஆகியவற்றுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா கடந்த ஆண்டு 300 ஒட்டங்களுக்கு மேல் அடித்தது. இங்கிலாந்து 333 ஒட்டங்கள் அடித்தபோது அவுஸ்திரேலியா 334 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்கா அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 303 ஒட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்துக்கு எதிராகஇரண்டு போட்டிகளிலும் சிம்பாப்பேக்கு எதிராக ஒருபோட்டியிலும் இலங்கை 300 ஓட்டங்களைக் கடந்தது. இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் 300 ஓட்டங்கள் அடிக்கவில்லை இங்கிலாந்து 299 ஓட்டங்கள் அடித்தது.


இந்த ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 -2 என்ற கணக்கில் இலங்கை தோல்வியடைந்தது. முதலாவது போட்டியில் 43 ஒட்டங்கள் மட்டும் எடுத்து குறைந்த ஒட்டங்களில் ஆட்டமிழந்தது. இலங்கை முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை நான்காவது போட்டியில் தென் ஆபிரிக்கா 299 ஓட்டங்கள் அடித்தபோது 304 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டியில் தென் ஆபிரிக்கா 312 ஒட்டங்கள் அடித்தபோது 314 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.டில்ஷானிடமிருந்த தலைமைப் பதவி மஹேலவிடம் கைமாறியது. புதிய தலைமை புதிய பயிற்சியாளரின் கீழ் முக்கோணத் தொடரை சந்திக்கத் தயாராக உள்ளது. இலங்கை மலிங்க மட்டும் தான் எதிரணிக்கு அச்சுறுத்தலாக உள்ளார். ஏனைய பந்து வீச்சாளர்கள் எப்போதும் ஒட்டங்களை வாரி வழங்குவார்கள் என்று உறுதியாகக் கூற முடியாது. இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை பலமானது தான். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழப்பதால் அடுத்து வருபவர்கள் நெருக்கடியைத் எதிர்நோக்குகின்றனர்.
இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை மிகப் பலம் வாய்ந்தது. அணியில் போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் சோபிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் காப்பாற்றினார்கள். முதல் 10 ஓவர்களில் எதிரணியை கட்டுப்படுத்தும் இந்திய பந்து வீச்சாளர்கள் அதன் பின்னர் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை. கடைசி 10 ஓவர்களில் ஓட்டங்களை வாரி வழங்கி வெற்றியை பறிகொடுத்து விடுகிறார்கள்.
அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டமும் பந்துவீச்சும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.
ரமணி
மெட்ரோநியூஸ்
02/02/12



No comments: