Thursday, February 23, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள்23

ம‌கனுக்கு மனைவியாக வந்தவளை அடைய துடிக்கும் காமுகனின் கதை தான் 1936 ஆம் ஆண்டு வெளியான நவீன சாரங்க தரா. குடும்ப உறவைக் கேள்விக்குறியாக்கிய இப்படம் அன்றைய ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஸ்திரபுரத்து மன்னன் நரேந்திரன்(எஸ்.எஸ்.மணி பாகவதர்) தன் மகன்சாரங்க தராவுக்கு(எம்.கே.தியாகராஜ பாகவதர்) திருமணம் செய்வதற்கு முடிவு செய்கிறார். தனக்கு பிறகு நாட்டை ஆட்சி செய்யப்போகும் மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் பொறுப்பை ராஜ குருவிடம் ஒப்படைக்கிறார். மன்னனின் ஆசையை நிறைவேற்றுவதற்கு புறப்படுகிறார் ராஜகுரு. சாரங்க தராவுக்கு ஏற்ற பெண்ணைத் தேடி பல நாடுகளுக்கு அலைந்த ராஜகுரு. சித்திராங்கியை கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். தனது நாட்டு இளவரச‌ன் சாரங்க தராவுக்கு ஏற்ற பெண் சித்திராங்கி தான் என்று முடிவு செய்கிறார்.
சித்திராங்கியின் தகப்பன் சித்திராங்க ராஜனிடம்சென்று தன்னை அறிமுகப்படுத்தி தனது பயணத்தின் காரணத்தைக் கூறுகிறார் ராஜகுரு. தனது நாட்டு இளவரச‌ன் சாரங்க தராவுக்கு ஏற்ற இளவரசி சித்திராங்கி தான் என்று கூறுகிறார். சாரங்க தராவின் ஓவியத்தை பார்த்த சித்திராங்கி தன் மனதைப் பறிகொடுக்கிறாள். தந்தையின் அனுமதியுடன் அஸ்தனாபுரம் நோக்கி ராஜகுருவுடன் செல்கிறாள் சித்திராங்கி.
இளவரச‌ன்சாரங்க தராவை எதிர்பார்த்து அஸ்தனாபுரத்து அந்தபுரத்தில் இருந்த இந்திராங்கியை பார்ப்பதற்குச் சென்ற மன்னன் நரேந்திரன் அவளது அழகில் மயங்கிவிடுகிறார். மருமகளாக வந்தவளை மனைவியாக்க ஆசைப்பட்டான். தன் விருப்பத்தைச் சித்திராங்கியிடம் கூறுகிறான். தான் ஆபத்தில் சிக்கி இருப்பதை உணர்ந்த சித்திராங்கி தான் விரதம் இருப்பதாகப் பொய்சொல்லி விரதம் முடிந்ததும் ஏற்றுக் கொள்வதாகக் கூறுகிறாள். சித்திராங்கி கூறிய பொய்யை உண்மையென நம்பிய மன்னன் சந்தோஷத்துடன் தன் இருப்பிடம் செல்கிறார்.
சாரங்க தராவும் சித்திராங்கியும் ஒரு நாள் ச‌ந்திக்கின்றனர். இதனை கண்ட மன்னன் சாரங்க தராவை சிறையிலடைத்து அவனது கைகளை வெட்டுகிறான். மன்னனின் ச‌பல புத்தியை அறிந்த மக்கள் மன்னனுக்கு எதிராக கிளர்ந்தெழுகிறனர். திடீரென சிறையில் தோன்றிய ச‌ந்நியாசினி சாரங்க தராவுக்கு கைகளை கொடுத்து சாரங்க தராவையும் சித்திராங்கியையும் சேர்த்து வைக்கிறார்.
பவளக் கொடிக்கு பின் எம்.கே.தியாராஜ பாகவதர் நடித்த இரண்டாவது படம் நவின சாரங்க தரா. டைரக்ஷன் கே.சுப்பிரமணியம். பாபநாச‌ம் சிவன் இப்படத்துக்காக 41 பாடல்களை எழுதினார். கல்கத்தா மிஸ் கோமளா பாட்டியின் குரூப் டான்ஸ் பார்க்கத்தக்கது என்ற வாச‌கத்துடன் விளம்பரம் செய்யப்பட்டது. விபரீதமான கதை என்றாலும் ரசிகர்களின் பேராதரவுடன் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது. 1953 ஆம் ஆண்டு இப்படத்திற்கு மறு தணிக்கை செய்யப்பட்டது.
வள்ளித் திருமண நாடகத்தில் தனது பிரபலமான பாடலான நளின‌குமாரி நடன சிங்காரி என்ற பாடலைசாரங்க தராவில் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்று எம்கேக.தியாகராஜ பாகவதர் விரும்பினார். இயக்குநர் கே.சுப்பிரமணியம் அதனை விரும்பவில்லை. ச‌க்தியிடமிருந்துவேல் பெறுவதற்காக முருகன் பாடும் பாடல் நம் படத்திற்கு பொருந்தாது என்றார். இதனால் இருவருக்கும் சிறு அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. அரை மனதுடன் இயக்குநர் ஒப்புக்கொண்டார் படம் வெளியானதும் சிவபெருமான் கிருபை வேண்டும் என்று பாகவதர் பாடிய பாடல் வெற்றிபெற்றது.
இதே காலகட்டத்தில் கொத்தமங்கலம் சீனு சாரங்க தராவாகவும், டி.எம்.சாரதாம்பாள் சித்திராங்கியாகவும் நடித்தசாரங்க தரா என்ற படம் வெளியாகிதோதால்வியடைந்தது.
ரமணி


மித்திரன்11/02/12

2 comments:

rishvan said...

nice to read .. rare collections..

www.rishvan.com

moonramkonam said...

தடம் மாறிய தமிழ்படங்கள் தொடரை எங்கள் வலை பத்திரிக்கையில் வெளியிட விரும்புகிறோம்.
www.moonramkonam.com