Sunday, February 19, 2012

ஸ்டாலினுக்குப் போட்டியாகக்களமிறங்கும் அழகிரி

அழகிரி அரசியலுக்கு வரும் வரை அண்ணன், தம்பி உறவு சுமுகமாக இருந்தது. அழகிரியின் ஆசை அதிகரிக்க தி.மு.க. மெதுவாகப் பிரியத் தொடங்கிவிட்டது.
பெங்களூரில் நடக்கும் வழக்கின் ஜெயலலிதாவின் மீதான பிடி இறுகியதால் அரச வழக்கறிஞருக்கு நெருக்குதல் அதிகமானது

திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் இருக்கும் பிரச்சினைகள் பெரும் பூதங்களாக வெளிவரத் தொடங்கிவிட்டன. அழகிரி அரசியலுக்கு வரும்வரை ஸ்டாலினுக்கு போட்டியாக கழகத்தினுள் யாருமே இல்லை. தனக்குப் பின் ஸ்டாலின் தான் என்ற அசையாத நம்பிக்கை வைத்திருந்த கருணாநிதியின் எண்ணத்தில் அழகிரியின் அதிரடி அறிக்கைகள் சலனத்தை ஏற்படுத்தின. மாணவப் பருவத்தில் இருந்தே அரசியலில் ஆர்வம் காட்டியவர். பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றவர். ஸ்டாலின் கருணாநிதியின் மகன், மதுரையில் கட்சியை வளர்த்தவர் என்ற தகுதியுடன் அசியல் அரங்கில் அடி எடுத்து வைத்தவர். அழகிரி அரசியலுக்கு வரும்வரை அண்ணன் தம்பி என்ற உறவு சுமுகமாகவே இருந்தது. அழகிரியின் ஆசை அதிகரிக்க திராவிட முன்னேற்றக் கழகம் மெது மெதுவாகப் பிரியத் தொடங்கியது.
கருணாநிதி இருக்கும்வரை அடுத்தத் தலைவர் யார் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பதில் உறுதியாக இருப்பவர் அழகிரி. அழகிரிக்கு ஆதரவாக ஒரு சில தலைவர்கள் இருந்தாலும் ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை முன்னிறுத்துவதற்கு வெளிப்படையாக எவரும் கருத்துச் சொல்வதில்லை. ஸ்டாலினுக்கு எதிராகவும் அழகிரிக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்து கழகத்தினுள் புயலைக் கிளப்பி உள்ளார் மூத்த தலைவர்களில் ஒருவரான வீர பாண்டி ஆறுமுகம். பொதுக் குழுவில் சிறிய இந்துக் குலத்துச் சிங்கம் ஸ்டாலினுக்கு எதிராகத் தன் மகனைக் களமிறக்கி மூக்குடைபட்டு உள்ளது.
கட்சியின் மிகப் பெரிய பலங்களில் ஒன்று இளைஞர் அணி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிக்கு புது இரத்தம் பாய்ச்சுவதற்காக மாவட்டம் தோறும் நேரில் சென்று நேர்முகப் பரீட்சை நடத்தி வருகிறார் ஸ்டாலின். கட்சித் தலைவர்கள் மேடை ஏறிப் பேசுவார்கள். அவர்களின் பேச்சில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அந்தக் கூட்டங்களைச் சிறப்பாக செய்து முடிக்க இளைஞர் பட்டாளத்தின் உதவி கண்டிப்பாகத் தேவை. கட்சித் தலைவர் என்ற சிம்மாசனத்தில் தான் அமரும் போது இளைஞர் அணி பூரண ஆதரவு வழங்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் விருப்பம். ஸ்டாலினின் இந்த எண்ணத்துக்கு ஆப்பு வைக்க முயற்சித்து அகப்பட்டுக் கொண்டார் வீரபாண்டி ஆறுமுகம்.
சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான நேர்முகத் தேர்வு வீரண்பாண்டி ஆறுமுகத்தின் மகனின் தலைமையில் நடைபெறும் என்று வீரபாண்டி ஆறுமுகன் தன்னிச்சையாக அறிவித்தார். வீரபாண்டி ஆறுமுகத்தின் இந்த அறிவிப்பு மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் விழித்துக் கொண்டது கட்சித் தலைமை. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக எவரும் இளைஞர் அணி நிர்வாகிகளைத் தெரிவு செய்யக் கூடாது என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்ப் பத்திரிகையான முரசொலியில் அறிக்கை பிரசுரமானது. முரசொலியில் பிரசுரமான அறிக்கையைப் படித்ததும் இளைஞர் அணியில் சேர விரும்புபவர்களின் விண்ணப்பத்தைத் தான் பெறப் போகிறேன். புதிய இளைஞர் அணியினர் தெரிவு செய்யவில்லை என்று கரணம் அடித்தார் வீரபாண்டி ஆறுமுகன்.
வீரபாண்டி ஆறுமுகத்துடன் தொலைபேசியில் கதைத்து சேலம் இளைஞர் தேர்வை நிறுத்தும்படி உத்தரவிட்டிருக்கலாம் அல்லவீரபாண்டி ஆறுமுகத்தை நேரில் அழைத்து இப்படி செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கலாம். கட்சித் தலைவருக்கு எதிராக நடக்க வேண்டாம் என்று முரசொலியில் பிரசுரமான அறிக்கை வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மட்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல. ஸ்டாலினுக்கு எதிராக யாரும் எதுவும் செய்யக் கூடாது என்று பகிரங்கமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையே இது. ஸ்டாலினை எதிர்த்தால் கட்சியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்ற எச்சரிக்கை வெளியான அதேவேளை, அழகிரியின் பேட்டி கிலியை உண்டாக்கி உள்ளது.
தலைவர் இருக்கும்வரை அடுத்த தலைவர் யார் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அடித்துக் கூறி வந்த அழகிரி தலைமையில் பொறுப்பை ஏற்கத் தயார் என்று பேட்டியளித்து ஸ்டாலினுக்கு எதிரான தனது போட்டியைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். ஸ்டாலினுக்கு வழிவிட்டு ஒதுங்கி இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களை கருணாநிதி விட்டு விட்டார். அரசியலை விட்டு ஒதுங்க முடியாத சூழ்நிலைக் கைதியாக உள்ளார் கருணாநிதி. சமாதானம், ஒத்துப்போதல், இணங்கி நடத்தல் என்பன அழகிரிக்கு பிடிக்காத விடயங்கள். தலைமைப் பதவிக்குப் போட்டி போட வேண்டாம் என்று அழகிரிக்கு கூறக் கூடியவர்கள் யாரும் கட்சிக்குள் இல்லை. வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி போன்ற தலைவர்கள் ஸ்டாலினுக்கு எதிராக உள்ளனர். அழகிரியின் பின்னால் இவர்கள் நின்றாலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஸ்டாலினின் பின்னால் தான் இருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும். இலட்சக்கணக்கான தொண்டர்களும் ஸ்டாலினின் பின்னால் உள்ள முரசொலியின் நிர்வாகப் பொறுப்பு ஸ்டாலினின் மகன் உதயநிதியிடம் உள்ளது. சன் தொலைக்காட்சியில் புதிய நிர்வாகியாக ஸ்டாலினின் விசுவாசி கலியப் பெருமான் நியமிக்கப்பட்டுள்ளார். மாறன் சகோதரர்கள்ஸ்டாலினையே ஆதரிப்பார்கள்.அடுத்ததலைவர் யார் என்றகேள்வி எழுந்தால்ஸ்டாலினின்கையே ஓங்கும்.வைகோ,விஜயாகந்த் போன்று புதியகட்சியை வழிநடத்தும் தலைமைப்பொறுப்பு அழகிரியிடம் இல்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராகக் கர்நாடகாவில் நடைபெறும் வருமானங்களுக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கின் பிடி இறுகுவதில ஜெயலலிதாவுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரச தரப்பில் ஆஜராகி வாதாடும்வழக்கறிஞர் ஆச்சாரியாவின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது ஜெயலலிதா பலமுறை திண்டாடினார். இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவைக் காப்பாற்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி முயற்சிக்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களாக நீதித்துறையில் இருக்கும் இவர் 2004 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் ஆஜராகி வாதாடி வருகிறார். அரசு தரப்பு வக்கீலாக கடமையாற்றும்ஆச்சார்யாவை அட்வகேட் ஜெனரலாக‌ கர்நாடக அரசு நியமித்தது.
அட்வகேட் ஜெனரல், அரச தரப்பு வழக்கறிஞர் ஆகிய இரட்டைப் பதவியை ஒருவர் வகிக்கக் கூடாது என்று வக்கீல் வீரபத்தையா என்றவர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். ஒருவர் இரட்டைப் பதவி வகிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அட்வகேட் ஜெனரல் பதவி மதிப்புமிக்கது. கௌரவமானது. ஆகையினால் அரச தரப்பு வழக்கறிஞர் பதவியை க்கைவிடுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். கௌரவப் பதவியை விட நீதியை நிலை நாட்டுவது தான் முக்கியம் எனக் கருதிய ஆச்சாரியா அட்வகேட் ஜெனரல் பதவியைத் துறந்தார்.
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக பழகுகின்றார்கள். அடுத்த நாடாளுமன்றத்தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பாரதீய ஜனதாக் கட்சி முயற்சிக்கிறது. இதேவேளை, அடுத்த பிரதமர் ஆசையில் ஜெயலலிதா மிதக்கிறார். பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஜெயலலிதாவின் ஆதரவு தேவைப்படும் போல் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்.
பாரதீய ஜனதாக் கட்சியுடனான ஜெயலலிதாவின் இணைப்பின் முதற் கட்டமே ஆச்சாரியா தான்மீதான‌ பாய்ச்சலாகச்
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவிடம் விசாரணை நடைபெறவுள்ளது. சசிகலாவின் சாட்சியில் ஜெயலலிதாவுக்கு எதிராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜெயலலிதாவைத்திணறவைத்த‌ ஆச்சார்யா வின் கேள்விகள்சசிகலாவையும் திணற வைக்கும் என்பது வெளிப்படையே. சசிகலாவிடம் தான் கேள்விகள் கேட்கக் கூடாது என்று மறைமுகமாகச் செயற்பட்டவர்களில் முகத்தில் கரியைப் பூசி உள்ளார் ஆச்சார்யா.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 26/02/12

No comments: